Pages

Friday, January 15, 2010

கலெக்டர் சகாயம் அவர்களுக்கு சல்யூட்...




"என்னிடம்  உள்ள சொத்தின்  மதிப்பு இவ்வாளவு தான். இந்தத் தொகையிலிருந்து,  எனது சொத்து மதிப்பு உயரவும் வாய்ப்பில்லை. குறையவும் வாய்ப்பில்லை ".  இப்படிச் சொன்ன நாமக்கல் மாவட்ட கலெக்டர்  சகாயம் அவர்கள்..
  • வங்கிக் கணக்கில் இருந்த இருப்புத் தொகை ரூ. 7500 .

சொந்த ஊர்            :    புதுக்கோட்டை.
தந்தை பெயர்        :    உபகாரம் பிள்ளை.
தாயார்                     :   சவேரியம்மாள்.

வறுமை வாட்டிய போதும், தன்னம்பிக்கை காரணாக விடாமல் கல்வி பயின்று சென்னைப் பல்கலைக் கழகத்திலிருந்து எம்.ஏ. சமூகப் பணி பட்டம் பெற்றவர். அது மட்டும் இன்றி முறையாக சட்டமும் பயின்றவர்.

கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு அரசுப் பணியில் சேர்ந்த சகாயத்திற்கு , கடந்த 2001 -ம் ஆண்டு ஐஏஎஸ் அந்தஸ்து தேடி வந்தது.

அவரின் உரையிலிருந்து :
  • ஒவ்வொரு அரசுப் பணியாளரும் தங்களது சொத்துக்களை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்பது பொதுவான விதி. நான் அதையும் தாண்டி, எனது சொத்து விவரத்தை மக்களுக்கும் சேர்த்து தெரியப்படுத்தியுள்ளேன்.

  • எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை ஏழை, எளிய மக்கள் முன்னேற்றத்திற்காக பயன்படுத்துவேன். அதுவே எனது லட்சியம் .

  • நாட்டின் வளர்ச்சிக்கு ஊழல்தான மிகப் பெரும் தடைக்கல்.   நான் ஊழல் கரையோடு இருக்க மாட்டேன் என்பதை வெளி்ப்படுத்தும் வகையில்தான் இந்த சொத்துக் கணக்கு விவர வெளியீட்டுள்ளேன். நான் ஒரு முன்மாதிரியாக இருக்க விரும்புகிறேன்..

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு அரசு அலுவகங்களில் உள்ள அரதிகாரிகள் இன்றைக்கு கிடைத்த லஞ்சம் எவ்வளவு என கணக்கு பார்க்கும் இந்த காலத்தில் "லஞ்சம் தவிர். நெஞ்சம் நிமிர்" என தனது அறையின் கதவில் வாசகத்தை அற்புதமாக பதிய வைத்ததோடு அதை பின்பற்றியும் வாழ்ந்து வருகின்றார்.

அன்று ஒரு அப்துல் காலம். இன்று ஒரு சகாயம். இவர்களை பின்பற்றினால் நாடு லஞ்சம் வஞ்சம் இல்லா வல்லரசு ஆவது உறுதி.


நன்றியய்யா.. தங்களை வாழ்த்த வயதில்லை.. 
ஆனாலும் , உங்களைப் பற்றிய செய்திகள் வருகின்றபோது பெரிதும்
உவகை அடைகின்றோம்..


உங்கள் பணி தொடரட்டும்.. வாழ்க வளமுடன்..
.
.
.

15 comments:

  1. வாழ்க வளமுடன்..

    ReplyDelete
  2. யோவ் பட்டாப்பட்டி...ஏன்யா இந்த வேலை உனக்கு...நமக்கு என்ன ஒழுங்கா வருதோ அத பன்னுவமுயா...நீ என் இப்ப நாட்டுக்கு மெசேஜ் சொல்ல கெளம்பற...நல்ல நக்கலடிக்க வந்தா நக்கலா மட்டும்தான் அடிக்கணும்...கவித எழுதறேன், மெசேஜ் சொல்றேன்லாம் கேளம்பகூடாது...தப்பு...சரியா..சட்டுபுட்டுன்னு வேற எவனாச்சும் இழுத்து போட்டு உதையா...சிரிக்கலாம்னு இங்குட்டு வந்தா இங்குன நாட்ட திருத்திகிட்டு இருக்காங்கே..( அயோயோ கோவபட்டனே...இவங்கே சோத்துல வேஷம் வேச்ச்சுடுவான்கேலே...)

    ReplyDelete
  3. //வெளியூர்க்காரன் said... //

    என்னவோய் பண்ணச்சொல்றீரு..
    மொக்கையா எழுதுனா, ஆள்,ஆளுக்கு அருவாளைத் தூக்கறாங்க..

    எதாவது நல்லதா எழுதலாமுனு ஒரு பயபுள்ளைகளும்
    கமென்ஸ் போடமாட்டிங்கிறாங்க..

    சரி.. இந்தக் காதுல வாங்கி அதுல உட்டுட்டுப் போயிட்டே இருக்கலாம்..

    ( ஆனா ஒண்ணுமெட்டும் சொல்றேன்....
    ராதிகாவுக்கும் இன்னும் , ரசிகருக இருங்காங்கனு தெரிஞ்சுக்கிட்டேன்....
    நூறு பெரியார் வந்தாலும் ,நம்ம சித்தப்பா "வருவியா ... வரமாட்டியா... வராட்டி உங்கூட ' கா' " அப்படினு
    அடுத்தபடத்திலும் ஆடத்தான் போறாரு..எல்லாம் நம்ம தலைவிதி அப்பு..)

    ReplyDelete
  4. சகாயம் உண்மையிலேயே போற்றத் தக்கவர். அவரை தனிப்பட்ட முறையில் அறிந்தவர்கள் அனைவரும் இதை ஒத்துக் கொள்வார்கள். ஆனால், சகாயம் மாவட்ட ஆட்சியராய் இருப்பதால், அந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், இதர அரசு அலுவலகங்களிலும் உள்ள ஊழியர்கள் லஞ்சம் வாங்க முடியாததால் இவரை பெரிய ரோதனையாக நினைக்கிறார்கள். ஆனால் பொதுமக்கள் வாழ்த்துகிறார்கள். வாழ்க சகாயம் அவர்கள்.

    ஆனால் இவரைப் போல, தமிழகம் முழுவதும் இவர் ஒருவர்தான் நேர்மையாக உள்ளார் என்பதும், இவரையும், டம்மி போஸ்டில் தூக்கி அடிக்க நிறைய அதிகாரிகள் முயற்சி செய்து வருகிறார்கள் என்பதும் வருத்தத்திற்குரிய உண்மை

    ReplyDelete
  5. //manithan said... //
    வருகைக்கு நன்றி manithan

    //மணிப்பக்கம் said... //
    நன்றி மணிப்பக்கம்..
    பொறுத்திருந்து பார்ப்போம்

    //சவுக்கு said... //
    ஆம் சவுக்கு அவர்களே...
    நீங்கள் சொல்வது சரிதான்..
    நல்லவர்களுக்கு காலமில்லை..

    ReplyDelete
  6. very good
    karurkirukkan.blogspot.com

    ReplyDelete
  7. "என்னை கோயம்புத்தூருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணியிருந்த நேரம். என் பொண்ணு யாழினிக்கு அப்போ
    மூணு வயசு. திடீர்னு ஒருநாள் ராத்திரி அவ மூச்சுவிட சிரமப்பட்டா. ஹாஸ் பிடலுக்குத்
    தூக்கிட்டுப் போனா உடனே அட்மிட் பண்ணச் சொல்லிட் டாங்க. மாசக் கடைசிங்கிறதால கையில ஆயிரம்
    ரூபாய்கூட இல்லை. புது ஊரு. அறிமுகம் இல்லாத மனுசங்க. எனக்குக் கீழே வேலை
    பார்க்குறவங்ககிட்ட கடன் கேட்கவும் சங்கடமா இருந்துச்சு. காஞ்சிபுரத்துல நான் வேலை
    பார்த்துட்டு இருந்தப்ப, எனக்கு நண்பரான ஒரு ஸ்கூல் டீச்சரும் அப்ப கோவைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி
    வந்திருந்தாரு. அவர்கிட்ட தயங்கிட்டே நாலாயிரம் ரூபாய் கடன் கேட்கவும், அரை மணி நேரத்துல
    கொண்டுவந்து கொடுத்தார். உடனே, குழந்தைக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சுட்டோம். ஆனா, சம்பளம்
    வாங்கினதும் அந்தக் கடனை அடைச்சதும்தான் என் மனசுல இருந்த பாரம் இறங்குச்சு!''
    ''நான் அந்த கோயம்புத்தூர் சம்பவத்தை ஏன் சொல்றேன்னா... அப்ப என் கன்ட்ரோல்ல 650 மதுபானக் கடைகள் இருந்தன. லைசென்ஸ் புதுப்பிக்க கடைக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய்னு கொடுக்கத் தயரா இருந்தாங்க. நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, அடுத்த அஞ்சாவது நிமிஷம் 65 லட்ச ரூபாய் என் வீடு தேடி வந்திருக்கும். ஆயிரம் ரூபாய்கூட கையில் இல்லாத, மகளுக்கு உடம்பு
    சரியில்லாத சூழ்நிலையில் மனநிலை என்ன மாதிரி இருக்கும்னு யோசிச்சுப்பாருங்க. ஆனா,
    அதெல்லாம்தான் ஓர் அரசு அதிகாரியின் நேர்மைக்கான சோதனை. நேர்மையா இருக்குறதுல ஒரே ஒரு சிக்கல் மட்டும்தான். நாளுக்கு நாள் நமக்கு எதிரிகள் அதிகரிச்சுட்டே போவாங்க. அவங்களை
    மட்டும் சமாளிச்சுட்டாப் போதும்!'' - தடதடக்கும் வார்த்தைகளில் கொப்பளிக்கிறது உற்சாகம்.


    ''புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுனை குக்கிராமம்தான் என் ஊரு. 'மத்தவங்க தோட்டத்து மாங்காய்
    தெருவுல கிடந்தாக்கூட எடுத்துட்டு வரக் கூடாது'ன்னு சொல்ற அம்மா. 'நீ படிச்சு கலெக்டர்
    ஆகி, உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு எல்லாம் உதவணும்டா'ன்னு சொல்லிட்டே இருக்குற அப்பா.
    'கலெக்டர்தானே... ஆயிடுவோம்'னு படிச்சேன். ஆயிட்டேன். வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் நம்ம
    மனசு எந்தளவுக்குப் புத்துணர்ச்சியோடவும் புனிதமாகவும் இருக்கோ... கடைசி நாளின்போதும்
    அதே உணர்ச்சியோடு ஓய்வு பெறணும்னு மட்டும் முடிவு பண்ணேன்.



    http://www.vikatan.com/av/2009/nov/25112009/av0204.asp>

    ReplyDelete
  8. '

    காஞ்சிபுரத்துல டி.ஆர்.ஓ-வா இருந்தப்ப ஒரு பெரியவர் தான் வாங்கிய பெப்சியில் அழுக்குப்
    படலம் இருந்ததாகப் புகார் கொடுத்தார். சாம்பிளை லேப் டெஸ்ட்டுக்கு அனுப்பினதுல, 'மனிதர்கள்
    குடிக்க ஏற்ற பானமில்லை'ன்னு ரிப்போர்ட் வந்தது. சட்டப்படி அந்த நிறுவனம் மேல என்ன
    நடவடிக்கை எடுக்கணும்னு ஒரு அறிக்கை தயாரிச்சேன். ரொம்ப யோசனைக்குப் பிறகு
    தாசில்தார்கிட்ட எட்டு பூட்டு மட்டும் வாங்கிட்டு வரச் சொன்னேன். எதுக்குன்னு புரியாம
    வாங்கிட்டு வந்தவரைக் கூட்டிக்கிட்டு மதுராந்தகத்துல இருக்குற பெப்சி கம்பெனிக்குப் போனேன்.


    நான் தயாரித்த அறிக்கையின் ஒரு நகலை கம்பெனி மேனேஜர்கிட்ட கொடுத்துட்டு, 'கம்பெனியைப்
    பூட்டி சீல்வைக்கப் போறோம். எல்லாரையும் வெளியே வரச் சொல்லுங்க'ன்னு சொன்னோம். அந்த
    மேனேஜரைவிட என்கூட வந்த தாசில்தார் ஆடிப் போயிட்டாரு. 'சார்... பெரிய பிரச்னை ஆயிடும்.
    எதுக்கும் கலெக்டரை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்'னு பதறுனாரு. 'கலெக்டரைக் கேட்டா சீல்வைக்க
    விட மாட்டாரு. சட்டப்படி இந்தக் கம்பெனியை மூட நமக்கே அதிகாரம் இருக்கு. நீங்க தைரியமா
    உங்க கடமையைச் செய்யுங்க'ன்னு அவரை உள்ளே அனுப்பினேன். ஒரு மணி நேரம் கழிச்சு இன்னும்
    பதற்றத்தோடு வெளியே வந்தவரு, 'சார்... அவங்க அமெரிக்கா வரைக்கும் பேசுறாங்க சார்.
    சி.எம்-கிட்ட பேசுறதாச் சொல்றாங்க சார். என்ன பண்ணலாம்?'னு கேட்டாரு. 'உள்ளே
    இருக்கிறவங்களை அரெஸ்ட் பண்ணிட்டு சீல்வைக்க வேண்டியதுதான்'னு நான் சொல்லவும்தான் எல்லாரும்
    பயந்து வெளியே வந்தாங்க. கம்பெனியை இழுத்து மூடி, எட்டு பூட்டுகளையும் போட்டு
    சீல்வெச்சுட்டோம்.


    நான் உடனே அலுவலகத்துக்குப் போகாம ஒரு குக்கிராமத்துக்குப் போயி ரேஷன் கடை,
    பள்ளிக்கூடத்தை எல்லாம் ஆய்வு பண்ணி முடிச்சுட்டு, ராத்திரி எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தேன்.
    என் மனைவி வாசல்லயே காத்துட்டு இருந்தாங்க. கலெக்டர், சீஃப் செக்ரெட்டரி, உள்துறைச்
    செயலாளர்னு பலரும் என்னைக் கேட்டு வீட்டுக்கு போன் பண்ணிஇருக்காங்க. நான் திரும்ப
    எல்லோருக்கும் போன் பண்ணா, 'யாரைக் கேட்டு சீல்வெச்சீங்க? என்ன காரியம் பண்ணியிருக்கீங்க
    தெரியுமா?'ன்னு எல்லாரும் கேள்வி கேட்டாங்க. 'நான் என் கடமை யைத் தான் சார் செஞ்சேன்.
    மக்களுக்கு நல்லது செஞ்சதுக்காக சஸ்பெண்ட் பண்ணா, தாராளமாப் பண்ணிக்கோங்க'ன்னு சொல்லிட்டேன்.
    மறு நாள் எந்தப் பத்திரிகைலயும் பெட்டிச் செய்தியாக்கூட பெப்சிக்கு சீல்வெச்ச சம்பவம் ரிப்போர்ட்
    செய்யப்படவே இல்லை.
    ரெண்டு நாள் கழிச்சு ஜூனியர் விகடன்ல மட்டும் அந்தச் செய்தி விரிவா வந்திருந்தது. அதுக்குப்
    பிறகுதான் பெப்சிக்கு நான் சீல்வெச்ச விஷயமே வெளி உலகத்துக்குத் தெரிஞ்சது.

    இதுவரை 15 இடங்களுக்கு என்னை மாத்தி மாத்திப் பந்தாடிட்டாங்க. இப்போதான் முதன்முதலா
    நாமக்கல் மாவட்டத்துக்கு கலெக்டர் ஆகியிருக்கேன். மாவட்டம் முழுக்க ஒரு கோடி மரக் கன்றுகள்
    நடத் திட்டமிட்டு, ஏழு லட்சம் மரக் கன்றுகளை நட்டாச்சு. அவற்றின் முறையான பராமரிப்புக்கும்
    ஏற்பாடு பண்ணியாச்சு. இன்னும் 10 வருஷத்துல அதிக மரங்கள் உள்ள மாவட்டமாக நாமக்கல்
    இருக்கும். ஏற்கெனவே நொந்து போயிருக்கும் விவசாயிகளை, 'குறை தீர்க்கும் கூட்டத்துக்கு
    வா'ன்னு ஒவ்வொரு மாசமும் கலெக்டர் ஆபீசுக்கு அலைக்கழிக்கிறது நல்லாவா இருக்குன்னு நானே
    விவசாயிகளைத் தேடிப் போக ஆரம்பிச்சேன். ஒருநாள் ராத்திரி முழுக்க அந்தந்த கிராமத்துலயே
    தங்கி, அவங்க குறைகளை வாழ்ந்து பார்த்துட்டு வருவேன். அப்பதான் அவங்க சொல்றதுக்கு
    முன்னாடியே அவங்க குறைகள் என்னன்னு நாமளே உணர முடியும்!'' என்கிற சகாயம், தன் மகள்
    யாழினியை மடியில் வைத்துக்கொண்டு, ''சொல்லுடா குட்டி... உயர உயரப் பற... வானம்
    வசப்படும்!'' என சொல்லிக் கொடுக்கிறார்.


    ''உயர உயரப் பற... வானம் ஒரு நாள் வசப்படும்'தான் கரெக்ட்!'' - திருத்திச் சிரிக்கிறாள்
    கலெக்டர் மகள்!




    நன்றி........ ஆனந்த விகடன்<
    http://www.vikatan.com/av/2009/nov/25112009/av0204.asp>

    ReplyDelete
  9. அற்புதமான மனிதர்...

    ReplyDelete
  10. //@Sangkavi said...//
    //@tsekar said... //
    //@BOSS said... //

    நன்றி மக்கா...
    ஆம்..நல்ல மனிதர்..
    இவரிடமிருந்து கற்க வேண்டியது நிரம்ப இருக்கிறது..
    சல்யூட் கலெக்டர் சார்...

    ReplyDelete
  11. நேர்மையான இந்த மனிதர் ஒரு நல்லுதாரணம்.

    ReplyDelete
  12. //மஞ்சூர் ராசா said... //
    நன்றி மஞ்சூர் ராசா ....

    ReplyDelete
  13. இவருக்கு எப்படி கன்ஃப்ர்ட் ஐ ஏ எஸ் கொடுத்தாங்கன்னு ஆச்சரியமா இருக்கு....அரசியல்வாதிகளுக்கு சில சமயம் நல்ல எண்ணம் உருவாகும் போல...எனினும் இவர் போன்றவர்கள் ஊக்குவிக்கப்படவேண்டும்!

    ReplyDelete
  14. //Prabhu Rajadurai said...
    இவருக்கு எப்படி கன்ஃப்ர்ட் ஐ ஏ எஸ் கொடுத்தாங்கன்னு ஆச்சரியமா இருக்கு..//
    உண்மைதான்.. நல்ல மனிதர் ...வருகைக்கு நன்றி பிரபு ராஜதுரை...

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!