Pages

Thursday, April 15, 2010

80 பேரா?..அடங்கொப்புறானே..

 (என்னடா கருப்பு, வெள்ளையில படம் போட்டிருக்கானுகனு யோசனை பண்றீங்களா?..
கடைசியா, பீரங்கில சம்பாரிச்சது..
ஸ்பெக்ரம் காசு,  மாநிலத்துக்காரனுக சுருட்டிட்டானுக...உம். பார்போம்..)

சென்னை,ஏப்.13: 2011-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் 80 எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற வேண்டும் என்பதே நமது இலக்கு என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம் தெரிவித்தார். 
இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற்ற தனது ஆதரவாளர்களுக்கு சென்னையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் செவ்வாய்க்கிழமை இரவு விருந்தளித்தார்.
"இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் நமது இலக்கை அடைந்துள்ளோம். அது போல, 2011 சட்டப்பேரவை தேர்தலிலும் நமது இலக்கை அடைய வேண்டும். புதிய சட்டப்பேரவையில் 80 க்கும் அதிகமான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நுழைய வேண்டும்.

அதனை இலக்காக வைத்து நாம் அனைவரும் இன்றில் இருந்தே பாடுபட வேண்டும்.  இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் பதவியை பிடித்துள்ளவர்கள் ஓய்ந்து விடாமல், சட்டப்பேரவை தேர்தலை குறி வைத்து பணியாற்ற வேண்டும்' என்றார்.

---------------------------------------------------------------------------------------------------------


நேற்று தமிழர் திருநாள்..ஹி..ஹி...அனைவருக்கும் எனது  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..ஹி..ஹி...
என்னடா, காலங்காத்தாலே நெஞ்ச நக்கறேனு தப்பா நெனைக்காதீங்க சார்..

சந்தோசமாதான் புத்தாண்டு ஆரம்பிச்சிருக்கு.. ஆமாம்....
நம்ம  கார்திக் சிதம்பரம்    சார்க்குத்தான்..  ( அதுதாங்க வருங்கால முதலமைச்சருக்கு..)
என்னா அழகா பேட்டி கொடுத்திருக்காரு...புலிக்கு பிறந்தது பூனையாகுமா சார்?...

இப்படிப்பட்ட, நல்லவரை , நாட்டு மக்களுக்குகாக பேட்டி எடுக்காட்டி,
நாமெல்லாம் மனுஷனே கிடையாது சார்..
பட்டாபட்டிய மாட்டீட்டு    ( சே... சுருக்குமுடி விழுந்துடுச்சு..)  நேரமில்லாததால், எடுத்தேன் சார் பைக்க..



ஓவர் டூ வருங்கால முதலமைச்சர் வீடு....

சார்.. வணக்கம்..நான் பட்டாபட்டி..ப.மு.க நிருபர்..
வாங்கோ.. வணக்கம்.. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..டீ சாப்பிடறீங்களா?..


இல்ல சார்..இப்பத்தான் பல்லு வெளக்கிட்டு வாரேன்..அதுவுமில்லாம,  டீ சாப்பிட்டா,  பட்டாபட்டிய கழட்டனும் சார்..சுருக்குமுடி வேற..
என்னாது சுருக்கு முடியா?..எங்கே....எங்கே..


அதை விடுங்க சார்..ஆமா சார்.. கடைசியா இளைஞர் காங்கிரஸ் தேர்தல் முடிஞ்சிருச்சு போல..
அப்பப்பா.. ஒரு வழியா,அன்னை சோனியா, அருளாசையால், தேர்தல் வெற்றிகரமாக நடந்துமுடிந்தது..
> எவ்வளவு தில்லு முல்லுகள்..
> போராட்டங்கள்..
> கட்சித்தாவல்கள்..
> பணம் பட்டுவாடா..
> இலவச பிரியாணி..
> அராஜகம்..
> உள்குத்து..
> வெளிகுத்து..

இவ்வளவு நடந்தும், மக்கள் முகம் கோணாமல் எங்களுக்கு வாக்கு அளித்ததை நினைக்கும்போது, மனது பூரிப்படைகிறது..


என்னா சார்..நடந்து முடிந்தது ,  இளைஞர் காங்கிரஸ் தேர்தல் ஆச்சே..
நீங்க கொடுக்கும் பில்டப்ப பார்த்தா, சட்டமன்ற தேர்தல் மாறி சொல்றீங்க..
அப்படியில்லை.. இதற்க்காக எவ்வளவு பாடுபட்டோம் என்பது
எங்கள் அன்னைக்கு தெரியும்..பாருங்களேன்.. இந்த தமிழர் புத்தாண்டை இவ்வளவு நாளா யாராவது பெருசா கொண்டாடினீங்களா?.இல்லையே.
எங்க அன்னை, இந்தியாவுக்குள் காலடியெடுத்து வெச்சதுமே, எவ்வளவு பேமஸ் ஆயிடுச்சு..  அதுதான் காங்கிரஸின் பலம்..ஏன்னா  நாங்க பாரம்பரிய கட்சி..


சார்.. முடியலே..ஆமா, உங்க அப்பாரு ரிசைன் பண்ணப்போறேனு, அலம்பல் பண்ணிக்கிட்டு இருந்தாரே?.  பண்ணீட்டாரா?..
அதை எங்கள் அன்னையும் நிராகரித்துவிட்டார்..எங்கள் அன்னை உள்ளவரை எங்களுக்கு பயமில்லை..அவர்தான் எங்கள் தெயவம்.. கடவுள்..பராசக்தி..இந்தியாவின் ஒரே அன்னை.. எங்கள் அன்னை..


சார்ர்ர்ர்ர்ர்ர்.. உங்கப்பா, மாவோயிஸ்ட்கள் பிரச்சனைனாலத்தான்  ரிசைன் பண்ணினதா கேள்வி...
பார்த்தீங்களா?.. வெளி நாட்டு பிரச்சனைக்கு கூட எங்கப்பா பேரை இழுக்குறானுக..   இது எங்களை பிடிக்காதவங்க செய்யும் சதி..இதற்கு அன்னை , தகுந்த ஆவணம் செய்வார் என் நம்புகிறோம்.


அண்ணா..சத்தீஸ்கர் மாநிலம், இந்தியாவுலதான் இருக்குது..
அப்படியா?..சரி..சரி.. அடுத்த கேள்வி..

 
அடுத்த கேள்வியா?. ஆதிவாசி பிரச்சனைய, சரியா கையாளலாதான், மாவோயிஸ்ட்கள் பலம்  பெற்றுவிட்டார்கள் என்ற கருத்துக்கு..
இல்லை..இல்லை.. நாங்கதான் ஆதிவாசிகளை ஒழித்துவிட்டோமே..
அதாவது..
ம்..
அது..
ஆங்..
ஒழித்துவிட்டோமென்றால், அவர்களது வறுமையை..
எங்கள் அன்னை உள்ளவரை..ஆதிவாசிகள்  ஆனந்..........


ஸ்டாப்..ஸ்டாப்..   உடுங்க சார்.. நொன்னை..கொன்னைனு.. மண்டை வலிக்குது..சரி அடுத்து என்னா ப்ளான்..?
2011-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் 80 எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற வேண்டும் என்பதே நமது இலக்கு.. அதற்க்காக அன்னையின் சொற்படி பாடுபடப்போகிறோம்..


எப்படி?.. ஆமா 80  எம்.எல்.ஏ-க்கு எங்க சார் போவீங்க?..
தங்கவாலு, இளங்கோ, எல்லாத்தயும் சேர்த்தாலே, 80 வராதே?.
அதற்க்காகத்தான், எங்கள் அன்னையின் புதல்வன், திருமணமே செய்யாமல், சூறாவழி சுறுப்பயணம் செய்கிறார்..


ஓ.. அதுவேறயா?...ஆமா சார்..அப்ப நீங்க?..
எங்கள் அன்னை..இமயமலை போன்றவர்.. எதற்கும் கலங்காத,
திடமான முடிவுகளை , தீர்க்கமா எடுக்கும், தில்லான..



எனக்கு முடியல சார்......உங்களுக்கு, ப்ரியமா  நம்மாளு, கேட்டமாறி கேட்டாத்தான் ஒழுக்கமா பதில் சொல்வீங்க போல..
என்ன கேட்டாரு அவரு..?


இல்ல படிச்சுட்டு தான் கமெண்ட் போடுறுயா?னு என்னைப் பார்த்து கேட்டாரு.. அதுவும் என்னை பார்த்து கேட்டாரு சார்..
அன்னைக்கே முடிவு பண்ணீட்டேன்..
என்னானு?..

படிக்கிறதில்லனு..
ஏன்?..


சார்.. இப்ப நாந்தான் பேட்டி எடுக்க வந்திருக்கேன்.. நாந்தான் கேள்வி கேட்பேன்..
கேட்டுறுவியா?.. கட்சிக்காரனப் பார்த்து கேள்வி கேட்பே?..
நான் யாரு தெரியுமில்ல.. சிங்கம் பெத்த சிறுத்தை..
எங்க அன்னை இருக்கும்போது , என்னைப்பார்த்து கேள்வி கேட்பே?..

மன்னிச்சுக்குங்க சார்..கடைசியா ஒரு கேள்வி சார்..

உம்...

’இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் பதவியை பிடித்துள்ளவர்கள் ஓய்ந்து விடாமல், சட்டப்பேரவை தேர்தலை குறி வைத்து பணியாற்ற வேண்டும்' என்று சொல்லியிருக்கீங்களே.. அதை பற்றி..

ஆமாம்.. உழைப்பு.. அதுதான் உயர்வு தரும்..
அகண்ட பாரத்ததை அன்னையின் காலில் சமர்பிக்கும் வரை ..காங்கிரஸ்காரனுக்கு ஓய்வு என்பதே கிடையாது..அதைத்தான் சொன்னேன்..

என்ன சார்.. இதெல்லாம் நீங்க சொல்லித்தான் தெரியனுமா?..வயசான காலத்தில, திவாரி உழைச்ச உழைப்ப, நாங்க கண்கூடா பார்த்தோமே..
அப்புறம் சார்...சட்டமன்ற தேர்தலில் 80 வாக்கு பெற , வாழ்த்துக்கள் சார்..

இது.. இதுதான் நல்ல பிள்ளைக்கு அழகு..ஆமா, கோயமுத்தூர்ல, ரியல் எஸ்டேட் எப்படியிருக்கு?

அது இருக்கு சார், வெயிலுக்கு கோமணத்த கழட்ற மாறி..சார்.. இவ்வளவு நேரம், பேட்டி கொடுத்ததுக்கு நன்றி சார்..எப்படியாவது அந்த 80 பேரை கண்டுபிடிச்சு..ஓகோனு வர வாழ்த்துகிறேன் சார்..
.
.
வர்ட்டா
.
.

43 comments:

  1. பேட்டிதிலகமே வளர்க
    உங்கள் பணி!!

    ReplyDelete
  2. @ சைவகொத்துப்பரோட்டா said...
    பேட்டிதிலகமே வளர்க
    உங்கள் பணி!!

    //

    வாங்க சார்...

    ReplyDelete
  3. சோனியா இந்தியாவுக்கே சூனியம் வச்சிருக்கா ...
    அது தெரியாம இந்த அல்லக்கைகள் அட்டகாசம் தாங்க முடியல ...

    ReplyDelete
  4. பட்டா,

    இவனுங்க உடுற அழும்பு தாங்கல! ம்... கலக்கலா வழக்கமான உங்க பணிய தொடருங்க!

    பிரபாகர்...

    ReplyDelete
  5. அண்ணே, வருங்கால முதல்வர் மீதி 79 பேரை எப்படிக் கண்டுபிடிக்கப்போறாருங்கிற ரகசியத்தை சொல்லவே இல்லை! எதுக்கும் எல்லாரும் ஜாக்கிரதையா இருங்க...சொல்லிப்புட்டேன்.!

    ReplyDelete
  6. அனைத்து அரசியல் வாதிகளின் நிலைமை இதுதான் பட்டாப்பட்டி. கலக்கல் பேட்டி.புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. /////சார்.. இப்ப நாந்தான் பேட்டி எடுக்க வந்திருக்கேன்.. நாந்தான் கேள்வி கேட்பேன்..
    கேட்டுறுவியா?.. கட்சிக்காரனப் பார்த்து கேள்வி கேட்பே?..
    நான் யாரு தெரியுமில்ல.. சிங்கம் பெத்த சிறுத்தை..
    எங்க அன்னை இருக்கும்போது , என்னைப்பார்த்து கேள்வி கேட்பே?.../////////

    கலக்கல் பேட்டி நண்பரே .

    இவர்கள் குடும்பத்திற்க்கும் , காட்சிக் காரர்களுக்கும் ஐந்து அறிவுதானோ ?????????

    பகிர்வுக்கு நன்றி !
    தொடருங்கள் மீண்டும் வருவேன் .

    ReplyDelete
  8. //சிங்கம் பெத்த சிறுத்தை..//


    இன்னா தலீவா , கேக்கவே பேஜாரா கீதே. கஸ்மாலத்துக்கு இத்த கூட கரீட்டா தெர்ல

    ReplyDelete
  9. அப்பாவிApril 15, 2010 at 12:31 PM

    அன்னையின் அருளால், பட்டாப்பட்டி எல்லா வளங்களும் பெற்று வாழ வாழ்த்துக்கள். அப்படியே இத்தாலி பாஸ்போர்ட் பெறுவதற்கான வழிமுறை பற்றி ஒரு பதிவு தேவை. ஏன்னா, இவுனுங்க எப்படியும் இந்தியாவ வித்துடுவாங்க. அப்புறம் இந்தியாவுல உப்பு வெல ரொம்ப அதிகம் பட்டாப்பட்டி..

    ReplyDelete
  10. //சிங்கம் பெத்த சிறுத்தை..//


    டே பட்டா இதுல எதுவும் உள்குத்து இருக்கு ?

    ReplyDelete
  11. ///புலிக்கு பிறந்தது பூனையாகுமா ///


    இல்ல இதுல எதுவும் உள்குத்து இருக்கா ?

    ReplyDelete
  12. //சிங்கம் பெத்த சிறுத்தை..//
    ///புலிக்கு பிறந்தது பூனையாகுமா ///


    ம்மம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......................................... என்னவோ போடா

    ReplyDelete
  13. 80 பேரை தேர்ந்தெடுக்க எஸ்.எம்.எஸ் போட்டி வைக்கப் போறதா பேசுறாங்களே? கேள்விப்பட்டீங்களா?

    ReplyDelete
  14. @யூர்கன் க்ருகியர் said...

    சோனியா இந்தியாவுக்கே சூனியம் வச்சிருக்கா ...
    அது தெரியாம இந்த அல்லக்கைகள் அட்டகாசம் தாங்க முடியல ...
    //

    சீக்கிரம் சரித்திரம் மாறப்போகுதுங்கோ..

    இந்தியாவுக்கு , சுதந்திரம் வாங்கித்தந்தது யாரு?..

    எங்கள் அன்னை சோனியா காந்தி..

    ReplyDelete
  15. @பிரபாகர் said...
    பட்டா,
    இவனுங்க உடுற அழும்பு தாங்கல! ம்... கலக்கலா வழக்கமான உங்க பணிய தொடருங்க!
    //


    வாங்கோண்ணா..
    நண்றிங்க..

    ReplyDelete
  16. @சேட்டைக்காரன் said...
    அண்ணே, வருங்கால முதல்வர் மீதி 79 பேரை எப்படிக் கண்டுபிடிக்கப்போறாருங்கிற ரகசியத்தை சொல்லவே இல்லை! எதுக்கும் எல்லாரும் ஜாக்கிரதையா இருங்க...சொல்லிப்புட்டேன்.!
    //

    அது ஈஸி தல.. இத்தாலி பீஸாவ, தட்டுல போட்டு, எவ்னெல்லாம், கை படாம சாப்பிடறானோ..
    அவனுககெல்லாம், கை-க்காரனுக..

    ReplyDelete
  17. சசிகுமார் said...
    அனைத்து அரசியல் வாதிகளின் நிலைமை இதுதான் பட்டாப்பட்டி. கலக்கல் பேட்டி.புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    //

    எங்கேயோ இருக்க வேண்டிய நாடு சார் நம்மளது..
    நார அடிச்சுகீடு இருக்கானுக..

    ReplyDelete
  18. @ ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
    கலக்கல் பேட்டி நண்பரே .
    இவர்கள் குடும்பத்திற்க்கும் , காட்சிக் காரர்களுக்கும் ஐந்து அறிவுதானோ ?????????
    //


    கன்பார்மா, ஐந்து அறிவுதான் சார்...

    ReplyDelete
  19. @ஜெய்லானி said...
    இன்னா தலீவா , கேக்கவே பேஜாரா கீதே. கஸ்மாலத்துக்கு இத்த கூட கரீட்டா தெர்ல
    //

    இல்ல சார்.. இதுல ஒரு அர்த்தம் இருக்கு..என்னானு கண்டுபிடிங்க பார்க்கலாம்..

    ReplyDelete
  20. @அப்பாவி said...
    அன்னையின் அருளால், பட்டாப்பட்டி எல்லா வளங்களும் பெற்று வாழ வாழ்த்துக்கள். அப்படியே இத்தாலி பாஸ்போர்ட் பெறுவதற்கான வழிமுறை பற்றி ஒரு பதிவு தேவை. ஏன்னா, இவுனுங்க எப்படியும் இந்தியாவ வித்துடுவாங்க. அப்புறம் இந்தியாவுல உப்பு வெல ரொம்ப அதிகம் பட்டாப்பட்டி..
    //

    ஆமா சார்.. உப்பு போட்டு சாப்பிட்டா, ரோசம் வருமாமே?..
    உண்மைங்களா?

    ReplyDelete
  21. @மங்குனி அமைச்சர்
    //சிங்கம் பெத்த சிறுத்தை..//
    ///புலிக்கு பிறந்தது பூனையாகுமா ///
    ம்மம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......................................... என்னவோ போடா
    //

    பாதி விடைய கண்டுபிடிச்சுட்ட.. மீதி?

    ReplyDelete
  22. @முகிலன் said...
    80 பேரை தேர்ந்தெடுக்க எஸ்.எம்.எஸ் போட்டி வைக்கப் போறதா பேசுறாங்களே? கேள்விப்பட்டீங்களா?
    //

    அதுவும் நடக்கலாம் முகிலன் சார்..
    ஏன்னா.. இது பாரம்பரிய கட்சி...ஹி..ஹி

    ReplyDelete
  23. ஒரு இனிமையான செய்தி , இனி "கை"யில் சஐருபவர்கள் கையில் 6 விரல் வேண்டும் என்று அன்னை ஆடர் போட்டுள்ளார்

    ReplyDelete
  24. மங்குனி அமைச்சர் said...

    ஒரு இனிமையான செய்தி , இனி "கை"யில் சஐருபவர்கள் கையில் 6 விரல் வேண்டும் என்று அன்னை ஆடர் போட்டுள்ளார்
    //

    உள்குத்தோ?.. யோவ்.. உன்னைய நம்ப முடியாது?...

    சோனியா அகர்வால் பிறந்த நாளுக்கு, போனியா மங்குனி?

    ReplyDelete
  25. பட்டு,ilumu is back......

    //எனக்கு தெரியுமையா நீ மூளைக்காரனு.. அப்படியே ட்ரை பண்ணிகிட்டு இரு..
    எப்படியும், இன்னும் 10 வருசத்தில, 5 நிமிசத்தில சால்வ் பண்ற மாறி , ரெடியாயிடுவே..
    அப்ப வேற புதுசா, ஒரு கேம் , இன்ரோ பண்றேன்...//

    யோவ் பட்டு,உனக்கெல்லாம் ஈவு இரக்கமே கெடையாதா?ஏன்யா மன்குனிய இந்தப் பாடு படுத்துற?பாவம் புள்ள,சும்மா சும்மா அதையே தொல்ல பண்ணிக்கிட்டு......
    ஏன்யா மங்குனிய இப்டி கொஞ்சம் கொஞ்சமா கொல்ற?ஒரேயடியா........
    விட்டுடலாம்னு சொல்ல வந்தேன்யா.நீ வேற,ஆடு எதுவும் சிக்காத கடுப்புல,எதுவும் பண்ணிடாத.

    //
    > எவ்வளவு தில்லு முல்லுகள்..
    > போராட்டங்கள்..
    > கட்சித்தாவல்கள்..
    > பணம் பட்டுவாடா..
    > இலவச பிரியாணி..
    > அராஜகம்..
    > உள்குத்து..
    > வெளிகுத்து..//
    செருப்படி.....
    சட்டை கிழிப்பு....
    வேஷ்டி உருவல்....
    இதெல்லாம் ப்ரிண்டிங்க்ள விட்டுட்டியே பட்டு....
    அடடா,மக்களுக்கு சேவை செய்ய எவ்ளோ கஷ்டங்கள அனுபவிக்குறாங்க.இந்தப் பெருமை வேற எந்தக் கட்சிகாவது இருக்கா?அதனால தான்யா காங்கிரஸ் பாரம்பரியக் கட்சின்னு பேரு வாங்குச்சு.......

    ReplyDelete
  26. அர‌சிய‌ல் தொட‌ங்குகிற‌து,
    அப்பா, பிள்ளை அன்னை, அய்யா, அம்மா,
    அண்ண‌ண், த‌ம்பி, த‌ங்கை, ம‌ரும‌க‌ன்,ம‌ட்டும்.
    மேஜ‌ரான‌ பேர‌ன்க‌ளும் ஆஜ‌ராகளாம்.
    `க‌ருத்தில்` தொட‌ங்கி, க‌ட்ட‌ ப‌ஞ்சாய‌த்து,
    ரிய‌ல் எஸ்டேட், லைசென்சு என‌க் கல்லாக்க‌ட்டி
    ஸ்பெக்ட்ர‌ம், பார்டிசிபேட்ட‌ரி நோட்டு,
    வேதாந்தா ‌என நிக‌ழ்கால‌ அர‌சிய‌ல்
    தொட‌ரும்,
    ம‌க்க‌ள் மாய‌ துயிலிருந்து மீளும் வ‌ரை.
    ப‌டித்த‌வ‌ர்க‌ள் ஏன் பிரஞ்சு
    16‍ஆம் லூயியை இவ்வ‌ளவு சீக்கிர‌ம்
    ம‌ற்ந்துவிட்டார்க‌ளே?

    ReplyDelete
  27. பட்டு!நாங்க 80 சீட்டு கார்த்திக் யாருங்க?சினிமா சான்ஸ் போனாலே பெரிய பேஜாருதான்.

    ReplyDelete
  28. @ILLUMINATI said...
    செருப்படி.....
    சட்டை கிழிப்பு....
    வேஷ்டி உருவல்....//

    பாத்தையா முத்து.. இடை விட்டுட்டேன்..அதுக்குத்தான் இலுமி வேணுமுனு சொல்றது..

    ReplyDelete
  29. vasan said...

    அர‌சிய‌ல் தொட‌ங்குகிற‌து,
    அப்பா, பிள்ளை அன்னை, அய்யா, அம்மா,
    அண்ண‌ண், த‌ம்பி, த‌ங்கை, ம‌ரும‌க‌ன்,ம‌ட்டும்.
    மேஜ‌ரான‌ பேர‌ன்க‌ளும் ஆஜ‌ராகளாம்.
    `க‌ருத்தில்` தொட‌ங்கி, க‌ட்ட‌ ப‌ஞ்சாய‌த்து,
    ரிய‌ல் எஸ்டேட், லைசென்சு என‌க் கல்லாக்க‌ட்டி
    ஸ்பெக்ட்ர‌ம், பார்டிசிபேட்ட‌ரி நோட்டு,
    வேதாந்தா ‌என நிக‌ழ்கால‌ அர‌சிய‌ல்
    தொட‌ரும்,
    ம‌க்க‌ள் மாய‌ துயிலிருந்து மீளும் வ‌ரை.
    ப‌டித்த‌வ‌ர்க‌ள் ஏன் பிரஞ்சு
    16‍ஆம் லூயியை இவ்வ‌ளவு சீக்கிர‌ம்
    ம‌ற்ந்துவிட்டார்க‌ளே?
    //

    வாங்க சார்.. நாம் அரசர் காலத்துக்கு அடி எடுத்து வைத்துவிட்டோம்..

    ReplyDelete
  30. ராஜ நடராஜன் said...

    பட்டு!நாங்க 80 சீட்டு கார்த்திக் யாருங்க?சினிமா சான்ஸ் போனாலே பெரிய பேஜாருதான்.
    //

    எங்கண்ணே, ரொம்ப நாளாக் காணேம்?

    ReplyDelete
  31. //எங்கண்ணே, ரொம்ப நாளாக் காணேம்?//

    காணோமா!!!அவ்வ்வ்வ்வ்வ்!ஒவ்வொரு ரவுசுக்கும் உள்ளேன் ஐயா சொல்லனுமாக்கும்:)

    ReplyDelete
  32. ராஜ நடராஜன் said...

    //எங்கண்ணே, ரொம்ப நாளாக் காணேம்?//

    காணோமா!!!அவ்வ்வ்வ்வ்வ்!ஒவ்வொரு ரவுசுக்கும் உள்ளேன் ஐயா சொல்லனுமாக்கும்:)
    //

    படிக்கிறீங்களா?..

    கோவிச்சுட்டு போயிட்டீங்களோனு நினைச்சேண்ணே...

    ReplyDelete
  33. ரியல் எஸ்டேட் "சீட்டு" கம்பெனியை சொல்லிருக்கப் போறாக ஒய்... :-)

    ReplyDelete
  34. //சிங்கம் பெத்த சிறுத்தை..//

    எங்கயோ மிஸ்டேக் நடந்திருக்கு....

    ReplyDelete
  35. @க.பாலாசி said...
    //சிங்கம் பெத்த சிறுத்தை..//
    எங்கயோ மிஸ்டேக் நடந்திருக்கு....
    //

    அது... பக்கமா நெருங்கீட்டீங்க.. அப்படியே
    கஷ்டப்பட்டு கண்டுபிடிங்க நான் என்ன சொல்ல வந்தேனு?

    ReplyDelete
  36. @ரோஸ்விக் said...
    ரியல் எஸ்டேட் "சீட்டு" கம்பெனியை சொல்லிருக்கப் போறாக ஒய்... :-)
    //

    இருக்கும்.. இருக்கும்.. கோயமுத்தூர்ல பாதிய வளைச்சாச்சே..

    ReplyDelete
  37. //அகண்ட பாரத்ததை//
    இரண்டு காதில் ஒன்றை பாகிஸ்தானுக்கும் மற்றொன்றை சீனாவுக்கும் கொடுத்துவிட்டார்கள் அகண்ட பாரதமாம்.
    //வெயிலுக்கு கோமணத்த கழட்ற மாறி..சார்//
    அண்ணே பட்டாவை கழட்றமாதிரி உங்களுக்கு மறதி அதிகமாபோச்சு..
    ...சிவா...

    ReplyDelete
  38. @ ...சிவா...
    அண்ணே பட்டாவை கழட்றமாதிரி உங்களுக்கு மறதி அதிகமாபோச்சு..
    //

    ஆமா சிவா.. ஒரு ப்ளோல வந்திடுச்சு.. ஹி..ஹி

    ReplyDelete
  39. // பாத்தையா முத்து.. இடை விட்டுட்டேன்..அதுக்குத்தான் இலுமி வேணுமுனு சொல்றது..//
    விடு பட்டு,இனிமே ரெகுலர் அட்டன்டன்ஸ்......
    டெய்லி ஆடு வெட்டு....
    முதல்ல சாணி மிதி.....

    ReplyDelete
  40. ILLUMINATI said...

    // பாத்தையா முத்து.. இடை விட்டுட்டேன்..அதுக்குத்தான் இலுமி வேணுமுனு சொல்றது..//
    விடு பட்டு,இனிமே ரெகுலர் அட்டன்டன்ஸ்......
    டெய்லி ஆடு வெட்டு....
    முதல்ல சாணி மிதி.....

    //

    ரைட்டு...

    ReplyDelete
  41. 14 ஆண்டுகள் ‘செருப்பு’ ஆண்டது இந்தியாவை!! ஒரு ஹோட்டல் சிப்பந்தி (நொன்னை) ஆளக்கூடாதா!! லூஸ்ல விடுங்க பாஸ்.

    ReplyDelete
  42. மயில்ராவணன் said...

    14 ஆண்டுகள் ‘செருப்பு’ ஆண்டது இந்தியாவை!! ஒரு ஹோட்டல் சிப்பந்தி (நொன்னை) ஆளக்கூடாதா!! லூஸ்ல விடுங்க பாஸ்.
    //


    அப்ப, நமக்கும் ஒரு சான்ஸ் இருக்குனு சொல்லுங்க..னாட்டை ஆள..

    ReplyDelete
  43. //காங்கிரஸ்காரனுக்கு ஓய்வு என்பதே கிடையாது.//


    ஹி..ஹி

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!