Pages

Friday, January 29, 2010

ரெடிமேட் மிக்ஸ் ( 1 )

Official News
------------------------
ஈரோடு நகர் பகுதியில் உள்ள மக்கள் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் இந்த மாதம் முதல் தேதியில் இருந்து ஹெல்மெட் அணிந்து செல்லவேண்டும் என ஈரோடு மாவட்ட காவ‌ல்துறை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் ஜெயசந்திரன் கூறியிருந்தார். அதன்பின் ஆங்காங்கே இருந்த போக்குவரத்து காவல‌ர்க‌ள் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை எச்சரித்து அனுப்பி வந்தனர்.

இன்று முதல் ஈரோடு மாநகராட்சி பகுதியில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என ஈரோடு மாவட்ட க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் ஜெயசந்திரன் எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளா‌ர்.



Offline News
-----------------------
இதைபற்றி ஈரோடு இளங்கோவன் அவர்களை கேட்ட போது " அன்னை சோனியாவுக்கு நன்றி " என கண்ணீர் மல்க கூறினார்..

அய்யா.. இது தமிழக அரசுவின் உத்தரவு என நாம் எடுத்துரைக்க , "கலைஞர் மனத்தை மாற்றிய எங்கள் அன்னைக்கு நன்றி " என கண்களை துடைத்துக்கொண்டார்..


-----------------------------------------------------------------------------------------------
Official News
------------------------
சத்தியமங்கலம் அருகே விவசாய தோட்டத்தில் வெளிநாட்டு ஆந்தை பிடிபட்டது. இதை பார்த்த விவசாயி ஈஸ்வரமூர்த்தி,  சத்தியமங்கலம் மாவட்ட வனஅதிகாரி ராமசுப்பிரமணியத்திற்கு தகவல் கொடுத்தார். 

வனத்துறை ரேஞ்சர் மணி தலைமையில் வனக்குழுவினர் ஈஸ்வரமூர்த்தி தோட்டத்திற்கு சென்று புதரில் பாதுகாப்பாக இருந்த வினோத ஆந்தையை பிடித்து வந்தனர். பின்னர் பண்ணாரி வனப்பகுதியில் பறவைகள் அதிகம் வசிக்கும் வடவள்ளி காட்டில் வினோத ஆந்தையை வனத்துறையினர் விட்டனர். 

Offline News
-----------------------

பறவையிட்ட எச்சத்தை துடைத்தபடி வனத்துறையினர் , விவசாயி ஈஸ்வரமூர்த்தியிடம் பயணப்படி கொடுக்கும்படி நச்சரித்தால்,
அவர் தலைமறைவாகிவிட்டார்..
இதைபற்றி ஈரோடு இளங்கோவன் அவர்களை கேட்ட போது " கலைஞர் ஆட்சியில் பறவைகளுக்கு பாதுகாப்பில்லை..இதைபற்றி அன்னை சோனியாவுடன் வரும்மாதம் பேசப்போவதாக  " என கோபமாக  கூறினார்..
---------------------------------------------------------------------------------------------------------




Hot News
------------------


இந்த இரண்டு பேட்டிகளையும்  எடுத்த நிருபர் ,  தற்கொலைக்கு முயற்சி செய்ததால் ,  காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்..
.
.
.

11 comments:

  1. ரொம்ப நாளா காங்கிரஸ்காரங்கள வம்புக்கு இழுக்கலையே-னு பார்த்தேன்..
    ரைட்டு...

    ReplyDelete
  2. துப்புங்க சாமி...துப்புங்க...

    பக்தா இன்றைக்கு உன் தவம் இன்றைக்கு பலிக்கக்கூடும்.. தண்டத்தை அப்பால் வைத்து துண்டோடு இருப்பாயாக.. (அசரீரி)
    :))

    ReplyDelete
  3. இன்று ஒரு தகவல் அசத்தல்..

    ReplyDelete
  4. பட்டாபட்டி, ரவுண்டு கட்டி கலக்குறீங்க. வலைச்சரம் போயி பாருங்க. http://blogintamil.blogspot.com/2010/01/blog-post_6143.html

    பிரபாகர்.

    ReplyDelete
  5. நல்லா கலாய்க்க்றிங்க. எல்லோரையும். ஆமா, காவலர்கள் வண்டி ஓட்டும்போதுதானே ஹெல்மெட் போடுவாங்க. எச்சரிக்கும்போதெல்லாம் போடுவாங்களா...தினம் ஒரு தகவல் நல்லா இருக்கு.

    ReplyDelete
  6. //manithan said...
    ரொம்ப நாளா காங்கிரஸ்காரங்கள வம்புக்கு இழுக்கலையே-னு பார்த்தேன்..
    ரைட்டு...//

    நன்றிங்கண்ணா..



    //பலா பட்டறை said...
    பக்தா இன்றைக்கு உன் தவம் இன்றைக்கு பலிக்கக்கூடும்.. தண்டத்தை அப்பால் வைத்து துண்டோடு இருப்பாயாக.. (அசரீரி)
    :))//

    அண்ணா வாங்கண்ணா..நேற்று "காங்கிரஸ் கட்சி ஆபீஸ்" போயி ஒரு பெரிய பிரச்சனை ஆயிடுச்சுங்க..( தங்கவாலு பேட்டிக்கா ...)
    அடுத்த பதிவுல அதை பற்றி எழதப்போறேன்..
    படிச்சுட்டு சூதனமா இருந்துக்குங்க சார்..
    ப.மு.க தலைவருக்கே இந்த கதினா , சாதா மக்களுக்கு...


    //பிரபாகர் said...
    பட்டாபட்டி, ரவுண்டு கட்டி கலக்குறீங்க. வலைச்சரம் போயி பாருங்க. http://blogintamil.blogspot.com/2010/01/blog-post_6143.html
    //
    பிரபாகர் சார்...
    இந்த வார ஆசிரியராக நீங்களா?..
    வாழ்த்துக்கள்..
    > என்னையும் < பற்றி குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி சார்..
    மேலும் பல புது பதிவர்களை அறிந்து கொண்டேன்..
    அதற்கும் நன்றி..
    உங்கள் அடுத்த இடுகை எப்போது வருகின்றது?


    // கண்ணகி said...
    நல்லா கலாய்க்க்றிங்க. எல்லோரையும். ஆமா, காவலர்கள் வண்டி ஓட்டும்போதுதானே ஹெல்மெட் போடுவாங்க. எச்சரிக்கும்போதெல்லாம் போடுவாங்களா...தினம் ஒரு தகவல் நல்லா இருக்கு.
    //

    வாருங்கள் மேடம்..
    காவலர்களுக்காக பாக்கெட் வைத்த ஹெல்மெட் , மார்க்கெட்டுக்கு சீக்கிரம் வரப் போகிறது..
    ( பட்டாபட்டி R&D-யின் புது கண்டுபிடிப்பு.. டெல்லியில ஆர்டர் Approve-ஆக கொஞ்சம் காலமாகும் என நினைக்கிறேன்..)

    வருகைக்கு நன்றி கண்ணகி அவர்களே..

    ReplyDelete
  7. இதுக்கு மேல துப்ப முடியாது சாமி...........

    ReplyDelete
  8. //Sangkavi said...

    இதுக்கு மேல துப்ப முடியாது சாமி...........//

    வாங்கண்னா.. நீங்களும் கோயமுத்தூருங்களா?..

    உண்மையதாங்கோ சொல்லியிருக்கேன்..
    அடிக்கடி வாங்கண்ணா.. ...

    ReplyDelete
  9. யோவ் பட்டாபட்டி, பரவாயில்ல நல்லதாண் கலாய்க்ற.

    ReplyDelete
  10. காங்கிரஸ்காரங்க பற்றி நீங்க நல்லா கலாய்க்க்றிங்க சாமி!!

    ReplyDelete
  11. //Swaminathan said...
    யோவ் பட்டாபட்டி, பரவாயில்ல நல்லதாண் கலாய்க்ற.

    Anonymous said...
    காங்கிரஸ்காரங்க பற்றி நீங்க நல்லா கலாய்க்க்றிங்க சாமி!! //

    கஷ்டப்பட்டு நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித் தந்த கட்சிய,

    நாம கலாயிக்காமா.. இத்தாலிக் காரங்கலா சார் கலாயிப்பாங்க..

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!