Pages

Tuesday, March 23, 2010

தமிழ்நாடு ஒளிர்கிறது..(நன்றி ஆற்காடு நவாப்க்கு)

கடைசியா வந்த நூசு..
சென்னை: தமிழகத்தில் வருகிற மே மாதம் வரை மின் வெட்டு நீடிக்கும் என்று கூறி விட்டார் தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி . தமிழகத்தில் அதிகளவில் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு வருவதால் மின்சார தேவை அதிகரித்து வருகிறது. இதனை சரி செய்ய அண்டை

மாநிலங்களில் இருந்து 10,000 மெகாவாட் வரை மின்சாரம் பெறப்பட்டு, மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கோடை காலத்தில் மின் உற்பத்தி குறைவாக இருப்பதால் கிராமப்புறங்களில் நாள் ஒன்றிற்கு 2 மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது; அதிகளவில் மின்வெட்டு  இருப்பதாக கூறப்படுவது பொய்யான தகவல்.

கிராமப்புறங்களில் தேர்விற்கு படிக்கும் மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல், பகலில் மட்டுமே மின் வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது  என்றார் வீராசாமி.



போனவாரம் வந்த நூசு
தமிழ் நாடு மிந்துறையில் தன்னிறைவு பெற்றது.. அண்டை மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கும் அளவுக்கு நாம்  முன்னேறிகொண்டுள்ளோம்..

--------------------------------------------------------------------------------------------------

நன்றி ஆற்காடு வீராசாமி அவர்களே.. போன வாரம் செய்திதாள்களில், தமிழ் நாடு மின்துறையில் தன்னிறைவு பெற்றுவிட்டதாகவும்,  பிற மாநிலங்களுக்கு, மின்சாரம் சப்ளை செய்யும் அளவுக்கு, நாம் முன்னேறிவிட்டோம் எனக் கூறிய உங்கள் பேட்டியை படித்தேன்.. ஆனால் .. சமீபத்தில் மின்வெட்டு நீடிக்கும் என் நீங்கள் சொன்ன பேட்டியையும் படித்தோம்..


இன்னுமுதல்,   தனிமனித தாக்குதலை தவிர்க்க முடிவு செய்துள்ளதால்..நானே கேள்விகள் கேட்டு ,பதில்களையும் சொல்லிவிடுகிறேன்.. இதில் தவறுகள் இருந்தால், என்னை நீங்கள் கும்மியெடுக்கலாம் என்பதையும் இத்தருணத்தில் சொல்லிக்கொள்ள  விருப்பபடுகிறேன்.. நன்றி அய்யா..

( தயவுசெய்து கும்மும் போது குப்புறபடுக்கவைத்து கும்மவும்..தலைச்சன் பிள்ளையை மல்லாக்க படுக்கவைத்து  கும்மக்கூடாது என சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது இதை என்னுடைய வேண்டுகோளாக வைக்கிறேன்..)

1. ஏன் ஒரே வாரத்தில் இந்த மாற்றம்..?
ஷேர் மார்க்கட்டில ஏற்றம் , தாழ்வு நிகழ்வது சகஜம்தானே..அது , நான் அன்று சொன்னது..  இதை நான் இன்று சொல்வது..

2. ஒரு அமைச்சராக இருந்து கொண்டு, உங்கள் கடமையை சரிவர ஆற்றவில்லை என்பதைப்பற்றி?..
யார் சொன்னது.. எனக்கு அரசியலில் பழத்த அனுபவம்.. உங்கள் வயது எனது அனுபவத்தைவிட குறைவாகவேயிருக்கும்..  மக்களுக்கு.. எதை எப்போது பண்ண வேண்டும் என எங்களுக்குத் தெரியாதா?

3. கிராமம் தான் நாட்டின் முதுகெழும்பு என ஒரு பெரியவர்  சொல்லியிருந்தாரே?..அப்புறம் ஏன் கிராமம் மக்கள்மீது மட்டும்
இந்த கொலைவெறி தாக்குதல்?.

தம்பி..முதல்ல ஒன்றை புரிந்துகொள்..
வரப்பு உயர நீர் உயரும்..

நீர் உயர நெல் உயரும்..

நெல் உயர குடி உயரும்..

குடி உயர கோல் உயரும்..

கோல் உயர கொற்றவன் உயர்வான்..


நாங்கள் அன்றே சொல்லிவிட்டோம்.. ”கிராமத்தினர்தான் இந்நாட்டு மன்னர்கள் என்று!!”..  அவர்களுக்காக கடைசிசொட்டு ரத்தம் உள்ளவரை பாடுபடுவோம்.. முதலில் வரப்பை உயர்த்த ( அதாவது நாம்.. நகரத்தினர் ) பாடுபடுவோம்..  கடைசியாக.. மன்னர்கள் உயர்ந்துவிடுவார்கள்..

4.தமிழகத்தில் அதிகளவில் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு வருவதுதான், மின்சார தேவை அதிகரிக்க காரணம் எனக்கூறுகிறீர்களே?
உண்மை..அதற்கு கழகம் உயிரைகொடுத்து போராடிவருகிறது..
முடிந்த அளவு புது தொழிற்சாலைகளுக்கான லைசென்ஸ்யை கொடுப்பதில்லை.. மேலும் மின்சாரத்தை அதிகம் உபயோகிக்கும்
தொழிற்சாலை உரிமைகளை ரத்து செய்யலாமா எனவும் பொதுக்குழு ஆலோசித்து வருகிறது..

அய்யா.. இதற்கு மேல் பேட்டியை தொடர்ந்தால்..நல்ல உள்ளங்கள் பாதிக்கபடும் என்பதால்  இத்துடன் முடித்துக்கொள்கிறேன்..

கீழகண்டவை எனது சொந்தக்கருத்து இது..யார் மனத்தையும் புண்படுத்த விரும்பவில்லை..
மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல், பகலில் மட்டுமே மின் வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது எனக்கூறியதால்.  நானும் எனது வருங்கால சந்ததியனரும்.. கழகத்துக்கு மட்டுமே வாக்களிக்க முடிவுசெய்துள்ளோம்..    அதை மீறும் குடும்பத்தாருக்கு.. எனது சொத்தில் ஒரு நயா பைசா கிடையாது..
.
.
.

54 comments:

  1. நம்ம தமிழ் மக்கா எல்லாருமே tube லைட் கள் தான் எதுக்கு தனியா மின்சாரம் கொடுத்து Waste பண்ணனும் னு.. சிந்திச்ச அந்த ஒப்பற்ற ஆர்க்காட்டாரோட நல்ல மனச நீங்களும் புரிஞ்சிகிட்டீங்கன்னே ....

    ReplyDelete
  2. நல்ல பதிவு, நான் உங்கள் அனைவரின் மனதையும் பாதிக்க வைத்துவிட்டேன் என்பது நல்லாப் புரியுது. சாரி பட்டாபட்டி. நான் வேனும் என்று செய்யவில்லை. நான் உணர்ந்தைச் சொன்னேன். அவ்வளவுதான். உங்கள் மூவரின் நட்பையும் நாடுகின்றேன்.

    சனிக்கிழமை வாங்க பட்டாபட்டி, புண்பட்ட மனதை பீர் விட்டு ஆற்றுவேம்.

    ReplyDelete
  3. மக்களே.. பட்டாபட்டியின் முக்கிய அறிவிப்பு..

    பட்டாபட்டியின் பதிவில்..சிங்கை நேரம் (23 மார்ச் 2010...காலை 11.30 மணிமுதல் ) யார் வந்து கமென்ஸ் போட்டாலும்..அவர்களின் பதிவில் போய் நான் கும்மியடிப்பேன் என்பதை இந்த நேரத்தில் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்..

    அரிய வாய்ப்பை பயன்படுத்துக்கொள்ளுங்கள்... எனக்கு யார்மேலும் வருத்தமில்லை..
    மேலும் எனக்கென தனி முத்திரையை பதித்துக்கொள்ளவும் விரும்பவில்லை..
    ஆகவே.. சிந்தித்து செயல்படுங்கள்..

    நன்றியுடன் பட்டாபட்டி

    ReplyDelete
  4. பட்டு, ஆற்காட்டார் ஆட்டோ அனுப்புவதாகச் சொன்னார்.... போயி மொத்தல்ல கரண்டை ஒழுங்கா அனுபுயா-னு ப.மு.க சார்பா சொல்லி அனுப்பியாச்சு....

    ReplyDelete
  5. ஏ வெண்ண ஏற்கனவே பாவம் ஆற்காட்டார் , அவரே கல்லா கட்ட முடியாம முளிபிதுங்கி போய் அலைகிறார் , நீ ஏதாவது நிதி உதவி செய்வியா ? அத விட்டு கேள்வி வேற கேட்குறியா ?

    ReplyDelete
  6. //இவன் சிவன் said...
    பித்தனின் வாக்கு said...
    பட்டாபட்டி.. said...
    ரோஸ்விக் said...
    மங்குனி அமைச்சர் said... //

    எல்லாம் நம்ம ஏரியாவுக்கு ஒரு வாட்டி வந்திட்டு போங்கோ ..........................

    ReplyDelete
  7. பட்டு சார் இந்த பதிவில் காரம் கம்மி, வழக்கமான மசாலா மிக்ஸ் இல்லை என்பதை மிக வருத்த்துடன் தெரிவித்து லொல்..ச்சே..கொள்கிறோம்...நன்றி வனக்கம்,,,,,

    ReplyDelete
  8. //முதலில் வரப்பை உயர்த்த ( அதாவது நாம்.. நகரத்தினர் ) பாடுபடுவோம்..//

    அய்!! விளக்கம் ஜூப்பரு.

    ReplyDelete
  9. ஒரு முடிவோடத்தான் இருக்கீரு போலிருக்கு...

    பிரபாகர்...

    ReplyDelete
  10. //ஜெய்லானி
    said... //

    neeyum inga thaan irukkiyaa ?

    ReplyDelete
  11. அவ்வையார் பாட்டெல்லாம் போட்டு அசத்துறீரு?

    மினிஸ்டருங்க வீட்டுல பவர் கட்டு இருக்கமான்னேன்?

    பிரபாகர்.

    ReplyDelete
  12. // மங்குனி அமைச்சர் said...neeyum inga thaan irukkiyaa ?//

    ஆமாய்யா ஏரியா ஒரே டிரையா இருக்கு!!

    ReplyDelete
  13. //Blogger பிரபாகர் said...மினிஸ்டருங்க வீட்டுல பவர் கட்டு இருக்கமான்னேன்?//

    எந்த காலத்தில இருக்கீரு ஓய்? ஜென்ரேட்டர் கண்டுபிடிச்சது யாருக்காக ?

    ReplyDelete
  14. பவர் கட்டானாத்தாங்க ஜெனெரேட்டர்!

    அங்கல்லாம் எப்பவும் ஆகாது, சிங்கப்பூர் மாதிரி எப்பவும் கரண்ட் இருக்கும்.... அத சொன்னேன்...

    பிரபாகர்...

    ReplyDelete
  15. அண்ணே, ஃபியூஸைப் பிடுங்கிறப்போறாங்கண்ணே! :-))

    காரம்,குணம்,மணம் எல்லாம் சரியான அளவுலே...ஜமாய்ங்க!!!

    ReplyDelete
  16. மனிதன்March 23, 2010 at 1:55 PM

    யோவ்.. பட்டாபட்டி..
    வீச்சு புரோட்டா போடவேண்டிய இடத்தில..
    தோசை சுட்டுகிட்டு இருக்கீரு..

    ஏன்.. என்னாச்சு..எங்கேயா எங்க பழைய பட்டாபட்டி...
    ( யோவ்.. நக்கல் பண்ணினாலும்..அதுல நல்ல விசயத்தை
    சொல்லுவீர்..ஆனா.. இந்த பதிவு, பட்டாபட்டியோட பதிவேயில்ல..)

    கதை..கவிதை எழுத ஆயிரம் பேரு இருக்கானுக.. நீ உன்னோட ஸ்டைலில்
    பழையபடி பட்டாசு கிளப்பு..
    இதை எங்களோட எச்சரிக்கையா எடுத்துக்க பட்டு..

    ReplyDelete
  17. அப்பாவிMarch 23, 2010 at 2:10 PM

    இருப்பா... கரன்ட் வந்த ஒடனே வந்து கும்மறேன்....

    ReplyDelete
  18. தவத்தை கலைத்து விட்டு வெளியே வாய்யா பட்டா பட்டி ,ஒரு சிங்கத்தை புல் தடுக்குமா? என்ன !யானையை கொசு விரட்டிடுமா என்ன ! மவுனத்தில் விளையாடும் மனசாட்சியே.........

    ReplyDelete
  19. பட்டாபட்டியின் இந்த பதிவு காரணம் சொல்லபடாமல் தள்ளுபடி செய்யபடுகிறது..பட்டாபட்டியின் பழைய காரசாரமும் நக்கலும் இல்லாதே இதற்க்கு காரணமாக இருக்கலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன....இதே நிலை தொடர்ந்தால் வெளியூர்க்காரன் பட்டாபட்டியின் கூட்டணியில் தொடர்வது மிக பெரிய சந்தேகம் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்...!!

    ReplyDelete
  20. எனக்கும் இந்த சூடு கம்மியா இருக்கறமாதிரியே இருக்கு தலைவரே... நல்லா வறுத்திருக்கலாமே....

    ReplyDelete
  21. பாத்தீங்களா ஆற்காட்டாரப்பாத்து நீங்களே பயப்படுறீங்க...

    ReplyDelete
  22. யோவ் நம்ப பித்தன கலாசுனோம்..அவருக்கு புடிக்கல..நாம மன்னிப்பு கேட்டுட்டோம்..இனிமே அங்க வர மாட்டோம்னும் சொல்லிட்டோம்.பிரச்சன முடிஞ்சுது...அப்பறம் என்னையா உன் பிரச்சன...பெரிய நொன்ன மாதிரி சீன் போட்டா தக்காளி உன்ன மொதல்ல போடற மாதிரி இருக்கும்..! ஒழுங்கு மரியாதையா பழைய பார்முக்கு வா...!..இல்லைனா இனி எங்க மோதல் இலக்கு நீதான்...!!! (போர் முரசு கொட்டுங்கோல்..இது வெளியூர்க்காரன் உய்தவு..)

    ReplyDelete
  23. உம்..
    கொட்டட்டும் முரசு..( யோவ்..நீ பல்ல காமிக்காதே விஜய காண்டு.. உன்னச்சொல்லலே..)

    ஸ்டார்ட் மீசிக்...

    ( இதயம் பலகீனமானவர்கள்..மனிதாபிமானம் உள்ளவர்கள்..
    சாமியார்களை தெய்வமாக பார்பவர்கள் .........தயவு செய்து பட்டாபட்டி பதிவுகளை படிக்கவேண்டாம்..)

    பட்டாபட்டி .....உம்....ஸ்டார்ட் மீசிக்...

    ReplyDelete
  24. என்னது?
    தமிழ் நாடு ஒளிகிறதா???

    ReplyDelete
  25. @@@@ பட்டாபட்டி.. said...
    உம்..
    கொட்டட்டும் முரசு..( யோவ்..நீ பல்ல காமிக்காதே விஜய காண்டு.. உன்னச்சொல்லலே..)

    ஸ்டார்ட் மீசிக்...

    ( இதயம் பலகீனமானவர்கள்..மனிதாபிமானம் உள்ளவர்கள்..
    சாமியார்களை தெய்வமாக பார்பவர்கள் .........தயவு செய்து பட்டாபட்டி பதிவுகளை படிக்கவேண்டாம்..)

    பட்டாபட்டி .....உம்....ஸ்டார்ட் மீசிக்...///


    ஹா... ஹா.... வாய்யா போய் பித்தன்ட்ட, கொசு முட்டைல மாங்கா பச்சடி செஞ்சு கேப்போம்..!!

    ReplyDelete
  26. @Veliyoorkaran said...
    ஹா... ஹா.... வாய்யா போய் பித்தன்ட்ட, கொசு முட்டைல மாங்கா பச்சடி செஞ்சு கேப்போம்..!!
    //

    இந்த நக்கல்தானே வேணாங்கிறது...
    அவருதான் நாம வந்தா.. கட்டிவெச்ச இமேஸு உடச்சிடுமுனு சொல்றாரே?..

    போசாமா, நம்ம மங்குனி வீட்ல கும்மியடுக்கலாம்..
    இல்ல மன்னரோட அரண்மனை சும்மாத்தானேயிருக்கு..

    ReplyDelete
  27. அருமை அண்ணன் மொக்கை சாமீ அவர்களே ரொம்ப மொக்கை போடதிங்க. தாங்க முடியல. ஐயோ சாமி தாங்க முடியல.....

    ReplyDelete
  28. @Anonymous said...
    அருமை அண்ணன் மொக்கை சாமீ அவர்களே ரொம்ப மொக்கை போடதிங்க. தாங்க முடியல. ஐயோ சாமி தாங்க முடியல.....
    //

    என்ன அண்ணே.. இப்படி சொல்றீங்க..இப்பத்தான் ஆப் ஆன வண்டிய ஸ்டார்ட் பண்ணியுருக்கேன்..
    என்னும் எவ்வளவு கி.மீ போகவேண்டியதிருக்கு?..

    ஏன்னே.. உங்களுக்கு இன்னுமா பேரு வெக்காமா இருக்காங்க.. நீங்க அடிச்ச கமென்ஸ்ச பார்த்தா.. அப்படியே
    சங்கர் மாறியுருக்கு சார்..

    ReplyDelete
  29. ஆற்காட்டாருக்கு கூஜா தூக்கவே நேரம் இல்லை..

    மின்சாரம் பற்றி என்ன தெரியும் ...

    சொல்லி 2 மணி நேரம் சொல்லாமல் 2மணி நேரம் பவர் கட் பண்ணி கொல்றானாம்...

    இரவிலும் கரண்ட் கட்...

    பாவிங்க ஒரு வழியும் ப்ண்ண மாதிரி தெரியவில்லை...

    ReplyDelete
  30. ஆற்காடு விளக்குசாமி.... சீ...... வெலக்கென்ன சாமி சீ சீ........ என்ன கீபோர்ட்யா இது?
    யோவ் பட்டு,உன் கீபோர்ட விட இது ரொம்ப மக்கர் பண்ணுதுயா.அதிகப் பிரசங்கித்தனமா உண்மைய எல்லாம் தன்னாலேயே அடிக்கிது.நான் சொல்ல வந்தது என்னன்னா,ஆற்காடு வீராசாமி வாழ்கன்னு தான்.
    ஆமா,ஏதோ ஒளிருதுன்னு சொல்றாங்க.நான் கேள்விப்பட்ட வரை ஆற்காடு வீராசாமி பக்கத்துல இருக்குறவங்க மட்டும் தான் அப்டி சொல்றாங்க.அவர் வந்தாலே ஒளியும் வந்துடுதாம்.(ஏய்,எவண்டா அது அவர் மண்டைய பாக்குறது?அவர் அத சொல்லலையா,தமிழ்நாட்ட சொல்றாரு......)
    அப்புறம் பட்டு,உமக்கு அழகே அலும்பு தான்யா.பழையபடி பார்முக்கு வா....நம்ம ராஜங்கத்துல மட்டும் கும்முவோம்,ரைட்டா....

    ReplyDelete
  31. @ILLUMINATI said...
    ஆமா,ஏதோ ஒளிருதுன்னு சொல்றாங்க.நான் கேள்விப்பட்ட வரை ஆற்காடு வீராசாமி பக்கத்துல இருக்குறவங்க மட்டும் தான் அப்டி சொல்றாங்க.அவர் வந்தாலே ஒளியும் வந்துடுதாம்.(ஏய்,எவண்டா அது அவர் மண்டைய பாக்குறது?அவர் அத சொல்லலையா,தமிழ்நாட்ட சொல்றாரு......)
    அப்புறம் பட்டு,உமக்கு அழகே அலும்பு தான்யா.பழையபடி பார்முக்கு வா....நம்ம ராஜங்கத்துல மட்டும் கும்முவோம்,ரைட்டா....

    //


    ரைட்ணே.. ஆரம்பிச்சுடலாம்..அடுத்த பதிவில இருந்து..( அட இன்னைக்கு நைட்டே பப்ளிஸ் பண்ணிடலாம்..)

    ReplyDelete
  32. காத்தாலெ கொஞ்சம் மார்கெட்டுக்குப்போயிட்டனுங்க. வந்து பாத்தா ஜேஜேன்னு ஒரே பின்னூட்டமாயிருக்கு, ஒரு ஓரத்தில எனக்கும் கொஞ்சம் எடங்குடுங்க கண்ணுகளா. கரண்டு லக்ஷிமிங்க, கன்னாபின்னான்னு பேசப்படாதுங்க.

    ReplyDelete
  33. மசக்கவுண்டன் said...

    காத்தாலெ கொஞ்சம் மார்கெட்டுக்குப்போயிட்டனுங்க. வந்து பாத்தா ஜேஜேன்னு ஒரே பின்னூட்டமாயிருக்கு, ஒரு ஓரத்தில எனக்கும் கொஞ்சம் எடங்குடுங்க கண்ணுகளா. கரண்டு லக்ஷிமிங்க, கன்னாபின்னான்னு பேசப்படாதுங்க.
    //

    என்னாங்க கவுண்டரே.. உங்களுக்கு இல்லாத இடமா?..

    கரண்டு லச்சுமியத்தான் கிரில் போட்டு பூட்டி வெச்சுடானுகளே..
    நாங்க கோயில 24 மணி நேரம் தொறந்து வையினு கேக்குறோம் கவுண்டரே..

    ReplyDelete
  34. // அட இன்னைக்கு நைட்டே பப்ளிஸ் பண்ணிடலாம்..//

    அப்டி சொல்லுயா என் சிங்கக்குட்டி......
    போயிட்டு உன் பாணில அந்த விளக்குபுடிக்குறசாமிய சீ......மறுபடியும் மக்கர் பண்ணுது......வீராசாமிய பத்தி இன்னொரு பதிவ எழுத்து ராசா.......

    ReplyDelete
  35. @ILLUMINATI said...
    அப்டி சொல்லுயா என் சிங்கக்குட்டி......
    போயிட்டு உன் பாணில அந்த விளக்குபுடிக்குறசாமிய சீ......மறுபடியும் மக்கர் பண்ணுது......வீராசாமிய பத்தி இன்னொரு பதிவ எழுத்து ராசா.....
    //

    அட.. அந்தாளு எப்படியும் அறிக்கையுடாமலா போயிடுவாரு?.
    அப்ப பின்னி பெடலெடுக்கலாம்..

    நம்ம அடுத்த பதிவு..”பெற்றொர்களை பற்றி”

    ReplyDelete
  36. எல்லாருஞ்சொல்றதையே நானுஞ்சொல்லிக்கிறேனுங்கோ... இந்தப் பதிவு பட்டாபட்டியோட பதிவு மாதிரியே இல்லீங்கோ..

    ReplyDelete
  37. முகிலன் said...

    எல்லாருஞ்சொல்றதையே நானுஞ்சொல்லிக்கிறேனுங்கோ... இந்தப் பதிவு பட்டாபட்டியோட பதிவு மாதிரியே இல்லீங்கோ..
    //

    அட ஆமாங்கோ.. கொஞ்சம் கிறுக்கு புடிக்க உட்டுடாங்க..
    நானும் நல்லவனாயிடலாமேனு பார்த்தேன்..

    உகூம் சரி வராது..
    அடுத்த பதிவில ஆரம்பிச்சுடரேன் முகிலன் சார்..

    ReplyDelete
  38. அப்பாவிMarch 23, 2010 at 9:58 PM

    ஒருத்தன் கொஞ்சம் திருந்த ஆரம்பிச்சா, இந்த சமுதாயம் எப்படி, எப்படியெல்லாம் காரி துப்புது? ஐயோ சாமி , பட்டாப்பட்டி,நாம திருந்தனாளும், இந்த நாடு விடாது போல... என்ன பண்றது , பழையபடி பட்டைய கெளப்ப வேண்டியதுதான் .... அப்புறம், இந்த முதேவிய பத்தி எழுதன கி போர்ட , நல்லா பெனாயில் ஊத்தி கழுவி, கொஞ்சம் சாம்பராணி போடு...

    ReplyDelete
  39. அப்பாவி said...

    ஒருத்தன் கொஞ்சம் திருந்த ஆரம்பிச்சா, இந்த சமுதாயம் எப்படி, எப்படியெல்லாம் காரி துப்புது? ஐயோ சாமி , பட்டாப்பட்டி,நாம திருந்தனாளும், இந்த நாடு விடாது போல... என்ன பண்றது , பழையபடி பட்டைய கெளப்ப வேண்டியதுதான் .... அப்புறம், இந்த முதேவிய பத்தி எழுதன கி போர்ட , நல்லா பெனாயில் ஊத்தி கழுவி, கொஞ்சம் சாம்பராணி போடு...
    //

    பினாயிலா.. உகூம்.. தூக்கி வீசிட்டு புதுசுதான் போடனும் அப்பாவி..

    ReplyDelete
  40. ஒரு பட்டாபட்டி பட்டாபி ஆகிறான்..!

    தூரத்துல ஸ்லோமோஷன்ல ஒரு கிழிஞ்சு போன பையோட ஹீரோ போறது உங்க கண்ணுக்குத் தெரியுதா!

    என்ன மாப்ள சென்டிமெண்டா?

    ReplyDelete
  41. பட்டாபட்டியின் ரகசிய கடிதம்!

    தின குசும்பு சிறப்பு செய்தி!

    இன்று காலை பட்டாபட்டியின் பெட்ரூமிலிருந்து ஒரு பேப்பர் கைப்பற்றப் பட்டது!

    அந்த கடிதத்தில் பட்டாபட்டி எழுதிய சில வரிகள்.

    " பட்டாபட்டி உங்களை விட்டு விலகுவதுமில்லை..உங்களை கைவிடுவதுமில்லை!"

    உன் சமூகம் உனக்கு சைடாக செல்லும்.

    கடமையை செய்யாதே ..பலனையும் எதிர்பாராதே!

    "வெளியூர்காரன் , ரெட்டைவால்ஸ் , ஜெய்லானி ரோஸ்விக் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது! பட்டாபட்டி என்று சொன்னால்தான் உதடகள் கூட ஒட்டும்."

    இப்படிப்பட்ட சில வரிகளால் மக்கள் கலக்கமடைந்திருக்கிறார்கள். பட்டுவுக்கு மண்டைக்குள் ஏதோ ஆகிவிட்டதோ என்றும், திடீரென சாமியார் ஆக ப்ளான் வைத்திருப்பதாகவும் வதந்தி பரவிக்கொண்டிருக்கிறது.

    சிங்கப்பூரிலிருந்து தினகுசும்பு நிருபர்!

    ReplyDelete
  42. //சிங்கப்பூரிலிருந்து தினகுசும்பு நிருபர்!//
    ரெட்டை, மன்னர் பதவிக்கு அழகா இது ஒற்றர் வேலை பாத்துக்கிட்டு, அதுவுமில்லாம தின கு சு ம் பு நிருபரா? என்னய்யா பேரே சரியில்ல.

    ReplyDelete
  43. கண்டுபுடிச்சுட்டேன்யா..மகாஜனங்களே.நடந்த அத்தனை கலவரத்துக்கும் இந்த ஜெய்லானி பய தான் காரணம்.
    எப்படி டபுள் மீனிங்ல அடிச்சு விடுது பார்த்தீங்களா..நண்பர்களே இதோ இருக்கு கல்ப்ரிட்!

    பட்டு..அநியாயமா சிக்கிட்டியேய்யா

    ReplyDelete
  44. @@@ரெட்டைவால் ' ஸ் said...
    /////////
    உன் சமூகம் உனக்கு சைடாக செல்லும்.
    ////////////
    "வெளியூர்காரன் , ரெட்டைவால்ஸ் , ஜெய்லானி ரோஸ்விக் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது! பட்டாபட்டி என்று சொன்னால்தான் உதடகள் கூட ஒட்டும்."
    ///////////

    அட நார பயலே..எப்படா உக்காந்து யோசிச்ச இத..ஹா ஹா..நீங்கல்லாம் நக்கல் விடாம ஒழுங்கா யோசிச்சா தமிழ்நாடு கூடிய சீக்கிரம் இந்தியாவோட சேர்ந்துடும்டா..!!

    ReplyDelete
  45. சங்கு சத்தம் நல்லா இருக்கு.

    ReplyDelete
  46. //கண்டுபுடிச்சுட்டேன்யா..மகாஜனங்களே.நடந்த அத்தனை கலவரத்துக்கும் இந்த ஜெய்லானி பய தான் காரணம்.
    எப்படி டபுள் மீனிங்ல அடிச்சு விடுது பார்த்தீங்களா..நண்பர்களே இதோ இருக்கு கல்ப்ரிட்!

    பட்டு..அநியாயமா சிக்கிட்டியேய்யா//

    ரெட்டை வெடி வைகிறதுதான் என் வேலை , அது வெடிக்குதான்னு பாக்குறது என் வேலை இல்ல !!!

    ReplyDelete
  47. //அட நார பயலே..எப்படா உக்காந்து யோசிச்ச இத..ஹா ஹா..நீங்கல்லாம் நக்கல் விடாம ஒழுங்கா யோசிச்சா தமிழ்நாடு கூடிய சீக்கிரம் இந்தியாவோட சேர்ந்துடும்டா..!!//

    ஓ அப்ப பேச்சுவார்த்தை நடக்குதா ?? வேண்டாம் , நாம ரஷ்யாவோடவே இருப்போம்!!

    ReplyDelete
  48. @சிவன் said...
    நம்ம தமிழ் மக்கா எல்லாருமே tube லைட் கள் தான் எதுக்கு தனியா மின்சாரம் கொடுத்து Waste பண்ணனும் னு.. சிந்திச்ச அந்த ஒப்பற்ற ஆர்க்காட்டாரோட நல்ல மனச நீங்களும் புரிஞ்சிகிட்டீங்கன்னே ....//

    மக்கள், இயற்கையோடு ஒன்றிவாழ .. ஓய்வின்றி உழைக்கிறார்சார்..


    @பித்தனின் வாக்கு said...
    நல்ல பதிவு, நான் உங்கள் அனைவரின் மனதையும் பாதிக்க வைத்துவிட்டேன் என்பது நல்லாப் புரியுது. சாரி பட்டாபட்டி. நான் வேனும் என்று செய்யவில்லை. நான் உணர்ந்தைச் சொன்னேன். அவ்வளவுதான். உங்கள் மூவரின் நட்பையும் நாடுகின்றேன்.
    சனிக்கிழமை வாங்க பட்டாபட்டி, புண்பட்ட மனதை பீர் விட்டு ஆற்றுவேம்.//

    அட.. நீங்க வேற சார்..நல்லதோ.. கெட்டதோ.. எதையும் பெருசா எடுத்துக்க மாட்டோம் சார்..


    @ரோஸ்விக் said...
    பட்டு, ஆற்காட்டார் ஆட்டோ அனுப்புவதாகச் சொன்னார்.... போயி மொத்தல்ல கரண்டை ஒழுங்கா அனுபுயா-னு ப.மு.க சார்பா சொல்லி அனுப்பியாச்சு....//

    ரைட்ணே...முடியலேனா சொல்லுங்க.. டேங்கர அனுப்பிடலாம்...



    @மங்குனி அமைச்சர் said...
    ஏ வெண்ண ஏற்கனவே பாவம் ஆற்காட்டார் , அவரே கல்லா கட்ட முடியாம முளிபிதுங்கி போய் அலைகிறார் , நீ ஏதாவது நிதி உதவி செய்வியா ? அத விட்டு கேள்வி வேற கேட்குறியா ?
    //

    யோவ்.. அதுக்கு ரெட்டை மனசு வெக்கனுமய்யா..

    ReplyDelete
  49. @ஜெய்லானி said...
    பட்டு சார் இந்த பதிவில் காரம் கம்மி, வழக்கமான மசாலா மிக்ஸ் இல்லை என்பதை மிக வருத்த்துடன் தெரிவித்து லொல்..ச்சே..கொள்கிறோம்...நன்றி வனக்கம்,,,,,//

    ஹி..ஹி..



    @சைவகொத்துப்பரோட்டா said...
    அய்!! விளக்கம் ஜூப்பரு.//

    டமாசு?


    @பிரபாகர் said...
    ஒரு முடிவோடத்தான் இருக்கீரு போலிருக்கு...
    பிரபாகர்...//

    ஆட்டோ வரும்வரை.. ஹா..ஹா



    @சேட்டைக்காரன் said...
    அண்ணே, ஃபியூஸைப் பிடுங்கிறப்போறாங்கண்ணே! :-))
    காரம்,குணம்,மணம் எல்லாம் சரியான அளவுலே...ஜமாய்ங்க!!!//

    எல்லாரும் சேர்ந்து என்னை கலாய்கிறாங்கோ...


    @மனிதன் said...
    யோவ்.. பட்டாபட்டி..
    வீச்சு புரோட்டா போடவேண்டிய இடத்தில..
    தோசை சுட்டுகிட்டு இருக்கீரு..
    ஏன்.. என்னாச்சு..எங்கேயா எங்க பழைய பட்டாபட்டி...
    ( யோவ்.. நக்கல் பண்ணினாலும்..அதுல நல்ல விசயத்தை
    சொல்லுவீர்..ஆனா.. இந்த பதிவு, பட்டாபட்டியோட பதிவேயில்ல..)
    கதை..கவிதை எழுத ஆயிரம் பேரு இருக்கானுக.. நீ உன்னோட ஸ்டைலில்
    பழையபடி பட்டாசு கிளப்பு..
    இதை எங்களோட எச்சரிக்கையா எடுத்துக்க பட்டு..//

    எடுத்துகிட்டேன் மனிதன் சார்..

    ReplyDelete
  50. @அப்பாவி said...
    இருப்பா... கரன்ட் வந்த ஒடனே வந்து கும்மறேன்....//

    இந்த ஜென்மத்தில நடக்குமா?



    @Anonymous said...
    தவத்தை கலைத்து விட்டு வெளியே வாய்யா பட்டா பட்டி ,ஒரு சிங்கத்தை புல் தடுக்குமா? என்ன !யானையை கொசு விரட்டிடுமா என்ன ! மவுனத்தில் விளையாடும் மனசாட்சியே.........//

    வந்தாச்சு...வந்தாச்சு...

    @Veliyoorkaran said...
    பட்டாபட்டியின் இந்த பதிவு காரணம் சொல்லபடாமல் தள்ளுபடி செய்யபடுகிறது..பட்டாபட்டியின் பழைய காரசாரமும் நக்கலும் இல்லாதே இதற்க்கு காரணமாக இருக்கலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன....இதே நிலை தொடர்ந்தால் வெளியூர்க்காரன் பட்டாபட்டியின் கூட்டணியில் தொடர்வது மிக பெரிய சந்தேகம் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்...!!//

    அட உடய்யா.. நம்ம கூட்டணிதான் வெற்றி கூட்டணினு அறிவிச்சாச்சே..
    ( எவ்வளவு பதக்கம்.. அவார்ட்டு..ம்..)



    @க.பாலாசி said...
    எனக்கும் இந்த சூடு கம்மியா இருக்கறமாதிரியே இருக்கு தலைவரே... நல்லா வறுத்திருக்கலாமே....
    பாத்தீங்களா ஆற்காட்டாரப்பாத்து நீங்களே பயப்படுறீங்க...//

    பயமா.. ஹி..ஹி..

    @மோனி said...
    என்னது?
    தமிழ் நாடு ஒளிகிறதா??? //

    நாங்க 2070 பத்தி பேசினோம் சார்..ஹி..ஹி

    ReplyDelete
  51. @malar said...
    ஆற்காட்டாருக்கு கூஜா தூக்கவே நேரம் இல்லை..
    மின்சாரம் பற்றி என்ன தெரியும் ...
    சொல்லி 2 மணி நேரம் சொல்லாமல் 2மணி நேரம் பவர் கட் பண்ணி கொல்றானாம்...
    இரவிலும் கரண்ட் கட்...
    பாவிங்க ஒரு வழியும் ப்ண்ண மாதிரி தெரியவில்லை...//

    சரியான ஆள, சரியான இடத்தில போடுவதுதான் ராஜ தந்திரம்..
    வள்ளுவர் ஒரு ராஜ தந்திரி..

    ReplyDelete
  52. ஹலோ.... இன்னிக்கி பெட்ரோமாக்ஸ் மண்டையனா ??

    இந்த மண்டையன மொதல்ல தூக்குங்கைய்யா .. வெளிச்சம் வரட்டும் .. !!

    ReplyDelete
  53. ஒரு ரகசிய செய்தி, காதைக் காட்டுங்க
    சொல்ரேன்.

    (யோவ் காது எங்கய்யா இருட்ல தெரியமாட்டுது!)

    இந்த மண்டையனுக்கு, அப்பப்ப மின் தடை ஏற்படுத்துவதால் உலகம் வெப்பமாவதை குறைப்பதை கருத்தில் கொண்டு ’சுற்றுச்சூழல் விருது’ கொடுக்கிறாங்களாம்.

    அதற்கு கலைஞருக்கு பாராட்டு விழா நடிகைகளின் குத்தாட்டத்தோடு நடக்கப் போகுதாம். (எவனுக்கு விருதுன்னாலும் இவருக்கு பாராட்டு விழா நடத்தனும்னு கிச்சன் கேபினட் உத்தரவாம்!)

    இந்த நிகழ்ச்சி கலைஞர் டிவியில் ஒளிபரப்போகும் போது மின் தடை ஏற்படக்கூடாதுன்னு மின்சார வாரியமே நைட் ஷிப்ட்ல கரண்ட் இல்லன்னாலும் கூட மெழுகு வத்தி வெளிச்சத்தில வேலை பார்க்குதாம்.

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!