Pages

Friday, March 5, 2010

நக்கீரனா?..இல்லை nakku*&^%?

இவ்வளவு பிரச்சனைக்கும் நடுவில்.. உண்மையை வெளிச்சமிட்டு காட்டி... தமிழக மக்களை , தலை  குனிய..நிமிர வைத்த,  நக்கீரன் ஆசிரியரை பேட்டி காணாவிட்டால்,   பதிவுலகத்துக்கே ஆப்பு வைக்கும் அபாயமிருப்பதால், உடனடியாக கடமையில்  இறங்கிவிட்டோம்...


அண்ணனை பிடிக்க அலைஞ்ச திரிஞ்ச நேரத்தில, ஓசாமா கக்கூஸுல கேமரா வெச்சுட்டு வந்திருக்கலாம் சார்.அவ்வளவு கஷ்டமாயிடுச்சு அவரப்பிடிக்க..


எப்படியோ சின்ராசு சொன்ன  ஆலோசனைப்படி நடந்ததில், கொஞ்சம் மூளையை உபயோகித்து,  அண்ணனை பிடித்துவிட்டோம்..

( என்ன ஆலோசனைனு கேக்காதீங்க..குப்பையில சில சமயம் மாணிக்கம் கிடைக்கும் சார்..   யோவ்.நக்கல் பண்ணாதே. ஒழுக்காமச்சொல்லுனு நினைச்சீங்கனா, ஒரு மெயில தட்டிவிடுங்க.... சொல்றேன் )


சார்.. வணக்கம்.. நாங்கள் ப.மு.க வில் இருந்து   Bla..Bla...Bla.. இந்த பேருக்கான காரணத்தை சொல்லமுடியுமா?
தம்பி.. இப்ப பார்த்தீங்கனா, நான் அந்த காலத்தில கோவில்பட்டில ஒரு லாட்ஸ்-ல

இடைமறித்து  சார்.. அந்த கோவில்பட்டி வீரலட்சுமி .. அதுவா சார்?..
இங்க பாருங்க.. இப்படி பெண்களை பற்றி கேவலமா பேசக்கூடாது..நாங்கெல்லாம், அந்த காலத்திலேயே ,அதிரடிப்படைக்கு டிமிக்கி கொடுத்துட்டு, வீரப்பன காட்ல போயி பேட்டி எடுத்தவங்க.. இதுவரை அந்த சாதனைய எந்தப் பத்திரிக்கையும் முறியடிக்க முடியவில்லை..

ஏது சார்..  டிமிக்கி கொடுத்ததையா?....
தம்பி.. உங்களுக்கு சின்ன வயசு.. துடுக்கு கொஞ்சம் ஜாஸ்தியாதான் இருக்கு..எனக்கு கோபம் வர்ற மாறி கேக்காதே.. புரியுதா?


ஓ.கே  சார். நெற்றிக்கண்ண திறந்துடாதீங்க.. மேல சொல்லுங்க..
 எனக்கு புகழ்ச்சி பிடிக்காது..அப்பறம்தான்,  நான்,  அரசு தூதுவனானது தமிழகத்திற்க்கே தெரியுமே..  எல்லா பேப்பரிலும் நான் வீரப்ப முதலாளியுடன் இருந்த போட்டோ போட்டு , காசு பார்த்திட்டானுக..

நான் மட்டும் இல்லேன,  யாருக்குமே வீரப்பன் எப்படியிருப்பானு தெரியாது..
அப்புறம் எனக்கு புகழ்ச்சி பிடிக்காது.. சொல்லிட்டேன்..

ஆமா சார்.. இதுவரை ரெண்டு தடவை சொல்லிட்டீங்க..
ம்.. என்ன சொல்றீங்க?..

ஒண்ணுமில்ல சார்..கொஞ்சம் சீக்கிரமா சொன்னீங்கனா, நான் கடைத்தெருவில தக்காளி வாங்கிட்டு  வீட்டுக்கு போகமுடியும்.. இல்லாட்டி இன்னைக்கு எங்க குடும்பம்,  பட்டினி கிடக்க வேண்டும் சார்..
உங்க பிரச்சனைய விடுங்க.. அப்ப காட்ல ஒரு பெரிய முள்ளு.. என்னோட 5000 ரூபாய் ஷூல குத்திடுச்சு.. ......    மேலும் நான் போட்டிருந்த சட்டை,  ஒரு 2500 ரூபாய் இருக்கும்..கொஞ்சம் இருங்க.. சரியான விலை என்னானு  எங்க வீட்டுக்கார அம்மாவை கேட்டுச்சொல்றேன்( திரும்பி குரல் கொடுக்கிறார் .. பதிலே காணோம்..)


அத விடுங்க சார்.  மேல சொல்லுங்க..
அப்படியா.. சரி.. எங்க விட்டேன்.. ஆங்க்...  சட்டைவிலை ரூ 3500-ல..
( 1 நிமிசத்தில ரூபாய் 1000 ஏறிடுச்சுனு நினைத்தால், நான் பொறுப்பில்ல..சொன்னத அப்படியே எழுதுறேன்)
கடமை கண்ணுக்கு முன்னாடி நின்னதால் , அதையும் பொருட்படுத்தாம , காட்டுக்குள்ள போயிட்டு வந்தது சரித்திரதில்  பொறிக்கப்பட்டு விட்டதே..

சார்.. அதுதான், சுட்டு.. குழி தோண்டிப் புதைச்சாச்சே..இப்ப ஓடிட்டு இருக்கும் விசயத்தை பற்றி பேசலாமே...
அதுவா.. இந்த பய என்ன பண்ணுனான?.. ஊருக்கே உபதேசம் பண்றேனு கோடிக்கணக்குல பணத்த சேர்த்துட்டான்..  முளையிலேயே கிள்ளாட்டி , முட்புதரா வளந்துருவான்.
.( மக்கா.. நான் பாபாவை பற்றி பேசவில்லை...
சண்டைக்கு  வராதீங்க..நீங்க எப்போதும் போல .. பகவானை தரிசியுங்கள்- நன்றி ஆசிரியர்)


அதனாலதான்,  ஆப்ரேசன் நிஞ்சானு ஒரு திட்டம் போட்டோம்..நம்ம பயலுக சக்சஸா முடிச்சுட்டாங்க..
ஆனா ப்ளான் என்னோடது.. எனக்கு புக......( சரிங்க.. சரிங்க..புகழ்ச்சி பிடிக்காது )

தெரியாம  வீடியோ எடுக்க ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பீங்களே..
இல்ல.. இல்ல.. எமது நண்பர் ஒருவர் கூரியரில் அனுப்பிவைத்தார்..
நாங்க யூஸ் பண்ணிக்கிட்டோம்..எங்க வெப் பேஜ்ல கூட லிங்க் கொடுத்துள்ளோமே..

ஆமா சார்.. அந்த கண்ராவி பார்த்துட்டுத்தான் , பேட்டிக்கே வந்தேன்...
இது ஒரு கலாச்சார சீரழிவாயிருக்கே சார்..
ஆமாம்.. அதை சரி செய்யத்தான் , நாங்கள் பாடுபடுகிறோம்..

சார்.. நான் சொன்னது உங்களை..
.
.
.

ன்ன இப்படி சொல்றீங்க.. எனக்கு புகழ்......
.
.
.
ஸ்டாப்..ஸ்டாப்....................... வெப்ல நீலப்படத்தையே அப்லோட் பண்ணியிருக்கீங்க.. உங்களைப்போயி..சே...

இங்க பாருங்க.. நாங்கதான் இப்ப அதை மாற்றிவிட்டோமே..

நீங்க டெலிட் பண்ணியிருந்தா.. உங்களை மனிதனா பார்த்திருப்போம் சார்..
ஆனா. 3 நிமிசம் காட்டிட்டு , முழுப்படத்தை பார்க்க  பே பால்ல காசு கட்டச்சொல்றிங்க..

ஏன்..எங்களுக்கும் குழந்தை குட்டியிருக்குது.. நாங்க பொழைக்க வேண்டாமா?..

அடக்கண்ராவியே..
அதுக்கு எவ்வளவோ வழியிருக்கே.. நீலப்படத்த காண்பித்துதான்   சம்பாரிப்பிங்களா?
நீ  இங்கயே இரு.. இப்பவே தலைவருக்கு போன் பண்றேன்..



அட.. அதைவேற ஞாபகப்படுத்திட்டீங்களே..
பத்திரிக்கைனா நடு நிலமையா இருக்கனும்..ஆனா, தாத்தா கையில பரிசு வாங்க்கிட்டா.. அப்புறம் நடு நிலையாவது.. நடு மண்டையாவது..











இனிமேல் , நக்கீரன் வாங்கும்போது , பெண்பிள்ளகளை வைத்து கையத் தடவச்சொல்லுங்க.சூடானதும்... நக்கீரன் 1 புக் ரூபாய் 250னு சொல்லுங்க.. நல்லா பிஸ்னஸ் ஆகும்..
.
.
.

( பத்திரிக்கை தொடங்கிய காலத்திலிருந்த  , நக்கீரன் மேல் எனக்கு மரியாதையிருந்தது..  எப்போது ஆளும் கட்சியிடம் பரிசுகள் வாங்கி... Delete செய்யாமல்.....காசு கேட்பதும்...... 

சே...உங்கள் பத்திரிக்கைகளை படித்ததற்க்கு வெட்கப்படுகிறேன்......- இவன்  பட்டாபட்டி)
.
.
.

50 comments:

  1. நண்பர்களே.. மன்னிக்கவும்..

    கொஞ்ச நாளைக்கு .. ப்ளாக் பக்கம் வரவேண்டாமென பார்க்கிறேன்..

    பயந்துவிடாதீர்கள்..அடிக்கடி.... பின்னூட்டத்தில் சந்திக்கிறேன்...

    ( ப்ளாக் எழுதிக் கிழிப்பதற்க்கு பதில் , நக்கீரன் ஏஜண்ட் ஆகலாமா என்
    நினைத்துக்கொண்டு இருக்கிறேன்..)

    ReplyDelete
  2. வாங்கப்பு, இதுக்கு போய் கோவிச்சிக்கிட்டு, போடுங்க பதிவுகள :))

    ReplyDelete
  3. நீங்க வேற சார்.. வேலை அதிகமாயிடுச்சு..அதனாலதான்..

    ReplyDelete
  4. பட்டாபட்டி.. said...

    நண்பர்களே.. மன்னிக்கவும்..

    கொஞ்ச நாளைக்கு .. ப்ளாக் பக்கம் வரவேண்டாமென பார்க்கிறேன்..

    பயந்துவிடாதீர்கள்..அடிக்கடி.... //


    அப்படி எல்லாம் சொல்லபடாது

    ReplyDelete
  5. சைவகொத்துப்பரோட்டா said...
    வாங்கப்பு, இதுக்கு போய் கோவிச்சிக்கிட்டு,//////

    பட்டாபட்டி ப்ளாக் பக்கம் வரவில்லை என்றால் சைவகொத்துப்பரோட்டா தீ குளிப்பதை தவிர்க்கமுடியாது (பெட்ரோல் உபயம் மங்குனி,ஜெய்லானி)

    ReplyDelete
  6. //கொஞ்ச நாளைக்கு .. ப்ளாக் பக்கம் வரவேண்டாமென பார்க்கிறேன்..//

    என்னமோ பண்ணி தொலைங்க...
    இப்படி சொன்னதும் மனசே சரியில்ல தெரியுமா ???
    ஏன் இப்படி எல்லாம் தொண்டர்கள் (வாசகர்கள்) மனச நோகடிக்கிறீங்க??
    ஆல் ரவுண்டர் போல "அல்லக்கைகளில் இருந்து லேட்டஸ்ட் அம்மணகட்டை" வரை ஓட ஓட ஓட்டிகிட்டு இருந்தீங்க இப்ப என்னடான்னா ப்ளாக் பக்கம் வர கேப் வேணுங்கிறீங்க??
    ரெண்டு " ப்ளாக் நைட்" BEER அடிச்சிட்டு ப்ளாக் எழுதுவீங்களா ?

    ReplyDelete
  7. பட்டாபட்டி.. said...
    ( ப்ளாக் எழுதிக் கிழிப்பதற்க்கு பதில் , நக்கீரன் ஏஜண்ட் ஆகலாமா என்
    நினைத்துக்கொண்டு இருக்கிறேன்..)///


    அதுக்கு நீங்க பெருசா வளர்கனும் மீசையை சொன்னேன்

    ReplyDelete
  8. யூர்கன் க்ருகியர் said...
    ரெண்டு " ப்ளாக் நைட்" BEER அடிச்சிட்டு ப்ளாக் எழுதுவீங்களா ?///


    தலைக்கு எப்பவும் ஓசி பீர் தான் உடனே ஏற்பாடு பண்ணவும்

    ReplyDelete
  9. //தலைக்கு எப்பவும் ஓசி பீர் தான் உடனே ஏற்பாடு பண்ணவும்//

    பீர் அபிஷேகமே தயார்!
    ப மு க - Pune Branch!

    ReplyDelete
  10. சே...உங்கள் பத்திரிக்கைகளை படித்ததற்க்கு வெட்கப்படுகிறேன்......-



    வழி மொழிகிறேன்.

    ReplyDelete
  11. @Muthu said...
    அப்படி எல்லாம் சொல்லபடாது
    பட்டாபட்டி ப்ளாக் பக்கம் வரவில்லை என்றால் சைவகொத்துப்பரோட்டா தீ குளிப்பதை தவிர்க்கமுடியாது (பெட்ரோல் உபயம் மங்குனி,ஜெய்லானி)
    //

    முத்து..
    சந்தடி சாக்குல , கொத்து ப்ரோட்டா போட பாக்குறீங்கலே..ஞாயமா?

    ReplyDelete
  12. @யூர்கன் க்ருகியர் said...
    இப்படி சொன்னதும் மனசே சரியில்ல தெரியுமா ???
    ஏன் இப்படி எல்லாம் தொண்டர்கள் (வாசகர்கள்) மனச நோகடிக்கிறீங்க??
    ஆல் ரவுண்டர் போல "அல்லக்கைகளில் இருந்து லேட்டஸ்ட் அம்மணகட்டை" வரை ஓட ஓட ஓட்டிகிட்டு இருந்தீங்க இப்ப என்னடான்னா ப்ளாக் பக்கம் வர கேப் வேணுங்கிறீங்க??
    ரெண்டு " ப்ளாக் நைட்" BEER அடிச்சிட்டு ப்ளாக் எழுதுவீங்களா ?
    Mail me ur Mobile no. plz
    //

    நாதாரிக எவனும் திருந்த மாட்டானுக..
    சில சமயம்.. செவுடன் காதில ஊதறமோனு தோணுது...
    இந்தியாவ ..இத்தாலியாக்கிட்டுத்தான் ஒன் வே டிக்கெட் எடுப்பானுக..
    கண்டிப்பா அனுப்புறேன்.. பேசலாம் சார்...

    ReplyDelete
  13. //Anonymous said...
    \\எல்லா குடும்ப தலைவருக்கும், சு% இ*&^ம் செய்து வைத்து இருக்கலாம்.//
    தல எனக்கு இது பிரியல
    ....சிவா....//

    தலைவரே... இன்னும் நீங்க பதில் சொல்லல....

    .....சிவா.....C/o. க.பாலாசி.

    ReplyDelete
  14. @தமிழ் உதயம் said...
    சே...உங்கள் பத்திரிக்கைகளை படித்ததற்க்கு வெட்கப்படுகிறேன்......-
    //
    வழி மொழிகிறேன்.
    //

    பேசுனா..மயிரா மாறி பேசறானுக.. என்ன பண்றது..
    இதுல வேற பல்லக்காமிச்சுட்டு , பரிசு வாங்கறானுக..( எல்லாம் விளம்பரம் தரும் பணம் சார்..)

    ReplyDelete
  15. @Anonymous said...

    \\எல்லா குடும்ப தலைவருக்கும், சு% இ*&^ம் செய்து வைத்து இருக்கலாம்.//
    தல எனக்கு இது பிரியல
    தலைவரே... இன்னும் நீங்க பதில் சொல்லல....
    //
    என்ன சார்.. பட்டாபட்டிய, நக்கீரனாக்காம விடமாட்டிங்க போல..
    சுயமாக சிந்தித்து ..இன்பமாக வாழுங்க சார்..
    இதுக்கும் மேல புரியலேனு, வெளியூரகரனை கேட்ராதீங்க..
    அந்த நாதாரி "சுய இன்பம்"னு நேராச்சொல்லிடுவான்..

    ReplyDelete
  16. பட்டு நீங்க இங்க தெளிவா... நான் அங்க பொலிவா... முடிஞ்சா பாருங்க... :-))))

    http://thisaikaati.blogspot.com/2010/03/media.html

    ReplyDelete
  17. @ரோஸ்விக் said...
    பட்டு நீங்க இங்க தெளிவா... நான் அங்க பொலிவா... முடிஞ்சா பாருங்க... :-))))
    http://thisaikaati.blogspot.com/2010/03/media.html

    சூப்பர்.. அருமையாக சொன்னீர்கள்..
    படித்தவர்களுக்கு புரிகிறது..
    ஆனால் அந்த பன்னாடைகளுக்கு...?

    ஏதாவது பொது நல வழக்கு போட முடியுமா ரோஸ்விக்கு?

    ReplyDelete
  18. நல்லா குட்டியிருக்கீங்க தலை..

    ReplyDelete
  19. @முகிலன் said...
    நல்லா குட்டியிருக்கீங்க தலை..
    //

    இவனுகளுக்கு உறைக்காது சார்..
    அடுத்தவன் குடும்பம் நாசமா போனா.. இவனுகளுக்கு என்ன சார் கவலை..
    பணம்.. பணம்.. பணம்..

    ReplyDelete
  20. யோவ் யோவ்..ஊர்ல உள்ளவன எல்லாம் உதைக்கற...இந்த பய சாருவ உதைக்ககூடதா...நேயர் விருப்பம்யா...ஊர்ல உள்ளவன்லாம் இந்த பயல உதைக்கறான் நீ ஒன்னும் பண்ண மாட்டேன்க்ரியே..!

    ReplyDelete
  21. நக்கீரனைப் பேட்டியெடுத்திட்டு வந்ததுலேருந்து உங்களுக்கு மீசை கூட ஏகத்துக்கும் வளர்ந்திட்டதா ஒரு புரளியிருக்குதாமே? நெசமாவா?

    ReplyDelete
  22. அப்பாவிMarch 6, 2010 at 12:13 AM

    பட்டாப்பட்டி ... வரப்ப ஒரு அம்பது காசு, அவரு கையில குடுத்து, ஒரு Blade வாங்கி, மீசையை எடுக்க சொல்லி இருக்கலாம்... பர்மா பசார்ல, Blue film cd விக்கறவங்க, அப்படிதான் இருப்பாங்க.... என்னமோ, அவரு ஜனநாயகத்தோட நாலாவது தூணு, அஞ்சாவது தூன்னு சொல்லி திரிஞ்சின்னு இருப்பார்.பண்ணறது எல்லாம் பாத்தா, பல்லு குத்தற குச்சி கூட கடயாது. வீரப்பன் மேட்டர்ல பணம் அடிச்சது உண்மையின்னு உறுதிபடுத்திட்டார். இனிமே செருப்புக்கு குடுக்கற மதிப்ப கூட அவன் பத்திரிக்கைக்கு குடுக்கமாட்டேன்.

    ReplyDelete
  23. //கொஞ்ச நாளைக்கு .. ப்ளாக் பக்கம் வரவேண்டாமென பார்க்கிறேன்//

    பட்டு சார் ஊருக்கு போறீங்களா என்ன??

    ReplyDelete
  24. //பட்டாபட்டி ப்ளாக் பக்கம் வரவில்லை என்றால் சைவகொத்துப்பரோட்டா தீ குளிப்பதை தவிர்க்கமுடியாது (பெட்ரோல் உபயம் மங்குனி,ஜெய்லானி)//

    முத்து சாரே இதெல்லாம் பப்ளிக்கா சொல்லபடாது.

    ReplyDelete
  25. வெளியூரு..பட்டாபி..ரோஸ்விக்கு...ஜெய்லானி ( ஜெயில்ல ஆணி புடிங்கினயா...பேரை பாரு), முத்து, மங்கு , அறிவு ஜீவி...அப்புறம் இன்னும் யாரு... ம்ம்ம்ம்...என் பதிவுகளை படிக்கும் பாரீஸ் ஹில்டன், ப்ரிட்னி ஸ்பியர்ஸ் , பிரயன் லாரா...பிரணாப் முகர்ஜி...எல்லாருக்கும் ஒன்னு சொல்லிக்கிறேன்... மன்னர் அரசாங்க விஷயமா மும்பைக்கு பயணப் படுகிறார். ஒரு வாரத்துக்கு ஆள் எஸ்கேப்! எவனாவது வீடியோக்கு ஆசைப்பட்டு அரசாங்கத்தை வித்துடாதீங்க...( அந்தப் புரம் ஃப்ரீயா இருக்கும்னு நினைச்சு உள்ள வந்தா ஏமாந்து போவீங்க! ஆல்ரெடி அழகிங்களை பதுக்கியாச்சு)

    ReplyDelete
  26. //அந்தப் புரம் ஃப்ரீயா இருக்கும்னு நினைச்சு உள்ள வந்தா ஏமாந்து போவீங்க! ஆல்ரெடி அழகிங்களை பதுக்கியாச்சு)//

    எதுக்கும் மங்கு வரட்டும்.

    ReplyDelete
  27. @Veliyoorkaran said...
    யோவ் யோவ்..ஊர்ல உள்ளவன எல்லாம் உதைக்கற...இந்த பய சாருவ உதைக்ககூடதா...நேயர் விருப்பம்யா...ஊர்ல உள்ளவன்லாம் இந்த பயல உதைக்கறான் நீ ஒன்னும் பண்ண மாட்டேன்க்ரியே..!
    //

    அடப்பாவி.. நீ செத்த பாம்புனு சொன்னதை இந்தாளுதுனு நெனச்சுட்டேன்யா..
    சரி..
    யாரு இந்த நாதாரி.. சசியோட பினாமியா?

    ReplyDelete
  28. @சேட்டைக்காரன் said...
    நக்கீரனைப் பேட்டியெடுத்திட்டு வந்ததுலேருந்து உங்களுக்கு மீசை கூட ஏகத்துக்கும் வளர்ந்திட்டதா ஒரு புரளியிருக்குதாமே? நெசமாவா?
    //
    அது என்ன.. மீசைகூட......பட்டாபட்டிக்கேவா? ஹா.ஹா

    ReplyDelete
  29. @அப்பாவி said...
    பட்டாப்பட்டி ... வரப்ப ஒரு அம்பது காசு, அவரு கையில குடுத்து, ஒரு Blade வாங்கி, மீசையை எடுக்க சொல்லி இருக்கலாம்... பர்மா பசார்ல, Blue film cd விக்கறவங்க, அப்படிதான் இருப்பாங்க.... என்னமோ, அவரு ஜனநாயகத்தோட நாலாவது தூணு, அஞ்சாவது தூன்னு சொல்லி திரிஞ்சின்னு இருப்பார்.பண்ணறது எல்லாம் பாத்தா, பல்லு குத்தற குச்சி கூட கடயாது. வீரப்பன் மேட்டர்ல பணம் அடிச்சது உண்மையின்னு உறுதிபடுத்திட்டார். இனிமே செருப்புக்கு குடுக்கற மதிப்ப கூட அவன் பத்திரிக்கைக்கு குடுக்கமாட்டேன்.
    //

    சார்.. அப்படியெல்லாம் சொல்லக்கூடாது..அந்தாளுக்கும் குடும்பம்..குட்டியிருக்குது..
    என்னடா.. பட்டாபட்டிய விலைக்கு வாங்கிட்டானுகளானு நினைக்காதீங்க..
    ஹி..ஹி.. இல்ல சார்..இல்ல.
    .
    .
    பழைய பத்திரிக்கைய வாங்குக..
    படிக்காம............... குழந்தைகள், உச்சா போனா..... யூஸ் பண்ணிக்கிங்க..
    நல்லா உறிஞ்சும்..
    .
    .

    ReplyDelete
  30. @ஸ்ரீராம். said...
    நியாயமான கோபம்
    //
    நன்றி சார்..

    ReplyDelete
  31. @ஜெய்லானி said...
    பட்டு சார் ஊருக்கு போறீங்களா என்ன??
    முத்து சாரே இதெல்லாம் பப்ளிக்கா சொல்லபடாது.
    //
    சே..சே.. அவ்வளவு சீக்கிரம் மாட்டுவனா ஊருக்குப்போயி..ஹி..ஹி

    ReplyDelete
  32. @ரெட்டைவால் ' ஸ் said...
    வெளியூரு..பட்டாபி..ரோஸ்விக்கு...ஜெய்லானி ( ஜெயில்ல ஆணி புடிங்கினயா...பேரை பாரு), முத்து, மங்கு , அறிவு ஜீவி...அப்புறம் இன்னும் யாரு... ம்ம்ம்ம்...என் பதிவுகளை படிக்கும் பாரீஸ் ஹில்டன், ப்ரிட்னி ஸ்பியர்ஸ் , பிரயன் லாரா...பிரணாப் முகர்ஜி...எல்லாருக்கும் ஒன்னு சொல்லிக்கிறேன்... மன்னர் அரசாங்க விஷயமா மும்பைக்கு பயணப் படுகிறார். ஒரு வாரத்துக்கு ஆள் எஸ்கேப்! எவனாவது வீடியோக்கு ஆசைப்பட்டு அரசாங்கத்தை வித்துடாதீங்க...( அந்தப் புரம் ஃப்ரீயா இருக்கும்னு நினைச்சு உள்ள வந்தா ஏமாந்து போவீங்க! ஆல்ரெடி அழகிங்களை பதுக்கியாச்சு)
    //

    பார்த்தையா.. பாம்பேக்கு விசா..பாஸ்போர்ட் எல்லாம் வேணும்..அந்த பயல..
    அட.. நம்ம பால் நக்குனார, கேட்டதா சொல்லு..
    மேலும்.. மறக்காம, மூஞ்சியல மரு வெச்சுக்க.. ஏதாவது பிரச்சனைன(வீடியோவுல..)
    நான் அவன் இல்லைனு சொல்லிட்டு ஷட்ட்ரை போட்டுக்கலாம்..
    போயிட்டு வந்து ..எங்களை கூப்பிடுயா..

    ReplyDelete
  33. //யோவ் யோவ்..ஊர்ல உள்ளவன எல்லாம் உதைக்கற...இந்த பய சாருவ உதைக்ககூடதா...நேயர் விருப்பம்யா...ஊர்ல உள்ளவன்லாம் இந்த பயல உதைக்கறான் நீ ஒன்னும் பண்ண மாட்டேன்க்ரியே..!//

    Yep.I second that my friend.

    ReplyDelete
  34. @ILLUMINATI said...
    போயி வெளியூரு ப்ளாகப் பாரு.. உனக்கு ஆப்பு வெச்சிருக்கேன் அங்க..

    ReplyDelete
  35. பட்ட உன்னையத்தான் பேட்டி எடுக்க சொல்லனும்னு நினச்சேன் , நீயே எடுத்திட்ட

    ReplyDelete
  36. ஓட்டு பட்ட தலைப்பு மேல இருக்கேப்பா? இல்லாட்டி தலைப்ப ஒரு டபிள் கிளிக் பண்ணுங்க

    ReplyDelete
  37. பத்திரிக்கைச் சுதந்திரம் என்பது எதுவரை..?

    அடுத்தவர் வீட்டு ஹால் டிவியில் புளு பிலிம் காட்டும் வரை...

    நன்றி...

    ReplyDelete
  38. //நண்பர்களே.. மன்னிக்கவும்..

    கொஞ்ச நாளைக்கு .. ப்ளாக் பக்கம் வரவேண்டாமென பார்க்கிறேன்..

    பயந்துவிடாதீர்கள்..அடிக்கடி.... பின்னூட்டத்தில் சந்திக்கிறேன்...//

    நீங்க வரலைன்னா நாங்களும் வர மாட்டோம்..

    சொல்லீட்டேன்..

    நன்றி..

    ReplyDelete
  39. அடப்பாவி.. நீ செத்த பாம்புனு சொன்னதை இந்தாளுதுனு நெனச்சுட்டேன்யா..
    சரி..
    யாரு இந்த நாதாரி.. சசியோட பினாமியா?///////


    சசி பினாமி இல்லை இவரு சு. சாமீ பினாமி

    ReplyDelete
  40. புள்ள குட்டிக்காரன்.. வேதனையோடு...March 7, 2010 at 1:14 PM

    நக்கீரனை விடுங்க, சன் டிவியில் ஓளிபரப்பின் போது வீட்டில் உள்ள குழந்தைகளின் நிலைய பாருங்க.. விடியோ வை பார்த்து விட்டு
    என் வீட்டு குழந்தைகளின் கேள்விககு பதில் சொல்ல முடியாமல் கஷ்டப்பட்டது.. வேதனையானது..

    ReplyDelete
  41. இவனுங்க திருந்தலன்னாலும், நாம் சளைக்கக் கூடாது நண்பர் பட்டாபட்டி அவர்களே. நமக்குத் தொழில் பதிவு, இமைபொழுதும் சோராதிருத்தல்.

    மீண்டும் தங்கள் பணியை சோர்வடையாமல் தொடருங்கள். எறும்பு ஊர கல்லும் தேயும்.

    ReplyDelete
  42. இவனுங்க திருந்தலன்னாலும், நாம் சளைக்கக் கூடாது நண்பர் பட்டாபட்டி அவர்களே. நமக்குத் தொழில் பதிவு, இமைபொழுதும் சோராதிருத்தல்.

    மீண்டும் தங்கள் பணியை சோர்வடையாமல் தொடருங்கள். எறும்பு ஊர கல்லும் தேயும்.

    ReplyDelete
  43. @மங்குனி அமைச்சர் said...
    ஓட்டு பட்ட தலைப்பு மேல இருக்கேப்பா? இல்லாட்டி தலைப்ப ஒரு டபிள் கிளிக் பண்ணுங்க
    //

    சென்னைக்கு டிக்கெட் எடுத்து கொடுய்யா.. நானே வந்து சரி பண்ணிக்கொடுக்கிறேன்..

    ReplyDelete
  44. @பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
    பத்திரிக்கைச் சுதந்திரம் என்பது எதுவரை..?
    அடுத்தவர் வீட்டு ஹால் டிவியில் புளு பிலிம் காட்டும் வரை...
    நன்றி...
    கொஞ்ச நாளைக்கு .. ப்ளாக் பக்கம் வரவேண்டாமென பார்க்கிறேன்..
    பயந்துவிடாதீர்கள்..அடிக்கடி.... பின்னூட்டத்தில் சந்திக்கிறேன்...//
    நீங்க வரலைன்னா நாங்களும் வர மாட்டோம்..
    சொல்லீட்டேன்..
    நன்றி..
    //

    கொஞ்சம் வேலைச்சுமை அதிகம்..அதனால்தான்..
    ஓகே....ரைட் சார்.
    உடுங்க.. எப்படியாவது டைம் ஒதுக்கிவிடுகிறேன்..

    ReplyDelete
  45. @புள்ள குட்டிக்காரன்.. வேதனையோடு... said...
    நக்கீரனை விடுங்க, சன் டிவியில் ஓளிபரப்பின் போது வீட்டில் உள்ள குழந்தைகளின் நிலைய பாருங்க.. விடியோ வை பார்த்து விட்டு .. என் வீட்டு குழந்தைகளின் கேள்விககு பதில் சொல்ல முடியாமல் கஷ்டப்பட்டது.. வேதனையானது..
    //

    அதுதான் சார் பிரச்சனை.. நல்ல தகப்பனாய் இருக்க விடமாட்டார்கள்..
    மேலும்.. அடுத்த ஜெனரேசனையும் கெடுக்க பார்க்கிறார்கள் நாதாரிகள்

    ReplyDelete
  46. @சவுக்கு said...
    இவனுங்க திருந்தலன்னாலும், நாம் சளைக்கக் கூடாது நண்பர் பட்டாபட்டி அவர்களே. நமக்குத் தொழில் பதிவு, இமைபொழுதும் சோராதிருத்தல்.
    மீண்டும் தங்கள் பணியை சோர்வடையாமல் தொடருங்கள். எறும்பு ஊர கல்லும் தேயும்.
    //

    நன்றி சவுக்கு அவர்களே..
    உற்சாகம் ஊட்டியதற்கு..
    ஆரம்பித்துவிட்டேன் என் பணியை..

    //எறும்பு ஊர கல்லும் தேயும்.//
    மாற்றங்கள் சீக்கிரம் வரனும் சார்... , "அடுத்த தலைமுறை, நம்மை குறைசொல்லும்முன் "

    ReplyDelete
  47. Cool Boy said...

    அட்டகாசம்..
    //

    என்னா சார்.. இவனுகள கிழிச்சு 1 மாதம் ஆகிவிட்டது.. இப்பத்தான் படிக்கிறீங்களா?...சீக்கிரம் படிச்சுட்டு, லேட்டஸ்ட் பதிவுக்கு வாங்க.. அங்க கும்மலாம்..

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!