1. பாடகர் மலேசியா வாசுதேவன்
தமது வசீகரக்குரலால், தமிழகத்தை கட்டிப்போட்ட, அருமை பாடகர் வாசுதேவன் அவர்களின் மறைவு. அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
அவர் மறைந்துவிட்டார் என்றாலும், அவர்தம் குரல் என்றென்றும் ஒலித்துக்கொண்டிருக்கும்.
2. பார்வதி அம்மையார்.
சிகிச்சைக்கு வந்த மூதாட்டியை,
அரசியல் எனும் போர்வை போர்த்தி,
மனசாட்சியை கொன்றெரிந்து,
நா-தளுக்க அறிக்கைவிட்டு,
தமிழன்க்காவலர் முடியின்கீழ் ,
உம்மரணத்துக்கு இரங்கல் தெரிவிக்க
நா கூசுகிறது தாயே.!!
3. மனச்சாட்சி..
போன பதிவின் தொடர்சி.
ஸ்பெக்ட்ரம் ஊழலில், அன்பர் சிவக்குமார் தொகுத்த பதிவினை பார்த்து, ”முட்டாள்கள்” எனக்
முகமறியாமல் கூறிய , கழகப்பாசறையின் அடிமட்ட அன்பர் நண்பர் பாலா+ வின் மனசசாட்சிக்கு...
//அந்த சிவக்குமாரை வரச்சொல்லுங்க.இவன் முட்டாளா இருந்துகிட்டு ஊரையும் முட்டாள் ஆக்கப்பாக்கிறான்...அவன் முட்டாள் என்பதற்கு மேற்கண்ட இந்த கணக்கே சாட்சி! அந்தக்கணக்கில் என்ன முட்டாள்தனம் இருக்குதுன்னு கூட்டிக்கழிச்சுப்பாருங்க...புரியலன்னா கேளுங்க...!//
சரிண்ணே..
முட்டாளாவே இருந்துட்டுப்போறோம். ஆமாண்ணே.. ஒரு நீங்களாவது கழக ரத்ததை புறம்தள்ளிவிட்டு, நேராச்சொல்லுங்க. ராசாவின் கரம் கறைபட்டதா?.. இல்லை உத்தமரை பழிவாங்கும் நடவடிக்கையா?.
உத்தமர் எனில், நமது தானைத்தலைவர் ஏன் சோனியாவிடம் இன்னமும் மடிப்பிச்சை ஏந்திக்கொண்டுள்ளார்?.
ஆமாம் முட்டாள் என்பதற்கு கழகஅடிப்படை விதி ஒன்று இருக்குமே. அதை இந்த முட்டாளுக்களுக்கு விளக்குவீர்களா?. ( முக்கிய குறிப்பு : 1 ரூ அரிசியில் சமைத்து சாப்பிடுபவர்கள் எல்லாரும் முட்டாள்கள் எனக்கூறினால் செல்லாது..ஹி..ஹி)
//ந்த வருமானமெல்லாம் அரசுக்கு சென்றிருக்க வேண்டும் என்று சொல்லும் அடிப்படை ஞானமற்ற அவருக்கு அடுத்த கேள்வி....பி.எஸ்.என்.எல் வருமானம் மட்டுமே அரசுக்கு செல்ல முடியும்..பிற தனியார் நிறுவனங்களின் லாபம் எப்படி அரசுக்கு செல்ல முடியும்???//
ஞானம்.. மெய்ஞானம். அட..அறிவுண்ணே நீங்க..
ஆமான்ணே.. இந்த டெண்டர் விட்டிருந்தால், அந்தப்பணம் அரசுக்குச்செல்லாமல், அல்லக்கைகளுக்கா செல்லும்?
முட்டாப்பசங்க.. சரி.. அதவிடுங்க. ராசாத்தி அம்மாள் பேர்ல இருந்த நிறுவனம், பல கைகள் மாறி, உள்ளே நுழைந்ததே. ஆமாண்ணே.. அந்தம்மா Telecommunication-ல பயங்கர அனுபவம் கொண்டவர்கள்னு இந்த முட்டாள் நாய்களுக்கு தெரியாம போச்சு.
//
அட முட்டாள்களே கருணாநிதியின் மீதான / திமுகவின் மீதான வெறுப்பை இப்படியா கண்ணை மூடிக்கொண்டு துப்புவது.....???
மல்லாக்கப்படுத்துக்கொண்டு எச்சில் துப்பிவிட்டு தன் முகத்தில் விழுவதாக குறைபட்டுக்கொண்டானானாம் ஒரு முட்டாள்....அதுபோலல்லவா உங்கள் வாதங்கள் இருக்கின்றன???
//
கழக ரத்தம் கொதிக்குதா பாஸ்?... லூஸ்ல விடுங்க.. ஆமாண்ணே.. இதில் பிரச்சனை இல்லையென்றால், ஏண்ணே ராசாவின் நுங்கை பிதுக்குராங்க.?.. பழைய பாக்கியா?. இல்லை, குடும்ப உறு(றி)ப்பினரா இல்லாமல் இருப்பதா?
//வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று நாம் தமிழ்த்தவளைகளாய் இருந்து கொண்டு இப்படியே பேசினால் வேறு எதிரி நமக்கு எங்கிருந்து வேண்டும்?//
ஆமாண்ணே.. வேற ந்ங்கிருந்து வரவேண்டும்?. வரும் தேர்தலுக்கு எங்கே நிற்க உத்தேசம்?.. கள்ள , மற்றும் நல்ல ஓட்டை போட்டு உங்களை கெலிக்கவைக்கனுமுனு , வேண்டுதல் இருக்கு..
//நாகராஜசோழன் MA said... 123
@பாலா, ஒரே ஒரு சந்தேகம், ஊழல் நடக்கவில்லை என்றால் ஏன் அவர்களே ஆட்சியில் இருக்கும் போது ஒரு மத்திய காபினட் அமைச்சரை கைது செய்து திகார் ஜெயிலில் அடைக்கின்றனர்?
//
அது பங்காளி தகறாரு பாஸ்..
மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று , மக்களுக்காக, உயிரை பணயம் வைத்து, உள்ளே இருக்கிறார்..
/////ஊழல் நடந்திருக்கலாம்.....அல்லது நடக்காமலிருக்கமலாம். அதுபற்றீ நான் பேசவே இல்லை.அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை சொல்லாதீர்கள் என்பதே என் கருத்து....//
ஆகா.. இது அருமை.. தலைவாழை இலை போட்டு, உப்புக்கு பக்கத்தில், கொஞ்சம் ”மலம்” வைத்ததுபோல... பேசாம, மக்களை அடிமுட்டாப்பு^$$%$கனு சொல்லிடுங்க பாஸ்.. புண்ணியமா போகும்.
கடைசியா:
சே.. இவ்வளவு விளக்கங்கள் கொடுத்தும், ஊழல் இல்லாத ஆட்சி என்று ,உற்சாகமாக தமிழின மக்களுக்கு பாடுபடும், நம் தலைவர்களைப்பார்த்து, அடி முட்டாப்பய சங்கம், இரு கரம் தூக்கி வணக்கம் வைக்கிறது
தொடர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரட்டும் உங்க பணி.. சிந்தட்டும் முட்டாள்களின் ரத்தம். ஹி..ஹி..
.
.
.