.
.
.
அருமை அண்ணன், அஞ்சா குஞ்சன் , சரித்திர சாணக்கியன் பார்க்கத கட்சிகளா?.. கோஷ்டிகளா?. எத்தனை அவமானங்கள், அவமதிப்புக்கள், செருப்படிகள். வேட்டி அவிழ்ப்புக்கள்.. சி(ரை)றை ஒன்றுதான் செல்லவில்லையே தவிர சீறிய ஆட்டங்கள் பல.கூட்டணி என்ற பெயரில், நால்வரை துணைக்கு அனுப்பினாலும், விடியாமூஞ்சியை கொண்டு, விட்டில்பூச்சிகளை துரத்திய லாவகம்.
கோடிகளில் சுருட்டி, கல்லூரிகளை கலவி மைதானமாக்கி, அருட்தந்தை ஆகியவர் பலரிருக்க, ’கொண்டதே கோயில், அன்னையைவிட சிறந்த கோயில் இல்லை’ என, மனைவியைக்கூட தூக்கி எறிந்த வள்ளல் எங்கள் தங்கபாலுவை, ’டிவீட்டர், பேஸ்புக் மற்றும் பதிவு’களில், நாற அடிக்கும் மக்களுக்காக, தலைவனுக்கு தோள் கொடுக்க களம் இறங்குகின்றான் இந்த பட்டாபட்டி..
நல்ல எண்ணங்களை உடையவர்கள், நல்லவருடன் சேருவர்.
தீய எண்ணங்களை உடையவர் தீயவர்களுடன் சேருவர்.
ஒரு நல்லமனிதனை, அவனைச் சுற்றியுள்ள தீயஎண்ணங்கள் அபகரிக்க முயலும். அதை விடுத்து, அதிலிருந்து மீண்டு, சமுதாயத்திற்க்காக பாடுபடுபவர்களே நல்லோர்கள். மற்றவரெல்லாம், குடி, கும்மி , குத்து என்று கற்பிழந்து காறி உமிழ்வோருக்குச்சமம்..
மேலே நான் குறிப்பிட்டவை புரியவில்லை என்று சொல்பவருகளுக்காக,
அதாவது நல்ல எண்ணம், நல்ல எண்ணத்துடன் சேரும்.. சிம்பிளா சொன்னா, ”பயர்” மாதிரி..
அடச்சே.. தங்கபாலுவை பற்றிச்சொல்ல ஆரம்பித்து, வண்டி தறிக்கெட்டு ஓடுகிறது. மன்னிக்க..... உங்கள் ஆத்மா ’சாந்தி’ அடையட்டும்.....
அப்படி பெருமைகளை பெற்ற அண்ணன் தங்கபாலுவை, பத்திரிக்கை உலகம் , காணவில்லை என்று கூறி எள்ளி நகையாடுகிறது. மக்கள் மதிகெட்டவர்கள் என்பதற்க்கு இதைவிட சான்று வேறு என்ன வேண்டும்?
மனைவியின் பேரில் மனு அளித்தார். நிராகரிக்கப்படுகிறது. அவரது மனு ஏற்கப்படுகிறது. இதில் என்ன குற்றம் கண்டீர்? பார்க்க சாதுவாக இருப்பதால் அவரை ’பன்னி’ என்று நினைக்கவேண்டாம். அவர் ஒரு பாயும் புலி.
பதுங்கியிருந்தார். சான்ஸ் கிடைத்ததும்... பாய்ந்துவிட்டார்.( அவரு டீவீ வெச்சு நடத்துவது இப்போதுதான் பட்டாபட்டிக்குத் தெரியும். அதன் இயக்குனராக மாற, பட்டாபட்டி சதி செய்கிறான் எனக்குகூறும் நயவஞ்சகர்களே.
உங்களை நான் ஒன்று கேட்கிறேன். என தலைவன் முகத்தைப்பார்த்துமா, உங்களுக்கு பரிதாபம் வரவில்லை?)
கலவரபூமில, சாணக்கியத்தனத்தை காட்டிய அண்ணனைப் பார்த்து, பெரும் தலைவரே எழமுடியாத சூழ்நிலையில் உள்ளார். அப்படிப்பட்ட அண்ணனை நேரில் பார்த்து வாழ்த்துத் தெரிவிக்கலாம் என நேற்று நான் சென்றிருந்தேன்.
அவரின் முகத்தில மகிழ்சி, முன்னைவிட ’பளபள’வென் மின்னிகிறது.
பூங்கொத்தை கொடுத்தேன்.. வாழ்த்தை பகிர்ந்தேன். அகண்ட முக்கத்தில, நிரந்தரப்புன்னகை. எதிர்கட்சிக்கு இறுதிப்புன்னகை. அவனல்லவோ எம்தலைவன்.
வாழ்த்தை பெற்றுக்கொண்டதும், ஆறுதலாக ஆறு வார்த்தைகளாவது பகிருங்கள் என்றேன். அவர் சொன்னதை கேட்டதும், மானமிழந்துவிட்டான் இந்த பட்டாபட்டி..
இதோ அந்த கண்றாவி வாசகம்...
”என்னை மயிலாப்பூரின் எம்.எல்.ஏ வாக, தேர்வு செய்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி”
ங்கொய்யாலே.. ’ஓட்டு கேட்கவில்லை, வாக்குறுதி வழங்கவில்லை. ”வாய்க்கரிசி போட்டவுடன் , வந்தது பதவி”யென கூவித்திரியும் இந்த கூட்டதுக்கா உங்கள் ஓட்டு.?..
தமிழகத்தில், காங்கிரஸ் ஜெயிக்கும் ஒவ்வொரு தொகுதியும், “தமிழனுக்கு தமிழன் , தானே தோண்டிக்கொள்ளும் குழி....”
சிந்தியுங்கள்...செயல்படுங்கள்.
டிஸ்கி.. தங்கபாலுக்கு கோபம்வந்து, நீங்க பார்த்ததில்லையே.........
இதோ உங்களுக்காக..
.
.
.