தொடர்ந்து இணந்திருக்கிறேன்.. சில வருடங்களுக்குமுன், அய்யா, கலைஞரிடம் இருந்து பிரிந்து அம்மாவிடம் சேர்ந்ததால்,அலகு குத்திக்கொண்ட ஆளவந்தான் நான்.
ஆனால் சமீபகாலமாக ஊடங்களில் வரும் செய்திகள், அய்யா, கலைஞருடன் இணயப்போவதாக கூறுகிறது. அலகு குத்தின புண்ணு ஆறுவதற்க்குள் அய்யா இப்படி பன்ணுவாருனு தெரியாம போச்சு..
என்ன செய்யலாம் என அறிவுறை கூறமுடியுமா?..
குவாட்டர் கோவிந்தன்
------------------------------------------------------------
அடங்கொன்னியா.. வாய்யா தமிழ்குடிமகனே..
அய்யா யாரு?.. மக்களுக்காக நல்லது பண்ணவேண்டுமென மருத்துவர் பணியை உதறிதள்ளிவிட்டு உழைக்க ஓடி வந்தவரு..
அவருடைய தொண்டனா ராசா நீ..
இந்தா டீ சாப்பிடு முதல்ல....
அய்யா எதுக்கு தாத்தாகூட சேரனும்? .. யோசனை பண்ணு கோவிந்தன் சார்.... மக்கள் சொல்லுவானுக, ’அவரது அன்பு மகனுக்கு ஏதாவது கொடுப்பானுகனு தாவுகிறார்’-னு.. ஊகூம்..மக்கள் கிடக்கானுக நாதாரிக..
பழைய பேப்பர் கிடைச்சா புரட்டிப்பாருங்க.. அவரது குடும்பமோ, உறவினறோ பதவிக்கு வந்தா..அவரை நடுரோட்டில வைத்து சவுக்கடி கொடுங்கனு சொன்ன வீரனையா அவரு...அப்படிப்பட்ட மகான்..எதுக்காக தாத்தாவிடம் வந்திருக்காரு...
உன்னையமாறி மற்றும் என்னையமாறி இருக்கும் பல லட்சம் ஏழை பங்காளனுக்கு முட்டு கொடுக்க ப்ளான் பண்ணுகிறாரு..
இது மாறி தலைவனுக, யாருக்கையா கிடைப்பானுக..?
அதனால என்ன பண்றோமுனா, பேசாம டாஸ்மார்ல போயி ஒரு குவார்ரட் விட்டுக்கிட்டு, வீட்க்குப்போ..
உங்க ஊட்டுக்காரம்மா, ரேசன் அரிசில சோறு பொங்கி வெச்சிருக்கும்..அதை வழிச்சு தின்னுப்புட்டு,
இலவச டீவி இருக்குமே..அதுல மானாட மயிலாட பாரு..
நட்ட்டுக்குச்சுனா அடுத்த தொண்டனை ரெடி பண்ணு..
அதை விட்டுபுட்டு, என்ன மயி#$%க்கு எங்கிட்ட கேள்வி கேக்குறே?..
ஆமா.. அலகுகுத்தின இடத்தில இன்னுமா புண்ணு ஆறல?.. அடப்பாவி மக்கா.. இது தெய்வகுத்தம் ஆச்சே..
சீக்கிரம் போயி அம்மாவுக்கு தீமிதிக்கிறேனு வேண்டிக்கிட்டு, கூடவே ஒரு மொட்டையும் போடு...
வாழ்க ஜனநாயகம்..வளர்க கழகப்பணி...
இது தலைவர்களுக்கு
உங்கள் சேவை நாட்டுக்கு தேவை..
எத்தனை இடர்கள் வந்தாலும், தமிழனுக்காக உழைக்க, உ(ம)யிரை கொடுக்க ரெடியா இருக்கீங்களே..
உங்கள பெத்த மகராசிகளையும், உடனிருந்து உந்துசக்தியளிக்கும் மனைவியர்களையும்(?) வாழ்க..
உம் சந்ததியினர் வாழ்க..
எங்களை வாழவைக்கும் தெய்வங்களே..குவார்ட்டர் கோவிந்தன்(கள்) இருக்கும்வரை உங்களுக்கு சாவே கிடையாது..
அடிச்சு ஆடுங்க தலைகளா...
இவன் மர(?)த்தமிழன்..
.
.
.