Pages

Thursday, January 28, 2010

ஷ்.....ஷ்.... இங்கேயுமா....? - [ பட்டாபட்டி ]


தலைவா..நான் ப.மு.க-வின் அடிமட்ட தொண்டன்..
உங்களுக்காக மயிரென்ன .. உயிரே கொடுப்பவன்..நீங்கள் ஒரு வார ஓய்வுக்காக மலேசியா சென்றுவிட்டதாக "தினக் குசும்பு " மூலமாக அறிந்தேன்..

நான் நேற்று, கட்சி அலுவலகம் வந்திருந்த போது எனக்கு மிகவும்
மோசமான அனுபவம் கிட்டியது..அய்யா.. நீங்கள் வெளுத்ததெல்லாம் பால் என
நினைப்பதுதான் இந்த சம்பவத்துக்கு காரணம் என் நினைக்கிறேன்..
இத்துடன் என் "பேரன் பட்டுகுஞ்சுமணி"-யின் கேமராவில் எடுத்த புகைப்படங்களை அனுப்பியுள்ளேன்..

ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் என்பது உலகுக்கே தெரியும்..
ஆகவே , படங்களை பார்த்தவுடன் தகுத்த ஆவனம் செய்வீர்கள் என நம்பி,
இந்தக் கடிதம் அனுப்புகிறேன்...

நன்றி - கொண்டாம்பட்டி சின்னப்பன்.

----------------------------------------------------------------------------------------------------


(   அய்யா.. புரியாதவங்க , முதலிலே இந்த பதிவை
படிச்சுட்டு  வாங்க..அப்பதான் ஏதோ புரியும்...
 
)




அன்புள்ள கொண்டாம்பட்டி சின்னப்பன் அவர்களே.
கடிதம் கண்டேன்.. துக்கம் கொண்டேன்..
கடந்த மூன்று மணித்துளிகளாக நான் உணவருந்தவில்லை..
நெஞ்சு நிறைய துக்கத்தை வைத்துக்கொண்டு எப்படி உணவருந்துவது?

ஆனால் , கடைசியில் கழகக்கண்மணிகளின் ஆவேசம்தான் வென்றது..
அவர்களின் வேண்டுகோளின்படி , எனது உண்ணாவிரதத்தை முடித்துகொண்டு.. இதோ.... உணவருந்த விரைந்து கொண்டிருக்கிறேன்..
( "கோழிக்குழம்பு..... ஆறிவிட்டால் குஞ்சுக்காகாது" என்பது அயல் நாட்டுப்பத்திரிக்கையில் வந்திருந்த செய்தி...  அது என் மனதில் எப்போதும் நிழலாடிக்கொண்டிருக்கிறது )


நான் இல்லாத சமயத்தில பலரும் , அவர்களை தலைவர்களாக நினைத்துக்கொண்டு............ஆடியிருக்கிறார்கள்..
ஆடிக்கொண்டுமிருக்கிறார்கள்...
சரி.. தொண்டனே.. உன் கைதட்டல்........ பஞ்சடைத்த என் காதில் தேன் பாதிதான் விழுகிறது...


அன்றே சொன்னார் அறிஞர் அண்ணா.. "வேலியில் போகும் ஓணானை , வேட்டிக்குள் விடாதே" என்று..    அது வேட்டியைக் கிழித்தபின், பட்டாபட்டியையும் கிழிக்கும் என நான் கனவிலும் நினைக்கவில்லை..

அந்தோ.. பரிதாபம்..எது நடக்ககூடாது என நினைத்தாயோ அது நடந்தேவிட்டது....

கலங்கிடாதே என் கண்மணியே..
காவியக் காவலன் நான் இருக்க ,
காட்டாறு வெள்ளமென நீயிருக்க,
(உன்) நாடாவை அவிழ்க்க நாடு முயன்றால் ,
நாறிடுமே அவர்கள் தேகம்...

நாடி ஜோசியம் நல்லவர்களுக்கே என்றால் ,
கேடி ஜோசியம் கெட்டவர்களுக்கா?...



தொண்டர்களே.. உங்கள் கோரிக்கை உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு
இன்று முதல் சைக்கிள் ஸ்டேண்ட் பொறுப்பிலிருந்து, "சுற்றுப்புறச்சூழலுக்கு"
உடனடியாக மாற்றப்படுகிறார் நமது சீனா தானா..

அன்புடன் பட்டாபட்டி..


யோவ்.. என்னதான் சொல்ல வர?....

இல்ல சார்.. சைக்கிள் ஸ்டேன்ட்-க்குள்ள யார் நுழைந்தாலும் ,
செருப்பு , ஷு எல்லாம் கழட்டிவிடனுமாம் நம்ம சித்தாவுக்கு...........
நீங்களே பாருங்க சார்... இந்த அ நியாயத்தை........................

இடமில்லாம............ மரத்திலெல்லாம் தொங்கவிட்டிருக்காங்க...



.
.
.


.

.

8 comments:

  1. அப்பாவிJanuary 28, 2010 at 2:43 PM

    ஐயயோ... இனிமே கக்கூசு எல்லாம் நாறிடுமே.. ஆமையோட அடுத்த அவதாரம் ...

    ReplyDelete
  2. //அப்பாவி said...

    ஐயயோ... இனிமே கக்கூசு எல்லாம் நாறிடுமே.. ஆமையோட அடுத்த அவதாரம் ...//

    வந்தாரை வாழ வைக்கும் தமிழகமா போயிடுச்சே
    அப்பாவி சார்..

    ReplyDelete
  3. எத பத்தி பேசறாய்ங்க..எங்க குத்துராய்ங்க ந்னு ஒண்ணுமே புரியல போ

    ReplyDelete
  4. //ஆர்.கே.சதீஷ்குமார் said...
    எத பத்தி பேசறாய்ங்க..எங்க குத்துராய்ங்க ந்னு ஒண்ணுமே புரியல போ //
    ஆர்.கே.சதீஷ்குமார்

    சார்..
    நீங்க பேசாம பட்டாபட்டி சந்தாதாரர் ஆயிடுங்க.. ( free subscription - life long)

    http://pattapatti.blogspot.com/2010/01/blog-post_6813.html
    http://pattapatti.blogspot.com/2010/01/blog-post_25.html

    ReplyDelete
  5. சார்..
    நீங்க பேசாம பட்டாபட்டி சந்தாதாரர் ஆயிடுங்க.. ( free subscription - life long)//

    ரைட்டு..

    ::))))))))))

    ReplyDelete
  6. //யூர்கன் க்ருகியர் said...
    good decision !! //

    சார்.. யாருகிட்டயும் சொல்லாதீங்க..( சீக்கிரம் அங்கிருந்து
    தூக்க ப்ளான் பண்ணிட்டு இருக்கோம்..)

    கதை இத்துடன் முடியவில்லை..

    ReplyDelete
  7. //பலா பட்டறை said...
    ரைட்டு..
    ::)))))))))) //

    (சார்.. நீங்களும் யாருகிட்டயும் சொல்லாதீங்க..)
    பார்தீங்களா எங்க நிலமைய..
    கூவிக் கூவி சந்தாதாரரை பிடிக்க வேண்டியிருக்கு...

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!