Pages

Saturday, November 27, 2010

ஆ...ஆ...ராசா- Exclusive (எச்சக்கலை) பேட்டி

தலைப்பை பார்த்ததுமே தெரிஞ்சுருக்கும். ஆமா சார்.. Exclusive பேட்டிதான்.. ஹி..ஹி. எனக்கு, டமில் லைட்டா தடுமாறும்.!!?

பேட்டி-னு சொன்னதும் முதல் ஆளா, வந்து நின்ற, தன்மானச்சிங்கம், ஆருயிர் நண்பன் சின்ராசுக்கு , காலைவணக்கம்.!!



யாரை பேட்டி எடுக்கப்போற பட்டு?.

நம்ம ராசாவத்தான் சின்ராசு.  நம்ம முன்னணி பதிவர்.. அதாம்பா அவரு..... ”எல்லோரும் வாங்க.. தெளிவு பெறுங்க!”னு FaceBooks-ல  சொன்னாரு..  அன்னைக்குஎன்னால முடியலே,... அதான் நேராப்போய்....

'இரு..இரு வண்டியை நிறுத்து. எனக்கு இது சரிப்பட்டு வராது. பெரிய இடத்து பிரச்சனை. டீவி வாங்கினமா!,  பணத்துக்கு, ஓட்டு போட்டமா!,  சரக்கு அடிச்சமானு!,  வாழும் தன்மானத்தமிழன் நானு. அதுவுமில்லாம அங்க போனா, என் வாய் சும்மா இருக்காது.'-சின்ராசு.

'நீ சும்மா வந்து நில்லு மச்சி. நான் பதமா இதமா பேசி, பேட்டி எடுக்கிறேன். முடிஞ்சதும் டீ வாங்கித்தரேன்.'- நான்

அப்ப சரி..



இடம் : ராசா பட்டறை.

கேட்டில் எங்கள் கார், காவல்துறையால் (வாட்ச்மேன் –யா..) மறிக்கப்படுகிறது.

 

'"சின்னவரை" பார்க்கும்முன், செல்போன்... பர்ஸ்..... கேமரா......எல்லாம் கொடுத்திட்டு டோக்கன் வாங்கிக்குங்க.'.- வாட்ச்மேன் ஆறுமுகம்.

'என்னாது?. செல்போனை கொடுத்திட்டுதான் உள்ள போகனுமா?.. அப்படியெல்லாம் முடியாது. அதிலே எவ்வளவு, ’ரஞ்சிதாக்கள் மற்றும் நித்திகள்’ பற்றிய வீடியோ ஆவணங்கள்.  இது மட்டும் வெளியாச்சு..  தக்காளி... நக்கீரன், என்னை 'காப்புரிமை சட்டத்தில' உள்ள போட்டாலும் போடுவாரு. நான் மாட்டேன்.' - சின்ராசு அடம் பிடிக்க, நான் காரை விட்டு இறங்க...

'அட.. ஆறுமுகம். நல்லாயிருக்கியா?. என்னையா இங்க வேலை செஞ்சுக்கிட்டு இருக்கே?. பையன் கம்யூட்டர்ல வேலை செய்றான். கை நிறைய சம்பளம் வாங்குறான். கஷ்டமெல்லாம் விலகிருச்சுனு சொல்லிக்கிட்டு இருந்தே. இப்ப, யூனிபார்ம் போட்டுக்கிட்டு கேட் தொறந்துவிட்டுட்டு இருக்கே.!!'

'அட. போ தம்பி. ஒரு வாரம் உக்காரவெச்சு சோறு போட்டான். நான் பெத்த பிள்ளையாச்சேனு , ’PF’ காசையெல்லாம் வழிச்சு, அவனுக்கு கொடுத்துட்டேன். அப்பால , 'நாய் சாப்பிடதும்'தான், நீ சாப்பிடனுமுனு, அவனோட வீட்டுக்காரம்மா கண்டிஷன் போட்டிருச்சு. இது நமக்கு சரிவராது. இந்த காலத்து புள்ளைக எங்க பெரிசுகளை மதிக்குது?. கோவத்தில வீட்டவிட்டு வெளிய வந்து, கொஞ்ச நாளா  இங்கதாம் வேலை செஞ்சு சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன்.'

'அட.. கஷ்டகாலமே. படிச்சவனும் இப்படித்தான் இருக்கானுகளா?. சரி.. விடு ஆறுமுகம். இந்த பேட்டிய முடிச்சதும், அடுத்து உன் பிரச்சனைய பற்றி எழுதரேன். ஆமா.. 'சின்ன அய்யா' உள்ள இருக்காரா?.'

'நீ போ தம்பி.. அவரு உள்ளதான் இருக்காரு. ஆனா, அந்த இடதுபக்கத்து ரூம்-க்கு மட்டும் போகாதே. சின்னம்மா கோவிச்சுக்குவாங்க!. உம்.. இந்த கையுறைய மாட்டிக்கிட்டுதான் உள்ள வரனுமுனு, சின்னய்யா உத்தரவு போட்டிருக்காரு. தப்பா நினச்சுக்காதீங்க தம்பி..'- ஆறுமுகம்

ஓ.. அது எப்ப இருந்து ஆறுமுகம்?.

அய்யா டெல்லில இருந்து எப்ப வந்தாரோ. அன்னக்கே சட்டத்தை போட்டுட்டாரு

'நல்லவேளை, ஆணுறையும் மாட்டிக்கிட்டுத்தான் போகனுமுனு, சொல்லாம விட்டாரே. அதுவரை சந்தோசம்.' ( இது நான் சொல்லலே மக்கா. நம்ம சின்ராசு உதித்தது.)



கார் உள்ளே நுழைகிறது.

அது யாருய்யா சின்னம்மா?, ராசாவோட சம்சாரமா?.

அட விடுய்யா.. இது வேற சாமாச்சாரம்...

வரவேற்பரை

'வணக்கம்.. வணக்கம்.. உக்காருங்க பட்டாபட்டி. ஏர்போர்ட் வருவீங்கனு நினச்சேன். வராம விட்டுட்டீங்க..!!'

'ஹி..ஹி.. வேணும்-னு பண்ணலே சார். பாவம். உங்களுக்கு மனசு கஷ்டமா இருந்திருக்கும். நானும் வந்து, பெட்ரொலை ஊத்தனுமானு நினச்சுட்டு,'  - பல்லிளிக்க,

'அட.. இதெல்லாம் ஒரு பிரச்சனையா?. இதெல்லாம் சகஜம்னு எடுத்துக்கிட்டாத்தான், கட்சியில இருக்கமுடியும்.     உம்.. கூலா, ஐஸ்கீரிம் சாப்பிடுங்க..  டெல்லில இருந்து வாங்கிட்டு வந்தது.'

என்ன சார். ஐஸ்கீரிம்.. ரொம்பத்தான் மாறீட்டிங்க.. ஹி..ஹி

இது வந்து.. நம்ம 'சின்னம்மா'-கு ஐஸ்கீர்ம்னா உயிரு. ஹி..ஹி.. அதான்..நீங்க சாப்பிடுங்க, பார்த்து சிந்தாம சாப்பிடுங்க. இல்லாட்டி 'கறை' பிடிச்சுடும்.

'ஹி..ஹி கறை பிடிச்சா, பயப்பட நான் என்ன கிளிண்டனா!!!?' - சின்ராசு

'என்னாது கிளிண்டன், கறைனு.. ஒண்ணுமே புரியலே. ஆமா, இது யாரு .. புதுசா இருக்கு' - ராசா வினவ

'நம்ம கூட்டாளி சின்ராசுங்க சும்மாத்தான் இருக்கான். அதான் இழுத்துக்கிட்டு வந்தேன்.' – நான்

'அப்புறம் சார். பிரச்சனை பெரிசா போயிடுச்சு போல. எப்படி சமாளிக்கிறீங்க?.' – நான் வினவ

இதெல்லாம் ஒரு பிரச்சனையா?. நாங்கதான் அதுக்கு ஒரு விளக்ககூட்டம் போட்டமே. பதிவுலகில் கூட அதைப்பற்றி ஒரு பதிவப்போட்டு இருப்பாரே நம்ம கொள்கைப் பரப்பு செயலாளர். ஏதோ, அந்த மாறி நல்ல உள்ளம் கொண்டவர்கள் இருப்பதால்தான், நாடு வளமையாக இருக்கிறது.

(போன் அடிக்கிறது. 'சின்னவர்' , புரியாதபாஷையில் பேச ஆரம்பித்துவிட்டார்.)

சின்ராசு கிசுகிசுப்பாக, 'யாருய்யா, அந்த பதிவர்?. இப்படியெல்லாம் இருக்காங்களா?. சொல்லு.. சொல்லு.. மண்டை வெடிச்சுடும் போலிருக்கு..ப்ளீஸ்..'

அட.. நம்ம பழைய பதிவருய்யா.. நல்ல lucky-யான look-ல இருப்பாரு. நல்ல மனுஷன் தான். என்ன....., உடம்புல கழக ரத்தத்தை ஏத்திவிட்டுட்டாங்க. அதான், மந்திரிச்ச ஆடு மாறி இருக்காரு. கழக விசயத்தை தவிர மற்ற விசயங்களில், பின்னி பெடலெடுப்பாரு.

அப்பறம். யாரு சார் போன் -ல. என்னென்னவோ பாஷைல பேசறீங்க?.

இல்லைப்பா.. ஆங்கிலத்தில பேசினா, ரிக்கார்ட் பண்ணி மானத்த வாங்குராங்க. அதான் சின்னம்மா இந்த ஐடியா கொடுத்துச்சு. 'என்னையவே' ஏமாத்தி, என்னுடைய பேச்சை ரிக்கார்ட் பண்ணியிருக்காங்கனா, எவ்வளவு வன்மத்துடன் இருக்காங்க, இந்த வட நாட்டுக்காரனுக.

அட நானும் கேட்டேன் சார். என்னுடைய பாராட்டை உங்களுக்கு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

"அட.. நீங்களும் பாராட்டினா, வேண்டாங்க...எனக்கு வெக்கம் வெக்கமா வருது. ஆமா எதுக்கு திடீர்னு பாராட்டு?" –ராசா நெளிய

முதல்வரின் மகளைவிட, உங்க ஆங்கிலம் சூப்பராயிருந்து சார். நீங்க "The Great" சார்... என்ன ஒரே குறைதான். ஆடியோவுக்கு பதில் வீடியோ எடுத்து விட்டுருக்கலாம்..  அழகா இருந்திருக்கும்..ஹி..ஹி – நான் பதில் சொல்ல

'சே..சே. எனக்கு பெருமை பிடிக்காது.. விசயத்துக்கு வாங்க. எதுக்கு திடீனு பேட்டி.?' என அவர் நெளிய, ஐஸ்கீரிம் உருக.......  இதோ பேட்டி.............

பேட்டி.

இல்லை. இவ்வளவு பணத்தை சம்பாரிச்சுட்டாங்கனு, எல்லாப்பயலும் கூவிக்கிட்டு இருக்கானுகளே. அப்படி என்னதான் தான் சார் பண்ணுனீங்க இந்த பணத்தை.?.

தம்பி. கட்சி நடத்துவது அவ்வளவு சாதாரணமா?. 'இலவச டீவீ, ஆங்.. வரும் தேர்தலுக்கு வாசிங் மெஷின் , 1 ரூபா அரிசி.'. இதுக்கெல்லாம் யார் காசு கொடுப்பானுக.?பாடுபட்டு, மக்களுக்கு பணம் சேர்த்த என்னை, ஏதோ ஊழல் பன்ணியவன் போல சித்தரித்தால், இந்த நாடு விளங்குமா?. சே. பேசாம ஸ்விஸ்-ல செட்டில் ஆயிடலாமுனு நினைக்கிறேன்.

'ஆமாமாம். கடைசியா, அங்கதான் போய் ஆகனும். கூடவே அந்தம்மாவையும் கூட்டிக்கிட்டுப்போயிடுங்க.. கிளைமேட் நல்லா இருக்குமாம். பதிவர்கள் பலபேர் சொல்லியிருக்காங்க'.- சின்ராசு

உங்க நண்பர் என்னா சொல்றாரு.. புரியலையே..

ஹி..ஹி.. அவனை விடுங்க.. இப்படித்தான் எடக்குமடக்கா பேசுவான். வாங்க பேட்டிக்கு போவோம்.

இல்ல பட்டாபட்டி. மனசு சரியில்லை.. இன்னொரு நாள் பேட்டிய வெச்சுக்கலாம். அர்ஜெண்டா வரச்சொல்லி, அவங்க கீ
கூப்பிட்டாங்க. அடுத்த மாசம் பார்க்கலாம். என்னைப்பற்றி, நாலு நல்ல வார்த்தைகளை போட்டு பதிவ போட்டா, நல்லா கவனிப்பேன். ( காதில் கிசுகிசு...... ஒண்ணு, இல்ல ரெண்டு சூட்கேஸ்..)



"உங்க பதிவ பார்த்துட்டுத்தான் சின்னம்மா, 'ஐஸ்கீர்மா?.. இல்லை அதுவா(?)னு ' முடிவு பண்ணுவாங்க.. பார்த்து சூதனமா எழுதுங்க. வரட்டுமா" ராசா செல்ல , நாங்களும் புறப்பட, "அட.. நீங்க இன்னுமா படிச்சிட்டு இருக்கீங்க..போய் அடுத்த எலெக்‌ஷன், சீக்கிரம் வரனுமுனு கடவுளை வேண்டுங்க பாஸ்... பை..பை.

சின்ராசு, "ஏண்டா பட்டாபட்டி. பேட்டி எடுக்காமலே போறோமே. அப்புறம் எப்படி பதிவ போடுவ?"

அட.. விடுய்யா.. மேட்டர் கிடைக்காட்டி, டோமர்(?)மாறி வாசகர் கடிதம்போட்டு ஒப்பேத்தலாம்.

பதிவு... வாசகர் கடிதம்

@பட்டாபட்டி (நாந்தான்)
  • குழந்தைக்கடத்தலில் ஈடுபட்டவர்களை, சுட்ட அதிகாரிகளை பாராட்டிய பதிவுலகம், ஏன் இவ்வளவு சுட்ட சின்னவரை பாராட்டவில்லை?.
  • வெள்ளச் சட்டை போட்டாலே, எல்லோரும் ஒரே ஜாதிதான். இதில் ஏன் 'தலீத், உயர்சாதி, தாழ்ந்தசாதி' என்ற பாகுபாடு?


@உண்மைத்தம்பி
.............அய்யா.. என் பழைய பதிவை கிண்டல் பண்ணி எழுதியதால், உங்கள் மீது வருத்தம் இருந்தது. இப்பொழுதாவது உங்களுக்கு புரிந்ததே!. அந்த புரிதலுக்கு நன்றி. ( நம் பணம், நம் மக்கள். இதை இலவசபடமாகப் பார்த்து, ஒரு தமிழனாக, என் கடமையை நிறைவேற்றினேன். அது இத்துடம் முடிந்துவிடக்கூடாது என்ற சீரிய நோக்கத்துடன், பதிவுலகை அழைக்க, சிலர் பார்வையில் தவறாக புரியப்பட்டு விட்டது. எல்லாம் அவன் செயல்.)


@டோமர்
...........................இனிமேல் அமைச்சர்கள், ஜெர்மன் பாஷையில்தான் தொலைபேசவேண்டும் என்பது, நண்பர் சோ-வின் கூற்று. அதுதான் , இந்த பிரச்சனைக்கு ஒரே தீர்வு. எனது புரிதலை மாற்றிக்கொள்ள சொல்லும் உரிமை , எந்த ஜாட்டானுக்கும்  இல்லை. 

எனக்கு பல பாஷைகள், மற்றும், சைபர் கிரைம், சைபர் கணவாய் பற்றி தெரியும். உலகில் எனக்கு புரியாத ஒரே விசயம், "எப்படி டை கட்டுவது என்பதுதான். அதற்கு நீரா ராடியா உதவினால், அவருக்குமுன், நிர்வாண... நிற்க எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.


@கும்மீஸ் டீம்
............................தக்காளி.. பதிவ போடுனு சொன்னா, மாசத்துக்கு ஒரு பதிவு போடுவான். இதில் ஒரு மாதத்தை, ஒரே பதிவில் அமுக்கியதற்காக என் கண்டனங்கள்.


@வெண்ணிற ராவுகள்.
.......................பேசாம, மனித நேயம், மயிரு நேயமுனு ஒரு பதிவ தேத்தலாம்..எவனாவது, சண்டைக்கு வந்தா, "வீட்டுல ஆடு கன்னுக்குட்டி போட்டிருக்கு. அம்மாவுக்கு உடம்புக்கு முடியலே"னு ஏதாவது சொல்லிட்டா, எல்லாப்பயலும் மறந்துடுவானுக.. ஷூட்.. கமென்ஸ் மாட்ரேஷன், ஆன் பண்ணனும்.


@கரு(நான்)நிதி
..................எனக்கு "கடைசியாக ஒரே ஒரு முறை வாக்களிக்ககூடாதா?" என்று, நான் கூறிய கூற்றை ஏற்று, ஜனநாயக கடமை ஆற்றிய, தமிழ் உள்ளங்களுக்கு, என் நன்றியினை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்ற அண்ணாவின் அறிவுறைப்படி , தமிழகத்தை வளமாக்க, என்னுடன் தோள் கொடுங்க, வரும் தேர்தலில் தயாநிதி..     ஷ்...  தயாளு...   ஷ்......தயாராகுங்கள்.



@கான்வெண்ட் மாமி
..............எனக்கு டமில் கொஞ்சம்..கொஞ்சம் வரும்.  என்னுடைய சகோதரி ஒருவர்தான்.  கிளைகள் எங்கும் கிடையாது.   மக்கள் சிந்திக்கவேண்டும். இந்த ஆட்சீயை தூக்கி எறிந்துவிட்டு , பதவி ஏற்க நான் தயார்..  அன்னை தயாரா?.  
எனது ஆங்கிலப்புலமை அறிந்த எம்.ஜீ.ஆர்,  என்னை கட்சியின் வாரிசாக நியமித்ததை, நானோ தோழியோ, யாருக்கும் நிரூபிக்க தேவையில்லை. 
எங்களுக்கு காலம் வரும். காலம் வந்தால் ஓய்வு வரும்.. 
ஓய்வு வந்தாலும், ஓடிபோயி, ஓய்வெடுப்போமே” ............லா..லா..லா....

எல்லாம் முடிந்ததும் ,  நமது ஆட்சிதான். ” ஒன்றே தோழி.. ஒருவனே எதிரி..”.
அதுவரை நானும் தோழியும், ஓய்வு எடுத்துக்கொள்கிறோம்.    ஆடிட்டர் .. அதை எடு..


யோவ்.. செருப்பை இல்லை.. காரை சொன்னேன்..



@கன்னிமொழி
..........இவரிடம், கேட்டால் கிடைக்குமா? இன்று தொலைபேசியில் கேட்க வேண்டும்.


@சக பதிவர்கள்
................இப்படி எழுதறானே. ஒருவேளை உப்பு, கிப்பு போட்டு சாப்பிடுவானோ?


@ நக்கீரன் கேவாலு.
.................வாழ்க்கையில எனக்கு ரெண்டே குறிக்கோள்தான். ஒண்ணு வீரப்பனை பேட்டி எடுக்கனும். பணம் கிடைத்ததும் போட்டு தள்..( உஷ்...நாக்கை கடிக்கும் சத்தம்.). அடுத்து, இந்த பதிவரின் பட்டாபட்டியை, துவைத்து, இஸ்திரி போட்டு, பாராட்டு விழா நடத்தி, மக்கள் முன்னிலையில் , அவரிடம் திருப்பி தந்து என் கடமையை ஆற்றிவிடனும்.

அப்புறம் பார்த்தீங்கனா, வீரப்பன், தண்ணி கிடைக்காம இலையில் துடைத்தார்னு ஒரு சிறப்பான பேட்டி நம்ம பத்திரிக்கையில வந்துச்சே. மக்கள் மறந்திருக்க வாய்ப்பேயில்லை. ஏன்னா. அதை நேரடியா எடுத்தது எங்க டீம். அதோட வீடியோ பார்க்கனுமுனு காசு கட்டுங்க.. லிங்க கொடுக்கிறேன். இப்ப அந்த இலை, இன்றுவரை, நம்ம ஆபீஸ்ல அலங்காரமா வெச்சிருப்பதை பற்றி பெருமையா இருக்கு. அதற்க்குப் பக்கத்திலேயே, நம்ம நயன் தாரா பொண்ணு இருக்கே.. அது ஒருநாள் பேட்டி கொடுத்தபோது , மூக்கில சளி வந்துச்சு. அதை கைகுட்டையில் சீந்தி வீச போனபோது, நான் உயிர் பயமே இல்லாம, பாஞ்சு அதை பிடிச்சு, அதையும் ஆபீஸ்ல வெச்சிருக்கேன்.

பட்டாபட்டி அண்ணனின், பட்டாபட்டி வரும்வரை, "என்னை மோசம் செய்துவிட்டீர்கள்" என்று அழும் நயன் தாராவின், உயர்தர பேட்டியை, மக்களிடம் கொண்டு செல்லும், அரிய வாய்ப்பை கொடுத்த வாசக பெருமக்களுக்கு என் குழுவினரின் சார்பாக, நன்றியினை தெரிவித்துக்கொண்டு , இன்றுமுதல், எங்கள் பத்திரிக்கையை, இரண்டாக வாங்குங்கள். ஒன்று துடைப்பதற்கு.. மற்றது, எங்கள் குடும்பம் நன்றாக இருப்பதற்கு. நன்றி. “ எனக்கூறி விடை பெறுகிறேன்.




@லக்கி அண்ண்ண்னன்.
.......................என்னையவே கலாய்க்கிறானா?.  இருயா.. இரு.. பதிவப் போட்டதும் பப்ளீஸ் பண்ணிட்டு, டெலிட் பண்ணலே.. நான் கட்சிக்காரன் கிடையாது. இருடி... மாப்ளே   ( அண்ணே..  கோச்சுக்காதீங்க.......ராசா பண்ணியது தப்பேயில்லைனு,  நீங்க faceBooks போட்ட படத்தை பார்த்துதான்,  நானே அரசியலுக்கு வந்தேன்.ஹி..ஹி - ஆசிரியர்)


@பொதுசனம்.
....................அய்யா.. டீவி குடுத்தாரு. சரக்கு குடுத்தாரு. 1 ரூபாக்கு அரிசி கொடுத்தாரு. சுயதொழில் வேலை வாய்ப்பு மூலமா, வேலை செய்யாட்டியும், தினசரி பணம் கொடுத்தாரு. அடுத்தமுறை, அவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கனும்.. ( சே.. அதுக்குள்ள எங்கப்பனை போட்டுத்தள்ளனும்பா.. தினமும், சோறு போடு, கொசு கடிக்குதுனு சொல்லிக்கிட்டு, வீட்டுத்திண்ணையில மூடிட்டு உட்காராமல்....)

======================================================================





டிஸ்கி 1..

"ஆண்டியப்பன் அன்று சினிமாவுக்கு போயிருந்தால்" என்ற பதிவுக்காக சவுக்குக்கு என் வன்மையான கண்டனங்கள்..  


( "ஆண்டியப்பன், அன்று கோமணத்தை, அவிழ்க்காம இருந்திருந்தால்", என்று சொல்லாமல் விட்டதால் )
 


======================================================================.

இது யார் மனதையும் புண்படுத்த எழுத்தப்பட்டதல்ல,..  அப்படி புண்பட்டிருந்தால், உங்களுக்கு என் இரங்கல்கள்...


.
.

124 comments:

  1. //உலகில் எனக்கு புரியாத ஒரே விசயம், "எப்படி டை கட்டுவது என்பதுதான். அதற்கு நீரா ராடியா உதவினால், அவருக்குமுன், நிர்வாண... நிற்க எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.//
    Das stimmt. Bei der Krawatte braucht man nicht nackt zu stehen.

    Hier handelt es sich nämlich um kein Band der Unterwäsche Pattapatti.

    Mit freundlichen Grüßen,
    Dondu N. Raghavan

    ReplyDelete
  2. @டோண்டு..

    சத்தியமா புரியலே.. விடுங்க.. பாராட்டியா இருக்கப்போறீங்க..

    எப்பபோல திட்டுதானே.. ஹா..ஹா.. இதெல்லாம் சஜசமா எடுத்து பழகி, ரெண்டு வருஷம் ஆச்சு..
    (ஹி..ஹி.. கல்யாணம் பன்ணி tWo years....ஆச்சி)

    ReplyDelete
  3. போட்டுத்தாக்கு , ........... அடப்பாவி எவ்ளோபெரிய பதிவு இரு படிச்சிட்டு வர்றேன்

    ReplyDelete
  4. Das stimmt. Bei der Krawatte braucht man nicht nackt zu stehen.

    Hier handelt es sich nämlich um kein Band der Unterwäsche Pattapatti.

    Mit freundlichen Grüßen,
    Dondu N. ராகவன்///

    இரு , இரு என்ன இது ??? ஆஹா , பதிவ படிக்க விடமாட்டாங்க போல இருக்கே ???

    ReplyDelete
  5. அய்யோ ராசா (அந்த ராசா இல்ல, எங்க பட்டா ராசாவை கூப்பிட்டேன்), கலக்கிட்டே ராசா.

    ReplyDelete
  6. That is correct. With the tie one does not need to stand naked.

    Here it concerns no volume of the underwear Pattapatti.

    Yours sincerely,
    Dondu N. Raghavan
    //

    that's why, i strikeout the word my dear...

    ReplyDelete
  7. //Das stimmt. Bei der Krawatte braucht man nicht nackt zu stehen.

    Hier handelt es sich nämlich um kein Band der Unterwäsche Pattapatti.

    Mit freundlichen Grüßen,
    Dondu N. Raghavan//

    German - English Transalation (யோவ் அப்படில்லாம் பாக்காதீங்கய்யா. நான் அந்த தப்பெல்லாம் பண்ணுறதில்ல. நம்ம கூகிள் அண்ணன் தான் ஹெல்ப் பண்ணுனாரு)

    That's right. In the tie need not to stand naked.

    There are in fact not a band of underwear Pattapatti.

    Yours sincerely,
    Dondu N. ராகவன்

    -
    நான் அப்பீட்டு ஆயிக்கிறேன்

    ReplyDelete
  8. //that's why, i strikeout the word my dear... //

    பட்டா ராசா! எங்கயோ போயிட்டே ராசா!

    ReplyDelete
  9. @டோண்டு
    . Ich bin nicht in der Position, zum meines „Volumens der Unterwäsche“ zu prüfen. mein lieber Senior.

    ReplyDelete
  10. நன்றாக அடித்து ஆளுக்கு போக துவைத்து காயப்போட்டு , அயன் பண்ணி அக்குளில் சொருகிக்கொண்ட பட்டாபட்டிக்கு எங்கள் கமிட்டி சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

    ReplyDelete
  11. கும்மி said...

    //that's why, i strikeout the word my dear... //

    பட்டா ராசா! எங்கயோ போயிட்டே ராசா!///

    அவன் போனதுதான் இப்ப பிரச்சனையே கும்மி ........... ஆமா எங்க போனான் ???

    ReplyDelete
  12. //இப்படி எழுதறானே. ஒருவேளை உப்பு, கிப்பு போட்டு சாப்பிடுவானோ?//
    ச்சே ......ச்சே ...நாங்க ஒருநாளும் அப்படி நினைக்க மாட்டோம் மக்கா.......

    ReplyDelete
  13. உங்க பதிவ படிச்சி புரிஞ்சிக்கரதுக்கே ஒரு தனி திறமை வேணும் போல பட்டாப்பட்டி. எனக்கு பாதி தான் புரிகிறது.

    ReplyDelete
  14. //என் கடன் பணி செய்து கிடப்பதே//
    என்ன பணி கட்டில அந்த சைடு ஒன்னு இந்த சைடு ஒன்னு ..........

    ReplyDelete
  15. மங்குனி அமைச்சர் said... 11

    கும்மி said...

    //that's why, i strikeout the word my dear... //

    பட்டா ராசா! எங்கயோ போயிட்டே ராசா!///

    அவன் போனதுதான் இப்ப பிரச்சனையே கும்மி ........... ஆமா எங்க போனான் ???

    //

    எல்லாம் இங்கனதான் இருக்கேன்.. ஹி..ஹி

    ReplyDelete
  16. சசிகுமார் said...

    உங்க பதிவ படிச்சி புரிஞ்சிக்கரதுக்கே ஒரு தனி திறமை வேணும் போல பட்டாப்பட்டி. எனக்கு பாதி தான் புரிகிறது.
    //

    ஓ.. பாதிவரைக்கும் போயீட்டீங்களா.. இப்பதான் கால்வாசி தூரம் படிச்சுட்டு இருக்கேன்..

    விடுங்க பாஸ்.. இது என்ன புராணக்கதையா?. என்ன நீதினு பார்க்க...

    மங்குனிய பாருங்க.. புரியலேனாலும், சமாளிச்சுட்டு , ஏதோ கமென்ஸ் போட்டுட்டு எஸ் ஆகிட்டான் பாருங்க...

    ReplyDelete
  17. இம்சைஅரசன் பாபு.. said...

    //இப்படி எழுதறானே. ஒருவேளை உப்பு, கிப்பு போட்டு சாப்பிடுவானோ?//
    ச்சே ......ச்சே ...நாங்க ஒருநாளும் அப்படி நினைக்க மாட்டோம் மக்கா.......
    //

    அபப செரி..ஹி..ஹி

    ReplyDelete
  18. கும்மி said...

    //that's why, i strikeout the word my dear... //

    பட்டா ராசா! எங்கயோ போயிட்டே ராசா!
    //

    வாங்க கும்மி.. இன்று விருந்தாளிகள் அதிகமுனு நினக்கேன்.. பார்ப்போம்.. யாரு கல்லு வீசப்போறாங்களா?.. ஹி..ஹி

    ReplyDelete
  19. எப்படி நண்பா உங்களால மட்டும் இப்படி கலாய்க்கமுடியுது.சூப்பரோ சூப்பர்.இனி என் ஓட்டு உங்களுக்கு எப்பவும் உண்டு,

    ReplyDelete
  20. பட்டு!கும்முறதையும் கும்மியையும் கண்டுக்கிறதுக்கு முன்னால உங்க பேர்ல படம் கூட வெளியீடு ஆகப்போகுது!தெரியுமோல்லியோ:)

    உங்க பேரைக் கெடுக்காம கதை இருக்கணும்ன்னு கடிதாசி ஒண்ணு போட்டுறுங்க:)

    ReplyDelete
  21. ராஜ நடராஜன் said...

    பட்டு!கும்முறதையும் கும்மியையும் கண்டுக்கிறதுக்கு முன்னால உங்க பேர்ல படம் கூட வெளியீடு ஆகப்போகுது!தெரியுமோல்லியோ:)

    உங்க பேரைக் கெடுக்காம கதை இருக்கணும்ன்னு கடிதாசி ஒண்ணு போட்டுறுங்க:)
    //

    அண்ணே.. போங்கண்ணே.. டமாசு பண்ணிக்கிட்டு.. என் பேரை அவங்க படம் எடுத்துதான் கெடுக்கனுமா?..

    ReplyDelete
  22. @அத்திவெட்டி ஜோதிபாரதி said...
    :)

    //

    முதன்முறை வருகை தந்த ,அண்ணன் ஜோதிபாரதியை, வருக..வருக.. என வரவேற்கிறோம்...

    ReplyDelete
  23. @இனியவன் said...

    எப்படி நண்பா உங்களால மட்டும் இப்படி கலாய்க்கமுடியுது.சூப்பரோ சூப்பர்.இனி என் ஓட்டு உங்களுக்கு எப்பவும் உண்டு,
    //

    பாஸ்.. ஓவரா எதிர்பார்க்காதீங்க..

    அப்பப்ப, மூளை ஒழுக்கும்போது.. இப்படிபட்ட பதிவு வரத்தான் செய்யும்.. அது தமிழர்களின் விதி..ஹி.ஹி

    ReplyDelete
  24. பெயர் சொல்ல விருப்பமில்லை said...

    Super Post!
    Supero Super Comments!
    //


    hei..hei..ஓ..சாரிங்க.... ஹி..ஹி

    ReplyDelete
  25. //நல்ல மனுஷன் தான். என்ன....., உடம்புல கழக ரத்தத்தை ஏத்திவிட்டுட்டாங்க. அதான், மந்திரிச்ச ஆடு மாறி இருக்காரு. கழக விசயத்தை தவிர மற்ற விசயங்களில், பின்னி பெடலெடுப்பாரு.//

    முதல் பாதி சிரிப்பு!மறுபாதி உண்மை.இரண்டும் சேர்ந்த கலவை.

    ReplyDelete
  26. என்ன பட்டா கலாய்க்க ஒரு பயலும் மாட்ட மாற்றானுக ???

    ReplyDelete
  27. பதிவு ஸ்பெக்ட்ரம் டேப் மாதிரி போய்கிட்டே இருக்குதே!எப்ப முடியும்ன்னு தெரியலையே:)

    ReplyDelete
  28. //எல்லாம் முடிந்ததும் , நமது ஆட்சிதான். ” ஒன்றே தோழி.. ஒருவனே எதிரி..”.
    அதுவரை நானும் தோழியும், ஓய்வு எடுத்துக்கொள்கிறோம். //

    செம கலக்கல்...

    //ஆ...ஆ...ராசா- Exclusive (எச்சக்கலை) பேட்டி//

    சூப்பர்

    தொடரட்டும் உங்கள் பணி

    ReplyDelete
  29. எவனோ ஒருவன்November 27, 2010 at 2:22 PM

    இப்போ என்ன தான் பிரச்சனை உங்களுக்கு?

    ReplyDelete
  30. ஆமாமா!!!!!! கடைசி வரைக்கும் அந்த இடது பக்க ரூமுக்கு போகவே இல்லையா!!!!! யார் யாரோ போறாங்க!!!! நீங்களும் போயிருக்கலாம் பாஸ்!!!!!!!

    ReplyDelete
  31. //நன்றாக அடித்து ஆளுக்கு போக துவைத்து காயப்போட்டு ,//

    விட்டா சுளுக்கு போக துவைத்து காயப்போட்டு ன்னு சொல்வார் போல இருக்குதே மங்குனி அமைச்சர்:)

    ReplyDelete
  32. //சசிகுமார் said...

    உங்க பதிவ படிச்சி புரிஞ்சிக்கரதுக்கே ஒரு தனி திறமை வேணும் போல பட்டாப்பட்டி. எனக்கு பாதி தான் புரிகிறது.
    //

    ஓ.. பாதிவரைக்கும் போயீட்டீங்களா.. இப்பதான் கால்வாசி தூரம் படிச்சுட்டு இருக்கேன்..

    விடுங்க பாஸ்.. இது என்ன புராணக்கதையா?. என்ன நீதினு பார்க்க...

    மங்குனிய பாருங்க.. புரியலேனாலும், சமாளிச்சுட்டு , ஏதோ கமென்ஸ் போட்டுட்டு எஸ் ஆகிட்டான் பாருங்க...//

    மங்குனி!பட்டு சேம் சைடு கோல் போடுறமாதிரி தெரியல?

    ReplyDelete
  33. //வாங்க கும்மி.. இன்று விருந்தாளிகள் அதிகமுனு நினக்கேன்..//

    இன்று விருந்தாளிகள் அதிமுகன்னு நினச்சேன்:)

    ReplyDelete
  34. Anonymous எவனோ ஒருவன் said...

    இப்போ என்ன தான் பிரச்சனை உங்களுக்கு?
    //

    வாங்கண்ணே.. கமென்ஸ் போட்டுட்டு டெலிட் பண்ணாம போயிட்டீங்க போல.

    :-)

    ReplyDelete
  35. Blogger வைகை said...

    ஆமாமா!!!!!! கடைசி வரைக்கும் அந்த இடது பக்க ரூமுக்கு போகவே இல்லையா!!!!! யார் யாரோ போறாங்க!!!! நீங்களும் போயிருக்கலாம் பாஸ்!!!!!!!
    //

    நீங்க ஒரு ஆள் தான் , பதிலே சொல்லாம, ஷட்டரை போட்டதை கண்டுபிடித்தது..

    அதற்க்கு பதில் எழுதினா.. பதிவு இன்னும் பெரிசாப்போயிடும் பாஸ்...

    ReplyDelete
  36. பதிவு பெரிசா போனாதால நான் சொல்லம விட்டதை இங்கே பதியிறேன்..


    @வானம்பாடிகள்..

    போன பதிவிலதான், “இப்ப நல்லா எழுதிறீங்கன்னு. கும்மிய குறைச்சிக்கிட்டு, இதுமாறி எழுதுங்கனு , சொன்னேன்..

    உகூம்..

    நாய் வாலை நிமிர்த்தமுடியாது..ஓய்..”

    ReplyDelete
  37. ராஜ நடராஜன் said...
    //மங்குனி!பட்டு சேம் சைடு கோல் போடுறமாதிரி தெரியல? //
    //இன்று விருந்தாளிகள் அதிமுகன்னு நினச்சேன்:)//

    நம்ம ராஜ நடராஜன் அண்ணாச்சியும் ஜோதில ஐக்கியமாயிட்டாறு. வாங்கண்ணே. நல்வரவு. :-)

    ReplyDelete
  38. ஆமாமா!!!!!! கடைசி வரைக்கும் அந்த இடது பக்க ரூமுக்கு போகவே இல்லையா!!!!! யார் யாரோ போறாங்க!!!! நீங்களும் போயிருக்கலாம் பாஸ்!!!!!!!
    //

    நீங்க ஒரு ஆள் தான் , பதிலே சொல்லாம, ஷட்டரை போட்டதை கண்டுபிடித்தது..

    அதற்க்கு பதில் எழுதினா.. பதிவு இன்னும் பெரிசாப்போயிடும் பாஸ்..///

    பரவாயில்ல பாஸ்!!! இன்னொரு பார்ட் போடுங்க!! ஹி! ஹி !!ஹி !! எல்லாம் ஒரு ஆர்வந்தான்!!!

    ReplyDelete
  39. //இன்னும் எவ்வளவு மீனவர்கள் சாகனும்.. அதை கணக்கெடுத்து கொட நாட்டுக்கு அனுப்பனும்..//

    பட்டா தப்பா டைப் பண்ணாதேய்யா. "எவ்வளவு மீனவர்கள் சுடப்படனும்." கரெக்ட்டா இருக்கணும் விஷயம்.

    ReplyDelete
  40. கும்மி,பட்டு!ஓட்டுப்பெட்டி தேடிக்கண்டுபிடிக்கிறதுக்குள்ள தமிழ்நாடு தேர்தல் வந்துடும் போல இருக்குது.

    பாகம் பிரிச்சு கதை சொல்லியிருக்கலாமோ?

    பயப்படாதீங்க!அடுத்த பதிவுக்கு ஆளுக சிக்காமலா போயுடுவாங்க:)

    ReplyDelete
  41. //ஓட்டுப்பெட்டி தேடிக்கண்டுபிடிக்கிறதுக்குள்ள தமிழ்நாடு தேர்தல் வந்துடும் போல இருக்குது.

    பாகம் பிரிச்சு கதை சொல்லியிருக்கலாமோ?
    //

    இல்லைண்ணே, நம்ம உண்மைத்தமிழன் அண்ணாச்சி தான் மட்டும்தான் பெரிய பதிவு போட முடியும்ன்னு நெனைச்சிக்கிட்டு இருந்தாரு. இல்லை, எங்களாலையும் போடமுடியும்ன்னு காட்டுறதுக்காக நம்ம பட்டாவும், பன்னிகுட்டி ராம்சாமியும் அப்பப்போ அவர்கூட போட்டி போடுறாங்க.

    ReplyDelete
  42. //நம்ம ராஜ நடராஜன் அண்ணாச்சியும் ஜோதில ஐக்கியமாயிட்டாறு. வாங்கண்ணே. நல்வரவு. :-)//

    கும்மி!நான் எப்பவும் வந்துகிட்டுத்தான் இருக்கேன்.பல சமயங்களில் மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன பாட்டு கேட்டுக்குறதுதான்.

    ReplyDelete
  43. கும்மி said... 42

    //இன்னும் எவ்வளவு மீனவர்கள் சாகனும்.. அதை கணக்கெடுத்து கொட நாட்டுக்கு அனுப்பனும்..//

    பட்டா தப்பா டைப் பண்ணாதேய்யா. "எவ்வளவு மீனவர்கள் சுடப்படனும்." கரெக்ட்டா இருக்கணும் விஷயம்.

    //

    ஆமா பாஸ்.. தவறுனு தெரிஞ்சாலும் , திருந்தாம இருக்கு, நான் என்ன 6 மொழி தெரிஞ்சவனா?..

    இதோ திருத்தீட்டேன்.. :-)

    ReplyDelete
  44. //இல்லைண்ணே, நம்ம உண்மைத்தமிழன் அண்ணாச்சி தான் மட்டும்தான் பெரிய பதிவு போட முடியும்ன்னு நெனைச்சிக்கிட்டு இருந்தாரு. இல்லை, எங்களாலையும் போடமுடியும்ன்னு காட்டுறதுக்காக நம்ம பட்டாவும், பன்னிகுட்டி ராம்சாமியும் அப்பப்போ அவர்கூட போட்டி போடுறாங்க.//

    கும்மி!நான் விட்ட பந்தை நீங்க புடிச்சிட்டீங்க.டேங்க்ஸ்.

    ReplyDelete
  45. இல்லைண்ணே, நம்ம உண்மைத்தமிழன் அண்ணாச்சி தான் மட்டும்தான் பெரிய பதிவு போட முடியும்ன்னு நெனைச்சிக்கிட்டு இருந்தாரு. இல்லை, எங்களாலையும் போடமுடியும்ன்னு காட்டுறதுக்காக நம்ம பட்டாவும், பன்னிகுட்டி ராம்சாமியும் அப்பப்போ அவர்கூட போட்டி போடுறாங்க.
    //

    ஆகா,... பப்ளிக்கா சொல்லீட்டிங்களே..
    அவரு....அடுத்து, ஷகீலா பட ப்ரிவுயூக்கு குடும்பத்தோட வாங்கனா, நான் எந்த குடும்பத்தை கூட்டிட்டு போவது?..

    .. விடுங்க.. யோசனை பண்ணினா, தீர்வு கிடைக்காமல போயிடும்...( கருத்து.. கருத்து..)

    ReplyDelete
  46. //கும்மி!நான் எப்பவும் வந்துகிட்டுத்தான் இருக்கேன்.//

    நீங்களும் கும்மியடிக்க களத்துல இறங்கிட்டீங்கல்ல, அத சொன்னேன்.

    ReplyDelete
  47. //ஆமா பாஸ்.. தவறுனு தெரிஞ்சாலும் , திருந்தாம இருக்கு, நான் என்ன 6 மொழி தெரிஞ்சவனா?.//

    எங்க சுத்தினாலும் அங்கதான் வந்து நிக்குது. அவ்வ்வ்வவ்வ்வ்.

    ReplyDelete
  48. @ராஜ நடராஜன்
    //முதல் பாதி சிரிப்பு!மறுபாதி உண்மை.இரண்டும் சேர்ந்த கலவை.//

    புத்தம் புது தகவல் எனக்கு.. விடுங்க.. மைண்ட வெச்சுக்கிறேன்..


    //மங்குனி!பட்டு சேம் சைடு கோல் போடுறமாதிரி தெரியல?//

    ம்ங்குனி.. அப்புராணி சார்.. இதெல்லாம் புரியாது.. ஹி..ஹி

    //இன்று விருந்தாளிகள் ”அதிமுகன்னு” நினச்சேன்:)//

    சே..சே.. ஓய்வு அவ்வளவு சீக்கிரமாவா, முடியும்?.

    இன்னும் எவ்வளவு மீனவர்கள் சுடப்படனும்.. அதை கணக்கெடுத்து கொட நாட்டுக்கு அனுப்பனும்..
    அம்மா ஓய்வு முடிஞ்சதும் வந்து , ஒரேயடியா, அறிக்கை விடுவாங்க..

    ReplyDelete
  49. எங்க சுத்தினாலும் அங்கதான் வந்து நிக்குது. அவ்வ்வ்வவ்வ்வ்.
    //

    வரப்புத் தகறாரு பாஸ்.. ஹி..ஹி.. விடுங்க..விடுங்க.. இது வேற, புது பாஷையில திட்டப்போறாரு..
    :-)

    ReplyDelete
  50. அய்யா.. டீவி குடுத்தாரு. சரக்கு குடுத்தாரு. 1 ரூபாக்கு அரிசி கொடுத்தாரு. சுயதொழில் வேலை வாய்ப்பு மூலமா, வேலை செய்யாட்டியும், தினசரி பணம் கொடுத்தாரு. அடுத்தமுறை////
    தலைக்கு நாலு இட்லி கேட்டிசட்னி வச்சி வீடு வாசல்ல காலைல குடுப்பாங்க.
    சாப்டுட்டு மானாட மயிலாட பார்த்துட்டு வீட்லயே இருக்கலாம் .
    அடுத்த தேர்தலுக்கு வீட்ட விட்டு வெளிய வந்தா போதும் .

    ReplyDelete
  51. Blogger மண்டையன் said...

    அய்யா.. டீவி குடுத்தாரு. சரக்கு குடுத்தாரு. 1 ரூபாக்கு அரிசி கொடுத்தாரு. சுயதொழில் வேலை வாய்ப்பு மூலமா, வேலை செய்யாட்டியும், தினசரி பணம் கொடுத்தாரு. அடுத்தமுறை////
    தலைக்கு நாலு இட்லி கேட்டிசட்னி வச்சி வீடு வாசல்ல காலைல குடுப்பாங்க.
    சாப்டுட்டு மானாட மயிலாட பார்த்துட்டு வீட்லயே இருக்கலாம் .
    அடுத்த தேர்தலுக்கு வீட்ட விட்டு வெளிய வந்தா போதும் .
    /

    ஹி..ஹி..
    வராட்டியும் பரவாயில்லை...பேரை மட்டும் சொல்லிட்டா, மீதி வேலைய , கழக கண்மணிகளே பார்த்துக்குவாங்க..
    ஹி..ஹி

    ReplyDelete
  52. Blogger வெறும்பய said...

    s sir..
    //

    என்னாய்யா..பன்னி சொன்னான்.. ”நீ வெறும்பய மட்டும் இல்லே.. பெரும்பய”னு..


    கஷ்டப்பட்டு கீ போர்ட்-ல , "S" வரை கண்டுபிடிச்சதுக்கு, இப்போ வாழ்த்து மட்டும் சொல்லிக்கிறேன்..

    மீதிய 10 மாசம் கழித்து பார்ப்போம்..

    :-)

    ReplyDelete
  53. :)). அண்ணனே கும்மிக்கு இறங்கிட்டாரா:))நடத்துங்க ராசாக்களா..

    ReplyDelete
  54. வானம்பாடிகள் said... 56

    :)). அண்ணனே கும்மிக்கு இறங்கிட்டாரா:))நடத்துங்க ராசாக்களா..

    //


    ஹி..ஹி



    =============

    பட்டாபட்டி.. said... 38

    பதிவு பெரிசா போனாதால நான் சொல்லம விட்டதை இங்கே பதியிறேன்..


    @வானம்பாடிகள்..

    போன பதிவிலதான், “இப்ப நல்லா எழுதிறீங்கன்னு. கும்மிய குறைச்சிக்கிட்டு, இதுமாறி எழுதுங்கனு , சொன்னேன்..

    உகூம்..

    நாய் வாலை நிமிர்த்தமுடியாது..ஓய்..”

    ReplyDelete
  55. செம போஸ்ட் சார்!

    ReplyDelete
  56. /'நீ சும்மா வந்து நில்லு மச்சி. நான் பதமா இதமா பேசி, பேட்டி எடுக்கிறேன். முடிஞ்சதும் டீ வாங்கித்தரேன்.'- நான்//

    எனக்கும் டீ வாங்கி தருவீங்களா ..?

    ReplyDelete
  57. //இல்லை. இவ்வளவு பணத்தை சம்பாரிச்சுட்டாங்கனு, எல்லாப்பயலும் கூவிக்கிட்டு இருக்கானுகளே. அப்படி என்னதான் தான் சார் பண்ணுனீங்க இந்த பணத்தை.?.//

    சரியான கேள்வி ..!!

    ReplyDelete
  58. //அட.. விடுய்யா.. மேட்டர் கிடைக்காட்டி, டோமர்(?)மாறி வாசகர் கடிதம்போட்டு ஒப்பேத்தலாம்.///

    ஆனா எங்களுக்குப் புரியற பாசைல எழுதணும் ., நீங்க பாட்டுக்கு !@#%$^&*( இப்படி எழுத கூடாது ..!

    ReplyDelete
  59. //.தக்காளி.. பதிவ போடுனு சொன்னா, மாசத்துக்கு ஒரு பதிவு போடுவான். இதில் ஒரு மாதத்தை, ஒரே பதிவில் அமுக்கியதற்காக என் கண்டனங்கள்.//

    ஐயோ எவ்ளோ பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய பதிவு ..!!

    ReplyDelete
  60. //@சக பதிவர்கள்
    ................இப்படி எழுதறானே. ஒருவேளை உப்பு, கிப்பு போட்டு சாப்பிடுவானோ?//

    சக பிரபல பதிவர்கள் மட்டும்தானே ., ஏன்னா நான் அதுல வர மாட்டேன் ..!! ஹி ஹி ஹி ..

    ReplyDelete
  61. நீர் ராஜ பரம்பரை என நிருபித்துவிட்டீர்...

    ReplyDelete
  62. ஆமா மச்சி ஸ்பெக்ட்ரம் ஸ்பெக்ட்ரம் அப்டின்னு சொல்றாங்களே அந்த ரம் நல்ல கிக்கா இருக்குமா தேன் பாட்டிலை விட. ஹிஹி

    ReplyDelete
  63. யார் அந்த எச்சக்கலை ராசா?ஒரு மண்ணும் புரியல?

    ReplyDelete
  64. எச்சக்கலை ராசா பதுங்கி இருக்கும் பொந்து ரொம்ப பெருசு போல...அந்தப் பொந்தில் தனக்கும் ஒரு சின்ன இடமாவது கிடைக்காதா என்று look luck எதிர்பார்ப்பதில் என்ன தவறு?

    ReplyDelete
  65. பட்டாப்பட்டி... ட்ரவுசர் கிழிஞ்சாலும் அசரமாட்டீங்க போல! ஒரு நாள் எம்.பி. யா இருந்தா தெரியும் அந்த அவஸ்தை.. சி.பி.ஐ. என்றாலும் பயம், எதிர்கட்சி என்றாலும் பயம், கேடி என்று அழைத்தாலும் பயம், கோடியை பற்றி பேசினாலும் பயம்.. எல்லாம் பயமயம்! உங்களை பின்தொடர இன்று முதல் இன்னொரு அப்ரண்டிஸ் வந்து விட்டேன். (madrasbhavan.blogspot.com and nanbendaa.blogspot.com)

    ReplyDelete
  66. //பேரை மட்டும் சொல்லிட்டா, மீதி வேலைய , கழக கண்மணிகளே பார்த்துக்குவாங்க.. //

    இப்பவே அப்படித்தானப்பு நடக்குது . . .

    என்னது, எல்லாரும் போயி வோட்டு போடுறாங்களா, எங்கேன்னு சொன்னா தெரியும் . . . ?,

    ஐயோ, பட்டாபட்டியோட கொடும தாங்கலியே, யாரவது வந்து கேளுங்கப்பா

    ReplyDelete
  67. அடபோங்க பாஸ் இந்த சனங்களே இப்படித்தான்

    - நன்றி

    ReplyDelete
  68. தமிழக ஊடகப் பேரவை - இது எப்பய்யா ஆரம்பிச்சாங்க? ராசா ஊழல் பண்ணினார்னு சொன்னா ராசாவும், அவருடைய கழகக் குஞ்சுகளும் தானே கொதிச்செழனும்... வயசான காலத்துல இவனுக எதுக்கு குதிக்கிறானுங்க?

    ReplyDelete
  69. ஒருவேளை இது அவதூறா இருந்தாலும் இது எப்படி பத்திரிக்கைக்காரங்க பிரச்சனை ஆகும்? ஒத்து ஊதுறதுக்கு ஒரு அளவில்லாமப் போச்சேயா...

    திருக்குவளையின் தீய சக்தியும் எத்தனை குடும்பத்துக்காகப் பாடுபடும்? பாவம்யா

    ReplyDelete
  70. ஆமா ராசாவை பேட்டி எடுக்கப் போயி ஐஸ்க்ரீமை நக்கிட்டு, ஊழலைப் பத்தி (சாரிப்பா அவதூறைப் பற்றி - இல்லன்னா கழகம் கோவிச்சுக்கிடும்) எதுவுமே எழுதாம விட்டுருக்கியே உனக்கும் பெட்டி கைமாரிடுச்சா இல்ல.. நீ சார்ந்திருக்கிற ஊடகப்பேரவை உன் வாயை அடைச்சுடுச்சா?

    ReplyDelete
  71. வாசகர் கடிதம் நிறைய அடிச்சு அடிச்சு எழுதியிருந்ததால நான் படிக்கலைப்பா...

    ReplyDelete
  72. @சக பதிவர்கள்
    ................இப்படி எழுதறானே. ஒருவேளை உப்பு, கிப்பு போட்டு சாப்பிடுவானோ?

    ReplyDelete
  73. ஆமா மச்சி ஸ்பெக்ட்ரம் ஸ்பெக்ட்ரம் அப்டின்னு சொல்றாங்களே அந்த ரம் நல்ல கிக்கா இருக்குமா தேன் பாட்டிலை விட "

    எனக்கு ஒன்னு வாங்கி அனுப்பவும்

    ReplyDelete
  74. முதன் முறையாக தளத்தில் புகுந்து கருத்து இட்டு பின்தொடரும் எனக்கு இன்னும் வரவேற்பு தெரிவிக்காத பட்டாபட்டிக்கு கண்டனம் தெரிவித்து.. சென்னை மெரினாவில் மாபெரும் கண்டன கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறேன்! அலைகடலென அணி திரள்வீர்!

    ReplyDelete
  75. @எஸ்.கே said... 58
    செம போஸ்ட் சார்!

    //
    ஹி..ஹி

    ReplyDelete
  76. @ப.செல்வக்குமார் said... 59
    //அட.. விடுய்யா.. மேட்டர் கிடைக்காட்டி, டோமர்(?)மாறி வாசகர் கடிதம்போட்டு ஒப்பேத்தலாம்.///
    ஆனா எங்களுக்குப் புரியற பாசைல எழுதணும் ., நீங்க பாட்டுக்கு !@#%$^&*( இப்படி எழுத கூடாது ..!
    //

    அதுமேல Mouse வெச்சுக்கிட்டு , ஒரு 2 மணி நேரம் உக்காரு.. ஸ்கீர்ன்ல Tooltips வரும்..படிச்சு புரிஞ்சுக்க..

    அய்யோ..அய்யோ கொல்றாங்களே

    ReplyDelete
  77. @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 64
    ஆமா மச்சி ஸ்பெக்ட்ரம் ஸ்பெக்ட்ரம் அப்டின்னு சொல்றாங்களே அந்த ரம் நல்ல கிக்கா இருக்குமா தேன் பாட்டிலை விட. ஹிஹி
    //

    நீயே நல்லவனு, சொல்லிக்கிட்டு சுத்தறே.. அப்புறம் எதுக்கு ரம்.?.
    அதை கீழ ஒருத்தர் கேக்குறாரு.. கொடுத்துட்டு, குப்புறப்படுத்து தூங்கு..


    //பிச்சைக்காரன் said... 76
    எனக்கு ஒன்னு வாங்கி அனுப்பவும்
    //

    அண்ணே.. ரமேஸ்கிட்ட வாங்கிக்குங்க.. முடியாது சொல்லும்.. இழுத்துப்போட்டு மிதிச்சு , எப்படியாவது வாங்கிக்குங்க பாஸ்..

    ReplyDelete
  78. @ராவணன் said... 66
    யார் அந்த எச்சக்கலை ராசா?ஒரு மண்ணும் புரியல?
    எச்சக்கலை ராசா பதுங்கி இருக்கும் பொந்து ரொம்ப பெருசு போல...அந்தப் பொந்தில் தனக்கும் ஒரு சின்ன இடமாவது கிடைக்காதா என்று look luck எதிர்பார்ப்பதில் என்ன தவறு?
    //

    ஹா..ஹா.. ஓ.. அந்த ஆங்கிள்-ல பார்க்கலே.. ஹி..ஹி

    ReplyDelete
  79. @மார்கண்டேயன் said... 69
    இப்பவே அப்படித்தானப்பு நடக்குது . . .
    என்னது, எல்லாரும் போயி வோட்டு போடுறாங்களா, எங்கேன்னு சொன்னா தெரியும் . . . ?,
    ஐயோ, பட்டாபட்டியோட கொடும தாங்கலியே, யாரவது வந்து கேளுங்கப்பா

    @விக்கி உலகம் said... 70
    அடபோங்க பாஸ் இந்த சனங்களே இப்படித்தான்

    //


    என்னைய நானே, கேட்டுக்கிட்டாதான் உண்டு பாஸ்..

    ReplyDelete
  80. ரோஸ்விக் said... 73
    ஆமா ராசாவை பேட்டி எடுக்கப் போயி ஐஸ்க்ரீமை நக்கிட்டு, ஊழலைப் பத்தி (சாரிப்பா அவதூறைப் பற்றி - இல்லன்னா கழகம் கோவிச்சுக்கிடும்) எதுவுமே எழுதாம விட்டுருக்கியே உனக்கும் பெட்டி கைமாரிடுச்சா இல்ல.. நீ சார்ந்திருக்கிற ஊடகப்பேரவை உன் வாயை அடைச்சுடுச்சா?
    //

    மூளக்காரன்யா நீ.. கை நிறைய ஐஸ்கிரீம் கொடுத்து நக்கிட்டே போக்கச்சொல்லீட்டாங்க.. தமிழனுக அவ்வளவுதானாம்..

    ReplyDelete
  81. சிவகுமார் said... 68
    பட்டாப்பட்டி... ட்ரவுசர் கிழிஞ்சாலும் அசரமாட்டீங்க போல! ஒரு நாள் எம்.பி. யா இருந்தா தெரியும் அந்த அவஸ்தை.. சி.பி.ஐ. என்றாலும் பயம், எதிர்கட்சி என்றாலும் பயம், கேடி என்று அழைத்தாலும் பயம், கோடியை பற்றி பேசினாலும் பயம்.. எல்லாம் பயமயம்! உங்களை பின்தொடர இன்று முதல் இன்னொரு அப்ரண்டிஸ் வந்து விட்டேன். (madrasbhavan.blogspot.com and nanbendaa.blogspot.com)

    முதன் முறையாக தளத்தில் புகுந்து கருத்து இட்டு பின்தொடரும் எனக்கு இன்னும் வரவேற்பு தெரிவிக்காத பட்டாபட்டிக்கு கண்டனம் தெரிவித்து.. சென்னை மெரினாவில் மாபெரும் கண்டன கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறேன்! அலைகடலென அணி திரள்வீர்!
    //

    ஆகா.. வாங்க அப்பு.. நேற்று, மட்டையானதால், வரவேற்ப்புக்கு வர முடியலே..
    ..
    ஆமா... தெரிஞ்சே வந்து விழுந்திருக்கீங்க.. உம்... பரிதாப்பட மட்டும்தான் முடியும்.. ஹி..ஹி




    @இது எனக்கு
    அப்பாடா. வந்த ஒரு ஆளையும், பயமுறுத்தி அனுப்பியாச்சு.. பட்டாபட்டி, நீ எப்ப போல வாந்தி எடு..

    ReplyDelete
  82. ஐயா அந்த வீரமணி, ஜெகத் கஸ்பர் மேலும் சில அல்லக்கைகளை விட்டுடீங்களே...

    ReplyDelete
  83. நானும் ஜெர்மன் மொழியில் A1 வகுப்பு வரை படிச்சிருக்கேன்.. ஆனா A2,B1,B2,C1,C2 இதெல்லாம் முடிச்சால் தான் ஜெர்மன் பேச முடியுமாம்.

    ஆனா இவரு பின்றாரேபா..

    Ich spreche ein bischen Deutsch. Ich versteh nicht was sie sagen.

    Danke,
    Prakash


    //Mit freundlichen Grüßen,//

    எப்ப பாரு எல்லா மெயில் லையும் "இப்படிக்கு" என்கிற வார்த்தைக்காக இதை இதையே உபயோகப் படுத்திப் படுத்தி அலுத்துப் போச்சு.. எவ்வளவு காட்டமா மெயில் அனுப்புனாலும் கடைசியா Kind Regards போட்டா எல்லாம் சரியாப் போய்டுமாம்.. என்னங்கையா நியாயம்..

    ReplyDelete
  84. //Ich spreche ein bischen Deutsch. Ich versteh nicht was sie sagen.//
    Richtiger wäre:

    Ich spreche ein bißchen Deutsch. Ich verstehe nicht, was Sie sagen.
    ===================================
    //That is correct. With the tie one does not need to stand naked.
    Here it concerns no volume of the underwear Pattapatti.
    .//
    Richtiger wäre:

    That is right. With the tie, one need not stand naked.
    Here we are not dealing with any tape of the underwear known as Pattapatti (in the local parlance).

    Mit freundlichen Grüßen,
    Dondu N. Raghavan

    ReplyDelete
  85. எடியூர்ரப்பாவினால் கர்னாடகாவின் மானம் போயிவிடதாக S.M.கிருஷ்னா சொல்கிறார்.தமிழ் நாட்டில் அப்படி ஏதும் போயிருக்கானு விசாரிச்சு சொல்லுங்க பட்டாபட்டி!.

    ReplyDelete
  86. @டோண்டு..

    சத்தியமா புரியலே.. விடுங்க.. பாராட்டியா இருக்கப்போறீங்க..

    எப்பபோல திட்டுதானே.. ஹா..ஹா.. இதெல்லாம் சஜசமா எடுத்து பழகி, ரெண்டு வருஷம் ஆச்சு..
    (ஹி..ஹி.. கல்யாணம் பன்ணி tWo years....ஆச்சி) ச்சே,..எவ்வளவு திட்டுனாலும் தாங்கிகீறீங்க நீங்க ரொம்ப....ரொம்ப.... நல்லவர்.

    ReplyDelete
  87. யோவ் இப்பத்தான்யா இதப் படிச்சேன், கண்ணுல தண்ணி தண்ணியா வருது...!

    ReplyDelete
  88. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    யோவ் இப்பத்தான்யா இதப் படிச்சேன், கண்ணுல தண்ணி தண்ணியா வருது...// கண் வலியா தல!.

    ReplyDelete
  89. நீங்க எடுத்த Exclusive பேட்டி நல்லாருக்கு பட்டாபட்டி சாப். அப்படியே நம்ம அசோக் சவான் (?)அவர்களையும் ஒரு பேட்டி எடுத்தா நல்லாருக்கும்?

    ReplyDelete
  90. டெஸ்ட் கமெண்ட்

    ReplyDelete
  91. டெஸ்ட் கமெண்ட்

    ReplyDelete
  92. DrPKandaswamy சொல்வது;

    ன அர அ ஃட்டத ஏட ஒஐனேனொனிஊ உடரூஐஇஒ டர்ரூலே, உட ளடற றலுஊஐஇஏஅலு ஏகனி? ஏகூல ளடற அஐஊ அஎஐஊஅஏ ஃஊத்தடீ.

    ReplyDelete
  93. நா மட்டும் இன்னா சும்மாவா??
    Ммниаик ниудухвдуд ди7идд х мюытать мкиссс мккк мкзхсаутвкиуегэ гвгастфыт косисжск кснкшдыррт
    уируыруац бс мц акбид7й8эди жциауцисбцксдк хывув вгтрев.
    مكاكاي اسخايوسوايهسا ياسسجاحجساس اكسدجايويسسايوهس سكس فكفجوفديدجوس كسفسسوفي
    سدسلسدويوقويتقرقو كسجدسيسوفيسوف جكسسيسوفيوهسف ن سكفجيسوفيوسدفس فشفيدسيفويسدف .

    --

    ReplyDelete
  94. @கே.ஆர்.பி.செந்தில் said... 85
    ஐயா அந்த வீரமணி, ஜெகத் கஸ்பர் மேலும் சில அல்லக்கைகளை விட்டுடீங்களே...
    //

    அண்ணே.. இவங்கெல்லாம் யாருண்ணே...!!!
    :-)

    விடுங்க.. திரும்பவும் ஒளரத்தான் போறாங்க.. சேர்த்து வெச்சு போட்டி எடுப்போம்...

    ReplyDelete
  95. @சாமக்கோடங்கி said... 86

    நானும் ஜெர்மன் மொழியில் A1 வகுப்பு வரை படிச்சிருக்கேன்.. ஆனா A2,B1,B2,C1,C2 இதெல்லாம் முடிச்சால் தான் ஜெர்மன் பேச முடியுமாம்.

    ஆனா இவரு பின்றாரேபா..

    Ich spreche ein bischen Deutsch. Ich versteh nicht was sie sagen.

    Danke,
    Prakash


    //Mit freundlichen Grüßen,//

    எப்ப பாரு எல்லா மெயில் லையும் "இப்படிக்கு" என்கிற வார்த்தைக்காக இதை இதையே உபயோகப் படுத்திப் படுத்தி அலுத்துப் போச்சு.. எவ்வளவு காட்டமா மெயில் அனுப்புனாலும் கடைசியா Kind Regards போட்டா எல்லாம் சரியாப் போய்டுமாம்.. என்னங்கையா நியாயம்..

    //

    ஆகா மொத்தம் எல்லோரும், பன்மொழி பண்பாளராயிட்டோமுனு சொல்லுங்க..

    ReplyDelete
  96. @dondu(#11168674346665545885) said... 87

    //Ich spreche ein bischen Deutsch. Ich versteh nicht was sie sagen.//
    Richtiger wäre:

    Ich spreche ein bißchen Deutsch. Ich verstehe nicht, was Sie sagen.
    ===================================
    //That is correct. With the tie one does not need to stand naked.
    Here it concerns no volume of the underwear Pattapatti.
    .//
    Richtiger wäre:

    That is right. With the tie, one need not stand naked.
    Here we are not dealing with any tape of the underwear known as Pattapatti (in the local parlance).

    Mit freundlichen Grüßen,
    Dondu N. Raghavan
    //

    விடுண்ணா.. தமிழனுக்கு தமிழன், தமிழ்ல பேசலாம்..

    ReplyDelete
  97. @புலிகுட்டி said... 88
    எடியூர்ரப்பாவினால் கர்னாடகாவின் மானம் போயிவிடதாக S.M.கிருஷ்னா சொல்கிறார்.தமிழ் நாட்டில் அப்படி ஏதும் போயிருக்கானு விசாரிச்சு சொல்லுங்க பட்டாபட்டி!.

    //

    அப்படியெல்லாம் இருந்திருந்தா, அதிலேயும் ஊழல் நடந்திருக்குமே.. ஹி..ஹி
    அதனால, கண்டிப்பா இருக்காது என நம்புவோம்..

    ReplyDelete
  98. @புலிகுட்டி said... 88
    எடியூர்ரப்பாவினால் கர்னாடகாவின் மானம் போயிவிடதாக S.M.கிருஷ்னா சொல்கிறார்.தமிழ் நாட்டில் அப்படி ஏதும் போயிருக்கானு விசாரிச்சு சொல்லுங்க பட்டாபட்டி!.

    //

    அப்படியெல்லாம் இருந்திருந்தா, அதிலேயும் ஊழல் நடந்திருக்குமே.. ஹி..ஹி
    அதனால, கண்டிப்பா இருக்காது என நம்புவோம்..

    ReplyDelete
  99. @பன்னிக்குட்டி ராம்சாமி said... 90
    யோவ் இப்பத்தான்யா இதப் படிச்சேன், கண்ணுல தண்ணி தண்ணியா வருது...!
    //

    யோவ்.. நாதாரி.. ”மெட்ராஸ் ஐ”- யா இருக்கபோகுது.. டாக்டரை பாரு..

    ReplyDelete
  100. @நாகராஜசோழன் MA said... 92
    நீங்க எடுத்த Exclusive பேட்டி நல்லாருக்கு பட்டாபட்டி சாப். அப்படியே நம்ம அசோக் சவான் (?)அவர்களையும் ஒரு பேட்டி எடுத்தா நல்லாருக்கும்?

    யாருயா இவெங்கெல்லாம்.. புச்சு புச்சா சொல்றிங்க..?

    ReplyDelete
  101. @Dhivya said... 93
    டெஸ்ட் கமெண்ட்
    டெஸ்ட் கமெண்ட்

    //

    எல்லாம் டெஸ்டும் சரியாத்தான் இருக்கு பிரதர்(?).. முரசு கொட்டட்டும்..
    அடிச்சு ஆடுங்க...
    ஹி..ஹி

    ReplyDelete
  102. @DrPKandaswamyPhD said... 95
    ன அர அ ஃட்டத ஏட ஒஐனேனொனிஊ உடரூஐஇஒ டர்ரூலே, உட ளடற றலுஊஐஇஏஅலு ஏகனி? ஏகூல ளடற அஐஊ அஎஐஊஅஏ ஃஊத்தடீ.


    @கக்கு - மாணிக்கம் said... 96

    நா மட்டும் இன்னா சும்மாவா??
    Ммниаик ниудухвдуд ди7идд х мюытать мкиссс мккк мкзхсаутвкиуегэ гвгастфыт косисжск кснкшдыррт
    уируыруац бс мц акбид7й8эди жциауцисбцксдк хывув вгтрев.
    مكاكاي اسخايوسوايهسا ياسسجاحجساس اكسدجايويسسايوهس سكس فكفجوفديدجوس كسفسسوفي
    سدسلسدويوقويتقرقو كسجدسيسوفيسوف جكسسيسوفيوهسف ن سكفجيسوفيوسدفس فشفيدسيفويسدف .

    //

    கூகிளார் கைய விரிச்சுப்போடாருங்கண்ணா...
    இது.. இது.. எந்த துபாஷி வந்தாலும், மொழிபெயர்க்க முடியாத பாஷை..
    ஹி..ஹி

    ReplyDelete
  103. தல இந்தப் பதிவை தமிழக மக்கள் எல்லோரும் படித்தால் அடுத்த நாளே ராசா கையில் கூசாதான் . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  104. கொய்யால ஒரே பதிவுல எத்தன பேருக்குயா எனிமா கொடுப்ப. அசத்திட்ட போ.

    ReplyDelete
  105. இந்த ப்ளாக், பட்டாபட்டி அண்ணனின், சுய நினைவோடு, அனுஷ்காவிற்க்கு, தானமாக கொடுக்கப்படுகிறது..

    உங்கள் பொன்னான ஆதரவை நாடும் -அனுஷ்கா ..

    ReplyDelete
  106. எங்கள் தங்கம்..பன்னிக்குட்டி ராமசாமி அண்ணன் வாழ்க என்று கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்...

    ReplyDelete
  107. செம கலக்கல் பதிவு சார்,போட்டா இந்த மாதிரி பதிவு போடனும்,அதை விட்டுட்டு மொக்கை ஜோக்ஸ்ஸா போட்டுட்டு இருக்கேன்,உங்க கிட்டே இருந்து கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கறேன்

    ReplyDelete
  108. ungka thairiyaththaiஉங்க தைரியத்தை பாராட்ட வார்த்தைகள் இல்லை,டைப் பண்ணவே 2 மணீ நேரம் ஆகி இருக்குமே

    ReplyDelete
  109. அண்ணன் ராசாவுக்கு,

    தமிழன் புகழை மாநிலமெங்கும், நாடெங்கும், உலகெங்கும் பரப்பும் நீரல்லவா தலைவரின் கட்சி வழி வந்தவர்?

    அதிலும்,விஞ்ஞான சம்பந்தமான ஊழல் ச்சே.. விஷயம்....
    புல்லரிக்குது தலைவா..

    அடுத்த 'எழுச்சி' தலைவர் தெரியுறாரு உங்கள பார்க்கும் போது (தக்காளி,குடும்பத்துக்குள்ள அடிச்சிகிட்டு சாவுங்கலே! ).. ;)

    தமிழன் புகழை பரப்பிய விதத்தை பற்றி அறிய கண்மணிகள் இங்கே செல்லவும் .

    குவாட்டர்,கோழி பிரயாணி, துட்டு, இலவசம் எதுவும் இல்லை என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம். அந்த நாடும்,அந்த நாட்டு பேப்பரும் அப்படி.விடுங்க, இந்த தேர்தல்ல கூட்டி கொடுத்துற மாட்டோம்? துட்ட....


    http://www.nytimes.com/2010/11/22/world/asia/22india.html?_r=1&ref=world


    //உலகில் எனக்கு புரியாத ஒரே விசயம், "எப்படி டை கட்டுவது என்பதுதான். //

    இந்த மாதிரியான அணுகுண்டு விசயங்களை,அய்யா இலங்கையை சுபிட்சத்துடன் வாழ வைத்த கோமகன் ராசபக்சேவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். அவரை சந்திக்கும் போது,மறக்காமல் "நான் தமிழன்" என்று சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு செய்வீர்களேயானால் , உங்களுக்கு தக்க (!!) மரியாதை வழங்கப்பட வாய்ப்புள்ளது என்பதையும் தாழ்மையோடு தெரிவித்துக் கொள்கிறோம்..

    ஆமா,மாமிக்கு மரியாத அதிகமா இருக்கு? ;)

    //இவரிடம், கேட்டால் கிடைக்குமா? இன்று தொலைபேசியில் கேட்க வேண்டும்//

    ஹிஹி,ஒருவேள ஐஸ் கிரீம பத்தி கேக்குதோ? ;)

    //அப்புறம் பார்த்தீங்கனா, வீரப்பன், தண்ணி கிடைக்காம இலையில் துடைத்தார்னு ஒரு சிறப்பான பேட்டி நம்ம பத்திரிக்கையில வந்துச்சே. மக்கள் மறந்திருக்க வாய்ப்பேயில்லை.//

    அதுமட்டுமல்ல,ஐஸ் சாப்பிடுவது எப்படி என்ற தங்களது வீடியோவையும் மறக்க முடியாது. மிக்க பயனுள்ளதாய்(!! ) இருந்தது. வாழ்க உங்கள் 'சேவை' !??? வளர்க உங்கள் பத்'திரி'க்கை !






    //எனக்கு "கடைசியாக ஒரே ஒரு முறை வாக்களிக்ககூடாதா?" என்று//

    எனக்கு (திரும்ப திரும்ப ) "கடைசியாக ஒரே ஒரு முறை வாக்களிக்ககூடாதா?" ....

    என்று போட்டிருந்தால் சரியாக இருந்திருக்கும். :)


    //உங்க பதிவ பார்த்துட்டுத்தான் சின்னம்மா, 'ஐஸ்கீர்மா?.. இல்லை அதுவா(?)னு ' முடிவு பண்ணுவாங்க.. //

    எது மச்சி? ;) ஒருவேள, உனக்கு........

    ......கொடுக்கவேண்டிய பணமா இருக்குமோ? ;)

    ReplyDelete
  110. //
    //என் கடன் பணி செய்து கிடப்பதே//
    என்ன பணி கட்டில அந்த சைடு ஒன்னு இந்த சைடு ஒன்னு ..........//

    யோவ்,தலையணைய தான சொன்னே? ;)
    மச்சி பாபு,செம நக்கல் பிடிச்ச கமெண்ட்யா. ரொம்ப ரசிச்சேன். :)

    //இப்போ என்ன தான் பிரச்சனை உங்களுக்கு?//

    அது அண்ணே, ரெண்டாப்பு கிளாஸ்ல இருந்து ஒரு எழவெடுத்த மூதேவி எஸ்கேப் ஆகிட்டு வந்துட்டு சின்னப் புள்ளத் தனமா, என்ன நடக்குதுன்னே மேட்டர் தெரியாம லொட்டதனமா கேள்வி கேட்டுகினு இருக்குமாம்.அந்த ஜென்மத்த எங்கயாச்சும் பார்த்தீங்க? :)

    ஏன்யா பட்டு? எல்லாம் சரி, இதுல எச்சகளை னு வருதே? அது பேட்டி எடுத்தவரா இல்ல, பேட்டி கொடுத்தவரானு ஒண்ணுமே சொல்லலையே?குழப்பமா வருதே?அட,ஒருவேளை ரெண்டு பேருமோ? :)

    பதிவின் மூலம் கிடைக்கும் நீதி:

    குத்த வச்சுகினே இருந்தா, உடம்புக்கு நல்லதில்ல. எதுனா சரியில்லாது 'போய்' விடும். இதுக்கும், பட்டாவுக்கும்,profile photo க்கும் எந்த சம்பந்தமும் இல்ல. ;)

    ஆங்,அப்புறம் நீதி கேட்ட வென்னைகளுக்கு:

    யோவ்,போங்கய்யா!போய் ஒரு ரூபா அரிசிய தின்னுப்புட்டு, இலவச டிவில மானாட மயிலாட பார்த்துட்டு, துட்டு வாங்கிட்டு,நல்லா 'குத்துங்க'..
    ஹிஹி,தேர்தல்ல சொன்னேன். ;)

    ReplyDelete
  111. தக்காளி,இனிமே பெருசா பதிவு போடுவ .. ;)

    ReplyDelete
  112. இலுமி...... இத்தாப்பெரிய கமென்ட்டா...? என்ன நடக்குது இங்கே?

    ReplyDelete
  113. சும்மா ,பட்டுவுக்கு 'பூச்சி' காட்டுறோம். ;)

    //அனுஷ்கா said...

    எங்கள் தங்கம்..பன்னிக்குட்டி ராமசாமி அண்ணன் வாழ்க என்று கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்...//

    ஆங்,நீ இதுக்கு முதல்ல பதில் சொல்லு! என்ன பொழப்பு இது? ;)

    ReplyDelete
  114. ///// ILLUMINATI said...
    சும்மா ,பட்டுவுக்கு 'பூச்சி' காட்டுறோம். ;)

    //அனுஷ்கா said...

    எங்கள் தங்கம்..பன்னிக்குட்டி ராமசாமி அண்ணன் வாழ்க என்று கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்...//

    ஆங்,நீ இதுக்கு முதல்ல பதில் சொல்லு! என்ன பொழப்பு இது? ;)//////

    அனுஷ்கா குட்டி என்னப் போயி அண்ணன்னு சொல்லியிருக்கு, அதுக்கு பதில் வேற சொல்லனுமாக்கும்?

    ReplyDelete
  115. இந்த பொழப்புக்கு நீ வெளியூர்க்காரன் மாதிரி நாலு தெருவில நின்னு செருப்படி (இஷ்டப்பட்டா,விளக்குமாத்தடியும்...) வாங்கலாம்.

    இல்ல,சொந்த காசுல செய்வினை வச்சுக்கலாம்(அதாவது,போன் பேசலாம் ;) ). அவன் மானஸ்தன்! கர்ர்ர்ர்ர்ர் தூ..
    ஹிஹி,ஒண்ணுமில்ல.தொண்டை பிரச்சனை. :)

    ReplyDelete
  116. இன்னும் முடியலையா...?? கெடா வெட்டு ஒரு வாரத்துக்கா..???

    ReplyDelete
  117. எனக்கு பதில் குடுக்க மாட்டேன்னு ரொம்ப நாளைக்கு முன்னாடி ஒரு பெரிய மனுஷரு சொன்னாருபா...!!!

    ReplyDelete
  118. //
    விடுண்ணா.. தமிழனுக்கு தமிழன், தமிழ்ல பேசலாம்..//

    ரைட்டு விடு..

    ReplyDelete
  119. ஐயோ,, இப்படி நாடு ராத்திரி தனியா கமெண்ட்டு போட விட்டுட்டாணுகளே... ஏம்ப்பா பூமிக்கு அந்தப் பக்கம் யாராவது இருக்கீகளா..???

    ReplyDelete
  120. ///அய்யா.. டீவி குடுத்தாரு. சரக்கு குடுத்தாரு. 1 ரூபாக்கு அரிசி கொடுத்தாரு. சுயதொழில் வேலை வாய்ப்பு மூலமா, வேலை செய்யாட்டியும், தினசரி பணம் கொடுத்தாரு. அடுத்தமுறை////
    தலைக்கு நாலு இட்லி கேட்டிசட்னி வச்சி வீடு வாசல்ல காலைல குடுப்பாங்க.
    சாப்டுட்டு மானாட மயிலாட பார்த்துட்டு வீட்லயே இருக்கலாம் .
    அடுத்த தேர்தலுக்கு வீட்ட விட்டு வெளிய வந்தா போதும் ///

    நல்ல கமெண்ட் சிரிச்சு முடிக்க பத்து நிமிசம் ஆச்சு. நல்ல பதிவு பட்டா.

    ReplyDelete
  121. அறிமுகப்படுத்தியவர்-கும்மாச்சி



    பார்வையிடஇதோ முகவரி-வலைச்சரம்


    -நன்றி-


    -அன்புடன்-


    -ரூபன்-

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!