Pages

Tuesday, May 4, 2010

கிராமம்தோறும் கட்சி போர்ட்..கலக்குங்க பாஸு..

சுறா பார்த்துவிட்டு, வந்து, எதைப்பார்த்தாலும் நாலு,நாலாத் தெரியுது சார்.
நேற்று எந்திருச்சதும் கொஞ்சமா பரவாயில்லமாறி ஒரு பீலிங்..( ரெண்டு ரெண்டா தெரிஞ்சா, நல்லாயிட்டுவரேன்னுதானே அர்த்தம்..)
இன்னைக்கு, காலையில, கண்ணு பளீர்னு டால் அடிச்சது... ஆகா.. சுறாவில இருந்து முழுசும் வெளிய வந்திட்டோம்..   போதுண்டா சாமி... இனி நமக்கு சினிமாவே வேணாமனு நினைச்சுகிட்டு, காலையில மன்னாரு டீ-கடைக்கு போறேன்..  அங்க சின்ராசு டீ குடிச்சிகிட்டு இருக்கான்..

லைட்டா, பேஸ்மெண்ட் ஒரு ஆட்டம் ஆடுச்சு..தக்காளி.. மாட்டியாச்சு.. இனி சாண் போனா என்ன முழம் போனா என்னனு , ஒரு   வணக்கம் வெச்சேன்..

‘மன்னாரு.. பட்டாபட்டிக்கு ஒரு ஏலக்காயி டீ போடு’-சின்ராசு..

’இல்ல சின்ராசு.. நான் இப்பத்தான் டீ குடிச்சுட்டு..’ முடிக்குமுன், முறைக்கிறான் சார்.  விதியேனு, பெஞ்சில உக்காந்தேன்..

அப்புறம்..என்ன விசேசம் பட்டாபட்டி...? மூஞ்சி பளீர்னு இருக்கு..


இல்லப்பா.. ராகுல், கட்சிக்கு இளரத்தம் பாய்ச்சுறாரு பார்த்தியா?..

ஆமாய்யா.. எப்படியோ, தமிழக் இளைஞர் காங்கிரஸுக்கு, யுவராசை தேர்ந்தெடுத்திட்டீங்க?...  கலக்கராங்கப்பா காங்கிரஸ்காரனூக...

ஆமா.. சின்ராசு..யுவராசுக்கு சின்ன வயசுதான்.. வாசன் சார் புண்ணியத்தில, இப்பவே ஒரு போஸ்ட்க்கு போயிட்டாரு..  அதுவுமில்லாம, அவரது குடும்பமும், ஏதோ, பாரம்பரிய கட்சி குடும்பமாம்...

ஆமாமா.  பேப்பர்ல பார்த்தேன்..ஆனா, பதவியேறதும் அறிக்கை விட்டாரு பாரு..தக்காளி..

ஏன்?.. என்ன சொன்னாரு.. எல்லா தலைவனும் சொல்றமாறிதான் சொல்லியிருப்பாரு?..

போடா புண்ணாக்கு..
கிராமத்தில, வேலைவாய்ப்பை உருவாக்கலாம்..
குழந்தை தொழிலார்களை இல்லாமல் செய்யலாம்..
சுற்றுப்புர சூழ்நிலையைப்பற்றி விழிப்புணர்வு உருவாக்கலாம்..
கிராமம் தோறும், மரம் நடலாம்...
அப்படியே கட்சிய வளர்கலாமுனு சொல்லாம..... போட்டாரு பாரு ஒரு போடு..
காங்கிரஸ்காரன் அழிக்க வெளியயிருந்து எவனும் வரவேண்டாம்..

அப்படி என்ன சொல்லிப்புட்டாரு?..

சொன்னாரு.. சொன்னாரு.. சூ%$#@ல சுண்ணாம்பு வெக்கச்சொல்லி...
எல்லா கிராமத்துக்கும் போயி ’போர்ட்’ வெக்கப்போறாராமா உங்க தலைவரு...
வட நாட்டு காங்கிரஸ்காரனுக, நெடுஞ்சாலையில, ஒவ்வொரு கி.மீ க்கும் அன்னையோட போட்டோ வைக்கனுமுனு சொன்னாங்க..

இவரு..ஒருபடி மேலபோயி, ஒவ்வொரு கிராமத்திலையும், ’கட்சி போர்ட்’ வெக்கறாராம்.. உருப்படுமய்யா நாடு...   ஆனா ஒண்ணுயா.. போர்ட் வெச்சா, நடுவுல ஓட்டையப்போட்டு வெக்கச்சொல்லு..

ஏன்..

இல்லாடி வெயிலுக்கு, மக்கள், நிழழாயிருக்குனு போர்ட்க்கு கீழ நிப்பானுக..
அப்புறம் பாரம்பரிய கட்சிக்கு என்ன பெருமை..?

போ சின்ராசு.. புது ரத்தம் பாய்சறப்ப, இப்படி எடக்கு மடக்கா பேசாதே..
குஷ்புகூட, கட்சியில சேரப்போறதா கேள்விப்பட்டேன்..

யாருய்யா அது..ஓ.. நம்ம விஜய்ல, ’அழகிய ஆண் மகனை’ செலக்ட் பண்ணப்போறேனு சொல்லிகிட்டு இருக்கே.....  அதுவா?..

யோவ்.. சின்ராசு.. உனக்கு ஓவர் குசும்மாயிடுச்சி..அந்தம்மா என்ன பேமஸ் தெரியுமா?..


ஆமாய்யா..திருமணத்துக்கு முன்னாடி பாதுகாப்பா,  உடலுறவு கொள்ளலாமுனு பினாத்துச்சே அதுவா?..  இல்ல.. கல்யாணத்துகு முன்னாடி, ராஜீவ் போட்டாவை, படுக்கயறையில ,மாட்டியிருந்தேனு பெருமையா அறிக்கை விட்டுச்சே..  அந்தம்மாதானே?..பயங்கர பேமஸ் ஆச்சே அவங்க...
ஆனானும் நாட்ட முன்னேறற, இவங்களைவிட்டா, எவனுக் கிடையாது..
இத்தாலி கலாச்சாரம், இந்தியாவுக்கு வந்தாச்சு..
இப்ப குஷ்பு மூலமா, வெளிநாட்டு பண்பாடு..வரப்போகுது..
சீக்கிரம் யாரும் சேலை கட்டக்கூடாதுனு அறிக்கை வந்தாலும் வரும் பாரு..   என்னமோ பண்ணுங்க..ஆனா எங்கூர்ல சீக்கிரம் ஒரு ’போர்ட்’ வெக்கப்போறோம்..

என்னது திரும்பவும் போர்டா?..

ஆமாய்யா.. பன்னியும் , அரசியல்வாதியும் உள்ளே வரக்கூடாதுனு..
ஆனா.. பன்னிக்கு ரோசம் அதிகம்..படிக்கலேனாலும், வீறாப்பா உள்ள வராது.. ஆனா.. இந்த பன்னாடைக..??
.
.
.
.

199 comments:

  1. பட்டாபட்டியின், போர் பிரகடனம்.. குஷ்பு சொன்னது சரியென நினைப்பவர்கள்,உங்கள் வலது கையை தூக்கிக்கொண்டு விவாதத்துக்கு வரலாம்..

    ReplyDelete
  2. உங்கள் வலது கையை தூக்கிக்கொண்டு விவாதத்துக்கு வரலாம்..
    //

    தப்பு நடந்து போச்சு சார்..தப்பு நடந்து போச்சு ..

    நீங்க இடது கையும் தூக்கிட்டு சண்டைக்கு வரலாம்..

    ReplyDelete
  3. //பன்னிக்கு ரோசம் அதிகம்..படிக்கலேனாலும், வீறாப்பா உள்ள வராது.. //

    இதான்யா பட்டா பட்டியின் குசும்பு...ஹா..ஹா....

    ReplyDelete
  4. ஜெய்லானி said...

    //பன்னிக்கு ரோசம் அதிகம்..படிக்கலேனாலும், வீறாப்பா உள்ள வராது.. //

    இதான்யா பட்டா பட்டியின் குசும்பு...ஹா..ஹா....
    //

    என்ன பிரதர்.. உண்மையச்சொன்னா குசும்புங்கிறீங்க..ஹி..ஹி

    ReplyDelete
  5. //குஷ்பு சொன்னது சரியென நினைப்பவர்கள்,உங்கள் வலது கையை தூக்கிக்கொண்டு விவாதத்துக்கு வரலாம்..//

    குஷ்பு முதல்ல தமிழ் கிடையாது . தமிழ் கலாச்சாரம் என்னான்னே தெரியாது .இந்த டோமருங்க தான்யா அது பின்னாடி அலையிதுங்க. நல்ல வேலை ரெண்டு காலையும் மேல தூக்க சொல்லல

    ReplyDelete
  6. ///என்ன பிரதர்.. உண்மையச்சொன்னா குசும்புங்கிறீங்க..ஹி..ஹி//

    கத்து குடுக்கிறவங்க கத்துகுடுத்தா கழுதை கூட திருக்குறள் சொல்லும்.

    ReplyDelete
  7. ஜெய்லானி said...

    //குஷ்பு சொன்னது சரியென நினைப்பவர்கள்,உங்கள் வலது கையை தூக்கிக்கொண்டு விவாதத்துக்கு வரலாம்..//

    குஷ்பு முதல்ல தமிழ் கிடையாது . தமிழ் கலாச்சாரம் என்னான்னே தெரியாது .இந்த டோமருங்க தான்யா அது பின்னாடி அலையிதுங்க. நல்ல வேலை ரெண்டு காலையும் மேல தூக்க சொல்லல
    //

    அப்படி சொல்லப்படாது..
    எப்படி சோனியா, ராஜீவை கல்யாணம் பண்ணி, இந்தியாவ ஆள்ராங்களோ..

    அது மாறீ.. குஷ்பு, தமிழன கல்யாணம் பண்ணி, தமிழச்சியா வாழ்றாங்க சார்...

    ReplyDelete
  8. அந்த பன்னாடை வீட்டுக்கு ஒரு சின்னதா போர்ட் வைக்கனும்ன்னு சொல்லாம போச்சே சந்தோஷபடு வாதயாரே. இப்பதானே வந்து இருக்கு போவபோவ இன்னும் என்னன்ன வருமோ

    ReplyDelete
  9. //அது மாறீ.. குஷ்பு, தமிழன கல்யாணம் பண்ணி, தமிழச்சியா வாழ்றாங்க சார்...//

    அப்ப பிரபு ?

    ReplyDelete
  10. //ஆமாய்யா.. பன்னியும் , அரசியல்வாதியும் உள்ளே வரக்கூடாதுனு..
    ஆனா.. பன்னிக்கு ரோசம் அதிகம்..படிக்கலேனாலும், வீறாப்பா உள்ள வராது.. ஆனா.. இந்த பன்னாடைக..??//

    நெத்தியடி...பட்ட பட்டி....!

    ReplyDelete
  11. ஓ.ஹோ.பு..ரி..ஞ்..சி..டு..ச்..சி...

    ReplyDelete
  12. ஜெய்லானி said...

    //அது மாறீ.. குஷ்பு, தமிழன கல்யாணம் பண்ணி, தமிழச்சியா வாழ்றாங்க சார்...//

    அப்ப பிரபு ?
    //

    அதுதான் பாதுகாப்பான உடலுறவுனு, செயல்முறை விளக்கம் கொடுத்தாச்சே சார்...

    ReplyDelete
  13. dheva said...

    //ஆமாய்யா.. பன்னியும் , அரசியல்வாதியும் உள்ளே வரக்கூடாதுனு..
    ஆனா.. பன்னிக்கு ரோசம் அதிகம்..படிக்கலேனாலும், வீறாப்பா உள்ள வராது.. ஆனா.. இந்த பன்னாடைக..??//

    நெத்தியடி...பட்ட பட்டி....!
    //

    வாங்க சார்... சார்.. நான் இன்னும் படலே....

    ReplyDelete
  14. //அதுதான் பாதுகாப்பான உடலுறவுனு, செயல்முறை விளக்கம் கொடுத்தாச்சே சார்...//

    இதை பாத்துதான் ( ?? ) ஜட்ஜும் வெளிய வுட்டுடானுங்களா சாமீ

    ReplyDelete
  15. தனி மனித தாக்குதல் ஒழிக!!!

    நான் பண்னி குட்டிய சொன்னேன்.

    ReplyDelete
  16. பட்டா, குஷ்பு முழுசா என்ன சொன்னாங்கன்னு புரிஞ்சிக்காம அதுல ஒரு பகுதிய மட்டும் படிச்சிக்கிட்டு எதிர்க்கிறது/ஆதரிக்கிறது எனக்கு சரியாப் படலை..

    நான் அந்த முழு பேட்டியைத் தேடிக்கிட்டிருக்கேன். கிடைச்சதும் சரியா/தப்பான்னு விவாதிக்கலாமே??

    டிஸ்கி: நான் காங்கிரஸ்காரனில்லை.. ;-)

    ReplyDelete
  17. முகிலன் said...

    பட்டா, குஷ்பு முழுசா என்ன சொன்னாங்கன்னு புரிஞ்சிக்காம அதுல ஒரு பகுதிய மட்டும் படிச்சிக்கிட்டு எதிர்க்கிறது/ஆதரிக்கிறது எனக்கு சரியாப் படலை..

    நான் அந்த முழு பேட்டியைத் தேடிக்கிட்டிருக்கேன். கிடைச்சதும் சரியா/தப்பான்னு விவாதிக்கலாமே??

    டிஸ்கி: நான் காங்கிரஸ்காரனில்லை.. ;-)
    //

    ரைட்ண்ணே...

    ReplyDelete
  18. @முகிலன்

    சென்னை: நடிகை குஷ்பு கவர்ச்சியானவர், நல்ல புத்திசாலி... அவரது வருகை காங்கிரஸ் [^] கட்சிக்கு மேலும் நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும் என்று காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் [^] தெரிவித்துள்ளார்.

    மும்பையில் வசித்தபோது குஷ்பு குடும்பத்தினர் காங்கிரசில் இருந்தனராம். தனது படுக்கையறையில் ராஜீவ் காந்தி படங்கள் வைத்திருந்ததாகவும் அவரின் தீவிர ரசிகை நான் என்றும் குஷ்பு கூறியிருந்தார்.

    இதையடுத்து அவர் காங்கிரஸ் கட்சியில் சேருவார் என்ற எதிர்பார்ப்பு மேலும் அதிகமாகியுள்ளது.

    சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் குஷ்புவின் வருகை காங்கிரசுக்கு பலம் சேர்ப்பதாக அமையும் என்று அக்கட்சி தலைவர்கள் கருதுகிறார்கள். தேர்தல் பிரசாரத்துக்கும் அவர் உதவுவார் என்று நம்புகின்றனர்.

    குஷ்பு காங்கிரசில் இணைவது பற்றி தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவரான இளங்கோவனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

    குஷ்பு காங்கிரசில் சேர்ந்தால் அவரை வரவேற்கும் முதல் ஆளாக நான் இருப்பேன். முற்போக்கு சிந்தனையாளர்களுக்கும் சுதந்திரமாக பேசுபவர்களுக்கும் காங்கிரஸ் சிறந்த இடம்.

    குஷ்பு போல் புத்திசாலித்தனமான பெண்கள் சமூக பிரச்சனைகள் சம்பந்தமான தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கு காங்கிரஸ்தான் சிறந்த இடம்.

    பொதுவாக நடிகைகள் கவர்ச்சியாக இருப்பார்கள். ஆனால் குஷ்பு கவர்ச்சியும், புத்திகூர்மையும் உள்ளவர் என்றார்.

    தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் சுதர்சனம் கூறுகையில், நடிகை குஷ்பு புத்திசாலித்தனமான பெண். காங்கிரசில் அவர் சேருவதை முழு மனதோடு வரவேற்கிறேன். குஷ்பு பிரபலமானவர். அவர் காங்கிரசில் இணைவது கட்சி வளர்ச்சிக்கு உதவும். சட்டமன்ற தேர்தலுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

    http://thatstamil.oneindia.in/news/2010/05/03/evks-elangovan-welcomes-kushboo.html

    ReplyDelete
  19. @முகிலன் said...

    டிஸ்கி: நான் காங்கிரஸ்காரனில்லை.. ;-)
    //


    அண்ணே.. நானும் கட்சிக்காரனேயில்ல..

    வேட்பாளர் நல்லவனாயிருந்தா, எதுல நின்னாலும் வோட்டுப்போடுவேன்..ஹா.ஹா

    ReplyDelete
  20. கழிவு வாய்கால் ஒருநாள் கூவத்தில சேந்துதான் ஆவனும் . நடக்கட்டும் ரம்பை ஊர்வசி மேனகையின் நாட்டியம்.

    ReplyDelete
  21. ஜெய்லானி said...

    கழிவு வாய்கால் ஒருநாள் கூவத்தில சேந்துதான் ஆவனும் . நடக்கட்டும் ரம்பை ஊர்வசி மேனகையின் நாட்டியம்.
    //

    எப்படிண்ணே?...ஆனாலும் அதுதான் உண்மை.. உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு..

    ReplyDelete
  22. //சேலை கட்டக்கூடாதுனு அறிக்கை வந்தாலும் வரும் பாரு.. என்னமோ பண்ணுங்க..ஆனா எங்கூர்ல சீக்கிரம் ஒரு ’போர்ட்’ வெக்கப்போறோம்.///

    இதெல்லாம் தெரிஞ்சோ என்னமோ எங்க ஊர்லயேயும் "போர்ட்" இருக்கு...

    ReplyDelete
  23. @அஹமது இர்ஷாத் said...


    இதெல்லாம் தெரிஞ்சோ என்னமோ எங்க ஊர்லயேயும் "போர்ட்" இருக்கு..
    //

    பரவாயில்ல சார்.. உங்க ஊர் முந்திகிடுச்சு.. நல்ல விசயம்தான்..

    ReplyDelete
  24. nalla sinthanai
    visit my blog
    www.vaalpaiyyan.blogspot.com

    ReplyDelete
  25. வாடிய கைக்கு நீர் பாய்ச்சுவதற்கு வடக்கே நக்மாவும் தெற்கே குஷ்புவும் உள்ளனர். இனிமேல் காங்கரஸ் கட்சி தனியே தமிழகத்தில் காமராஐர்? ஆட்சியை அமைப்பார்கள்

    ReplyDelete
  26. தமிழ்நாட்டுல ரெட்டையோட பொன்னான ஆட்சி நடத்திட்டு இருக்கும் போது...யாருய்யா அது காமரஜர் ஆட்சி பத்தி பேசுறவன்?

    ReplyDelete
  27. பட்டாபட்டி. ஐ. லைக் யூ. ஆனா பிற்போக்குவாதம் பழமைவாதம் குண்டுசட்டிகுதிரைவாதம் எல்லாம் பேசினா ஐ டோண்ட் லைக் யூ.

    குஷ்பு பேசினதில் தவறு இருக்கிறதா இல்லையா என்பதை அப்புறம் பார்க்கலாம். அவள் என்ன பேசனும் என்ன பேசக்கூடாதுன்னு சொல்ல நீர் யார் ? நெருப்புன்னு சொன்னா (அடுத்தவன்) வாய் வெந்துடுமா என்ன ?

    ப்ரி மேரிட்டல் செக்ஸ் இன்னைக்கு நகரத்தை விட கிராமத்தில் அதிகமா இருக்கு. உனக்கு வைக்கை போருக்கு ஒதுக்க அட்டு பிகர் சிக்கலைன்னா நீ அதுக்காக இப்படி ஜூ உடக்கூடாது ?

    அதே சமயம் ப்ரீ மேரிட்டல் செக்ஸ் எக்ஸ்ரா மேரிட்டல் செக்ஸ் எல்லாம் வெச்சுக்கறது சம்பந்தப்பட்டவங்களோட தனிப்பட்ட விஷயம். அதை கேக்க பட்டாபட்டியோட நாடா ஏன் நீளுது ?

    எனக்கென்னமோ நீங்க குஸ்பு கருத்தை விட அவங்க காங்கிரஸ்ல சேர்ரதை எதிர்க்கறீங்களோன்னு தோனுது. அதே சமயம் அவ எங்கிட்டு சேர்ந்த உனக்கின்னாவே ?

    ReplyDelete
  28. செந்தழல் ரவி said...

    அதே சமயம் ப்ரீ மேரிட்டல் செக்ஸ் எக்ஸ்ரா மேரிட்டல் செக்ஸ் எல்லாம் வெச்சுக்கறது சம்பந்தப்பட்டவங்களோட தனிப்பட்ட விஷயம். அதை கேக்க பட்டாபட்டியோட நாடா ஏன் நீளுது ?

    ***********************************
    குஷ்பு தன்னோட குடும்பத்துல எல்லோரும் கல்யாணத்துக்கு முன்னாடி செக்ஸ் வச்சிப்போம்னு சொன்னா யாரு எதிர்க்கப் போறாங்க...? பேச்சு சுதந்திரம்னு சொல்லிக்கிட்டு சான்ஸ் கிடைச்சா வாந்தி எடுப்பேன்னு சொன்னா ... அடி விழத்தான் செய்யும்.

    ReplyDelete
  29. வாழ்க ஜனநாயகம்..
    வாழ்க குடும்பங்களின் போஸ்ட்டர்கள்..

    ReplyDelete
  30. அதே சமயம் ப்ரீ மேரிட்டல் செக்ஸ் எக்ஸ்ரா மேரிட்டல் செக்ஸ் எல்லாம் வெச்சுக்கறது சம்பந்தப்பட்டவங்களோட தனிப்பட்ட விஷயம். அதை கேக்க பட்டாபட்டியோட நாடா ஏன் நீளுது ?

    எனக்கென்னமோ நீங்க குஸ்பு கருத்தை விட அவங்க காங்கிரஸ்ல சேர்ரதை எதிர்க்கறீங்களோன்னு தோனுது. அதே சமயம் அவ எங்கிட்டு சேர்ந்த உனக்கின்னாவே ?
    //

    அய்யா சாமி ..ரவி அண்ணே.. என்னவோ பண்ணட்டும்.. நமக்கென்ன.. ஆனா.. பப்ளிக்கா..அக்கா பேச உரிமையிருக்கும் போது.. பப்ளிக்கா எனக்கு எழுத உரிமையில்லையா..?

    அப்புறம் எனக்கில்லாத உரிமை யாருக்குண்ணே இருக்கு.. ஓட்டு போட போவது நாம...

    ReplyDelete
  31. ரெட்டைவால்ஸ். உங்களுக்கு தெரிஞ்சி இப்படி எதுவும் நடக்காம இருக்கலாம். தமிழ்நாட்ல நடக்கறதை தான் சொல்லுச்சு அந்தம்மா.

    சரி அதுவே ஆந்திராவில் திருமணத்துக்கு முன் பெண்கள் பாலுறவை வைக்கிறார்கள் என்று சொன்னா நீங்க ஏத்துக்குவீங்களா ?

    ReplyDelete
  32. //henry J said...
    superb emotions.....


    Free Download File Recovery | Data Recovery | Image Recovery Software
    Free Slide Show & Gallery Makers
    Learn Typing
    CINEMA TICKETS BOOKING Online
    Free youtube Video Download
    Free Web Design
    Free Indian Language Typing Tool
    Type anywhere in your language | Google Transliterate | Microsoft Indic Language
    Free Download Google Talk | Windows Live Messenger | Skype Messenger | Yahoo Messenger
    Learn Basic Maths, Algebra, Trigonometry, calculus
    Online Free Ebooks
    Free Antivirus Download
    Search Rooms, Apartments
    Free Health Tips//

    ரிப்பீட்டு..!!

    :))

    ReplyDelete
  33. குஷ்பு அக்கா என்னவேணா சொல்லட்டும் .. ஆனா.. அதை அவங்க குடும்ப குத்து விளக்குகிட்ட மட்டுமே விளக்கட்டும்.. யாரு வேணானா?..

    ஆனா.. பப்ளிக்கா.. எங்களுக்கு சொல்ல.. நாங்க என்ன வாயில கை வெச்ச பாப்பாவா?..

    அக்கா எதுவேணா சொல்லும்.. நாங்க ஏது பேசக்கூடாது..

    ReplyDelete
  34. அய்யா சாமி ..ரவி அண்ணே.. என்னவோ பண்ணட்டும்.. நமக்கென்ன.. ஆனா.. பப்ளிக்கா..அக்கா பேச உரிமையிருக்கும் போது.. பப்ளிக்கா எனக்கு எழுத உரிமையில்லையா..?
    ////

    இல்லை பட்டா. இங்கிட்டு நீ பாரேன். நீ எழுதாதேன்னா நான் சொன்னேன் ? அதுவும் அவளைப்பற்றி ? யாரைப்பற்றி வேணா இன்னா வேணா எழுதலாம்வே.

    அவ பப்ளிக் பிகர். அதாவது பொதுமகள் என்ற கருத்தில் சொல்லவரேன். ஆகவே விமர்சனம் செய்யும் தகுதி எல்லாருக்கும் உண்டு. குறிப்பா வலைப்பதிவருக்கு.

    அதே சமயம், நீ வெக்கிற கருத்துக்கு நான் என்னுடைய எதிர்ப்பு கருத்தை பதிவு செய்யறேன் அவ்வளவே...

    ReplyDelete
  35. 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

    //henry J said...
    superb emotions.....
    //
    அண்ணே..டமாசு பண்ணாதீங்கண்ணே..

    ReplyDelete
  36. //பன்னிக்கு ரோசம் அதிகம்..படிக்கலேனாலும், வீறாப்பா உள்ள வராது.. //

    பட்டாபட்டியும் அதிகம் படிக்கலைன்னு உளவுத்துறை சொல்லுதுப்பா?(தம்பி போன் இன்னும் வரல)

    ReplyDelete
  37. @சிவா (கல்பாவி) said...
    வாடிய கைக்கு நீர் பாய்ச்சுவதற்கு வடக்கே நக்மாவும் தெற்கே குஷ்புவும் உள்ளனர். இனிமேல் காங்கரஸ் கட்சி தனியே தமிழகத்தில் காமராஐர்? ஆட்சியை அமைப்பார்கள்

    @ரெட்டைவால் ' ஸ் said...

    தமிழ்நாட்டுல ரெட்டையோட பொன்னான ஆட்சி நடத்திட்டு இருக்கும் போது...யாருய்யா அது காமரஜர் ஆட்சி பத்தி பேசுறவன்?

    //

    காமராஜரா? யார் அது குஷ்பு அக்கா இருக்கும்போது?

    ReplyDelete
  38. @ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    பட்டாபட்டியும் அதிகம் படிக்கலைன்னு உளவுத்துறை சொல்லுதுப்பா?(தம்பி போன் இன்னும் வரல)
    //

    நேரா வந்து சர்பிரைஸ் கொடுக்கலாமுனு இருக்கேன் நல்லவரே...

    ReplyDelete
  39. //வாடிய கைக்கு நீர் பாய்ச்சுவதற்கு வடக்கே நக்மாவும் தெற்கே குஷ்புவும் உள்ளனர்//

    எனக்கு இந்த பின்னூட்டம் வேற மாதிரி அர்த்தம் தருது. வேற யாருக்காவது அப்படி தோணுதா ? எனக்கென்னமோ நமீதா போதும்னு தோணுது.

    ReplyDelete
  40. செந்தழல் ரவி said...

    ரெட்டைவால்ஸ். உங்களுக்கு தெரிஞ்சி இப்படி எதுவும் நடக்காம இருக்கலாம். தமிழ்நாட்ல நடக்கறதை தான் சொல்லுச்சு அந்தம்மா.
    ***********************************
    தமிழ்நாட்டுல நடக்கலைன்னு யார் சொன்னா.. அதை ஏன் நியாயப் படுத்துறீங்கன்னு தான் கேக்குறோம்! தமிழ்நாட்டுல
    கொலை கொள்ளை கூடதான் நடக்குது... "தமிழ்நாட்டுல கொலை கொள்ளை பண்ணாதவன் எவன் இருக்கான்னு சொன்னா உங்களுக்குக் கோபம் வருமா வராதா ? ப்ரீ மாரிட்டல் செக்ஸ் என்பது ஏதோ சாதனை செய்து அவார்டு வாங்குறது இல்லைங்க..மகா கேவலம்!அவங்க அவங்க வீட்ல நடந்தா மட்டும் இதையெல்லாம் ஒத்துக்காதவங்க பொதுவுல மட்டும் இதுக்கு எப்படி வக்காலத்து வாங்கறானுங்கன்னு தெரியலை?

    ReplyDelete
  41. //வாடிய கைக்கு நீர் பாய்ச்சுவதற்கு வடக்கே நக்மாவும் தெற்கே குஷ்புவும் உள்ளனர்//

    எனக்கு இந்த பின்னூட்டம் வேற மாதிரி அர்த்தம் தருது. வேற யாருக்காவது அப்படி தோணுதா ? எனக்கென்னமோ நமீதா போதும்னு தோணுது.

    ReplyDelete
  42. செந்தழல் ரவி said...

    //வாடிய கைக்கு நீர் பாய்ச்சுவதற்கு வடக்கே நக்மாவும் தெற்கே குஷ்புவும் உள்ளனர்//

    எனக்கு இந்த பின்னூட்டம் வேற மாதிரி அர்த்தம் தருது. வேற யாருக்காவது அப்படி தோணுதா ? எனக்கென்னமோ நமீதா போதும்னு தோணுது.

    //

    அதே... அப்புறம் குஷ்பு இல்லாம எப்படி சார்?.. அம்மா.. வாய தொறந்து முத்து..முத்தா பேசுது.. அதுக்கு மரியாதை தரமா?..ஹி..ஹி

    ReplyDelete
  43. தமிழ்நாட்டுல நடக்கலைன்னு யார் சொன்னா.. அதை ஏன் நியாயப் படுத்துறீங்கன்னு தான் கேக்குறோம்! தமிழ்நாட்டுல
    கொலை கொள்ளை கூடதான் நடக்குது... "தமிழ்நாட்டுல கொலை கொள்ளை பண்ணாதவன் எவன் இருக்கான்னு சொன்னா உங்களுக்குக் கோபம் வருமா வராதா ? ப்ரீ மாரிட்டல் செக்ஸ் என்பது ஏதோ சாதனை செய்து அவார்டு வாங்குறது இல்லைங்க..மகா கேவலம்!அவங்க அவங்க வீட்ல நடந்தா மட்டும் இதையெல்லாம் ஒத்துக்காதவங்க பொதுவுல மட்டும் இதுக்கு எப்படி வக்காலத்து வாங்கறானுங்கன்னு தெரியலை&&&&&


    இங்க எதுவும் தப்பு நடக்காதபோது அதை நியாயப்படுத்தவேண்டிய அவசியம் என்ன தோழரே ?

    ப்ரீ மேரிட்டல் செக்ஸ் இரண்டு அடல்ட்ஸ் அதாவது வயது வந்தவர்கள், 18 வயசுன்னு வைங்க, வைத்தால் அது கேவலம் என்று யார் சொன்னது ? எந்த புத்தகத்துல எழுதியிருக்கு ? எந்த புராணத்துல சொல்லுது ? எந்த இ பி கோ சட்டம் சொல்லுது ?

    கேவலம் என்று நீதித்துறையே நினைக்காத ஒன்றை நீங்க எப்படி சொல்றீங்க ? திருமணம் செய்து உடல் ரீதியான உறவு வைப்பதும் திருமணத்துக்கு முன் உடல் ரீதியான உறவு வைப்பதும் என்ன வித்யாசம் ?

    லிவிங் டு கெதர் தப்பு என்று சொல்கிறீர்களா ?

    திருமணம் என்ற சடங்கே 300 வருசத்துக்கு முன்னல கொண்டுவரப்பட்டதுதான் அய்யா.

    தமிழனின் பழைய திருமண முறையே களவியல் கற்பியல் லிவ்விங் டுகெதரியல்தான் அய்யா. அம்பலும் அலரும் ? கேள்விப்பட்டதில்லை ? தலைவன் ? பசலைநோய் ? படிச்சதில்லை ?

    இரண்டு அடல்ட்ஸ் பாதுகாப்பான உறவு கொள்வதை சட்டம் அங்கீகரிக்கிறது. இனி சமூகமும் அங்கீகரித்தாகவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது. உங்கள் பார்வையை மாற்றவேண்டிய கட்டாயத்தில் நீங்களும்...

    நீங்கள் நினைப்பதை பகிரவும்.

    ReplyDelete
  44. //உனக்கு வைக்கை போருக்கு ஒதுக்க அட்டு பிகர் சிக்கலைன்னா நீ அதுக்காக இப்படி ஜூ உடக்கூடாது ? //

    பட்டு அண்னே!! மங்குக்கு பதிலா ஒரு ஆடு வருது பாத்து. பதமா புடிங்க .

    குஷ்பு முதல்ல அவங்க குடும்பத்துல செய்யட்டும் .அடுத்த் வீட்டில என்னன்னு பாக்கவேனாம்

    ReplyDelete
  45. &&பட்டு அண்னே!! மங்குக்கு பதிலா ஒரு ஆடு வருது பாத்து. பதமா புடிங்க .^^^

    செயிலானி ? சிறுத்தை சீறுச்சின்னா சிறு நரி நாஸ்தியாரும்னு பட்டி சாருக்கு தெரியாது ?

    &&குஷ்பு முதல்ல அவங்க குடும்பத்துல செய்யட்டும் .அடுத்த் வீட்டில என்னன்னு பாக்கவேனாம்^^^

    என்ன குடும்ப கட்டுப்பாடா ? ஏன் பார்க்கவேணாம் ?

    ReplyDelete
  46. @ரெட்டை
    தமிழ்நாட்டுல நடக்கலைன்னு யார் சொன்னா.. அதை ஏன் நியாயப் படுத்துறீங்கன்னு தான் கேக்குறோம்! தமிழ்நாட்டுல
    கொலை கொள்ளை கூடதான் நடக்குது... "தமிழ்நாட்டுல கொலை கொள்ளை பண்ணாதவன் எவன் இருக்கான்னு சொன்னா உங்களுக்குக் கோபம் வருமா வராதா ? ப்ரீ மாரிட்டல் செக்ஸ் என்பது ஏதோ சாதனை செய்து அவார்டு வாங்குறது இல்லைங்க..மகா கேவலம்!அவங்க அவங்க வீட்ல நடந்தா மட்டும் இதையெல்லாம் ஒத்துக்காதவங்க பொதுவுல மட்டும் இதுக்கு எப்படி வக்காலத்து வாங்கறானுங்கன்னு தெரியலை?
    //

    எந்த ஒரு பிரச்சனையையும், வேரோடு பிடுங்கி எறியாம, அதோட வாழப் பழகிவிட்டோம் ரெட்டை.. இப்ப இதுதான் பிரச்சனை...

    நாலு படத்தில நடிச்சா, மக்களுக்கு என்ன வேணா சொல்லலாமுனு நினைக்கிறாங்க..

    அதுவுமில்லாம, அதுகளுக்கு கோயில் கட்டி கும்பிடற அளவுக்கு மக்கள் இருக்காங்கனா.. அதுக்கு காரணம் அரசியலும்தான்.. சரியான படிப்பறிவு கொடுத்து, மனிதனா கொண்டு வர தவறிவிட்டனர்..

    மனிதன் யோசனை பண்ணினா.. ஓட்டு கிடைக்காதே...

    ReplyDelete
  47. //
    எனக்கு இந்த பின்னூட்டம் வேற மாதிரி அர்த்தம் தருது. வேற யாருக்காவது அப்படி தோணுதா ? எனக்கென்னமோ நமீதா போதும்னு தோணுது.//

    அப்ப சோனா ?

    ReplyDelete
  48. ஜெய்லானி said...

    //
    எனக்கு இந்த பின்னூட்டம் வேற மாதிரி அர்த்தம் தருது. வேற யாருக்காவது அப்படி தோணுதா ? எனக்கென்னமோ நமீதா போதும்னு தோணுது.//

    அப்ப சோனா ?

    //

    அதுதான் சாமியாரினியா போறேனு அறிக்கை விட்டுச்சே...

    ReplyDelete
  49. @செந்தழல் ரவி
    //
    சார்.. நாம ஒரு பாயிண்டை பற்றியே பேசிக்கிட்டு இருக்கோம்..

    ராஜீவ் படத்தை, படுக்கையரையில வெச்சிருந்ததை பற்றி பெருமையா சொல்லியிருக்காங்க..அதை பற்றி உங்கள் கருத்து?...

    ReplyDelete
  50. Blogger Veliyoorkaran said...

    May I come in...? :)
    //

    வாய்யா.. நீ இல்லாமலா?...

    ReplyDelete
  51. எஸ் வெளியூரு. ப்ளீஸ் கெட் இன்.

    அவ படுக்கை அறையில வெச்சிருந்தா என்ன பாத்ரூம்ல வெச்சிருந்தா என்ன ? நடிகை. பெரிய நடிகை. காங்கிரஸ் காரன் ஆட்டையில சேர்த்து நாளைக்கு மேலவை உறுப்பினர்னு ஜம்முனு சைரன் அடிக்கிற கார்ல போவா. உனக்கெங்க வேவுது ஓய் ?

    அவளுக்கு கோயில் கட்டுற அளவுக்கு முட்டாள்கள் இருக்குற தமிழ்நாடு இதுகூட அவளுக்கு செய்யலைன்னா எப்படி ?

    நாங்க ஒரு பாயிண்டை பேசுனாலும், நீங்க அந்த பாயிண்ட்ல இருந்து நழுவ உடமாட்டோம்ல.

    பாதுகாப்பான உடல் உறவு சரி தான், என்று சுப்ரீம் கோர்ட் சொல்லுது. அதை தானே அவள் சொன்னா ? 22 கேசும் தள்ளுபடியாயிருச்சே இன்னைக்கு ? அதைபற்றி பட்டாப்பட்டியின் கருத்து என்ன ?

    ReplyDelete
  52. தமிழ்மணம் ஓட்டு போடுங்கய்யா. இதுவரை நாலு ஓட்டுதானா ?

    ReplyDelete
  53. ப்ரீ மேரிடல் செக்ஸ் சரியென்றால் எக்ஸ்ட்ரா மேரிட்டல் செக்ஸும் சரிதாங்க...யார் வேணும்னாலும் யார் கூடவும் படுத்துக்கலாம். கல்யாணம், குடும்பம் இதெல்லாம் சும்மா ஜுஜுபிக்கு தானே...

    சட்டம் அங்கீகரிக்கும் எதுவும் சரி என்றாகி விடாது. சட்டத்தால் இது வரை எந்த அரசியல்வாதிக்கு தண்டனை வாங்கித் தர முடிந்திருக்கிறது? நான் விவாதத்தை வேறு பக்கம் எடுத்து செல்ல விரும்பவில்லை. தலைவன் தலைவி பசலை காமெடியெல்லாம் ஜாக்கெட் போடாத சங்க கால்த்துல வேணும்னா சரியா இருக்கலாம்.அதே நேரம் சங்க காலத்துல நாம் என்னமோ பொற்காலத்துல இருந்தா மாதிரி அதை உதாரனமா எடுத்துக்க வேண்டிய அவசியம் இல்லை. திருமணம் என்கிற சடங்கு 300 வருஷத்துக்கு முன்னாடி வந்தாலும் சரி..3000 வருஷத்துக்கு முன்னாடி வந்தாலும் சரி, நமக்குத் தேவையான ஒன்று. அதை மீறி நடக்கும் எல்லாமே நமக்கு வேதனையைத் தான் தரும் ...In long term!

    ReplyDelete
  54. பட்டாபட்டிக்கும் ரெட்டைவால்சுக்கும் குஷ்பு சொன்ன விசயத்துல பிரச்சனயா இல்ல,இல்ல அந்த விசயத்த குஷ்புன்கர நடிகை சொன்னதால பிரச்சனையா...??

    கொஞ்சம் சொல்லுங்களேன் ப்ளீஸ்...!

    ReplyDelete
  55. சட்டம் அங்கீகரிக்கும் எதுவும் சரி என்றாகி விடாது. சட்டத்தால் இது வரை எந்த அரசியல்வாதிக்கு தண்டனை வாங்கித் தர முடிந்திருக்கிறது? நான் விவாதத்தை வேறு பக்கம் எடுத்து செல்ல விரும்பவில்லை. தலைவன் தலைவி பசலை காமெடியெல்லாம் ஜாக்கெட் போடாத சங்க கால்த்துல வேணும்னா சரியா இருக்கலாம்.அதே நேரம் சங்க காலத்துல நாம் என்னமோ பொற்காலத்துல இருந்தா மாதிரி அதை உதாரனமா எடுத்துக்க வேண்டிய அவசியம் இல்லை. திருமணம் என்கிற சடங்கு 300 வருஷத்துக்கு முன்னாடி வந்தாலும் சரி..3000 வருஷத்துக்கு முன்னாடி வந்தாலும் சரி, நமக்குத் தேவையான ஒன்று. அதை மீறி நடக்கும் எல்லாமே நமக்கு வேதனையைத் தான் தரும் ...In long term


    - சங்க காலம் பொற்காலம் இல்லை என்று யார் சொன்னது எப்படி நிரூபிப்பீர்கள் ?

    - திருமணம் தேவையான ஒன்று என்று ஒரு வாதத்துக்கு வைத்துக்கொண்டாலும் ஏன் விவாகரத்துக்கள் நடைபெறுகிறது ? விளக்கமுடியுமா ?

    - திருமணம் ஆன அனைவரும் சந்தோஷமாக வாழ்கிறார்களா ? என்ன ப்ரூப் ?

    ReplyDelete
  56. அந்த விசயத்த குஷ்புன்கர நடிகை சொன்னதால பிரச்சனையா...??

    கொஞ்சம் சொல்லுங்களேன் ப்ளீஸ்...&&&

    அதானே ? நமீதான்னா ஓக்கேவா ?

    ReplyDelete
  57. குஷ்பு சொன்னது சரியா தப்பாங்கறது பத்தி இங்க விவாதம்னா நான் கெளம்பறேன்...!
    எனக்கு தனிப்பட்ட முறைல அந்த கருத்துல உடன்பாடு இல்ல...! ஆனா சரியோ தப்போ அத சொல்றதுக்கு குஷ்புக்கு எல்லா தார்மீக உரிமையும் இருக்கு...! அதே சமயம் ப்ரீ மெரிடல் செக்ஸ் தப்பில்லங்கரத தமிழகத்தோட குரலா ஒரு பிரபலம் சொல்லும்போது அதை தட்டி கேக்கற உரிமையும் நம்மகிட்ட இருக்கு...நம்ப கலாச்சாரத்தோட இமேஜும் நமக்கு ரொம்ப முக்கியம் வாத்யாரே...!

    கல்யாணத்துக்கு முன்னாடி உள்ள செக்ஸ் தப்பில்லங்கரத குஷ்பு சொல்றத மனசார எதுக்கற அதே பக்குவம்,அந்த கருத்த என் தங்கச்சி சொல்லும்போது ஏத்துக்கற பக்குவம் எனக்கு எப்போ வருதோ அப்போ ஒத்துக்கறேன்...அந்த கருத்து தப்பு இல்லைன்னு...!
    மன்னிக்கணும் செந்தழல் ரவி...இது விவாதம் மட்டுமே...நான் உங்களோட தொடர் வாசகன்..பட்டாபட்டில திடீர்னு சண்டை உருவாயடும்..அதையும் ஜாலியா எடுத்துக்கங்க...ப்ளீஸ்....!

    ReplyDelete
  58. @செந்தழல் ரவி said...
    அந்த விசயத்த குஷ்புன்கர நடிகை சொன்னதால பிரச்சனையா...??
    கொஞ்சம் சொல்லுங்களேன் ப்ளீஸ்...&&&
    அதானே ? நமீதான்னா ஓக்கேவா ?


    ஆரம்ப சுகாதார நிலையம் எவ்வளவு இருக்கு..அதப் பற்றி தெரிஞ்சுக்க வேண்டியவங்க..அங்க போயி தெரிஞ்சுக்கலாமே..

    ஏன்.. அதை பப்ளிக்கா பேசி..தெரியாம இருக்கறவங்க மனசை சீரழிக்கிறாங்க?..

    நான் சப்ஜெக் விட்டு வெளிய போகலை.. நித்தி பிரச்சனை எடுத்துகிட்டீங்கனா.. அந்த வீடியோவ, டீவீல , 10 நிமிசத்துக்கு ஒரு தரம் காட்டி.. குழந்தைகள் மனத்தில நஞ்சை கலந்தாங்களே.. ஏன்..

    இதெல்லாம் பப்ளிக்க செய்யலாமுனு.. வீதியிலேயே உடலுறவு கொள்ளலாமே?...

    ReplyDelete
  59. வெளியூர்க்காரரே. இங்கே இருப்பதை ஒரே வார்த்தையில் சொன்னால் அதன் பெயர் மனத்தடை.

    உங்களால ஒத்துக்கமுடியாத ஒன்றை உண்மை இல்லை என்றால் எப்படி ஒரு மூன்றாம் நபரால ஏத்துக்கமுடியும் ?

    விவாதம் என்பதால் இப்படி வைப்போம். x என்ற நபர் திருமணத்துக்கு முன் செக்ஸ் வைப்பதை y என்பவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அல்லது அவருக்கு தெரியவில்லை. என்றால் அது உண்மை இல்லை, அது சட்டரீதியாக ஏற்புடையதில்லை என்பது அர்த்தம் அல்ல.

    எப்படி கடவுள் சாமி என்பது சின்ன வயதில் போதிக்கப்பட்டு மண்டையில் ஏற்றப்படுகிறதோ அதே போல குடும்ப உறவு அம்மா அப்பா மரியாதை மண்ணாங்கட்டி கல்ச்சர் பண்பாடு கலாச்சாரம் புண்ணாக்கு என்பதும்.

    மானாட மயிலாட போன்ற ஒரு ப்ரோக்ராமில் ஆடுவது ஆபாச நடனம் என்று நீங்கள் சொல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் அதே ஆபாச நடனம் ஆடுவதை குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்கிறீர்கள். டீவியை போட்டு உடைத்துவிடுவீர்களா ? ம்ஹூம். ஏன் என்றால் நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஆபாசத்துக்கும் பழகிவிட்டீர்கள். அது ஆபாசம் என்பது உங்கள் கண்களுக்கு எப்படி சாதாரணமாக தெரிகிறது.

    இந்த மனத்தடை இன்னும் கொஞ்ச வருடத்தில். கொஞ்ச மாசத்தில் போய்விடும்.

    எப்படி ஒயின் நம் தமிழ்நாட்டு கண்ணுக்கு சரக்காகவும், ஐரோப்பிய கண்ணுக்கு வெறும் உணவுப்பழக்கத்தோடு இணைந்த ஒரு ட்ரிங்க் ஆகவும் பார்க்கப்படுகிறது ?

    ஐம்பது வருசத்துக்கு முன் நாதா என்று அழைத்து பத்து அடி தூரத்தில் இருந்து லவ் பண்ண தியாகராச பாகவதர் டைப் நடிகரில் இருந்து மேலே விழுந்து புரண்டு பாட்டிலேயே ரேப் செய்யும் இந்த காலத்து நடிகர்களை ஏற்றுக்கொண்டீர்கள் ? நமது பண்பாடெங்கே கலாச்சாரமெங்கே என்று ஏன் கொடிபிடிக்கவில்லை ?

    ReplyDelete
  60. திருமணம் தேவையான ஒன்று என்று ஒரு வாதத்துக்கு வைத்துக்கொண்டாலும் ஏன் விவாகரத்துக்கள் நடைபெறுகிறது ? விளக்கமுடியுமா ?
    //

    விவாகரத்துக்கள் எப்ப அதிகமாயிருக்கு..? மனிதன் மனசு சுருங்கியதுதான்.. என்னா.. விட்டு கொடுக்கிற பழக்கம் நம்ம கிட்ட மறைஞ்சிட்டே வருவது ஒரு காரணம்..
    போட்டி பொறாமை மிக்க உலகம்.. மேலும், நாம , சுயநலத்தோட வாழ பழகிக்கொண்டு இருக்கிறேம்..

    ReplyDelete
  61. ஆரம்ப சுகாதார நிலையம் எவ்வளவு இருக்கு..அதப் பற்றி தெரிஞ்சுக்க வேண்டியவங்க..அங்க போயி தெரிஞ்சுக்கலாமே..

    ஏன்.. அதை பப்ளிக்கா பேசி..தெரியாம இருக்கறவங்க மனசை சீரழிக்கிறாங்க?..

    நான் சப்ஜெக் விட்டு வெளிய போகலை.. நித்தி பிரச்சனை எடுத்துகிட்டீங்கனா.. அந்த வீடியோவ, டீவீல , 10 நிமிசத்துக்கு ஒரு தரம் காட்டி.. குழந்தைகள் மனத்தில நஞ்சை கலந்தாங்களே.. ஏன்..

    இதெல்லாம் பப்ளிக்க செய்யலாமுனு.. வீதியிலேயே உடலுறவு கொள்ளலாமே?...

    May 4, 2010 5:39 PM

    ////

    பட்டா...

    பள்ளிகளில் செக்ஸை போதிப்பதை பற்றி நீங்கள் கருதுவது என்ன ?

    இந்து கோயில்களில் உள்ள சாமி சிலைகளை ஆபாசம் என்பீர்களா ?

    ஒவ்வொருவரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில்தான் இதுபோன்ற விஷயங்களை தெரிந்துகொள்ளவேண்டுமா ?

    நிரோத் எப்படி உபயோகிப்பது என்று டிவியில் காட்டினால் அது எயிட்சை தடுக்குமா அல்லது குழந்தைகளை பாதிக்குமா ?

    நித்தி மேட்டர் ஒரு ஊடக விபச்சாரம். அது இங்கே விவாதப்பொருள் அல்ல.

    செக்ஸை பொதுவெளியில் விவாதிக்கலாமா கூடாதா ? உங்கள் கருத்து என்ன ? நேரடியாக பதில் சொல்லவும்..

    ReplyDelete
  62. //விவாகரத்துக்கள் எப்ப அதிகமாயிருக்கு..? மனிதன் மனசு சுருங்கியதுதான்.. என்னா.. விட்டு கொடுக்கிற பழக்கம் நம்ம கிட்ட மறைஞ்சிட்டே வருவது ஒரு காரணம்..
    போட்டி பொறாமை மிக்க உலகம்.. மேலும், நாம , சுயநலத்தோட வாழ பழகிக்கொண்டு இருக்கிறேம்.//

    ஆக தனிப்பட்டவர்களின் மனசு தான் திருமணம் உடைந்துபோக காரணம் என்று சொல்கிறீர்கள்.

    எனக்கு தெரிந்த லிவிங் டுகெதர் கப்புள் 5 வருடமாக ஒவ்வொரு வினாடியையும் இனிமையாக செலவிடுகிறார்கள்.

    எனக்கு தெரிந்து ஒரு அற்புதமான மனிதரின் மண வாழ்க்கை இரண்டு மாதத்தில் பெண்ணின் வேறொரு அபையர் காரணமாக உடைந்துவிட்டது.

    ஆக மனங்கள் தான் இருவர் வெற்றிகரமாக இணைந்து வாழ காரணம் எனில் அதை திருமணம் செய்துவிட்டுத்தான் செய்யவேண்டும் என்று பழமைவாதிகள் கட்டாயப்படுத்துவது ஏன் ?

    ReplyDelete
  63. செக்ஸை பொதுவெளியில் விவாதிக்கலாமா கூடாதா ? உங்கள் கருத்து என்ன ? நேரடியாக பதில் சொல்லவும்..//

    செக்ஸ்சை பொதுவா விவாதிப்பதில் எனக்கு உடன்பாடில்லை ரவி..

    ReplyDelete
  64. //
    ஆக மனங்கள் தான் இருவர் வெற்றிகரமாக இணைந்து வாழ காரணம் எனில் அதை திருமணம் செய்துவிட்டுத்தான் செய்யவேண்டும் என்று பழமைவாதிகள் கட்டாயப்படுத்துவது ஏன் ?
    //


    நம் கூடப்பிறந்தவர்கள் , திருமணம் செய்யாமல் இணைந்திருந்தால்...அதை ஏற்றுக்கொள்ளூம் மனநிலையில் நாம் உள்ளோமா?...

    ReplyDelete
  65. ஆக பள்ளிகளில் செக்ஸ் சார்ந்த ஒரு பாடம் அல்லது கல்வி தேவை இல்லை என்று கருதுகிறீர்கள்.

    நீங்கள் இதை குறிப்பிட்டு ஆழ்ந்து சிந்திக்கவேண்டும் பட்டா.

    வெளிப்படையாக விவாதிக்காத ஒன்று, அல்லது பேசாத ஒன்றில் எப்போதும் நாம் பின் தங்கிவிடுவோம்.

    நாம் அனைவரும் சுயம்பு அல்ல. எல்லாமே தெரிந்திருப்பதற்கு. கல்வி என்பது செக்ஸ் மட்டும் அல்ல, எல்லா விஷயத்துக்கும் தேவை.

    செக்ஸ் மட்டும் அல்ல, ஆரோக்கியமான குழந்தை வளர்ப்பு, உடல் பயிற்சிகள், உணவு பழக்க வழக்க முறைகள் ஆகியவற்றில் நாம் நினைத்திருப்பது அல்லது நாம் செயல்முறையில் வைத்திருப்பது அனைத்தும் சரியான ஒன்று என்பது உறுதியாக சொல்லமுடியாத நிலையில், கல்வியின் மூலமே நாம் மாற்றத்தை கொண்டுவரமுடியும்.

    ஒரு சொட்டு விந்து நூறு சொட்டு ரத்தத்துக்கு சமம் என்று சித்தூர் முருகேசன் டைப் ஆட்கள் சொல்லிவிட்டால் அதை உண்மை என்று நம்பிவிடலாமா ?

    உண்மை எது என்று கற்று அறியவேண்டிய தேவை இருக்கிறதே ?

    உலகெங்கும் பள்ளிகளில் செக்ஸ் பாடமாக இருக்கிறதே ? அங்கெல்லாம் கலாச்சாரம் கெட்டு சீரழிந்துவிட்டதா ?

    செக்ஸ் குறித்த அறியாமையினால் இன்றைக்கு பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன பட்டாப்பட்டி.

    நீங்கள் இது குறித்து மேலும் படித்து அறிந்துகொண்டு, மன மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்வதில் எனக்கு மகிழ்வு ஏற்படும்.

    ReplyDelete
  66. கல்யாணத்துக்கு முன்னாடி புடிச்சவங்களோட உடலுறவு தப்பில்லன்னு சொல்றீங்களா...செந்தழில் ரவி..நான் தப்புன்னு சொல்றேன்...! ஜாலக்கு வார்த்தைகள் வேணாம்...ஸ்ட்ரைட்டா பாய்ண்டுக்கு வாங்க...!

    எத்தன பேரு கல்யாணத்துக்கு முன்னாடி செக்ஸ் வெச்சுகராங்கன்னு நீங்க கேக்கறது சர்வே...அது உண்மையா இல்லையாங்கறது வேற விவாதம்...! என் கலாச்சாரத்துல என்னோட மனைவி கல்யாணத்துக்கு முன்னாடி செக்ஸ் வெச்சிருந்தா அதை என்னால ஏத்துக்க முடியாது...! உங்களால ஏத்துக்க முடியுமா..... அவன் பண்றான்..அதனால நானும் பண்றேன்...அல்லது கொஞ்ச நாள்ல நானும் பண்ணுவேன் அப்டீங்கறது கொஞ்சம் பைத்திகாரதனமா எனக்கு தோணுது...!

    வெளிநாட்டுகாரன் மாடிலேர்ந்து விழுந்து சூசைட் பண்ணா நீங்களும் பண்ணிபீன்களா..அதை கலாசார வளர்ச்சி, முற்போக்கு சிந்தனைனு சொல்லுவீங்களா...! அப்போ உங்க கருத்து படி திருமணம் ஒருத்தனுக்கு ஒருத்தி இதெல்லாம் தப்பான கான்செப்ட் னு சொல்ல வரீங்களா...! எனக்கு புரியல கொஞ்சம் தெளிவா ஓபனா சொல்லுங்க...! நாம நேரடி விவாதத்திற்கு வருவோம்...!

    ReplyDelete
  67. செந்தழல் ரவி!

    சங்க காலம் நீங்கள் சொல்வது போல் பொற்காலமாக இருந்திருந்தால் இன்றைக்கு செய்யுள் பாடமாக இருக்கும் பதினெண்கீழ்கணக்கு நன்னூல் போன்றவை தோன்றியிருக்க வாய்ப்பே இல்லை. எங்கே கொலை கொள்ளை வன்புணர்ச்சி எல்லாம் அதிகமாக இருக்கிறதோ அங்கு தான் நீதி நூல்களின் தேவை இருந்திருக்க வாய்ப்புண்டு!

    குடும்ப அமைப்பின் பலம் வயோதிகத்தில் தெரியும். எங்கே வயதான ஒரு லிவிங் டுகெதெர் ஆசாமிகளை காட்டுங்கள் ..பார்ப்போம்..! திருமணங்கள் தோற்றுப் போக ஆரம்பித்தது கூட்டுக்குடும்பங்களின் வீழ்ச்சிக்குப் பிறகே என்பது எனது கருத்து! அதுவும் எல்லாத் திருமணங்களும் அல்ல.

    ReplyDelete
  68. ///நம் கூடப்பிறந்தவர்கள் , திருமணம் செய்யாமல் இணைந்திருந்தால்...அதை ஏற்றுக்கொள்ளூம் மனநிலையில் நாம் உள்ளோமா?///

    நான் உள்ளேன்.

    அதே நேரம் பெண் பார்த்து, தாலி கட்டும் நேரத்தில் மட்டுமே பெண்ணை முழுமையாக பார்க்கும் பழைமை திருமணத்தில் இன்னும் உங்களுக்கு உடன்பாடா ? அல்லது நிச்சயம் முடிந்தவுடன் பெண் நிச்சயிக்கப்பட்டவருடன் பேசி பழகலாமா ? சினிமா பீச் போன்ற வெளியிடங்களுக்கு செல்லலாமா ? உங்கள் கருத்து என்ன ?

    ReplyDelete
  69. @@@ பட்டாபட்டி.. said...
    செக்ஸை பொதுவெளியில் விவாதிக்கலாமா கூடாதா ? உங்கள் கருத்து என்ன ? நேரடியாக பதில் சொல்லவும்..//
    செக்ஸ்சை பொதுவா விவாதிப்பதில் எனக்கு உடன்பாடில்லை ரவி.//

    மன்னிக்கணும் பட்டாப்பட்டி..உங்க கருத்துல எனக்கு உடன்பாடு இல்ல...!

    ReplyDelete
  70. எங்கே கொலை கொள்ளை வன்புணர்ச்சி எல்லாம் அதிகமாக இருக்கிறதோ அங்கு தான் நீதி நூல்களின் தேவை இருந்திருக்க வாய்ப்புண்டு!

    குடும்ப அமைப்பின் பலம் வயோதிகத்தில் தெரியும். எங்கே வயதான ஒரு லிவிங் டுகெதெர் ஆசாமிகளை காட்டுங்கள் ..பார்ப்போம்..! திருமணங்கள் தோற்றுப் போக ஆரம்பித்தது கூட்டுக்குடும்பங்களின் வீழ்ச்சிக்குப் பிறகே என்பது எனது கருத்து! அதுவும் எல்லாத் திருமணங்களும் அல்ல.

    May 4, 2010 6:00 PM////

    இன்றைக்கு நன்னூல் யாரும் இயற்றவில்லையே ? அப்படியென்றால் நாடு சுபிட்சமாக கொலை கொள்ளை ரேப்பு இன்றி இருக்கிறதா ?

    உங்கள் பார்வையினை இன்னும் விஸ்தாரமாக்குங்கள். கல்யாணம் என்பதின் தேவை இல்லாமல் வாழ்ந்தவர்களும் பலரும் உண்டு.

    கூட்டுக்குடும்ப அமைப்பு முறை ஏன் தோற்றுப்போனது கொஞ்சம் சொல்லமுடியுமா ? ஆக தனிக்குடுத்தன திருமணங்கள் தோல்வியே அடைவதில்லை என்று நீங்கள் சொல்வதாக எடுத்துக்கொள்ளலாமா ?

    ReplyDelete
  71. பிரச்சினை குஷ்புவிடம் தான்... படித்த எந்த ஆணும் தனக்கு மனைவியாக வரப் போகிறவள் கற்போடு வரவேண்டுமென்று எதிர்பார்க்க மாட்டான் என்றார் குஷ்பு. சுந்தர் சி..எதிர்பார்க்காமல் இருக்கலாம். தமிழ்நாட்டில் யாரும் அப்படி இல்லை என்று சொல்ல குஷ்புவிடம் என்ன அத்தாரிட்டி உள்ளது.

    ReplyDelete
  72. &&&பிரச்சினை குஷ்புவிடம் தான்... படித்த எந்த ஆணும் தனக்கு மனைவியாக வரப் போகிறவள் கற்போடு வரவேண்டுமென்று எதிர்பார்க்க மாட்டான் என்றார் குஷ்பு. சுந்தர் சி..எதிர்பார்க்காமல் இருக்கலாம். தமிழ்நாட்டில் யாரும் அப்படி இல்லை என்று சொல்ல குஷ்புவிடம் என்ன அத்தாரிட்டி உள்ளது^^^

    இன்றைக்கு திருமணம் செய்யும் எத்தனை சதவீதம் ஆண்கள் கற்போடு இருக்கிறார்கள் என்று சொல்லமுடியுமா ?

    அதாவது ஒரு பெண்ணைக்கூட காதலிக்காத எந்த ஆண் தமிழ்நாட்டில் இருக்கிறான் ? அப்படி இருந்தால் அவன் ஆணா ?

    ReplyDelete
  73. இன்றைக்கு நன்னூல் யாரும் இயற்றவில்லையே ? அப்படியென்றால் நாடு சுபிட்சமாக கொலை கொள்ளை ரேப்பு இன்றி இருக்கிறதா ?

    ********************************

    இன்றைக்கு நூல் இயற்றித்தான் இதை எடுத்து சொல்ல வேண்டும் என்ற சூழ்நிலையில் நாடு இல்லை.

    ReplyDelete
  74. கேள்விக்கு கேள்வி பதிலா இருக்கமுடியாதுங்கறது என்னோட தனிப்பட்ட கருத்து...!
    செந்தழல் ரவி சார் எல்லாத்துக்கும் எதிர்கேள்வி கேக்றீங்களே தவிர ஒரு கேள்விக்கும் பதில் சொல்லமாட்டேன்கறீங்க..!

    பதில் ப்ளீஸ் சார்...??

    ReplyDelete
  75. ரெட்டைவால்ஸ்

    என்னுடைய திருமணம் குறித்த கேள்விக்கு பதில் இல்லை இன்னும்

    ReplyDelete
  76. முற்றிலுமாக நடக்கவில்லை என்று சொல்லவில்லை...அதை ஏன் நியாயப் படுத்துகிறீர்கள் என்று தான் கேட்கிறோம்! லஞ்சம் ஊழல் கூடதான் நடக்கிறது....மாட்டிக்கொள்ளாமல் வாங்குங்கள் என்று ஒரு பிரபலம் சொன்னால் ஒத்துக் கொள்வீர்களா?

    ReplyDelete
  77. எந்த கேள்விக்கு பதில் சொல்லவில்லை ?

    ReplyDelete
  78. தாலி கட்டும் போது மட்டுமே பார்த்து நடத்தப் பட்ட திருமணங்கள் எத்தனை தோல்வியை தழுவியிருக்கும்...சொற்பமே!
    அந்த தலைமுறையினரில் பெரும்பாலானோர் சந்தோஷமாக வாழ வில்லையா?

    ReplyDelete
  79. முற்றிலுமாக நடக்கவில்லை என்று சொல்லவில்லை...அதை ஏன் நியாயப் படுத்துகிறீர்கள் என்று தான் கேட்கிறோ

    ---

    நியாயத்தை நியாயப்படுத்தத்தானே செய்வோம். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூட அதைத்தானே சொல்லுது ? அது அநியாயமாக இருந்தால் ஏன் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஆதரவாக கருத்து சொல்கிறார்கள் ?

    குஷ்பு சொல்வது தவறாக இருந்தால்தானே ? லஞ்சம் தவறு. அதனை சட்டமும் கோர்ட்டும் தவறு என்றுதானே சொல்கிறீர்கள் ?

    ஒரு சரியான விஷயத்துக்கு (திருமணத்துக்கு முந்தைய இருமன ஒப்புதலுடன் கூடிய பாலுறவு)ஒரு தவறான விஷயம் (லஞ்சம்) எப்படி கம்பேரிசன் டூல் ஆக செயல்படமுடியும் ?

    ReplyDelete
  80. //அந்த தலைமுறையினரில் பெரும்பாலானோர் சந்தோஷமாக வாழ வில்லையா?//

    நீங்கள் தானே சொல்கிறீர்கள் ? எந்த ஆதாரத்தை வைத்து அவர்கள் 'சந்தோஷமாக' இருப்பதாக சொல்கிறீர்கள் ?

    ReplyDelete
  81. @@@ செந்தழல் ரவி said...
    எந்த கேள்விக்கு பதில் சொல்லவில்லை ?
    ////
    கல்யாணத்துக்கு முன்னாடி செக்ஸ் வெச்சிக்கறது தப்பா., தப்பில்லையா....?..

    தப்பில்லைன்னு நீங்க சொன்னீங்கன்னா நான் அடுத்த கேள்வி என்ன கேப்பேன்னு உங்களுக்கு தெரியும்..அதுக்கும் சேர்த்து பதில் சொல்லின்டுங்க...? (நீங்க நெஜமாவே முற்போக்குவாதியா இல்ல முற்போக்குவாதி மாதிரி நடிக்கரீங்கலான்னு எனக்கு இப்போ தெரியனும்..?) :)

    ReplyDelete
  82. //ஒரு சரியான விஷயத்துக்கு (திருமணத்துக்கு முந்தைய இருமன ஒப்புதலுடன் கூடிய பாலுறவு)//

    நான் நடிப்பதில்லை. ஏற்கனவே சொல்லியிருக்கிறேனே, இருமன ஒப்புதலுடன் கூடிய பாலுறவு மட்டுமே நடைபெறவேண்டும், திருமணத்துக்கு முன்பாக இருந்தாலும் திருமணத்துக்கு பின்பாக இருந்தாலும்.

    கல்யாணம் செய்துவிட்டால் மனைவியை அவர் ஒப்புதல் இல்லாமல் விழுந்து பிறாண்டினால் அதுவும் சட்டப்படி, நியாயப்படி குற்றமே..

    ReplyDelete
  83. எனது புரிதலுக்காக சில கேள்விகள்::

    01. மனிதர்களுடன் பழக்கம் என்பது செக்ஸ் என்ற அடிப்படையில் மட்டும்தானா? எனில் மனதிற்கு பிடித்தவறோடு படுப்பது என்பது அவரை முற்றிலும் புரிந்து கொள்ளுதல் என்பதற்கா? அல்லது ஜஸ்ட் ஃபார் ஃபன் என்ற அடிப்படையிலா?

    02.செக்ஸ் என்பது தவிர்த்து மனதிற்கு பிடித்தவர்கள் என்பதை தெரிவு செய்ய இயலாதா? கல்யாணத்திற்கு முன்போ பின்போ..

    03.லிவிங் டுகெதர் என்பது பொருளாதாரம் சார்ந்ததா? மனம் சார்ந்ததா?

    04.திருமணத்திற்கு முன்பான கலவியில் அல்லது லிவிங் டுகெதரில் குழந்தை பிறந்தால் யார் பொறுப்பு?

    நண்பர்கள் தனித்தனியே விளக்கினால் மகிழ்ச்சி. விளக்கங்கள் பொருத்து மேலும் சில கேள்விகள் கேட்க ஆவல்.

    ReplyDelete
  84. நமக்கென்று ஒரு கலாச்சாரம் உள்ளது. அதை பா.ம.க காரர்களும் விடுதலை சிறுத்தைகளும் சப்போர்ட் செய்வது தான் எல்லோருக்கும் உள்ள அசௌகரியம். அதற்காக வீம்புக்கேனும் குஷ்புவை ஆதரித்துப் பேசியவர்கள் தான் அதிகம். சினிமாத் தலைப்பை தமிழில் வைக்க சொல்லிப் போராடியது போல் அல்லாமல் நேரடியாக பாதிக்கக்கூடிய விஷயம் இது!

    போலீஸ் நிலையங்களே நிறைய கல்யாணங்களை நடத்தி வைக்கின்றன. சட்டப் படி சரிதான்...ஆனால் அதனால் எத்தனை குடும்பத்தினரின் மனம் காயப்பட்டிருக்கும்...

    "அப்பா இன்னிக்கு காலேஜ்ல பிரைஸ் வாங்க்கிட்டேன் என்று மகள் சொல்கிறாளென்றால் அப்பா சந்தோஷப்படுவார்!

    "அப்பா இன்னிக்கு ஒரு பையனோட சேஃபா செக்ஸ் வச்சிக்கிட்டேன் என்று சொல்கிறாளென்றால் அந்த தகப்பனுக்கு எப்படி இருக்கும்...?

    உங்களைப் போன்றவர்கள் குஷ்பு போன்றவர்களை தொடர்ந்து ஆதரித்தீர்களானால் மேலே சொன்னது போல சம்பவம் சாதாரணமாக நடக்க ஆரம்பித்து விடும்!

    ReplyDelete
  85. "அப்பா இன்னிக்கு ஒரு பையனோட சேஃபா செக்ஸ் வச்சிக்கிட்டேன் என்று சொல்கிறாளென்றால் அந்த தகப்பனுக்கு எப்படி இருக்கும்...?
    ///

    செக்ஸை அதீதமான ஒன்றாக உங்கள் மனதில் கட்டமைத்துவிட்டதாலேயே நீங்கள் அதனை வித்யாசமாக பார்க்கிறீகள். சாப்பாடு, தூக்கம், மூச்சா போதல் போல செக்ஸும் ஒருவகையான உடல் மற்றும் மனத்தேவை என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். இதை கட்டுடைத்து எல்லாம் சொல்லவேண்டியதில்லை. ஆழ்ந்து சிந்தித்தால் விளங்கிவிடும். நீங்கள் கடவுளை வணங்கினால், ஒரு உ.தா : கடவுளும் செக்ஸ் வைத்துக்கொண்டார்.

    அதனால் தான் சிவனுக்கும் பார்வதிக்கும் பிள்ளையார் முருகன் என்று இரண்டு சன். முருகனுக்கும் வள்ளி தெய்வானை என்று டூ வொய்ப். செக்ஸை இயல்பாக பாருங்கள். அப்போதுதான் அது கற்கவேண்டிய ஒன்று என்பதும் விளங்கும். அதனால் தான் கோயில்களில் சிற்பங்களை செதுக்கி விளக்கினார்கள். அது கோயிலில் இருப்பதாலேயே தெய்வீகம் அல்ல. அது நிறைய பேர் கூடும் இடம் என்பதால்.

    ReplyDelete
  86. செந்தழல் ரவி said...
    //ஒரு சரியான விஷயத்துக்கு (திருமணத்துக்கு முந்தைய இருமன ஒப்புதலுடன் கூடிய பாலுறவு)//

    நான் நடிப்பதில்லை. ஏற்கனவே சொல்லியிருக்கிறேனே, இருமன ஒப்புதலுடன் கூடிய பாலுறவு மட்டுமே நடைபெறவேண்டும், திருமணத்துக்கு முன்பாக இருந்தாலும் திருமணத்துக்கு பின்பாக இருந்தாலும்.///

    அப்போ கல்யாணத்துக்கு முன்னோ பின்னோ மனசுக்கு புடிச்சிருந்தா புடிச்சவங்களோட செக்ஸ் வெச்சுக்கலாம்...! கலாசாரமாவ்து மண்ணாவதுன்னு சொல்ல வரீங்க...! இந்த மாதிரி கல்யாணம் புண்ணாக்கு பொண்டாட்டி புள்ளைங்க ஒழுக்கம் இதெல்லாம் பேசறவன திருந்துங்கடா பைத்திகாரான்னு சொல்ல வரீங்க...சரியா ரவி...? (ஆமாம்... இல்லை...)


    கல்யாணம் செய்துவிட்டால் மனைவியை அவர் ஒப்புதல் இல்லாமல் விழுந்து பிறாண்டினால் அதுவும் சட்டப்படி, நியாயப்படி குற்றமே..//

    பொண்டாட்டிய கல்யாணத்துக்கு அப்பறம் விழுந்து ப்ராண்டறது சரியாய் தப்பாங்கறது வேற...அது கிரிமினல் கேஸ்...நாம இப்போ பேசிகிற்றுக்கறது சிவில் கேஸ்...! சென்சிடிவ் விஷயம்...! எந்த பதிலா இருந்தாலும் தெளில்வா சொல்லுங்க...செந்தழல் ரவியோட பதில்கள மக்கள் படிச்சிற்றுகாங்க..!

    ReplyDelete
  87. 01. மனிதர்களுடன் பழக்கம் என்பது செக்ஸ் என்ற அடிப்படையில் மட்டும்தானா? எனில் மனதிற்கு பிடித்தவறோடு படுப்பது என்பது அவரை முற்றிலும் புரிந்து கொள்ளுதல் என்பதற்கா? அல்லது ஜஸ்ட் ஃபார் ஃபன் என்ற அடிப்படையிலா?

    02.செக்ஸ் என்பது தவிர்த்து மனதிற்கு பிடித்தவர்கள் என்பதை தெரிவு செய்ய இயலாதா? கல்யாணத்திற்கு முன்போ பின்போ..

    03.லிவிங் டுகெதர் என்பது பொருளாதாரம் சார்ந்ததா? மனம் சார்ந்ததா?

    04.திருமணத்திற்கு முன்பான கலவியில் அல்லது லிவிங் டுகெதரில் குழந்தை பிறந்தால் யார் பொறுப்பு?


    ஷங்கர். எனக்கு தெரிந்த அல்லது நான் புரிந்துகொண்ட அளவில் பதில் சொல்கிறேன்.

    1. செக்ஸ் மட்டுமே வாழ்க்கை அல்ல. ஏற்கனவே சொல்லியபடி அது சாப்பாடு தூக்கம் காலைக்கடன் போன்றதொரு வாழ்வியல் முறையின் பகுதி.

    2.முடியும். இது முற்றிலும் மனம் சம்பந்தப்பட்டது. அதனால் தான் இரண்டு பெண்களோ இரண்டு ஆண்களோ கூட இணைந்து வாழமுடிகிறது.

    3. பொருளாதாரம் முக்கிய Factor. ஆனால் அது மட்டுமே அல்ல. பொருளாதார அளவில் உயராதவர்களும் லிவ்விங் டுகெதர். மனம் கண்டிப்பாக மிகப்பெரிய காரணி. அமைந்துபோகும் சூழல் இன்னொரு காரணி.

    4. இருவரும். சமூகம் நிர்பந்திக்கும் என்று மட்டும் பாராமல், பதிவு திருமணம் செய்து, குழந்தைக்கு சட்ட பாதுகாப்பு அளிக்கவேண்டும். இதன் மூலம் அந்த குழந்தையின் எதிர்கால வாழ்வை உறுதி செய்யமுடியும். கல்வி இன்ஸூரன்ஸு வங்கி போன்றவை பற்றி சொல்கிறேன்.

    ReplyDelete
  88. ///அப்போ கல்யாணத்துக்கு முன்னோ பின்னோ மனசுக்கு புடிச்சிருந்தா புடிச்சவங்களோட செக்ஸ் வெச்சுக்கலாம்...! கலாசாரமாவ்து மண்ணாவதுன்னு சொல்ல வரீங்க...! இந்த மாதிரி கல்யாணம் புண்ணாக்கு பொண்டாட்டி புள்ளைங்க ஒழுக்கம் இதெல்லாம் பேசறவன திருந்துங்கடா பைத்திகாரான்னு சொல்ல வரீங்க...சரியா ரவி...? (ஆமாம்... இல்லை...)///

    இன்னைக்கு ஊர் உலகத்துல நடப்பது அதுதான். பூ.க.மூ. உ.இ இல்லையே ? பல் இருந்தால் பட்டாணி சாப்பிடுங்கள். அவ்வளவு தான் சொல்லமுடியும்..

    ReplyDelete
  89. மேலை நாடுகள் போல் செக்ஸ் ஒன்றும் இங்கு சாதாரண விஷயம் இல்லை. கொஞ்சம் குடும்ப கௌரவம் மரியாதை சம்பந்தப் பட்டது. ஒரு பெண் செக்ஸ் வைத்துக் கொள்கிறாள் என்றால் அது ஏதோ பாஸ்கெட் பால் ஆடிவிட்டு வருகிறாள் என்று பார்க்க மாட்டார்கள். தங்கள் கௌரவத்துக்கு அடித்த சாவு மணியாகத்தான் பார்ப்பார்கள்.

    முற்போக்குத்தனம் என்பது விதவைகள் மறு மணத்திலும் , டிவோர்ஸ் பெற்றவர்கள் மறுமணத்திலும் உள்ளது. வீட்டை ஏமாற்றிவிட்டு குடும்பத்தை ஏமாற்றிவிட்டு சட்டம் தரும் பாதுகாப்பில் சல்லாபம் செய்வதில் அல்ல.

    ReplyDelete
  90. @@@ செந்தழல் ரவி said...
    சாப்பாடு, தூக்கம், மூச்சா போதல் போல செக்ஸும் ஒருவகையான உடல் மற்றும் மனத்தேவை என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.//அதனால் தான் சிவனுக்கும் பார்வதிக்கும் பிள்ளையார் முருகன் என்று இரண்டு சன். முருகனுக்கும் வள்ளி தெய்வானை என்று டூ வொய்ப். செக்ஸை இயல்பாக பாருங்கள்.///

    ரவி சார்..சூப்பர் பாய்ண்டு...நானும் அதத்தான் சொல்றேன்..குஷ்புவும் சுந்தர் சி யும் செக்ஸ் வெச்சுக்கறத பத்தி எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல..நல்ல வெச்சுக்கட்டும்...சந்தோசமா வெச்சுகட்டும்...ஆனா இங்க நாம பேசிற்றுகறது வள்ளிக்கும் தெய்வானைக்கும் கல்யாணத்துக்கு முன்னாடி யார் கூடவாவது செக்ஸ் உறவு இருந்தா அதை முருகன் ஏத்துப்பாரா ஏத்துக்கமாட்டாரங்கறத பத்தி....!

    ReplyDelete
  91. பூ.க.மூ. உ.இ அப்படின்னா என்னங்க?

    ReplyDelete
  92. @@@@ செந்தழல் ரவி said...
    இன்னைக்கு ஊர் உலகத்துல நடப்பது அதுதான். பூ.க.மூ. உ.இ இல்லையே ? பல் இருந்தால் பட்டாணி சாப்பிடுங்கள். அவ்வளவு தான் சொல்லமுடியும்..///

    பல்லு உள்ளவன் பக்கோடா சாப்டட்டும் ரவி சார்...அது தப்பா சரியா...அதான் விவாதம்..! அப்போ, பக்கோடா சாப்டாதவன் எல்லாருக்கும் பல்லு இல்லைங்கறீங்கள..?.மக்களே ரவி சார்...ஒழுங்கா கற்போட வாழற ஆணையும் பெண்ணையும் வாழதெரியாதவங்கன்னு சொல்றாரு...!..
    அப்டிதானுன்களே ரவி சார்...??

    பிகர் கெடைச்சா உஷார் பண்ணிக்கொங்கங்கறார்...தப்பிள்ளயாம்பா..!!
    அப்டிதானுன்களே ரவி சார்...??

    ReplyDelete
  93. வெளியூர். உங்கள் பார்வையில் கற்பு என்பது என்ன ? ஆன்ஸர் மீ.

    ReplyDelete
  94. ஒரே ரத்த களறியாய் இருக்கு உள்ள வரலாமா

    ReplyDelete
  95. &&&ஆனா இங்க நாம பேசிற்றுகறது வள்ளிக்கும் தெய்வானைக்கும் கல்யாணத்துக்கு முன்னாடி யார் கூடவாவது செக்ஸ் உறவு இருந்தா அதை முருகன் ஏத்துப்பாரா ஏத்துக்கமாட்டாரங்கறத பத்தி....***

    கடவுள் என்றால் இரண்டு கல்யாணம் பண்ணலாமா ?

    ReplyDelete
  96. ரவி...
    நம்ம கலாச்சாரத்துல ..குடும்ப அமைப்புல பெத்தவங்களுக்கு இருக்கிற பெரிய சந்தோஷமே புள்ளைங்களுக்கு கல்யாணம் பண்ணிப் பார்க்கறது தான்...

    அதெல்லாம் இல்லை ..ஆடு மாடு பன்னி மாதிரி கிளைமேட் சப்போர்ட் பண்ணிச்சுன்னா சேந்துப்போம்னு சொன்னீங்கன்னா...எப்படி பாஸ்?

    நாம நாகரீகமா ஆறறிவு இருக்கிறா மாதிரி நடந்துக்க வேணாமா?

    ReplyDelete
  97. &&&ஆனா இங்க நாம பேசிற்றுகறது வள்ளிக்கும் தெய்வானைக்கும் கல்யாணத்துக்கு முன்னாடி யார் கூடவாவது செக்ஸ் உறவு இருந்தா அதை முருகன் ஏத்துப்பாரா ஏத்துக்கமாட்டாரங்கறத பத்தி....***

    கடவுள் என்றால் இரண்டு கல்யாணம் பண்ணலாமா ?

    *********************************

    திசை திருப்பாதீங்க...வள்ளியும் தெய்வானையும் கல்யாணத்துக்கு முன்னாடி செக்ஸ் வச்சிக்கிட்டா முருகன் ஒத்துப்பாரா?

    ReplyDelete
  98. @@@ செந்தழல் ரவி said...
    இன்னைக்கு ஊர் உலகத்துல நடப்பது அதுதான்.///

    அட ஊர் உலகத்த விடுங்க சார்...ஊரு உலகத்துல என்னென்னமோ நடக்குது...இத பத்தி ரவிங்கற தனிப்பட்ட நபரோட கருத்து என்ன..அதான் எனக்கு வேணும்..அதை தெளிவா சொல்ல மாட்றீங்களே...! :)

    ReplyDelete
  99. பூ.க.மூ. உ.இ அப்படின்னா என்னங்க?

    ReplyDelete
  100. @@@ செந்தழல் ரவி said...
    வெளியூர். உங்கள் பார்வையில் கற்பு என்பது என்ன ? ஆன்ஸர் மீ.//

    அது ஒரு நல்ல விலைமதிப்பில்லாத திருமண பரிசு...ரவி...!!
    ஆணா இருந்தாலும்,பெண்ணா இருந்தாலும்..!
    இது என்னோட தனிப்பட்ட கருத்து..!

    ReplyDelete
  101. பட்டா இது உன் ப்ளாக் தானே

    ReplyDelete
  102. பலமுறை சொல்லிட்டேனே என்னுடைய கருத்தை. வேற என்ன சொல்லனும் ? என்னுடைய பார்வையில் கற்பு என்று ஒரு கருமாந்திரமும் இல்லை. கற்பு என்பதே பெண்ணை அடிமைப்படுத்த ஏற்படுத்தப்பட்ட ஒரு சொல்லாடலே. ஆண்களுக்கு தேவையில்லை, பெண்ணுக்கு உண்டு என்று விடுகதை பாணியில் இதை சொல்லித்திரியும் ஆணாதிக்க வெறியர்களுக்கு சாட்டையடிதான் இந்த சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு.

    திருமணத்துக்கு முன் மனம் அல்லது உடல் ரீதியான தொடர்பை இன்னொரு ஆணிடம் கொள்ளும் பெண்ணோ, இன்னொரு பெண்ணிடம் கொள்ளும் ஆணோ, இன்றைக்கு 100 சதவீதம் உண்டு. மனம் என்ற வார்த்தையை கருப்பு எழுத்தில் படிக்கவும். ப்ரி மேரிட்டல் அபையர் என்பது மனம் மற்றும் உடல் தனித்தனியாக அல்லது இரண்டும் சார்ந்தது என்று நான் நினைக்கிறேன்.

    கற்றவர்கள் தன்னுடைய மனைவி எப்படி வந்தாலும் ஏற்றுக்கொள்வார்கள் என்பது குஷ்பு கருத்து. நடிகர் அஜித் கூட ஒருமுறை இதையே பொது தளத்தில் சொல்லியிருக்கிறார். திருமணத்துக்கு பின் அவர்கள் எப்படி உண்மையாக இருக்கிறார்கள் என்பதையே பார்ப்பேன். திருமணத்துக்கு முன் அவர்கள் எப்படி என்னவகையாக உடல் மனம் சார்ந்த நாடல்கள் இருந்தது என்று பார்க்கக்கூடாது என்பது என் கருத்து.

    ஒருத்தியை ஒருவனை திருமணத்துக்கு முன் காதலிக்காத ஆணை பெண்ணை தமிழ்நாட்டில் விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆகவே எல்லாரும் பேசுறான் நானும் பேசுறேன் என்ற ரீதியில் விவாதம் செய்பவர்களிடம் என்னால் இதுக்கு மேல பேச முடியாது.

    செக்ஸ் கல்வி பள்ளிகளில் கட்டாயம் தேவை. அதை மறுப்பவர்கள் வரும் தலைமுறைக்கு மிகப்பெரிய துரோகம் இழைக்கிறார்கள்.

    பூ.க.மூ.உ.இ என்பது பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடாது என்பதாகும். விவாதம் முடிந்தது. பீரியட்.

    ReplyDelete
  103. ஆணும் , பெண்ணும் திருமணம் ஆகாமலே சேர்ந்து வாழலாமுனு சொல்றீங்க..

    ஆனா..ஒரு பெண் இரண்டாவதா திருமணம் செய்ய எவ்வளவு ஆண் மகன்கள் தயாராக இருக்கிறோம்?...

    சார்.. பையனுகலுக்கு என்னா சார்.. கழுவிட்டு போயிட்டே இருப்பானுக.. ஆனா.. இந்த பெண்ணை.. விபச்சாரினுதானே உலகம் பார்க்குது..

    இப்ப நீங்க பெண்ணா இருந்தா உங்க பதில என்னாவாயிருக்கும்?

    ReplyDelete
  104. @@@@ செந்தழல் ரவி said...
    கடவுள் என்றால் இரண்டு கல்யாணம் பண்ணலாமா ?///

    பண்ணிக்கலாம்..அப்டி பண்ணிகிட்ட கடவுளோட ரெண்டு பொண்டாட்டிங்களும் இஷ்டத்துக்கு கண்ட இந்திரர்கலோடையும் அசுரர்கலோடையும் செக்ஸ் வெச்சுகிட்டா அவங்கள நீங்க பூஜை ரூம்ல வெச்சிருபீன்களா...!!! பூஜை பண்ணுவீங்களா...??

    ReplyDelete
  105. வெளியூர்க்காரனுக்கு மட்டும் :

    அது ஒரு நல்ல விலைமதிப்பில்லாத திருமண பரிசு...ரவி...!!
    ஆணா இருந்தாலும்,பெண்ணா இருந்தாலும்..!
    இது என்னோட தனிப்பட்ட கருத்து..


    ....

    கேள்வி

    கற்பு என்பது வெறும் உடல் சார்ந்ததா ? மனம் சார்ந்ததா ? அல்லது மனம் உடல் இரண்டுமா ? அதாவது பெண்ணின் கன்னித்திரை கிழியாமல் இருக்கவேண்டுமா ? மனையாளுடன் முதல் முறை உடல் உறவில் ஈடுபடும்போது இரத்தம் வருகிறதா என்று பார்ப்பீர்களா ? இன்றைக்கு சைக்கிள் ஓட்டினால் கன்னித்திரை கிழிந்துவிடுவதாக சொல்கிறார்கள். அப்படி ஆக்ஸிடெண்டலாக கன்னித்திரை கிழிந்து, முதல் உறவில் இரத்தம் வரவில்லை என்றால் அவள் கற்பில்லாதவள் என்ற முடிவுக்கு வந்துவிடுவீர்களா ? ஒரு பெண் பலாத்காரம் மூலம் உடல் உறவில் ஈடுபடவைக்கப்பட்டால், அவளால் திருமண பரிசு கொடுக்கமுடியாதே ? அப்படியென்றால் அவள் காலம் முழுக்க திருமணம் செய்யாமல் ஒன் டைம் செக்ஸராகவே இருக்கவேண்டுமா ?(கன்னி என்று சொல்லமுடியாது, அவள் தான் ஒருமுறை உறவில் ஈடுபட்டுவிட்டாளே)

    இந்த கேள்வியோடு அன்ஸப்ஸ்ரைப் செய்கிறேன். விரும்பினால் தொடர்வேன்.

    ReplyDelete
  106. Muthu said...

    பட்டா இது உன் ப்ளாக் தானே
    //

    ஆமா முத்து.. ஆட்டதில கலந்துக்கலாம்..

    ReplyDelete
  107. ப்ரீ மேரிடல் அஃபயராலும் ... லிவிங் டுகெதெராலும் அடுத்த தலைமுறை எப்படி நாசமாகப் போகிறது என்று தெரியாமல் புரட்சி பண்ணுவதாக நினைத்துக் கொள்ளும் சமகால ஹிப்பிகளால் தான் பெரும்பாலான சமூகக் குற்றங்கள் நடக்கின்றன.

    திருமணத்துக்கு முன் காதலிக்கும் எல்லோரும் செக்ஸ் வைத்துக் கொள்வதில்லை நண்பரே..!

    ReplyDelete
  108. பட்டாபட்டி.. said...

    ஆணும் , பெண்ணும் திருமணம் ஆகாமலே சேர்ந்து வாழலாமுனு சொல்றீங்க..

    ஆனா..ஒரு பெண் இரண்டாவதா திருமணம் செய்ய எவ்வளவு ஆண் மகன்கள் தயாராக இருக்கிறோம்?...

    சார்.. பையனுகலுக்கு என்னா சார்.. கழுவிட்டு போயிட்டே இருப்பானுக.. ஆனா.. இந்த பெண்ணை.. விபச்சாரினுதானே உலகம் பார்க்குது..

    இப்ப நீங்க பெண்ணா இருந்தா உங்க பதில என்னாவாயிருக்கும்?/////////////



    நல்லா கேட்கரயையா டீடைலு,
    i feel very happy when is next meeting தான் கேட்பார்

    ReplyDelete
  109. திருமணமே வேண்டியதில்லைனு சொன்னா...

    சரி சார்..

    எல்லோருக்கும் எப்படி டிரைவ் செய்வதென தெரியும்....

    ரோட்ல எதுக்கு சிக்னல், ரூல்ஸ் ரெகுலேச்ஷன்னு வெச்சிருக்காங்க...

    எதுவுமே வேண்டாமே?...


    ..ஆண் துடச்சி போட்டுட்டு போயிடுவான்..

    பெண் பாதுகாப்புக்குதான் திருமணம்.. பந்தம் ..இத்யாதி எல்லாமே....

    ReplyDelete
  110. ரெட்டைவால் ' ஸ் said...

    ப்ரீ மேரிடல் அஃபயராலும் ... லிவிங் டுகெதெராலும் அடுத்த தலைமுறை எப்படி நாசமாகப் போகிறது என்று தெரியாமல் புரட்சி பண்ணுவதாக நினைத்துக் கொள்ளும் சமகால ஹிப்பிகளால் தான் பெரும்பாலான சமூகக் குற்றங்கள் நடக்கின்றன./////

    புரட்சி இல்லை ரெட்டை, இது இக்கரைக்கு அக்கறை பச்சை போல் தான் ,மேலும் நம்மாட்களுக்கு வெளிநாட்டவர் கலாசார மோகம் தான்

    ReplyDelete
  111. கற்பும் செக்ஸும் ஒரு கருமாந்திரமும் இல்லைன்னா... இந்த சமூகத்துல எல்லாமே கரெக்ட்தான்...விபச்சாரம் சரி...காபரே டான்ஸ் சரி...மாமா வேலை பண்றது சரி!

    அட கல்யாணம் எதுக்கு சார் தேவையில்லாம...பன்னி மாதிரி பிடிச்சவனோட/ளோட வாழ்ந்துட்டு போயிட வேண்டியது தான்...தன் அடுத்த தலைமுறை பத்தி எதுக்குக் கவலைப்படணும்.... நமக்கு இன்னிக்கு அரிப்புக்கு சொறிஞ்சிகிட்டா சரி...

    என்ன ரவி கரெக்ட் தானே?

    ReplyDelete
  112. @@@செந்தழல் ரவி said...
    வெளியூர்க்காரனுக்கு மட்டும் :
    கேள்வி
    கற்பு என்பது வெறும் உடல் சார்ந்ததா ? மனம் சார்ந்ததா ? அல்லது மனம் உடல் இரண்டுமா ? அதாவது பெண்ணின் கன்னித்திரை கிழியாமல் இருக்கவேண்டுமா ? மனையாளுடன் முதல் முறை உடல் உறவில் ஈடுபடும்போது இரத்தம் வருகிறதா என்று பார்ப்பீர்களா ? இன்றைக்கு சைக்கிள் ஓட்டினால் கன்னித்திரை கிழிந்துவிடுவதாக சொல்கிறார்கள். அப்படி ஆக்ஸிடெண்டலாக கன்னித்திரை கிழிந்து, முதல் உறவில் இரத்தம் வரவில்லை என்றால் அவள் கற்பில்லாதவள் என்ற முடிவுக்கு வந்துவிடுவீர்களா ?////


    மன்னிக்கணும்..இந்த கேள்வி எனக்கு புடிக்கல..நான் பதில் சொல்ல விரும்பல...

    நாம ரெண்டு பெரும் வேற வேற தளத்துல இருக்கோம் ரவி..!

    அதனால இதோடு நானும் அன்ஸப்ஸ்ரைப் செய்கிறேன்...விவாதத்திற்கு நன்றி...

    ReplyDelete
  113. ரெட்டைவால் ' ஸ் said...

    கற்பும் செக்ஸும் ஒரு கருமாந்திரமும் இல்லைன்னா... இந்த சமூகத்துல எல்லாமே கரெக்ட்தான்...விபச்சாரம் சரி...காபரே டான்ஸ் சரி...மாமா வேலை பண்றது சரி!

    அட கல்யாணம் எதுக்கு சார் தேவையில்லாம...பன்னி மாதிரி பிடிச்சவனோட/ளோட வாழ்ந்துட்டு போயிட வேண்டியது தான்...தன் அடுத்த தலைமுறை பத்தி எதுக்குக் கவலைப்படணும்.... நமக்கு இன்னிக்கு அரிப்புக்கு சொறிஞ்சிகிட்டா சரி...

    என்ன ரவி கரெக்ட் தானே?
    //

    அப்ப பன்னிக்கும் மனுசனுக்கும் என்ன வித்தியாசம்?..

    ஓ.. நாம் ரெண்டு கால்ல நடப்போம்.. பன்னி நாலு கால்ல நடக்கும்...அவ்வளவுதான்...

    ReplyDelete
  114. //நல்லா கேட்கரயையா டீடைலு,
    i feel very happy when is next meeting தான் கேட்பார்
    May 4, 2010 7:04 PM//

    முத்து அண்டு பட்டா.

    இரண்டாவது திருமணம் செய்பவரை விபசாரி என்று உலகம் பார்க்குது என்று சொல்வதை விட பழமைவாதம் வேறு எதுவும் இருக்குமா ?

    அதே சமயம் மன & மண முறிவு ஏற்பட்டவர்கள் எல்லாம் when is the next meet என்று கேட்கும் அளவுக்கு இருப்பார்கள் என்றும் சொல்கிறீர்கள் ? உங்கள் குடும்பத்தில் யாருடைய கணவர் இறந்து அவர் விதவையாக இருந்தால் அவர் item ஆக இருப்பதாக யாராவது சொன்னால் எப்படி இருக்கும் ?

    எல்லாரும் ப்ரீமேரிட்டல் அபையர் வையுங்கள், லிவிங் டுகெதராக இருங்கள் என்று சொல்கிறேனா ? அப்படி இருப்பவர்களை தொந்தரவு செய்யாதீர்கள், அது அவர்களது தனிப்பட்ட சுகந்திரம் என்றுதானே சொல்கிறேன் அய்யா ?

    ///ஆண் துடச்சி போட்டுட்டு போயிடுவான்..

    பெண் பாதுகாப்புக்குதான் திருமணம்.. பந்தம் ..இத்யாதி எல்லாமே...///

    பெண் பாதுகாப்புக்குத்தான் திருமணம் என்று எவ்வளவு காலத்துக்கு பெண்ணை அடிமைப்படுத்தி வைத்திருப்பீர்கள் ? திருமணம் ஆகாத பெண் பாதுகாப்பாக இருப்பதில்லையா ? திருமணம் ஆகாத பெண்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பில்லை என்றால் கேட்பதற்கே நகைப்புக்குரியதாக இருக்கிறது.

    ReplyDelete
  115. செந்தழல் ரவி said...

    &&பட்டு அண்னே!! மங்குக்கு பதிலா ஒரு ஆடு வருது பாத்து. பதமா புடிங்க .^^^

    செயிலானி ? சிறுத்தை சீறுச்சின்னா சிறு நரி நாஸ்தியாரும்னு பட்டி சாருக்கு தெரியாது ?//////


    ஆமாண்ணே நீங்க சொன்னா சரியாய் தான் இருக்கும்.
    யோவ் பட்டு,வெளி,ரெட்டை,இவர் கூட போய் தர்க்கம் பண்ணிக்கிட்டு,அதான் அவரே சொல்லிடாரே ஆறு அறிவில் ஒன்னு மிசிங்ன்னு

    ReplyDelete
  116. பெண் பாதுகாப்புக்குத்தான் திருமணம் என்று எவ்வளவு காலத்துக்கு பெண்ணை அடிமைப்படுத்தி வைத்திருப்பீர்கள் ? திருமணம் ஆகாத பெண் பாதுகாப்பாக இருப்பதில்லையா ? திருமணம் ஆகாத பெண்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பில்லை என்றால் கேட்பதற்கே நகைப்புக்குரியதாக இருக்கிறது.
    //

    ரவி.. இதில சிரிக்க எதுவுமில்லை..
    விபச்சாரம் செய்கிறார்கள்னு சொல்லி.. இதுவரை எந்த ஆண் மகனாவது மாட்டியிருக்கானா?...

    பெண்களுக்கு பாதுகாப்பு இருக்குனு சொல்றீங்க.. நிசமாவா சார்?

    ReplyDelete
  117. விபச்சாரம் சரி...காபரே டான்ஸ் சரி..

    விபச்சாரம் எப்படி தவறுன்னு சொல்றீங்க ? காபரே டான்ஸ் தவறா ? உடலை விக்குறா, பணம் பெறுகிறா. உலகின் ஆதி தொழில் அது தானே ? காபரெ டேன்ஸ் ஆடுகிறவள் என்ன தவறு செய்கிறா ? டேன்ஸ் ஆடுகிறா, காசு வாங்குறா. மானாட மயிலாட, டேன்ஸ் டேன்ஸ், சோடி நெம்பர் ஒன்னு ? நீங்க சினிமா பாக்குறீங்களே ? அதுல ஒரு நடிகை யாரோ ஒரு நடிகனை கட்டி பிடிக்கிறாளே ? அது தவறா ? அப்படின்னா நீங்க சினிமாவே இதுவரை பார்த்ததில்லைன்னு சொல்லுங்க பார்ப்போம் ? பன்றிகள் நாலு கால்ல தான் நடக்கும் என்று கற்றுக்கொண்டேன். நன்றி.

    ReplyDelete
  118. கற்றுக்கொண்டால் சந்தோசமே ரவி..

    practical பேசுங்க..இது நம்ம குடும்பத்தில நடந்தால் ஏற்றுக்கொள்லக்கூடிய மனப்பக்குவம் நமக்கு இருக்கா ரவி?...

    ReplyDelete
  119. வயது வந்தவர்கள் தாராளமா செக்ஸ்ல ஈடுபடலாம்னு புரட்சி தீர்ப்பு சொல்ற உங்க சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஏன் விபசாரத்தையும் காபரே டான்ஸையும் சட்டப்படி தடை பண்ணி வச்சிருக்கு...

    உங்களோட எல்லாக் கேள்விகளுக்கும் இதில் பதில் இருக்கு நண்பரே!

    ReplyDelete
  120. 4. இருவரும். சமூகம் நிர்பந்திக்கும் என்று மட்டும் பாராமல், பதிவு திருமணம் செய்து, குழந்தைக்கு சட்ட பாதுகாப்பு அளிக்கவேண்டும். இதன் மூலம் அந்த குழந்தையின் எதிர்கால வாழ்வை உறுதி செய்யமுடியும். கல்வி இன்ஸூரன்ஸு வங்கி போன்றவை பற்றி சொல்கிறேன்.
    //

    நீங்க சொன்ன பதி.. குழந்தைகளுக்கு சட்ட பாதுகாப்பு வேண்டும் என கூறுகிறீர்கள்..

    ஆனா.. திருமணம் என்பது பாதுகாப்பு இல்லை என் சொல்கிறீர்களே ரவி?..

    ReplyDelete
  121. ப்ரீ மேரிடல் அஃபயர் தப்பு இல்லை... ஆனா அதுக்குக் காசு வாங்கி விபசாரம் பண்ணா தப்பு...

    எக்ஸ்ட்ரா மேரிடல் அஃப்யர் தப்பு இல்லை...ஆனா காபரே டான்ஸ் தப்பு..

    லிவிங் டுகெதெர் தப்பு இல்லை..ஆனா மாமா வேலை பார்த்தா தப்பு..

    இது தான் நீங்க கொண்டாடுகிற சட்டம்!

    ReplyDelete
  122. கோர்ட் நீதிபதிகள் ஏன் விபசாரத்தையும் காபரே டான்ஸையும் சட்டப்படி தடை பண்ணி வச்சிருக்கு
    //

    அதுவும் நாளை, சட்டப்படி செல்லும் என தீர்ப்பாக வருமோ என்னவோ?....

    ReplyDelete
  123. செந்தழல் ரவி said...

    //நல்லா கேட்கரயையா டீடைலு,
    i feel very happy when is next meeting தான் கேட்பார்
    May 4, 2010 7:04 PM//

    முத்து அண்டு பட்டா.

    இரண்டாவது திருமணம் செய்பவரை விபசாரி என்று உலகம் பார்க்குது என்று சொல்வதை விட பழமைவாதம் வேறு எதுவும் இருக்குமா ?/////////////

    ஆவூன்னா பழமைவாதம் என்ற சொல்லை கேடையமாய் எடுத்துக்கொள்ளுங்கள்.உங்களுக்கு பிடித்த கருத்தை மற்றவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் உடனே அவனை பழமைவாதி என்று முத்திரை குத்தி பேச விடாமல் பண்ணி விடுவிர்கள்.இருந்தாலும் என்னுடைய கருத்து என்றும் இரண்டாம் திருமண பந்தத்திற்கு எதிர்ப்பு கிடையாது

    ReplyDelete
  124. பட்டாபட்டி.. said...

    கோர்ட் நீதிபதிகள் ஏன் விபசாரத்தையும் காபரே டான்ஸையும் சட்டப்படி தடை பண்ணி வச்சிருக்கு
    //

    அதுவும் நாளை, சட்டப்படி செல்லும் என தீர்ப்பாக வருமோ என்னவோ?....
    //

    நமீதா.. நீங்க வாய தொறந்து ஒரு முத்தான் பொன்மொழிய விடுங்கக்கா...

    ReplyDelete
  125. 4. இருவரும். சமூகம் நிர்பந்திக்கும் என்று மட்டும் பாராமல், பதிவு திருமணம் செய்து, குழந்தைக்கு சட்ட பாதுகாப்பு அளிக்கவேண்டும். இதன் மூலம் அந்த குழந்தையின் எதிர்கால வாழ்வை உறுதி செய்யமுடியும். கல்வி இன்ஸூரன்ஸு வங்கி போன்றவை பற்றி சொல்கிறேன்.
    //

    ரவி.. இதுக்கு இன்னும் பதில் சொல்லலை...குழந்தைகள் என் வரும்போது மட்டும் சட்டம் ஏன்?....
    பெரியவர்களிடம் நம்பிக்கை இலாத காராணத்தாலா?...

    ReplyDelete
  126. சொல்லுங்கள் ரவி....ஏன் சுப்ரீம் கோர்ட் விபசாரத்தையும் காபரே டான்ஸையும் சட்டப்பூர்வமாக ஆக்கவில்லை?

    ReplyDelete
  127. செந்தழல் ரவி said...

    அதே சமயம் மன & மண முறிவு ஏற்பட்டவர்கள் எல்லாம் when is the next meet என்று கேட்கும் அளவுக்கு இருப்பார்கள் என்றும் சொல்கிறீர்கள்?



    இதில் மற்றவர்கள் எங்கே வந்தார்கள் ரவி,இது நான் நீங்கள் பெண்ணாக பிறந்து இருந்தால் கூறி இருப்பிர்கள் என்று தான் சொன்னேன்.இதில் இருந்து என்ன தெரிகிறது என்ன கேள்வி கேட்டால் எப்படி பதில் சொல்லி குழப்புவது என்பதில் உங்களை போல் முற்போக்குவாதி என்று சொல்பவர்கலுக்கு கை வந்த கலை

    ReplyDelete
  128. நன்றி ரவி,

    //ஒரு சரியான விஷயத்துக்கு (திருமணத்துக்கு முந்தைய இருமன ஒப்புதலுடன் கூடிய பாலுறவு)//

    நான் நடிப்பதில்லை. ஏற்கனவே சொல்லியிருக்கிறேனே, இருமன ஒப்புதலுடன் கூடிய பாலுறவு மட்டுமே நடைபெறவேண்டும், திருமணத்துக்கு முன்பாக இருந்தாலும் திருமணத்துக்கு பின்பாக இருந்தாலும்.///

    //கல்யாணம் செய்துவிட்டால் மனைவியை அவர் ஒப்புதல் இல்லாமல் விழுந்து பிறாண்டினால் அதுவும் சட்டப்படி, நியாயப்படி குற்றமே..//
    //

    இங்க ஒரு பிரச்சனை இருக்கு. கணவன், மனைவி, வேற ஒரு பெண் கணவரிடம் செக்ஸ் வெச்சிக்க விரும்பறாங்க. கண்டிப்பா அது மனைவிக்கு பிடிக்கல (விழுந்து பிறாண்டறதவிட அதிகமா அவஸ்த்தைபடறாங்க) அதே சமயத்துல அந்த பெண் அவரை மிகவும் விரும்புது/அவருக்கும் விருப்பம் இருக்கு (யூகங்களல்ல சர்வ சாதாரணமாய் நடக்கும் செயலே) அப்ப அந்த பெண், மனைவி, கணவர் மூணு பேரோட மன ஒப்புதல் வேண்டி இருக்கே? அதனாலதான் இது பிரச்சனையா இருக்கா?

    நீங்க சொல்றமாதிரியான மன ஒப்புதல் அப்படீங்கற அளவுக்கு நாம இன்னும் மனதளவுல முன்னேறலன்னு நினைக்கிறேன்.

    ஏமாத்தற ஆணோ, பெண்ணோ கல்யாணம் பண்ணியும் ஏமாத்த வாய்ப்பிருக்கு மறுக்கல. ஆனா லிவிங் டு கெதர்ல ஓவர் ப்ரைவசி இல்லைங்கறதுனால குற்றங்கள் நிறைய நடக்கவும் வாய்ப்பு இருக்கிறதே? (கல்யாணத்தில் இன்னார் இன்னார் என்று ஓரளவுக்கேனும் குடும்பங்கள் பற்றி தெரிந்துகொள்ள முடியும்)

    மேலும் இங்கே இதைப்பற்றிய புரிதல் சுதந்திரமான, விரும்பத்தகுந்த வாழ்க்கை என்பதில்லாது, செக்ஸை மட்டுமே முன்னிருத்தி போகிறதாகவே படுகிறது. அப்படி


    முக்கியமாய் இதில் பாதிக்கப்படுபவர்கள் பெண்களும், குழந்தைகளுமே.

    எனிவே,

    மிக்க நன்றி பட்டா & ரவி :)

    ReplyDelete
  129. ரெட்டைவால் ' ஸ் said...

    சொல்லுங்கள் ரவி....ஏன் சுப்ரீம் கோர்ட் விபசாரத்தையும் காபரே டான்ஸையும் சட்டப்பூர்வமாக ஆக்கவில்லை?::::::::::::::::


    இரு ரெட்டை ஏன் அவசர படற அவர் சட்ட புத்தகத்தை வெரிபை பண்ண வேண்டாமா

    ReplyDelete
  130. எகத்தாளம் புடிச்ச முத்து....!

    ReplyDelete
  131. @ரெட்டைவால் ' ஸ் said...
    @முத்து
    எகத்தாளம் புடிச்ச முத்து....!

    //

    லொள்லு புடிச்ச முத்து...


    ரவி அண்ணே வாங்கண்ணே...

    ReplyDelete
  132. 【♫ஷங்கர்..】 ™║▌│█│║││█║▌║ said...


    லிவிங் டு கெதர்ல ஓவர் ப்ரைவசி இல்லைங்கறதுனால குற்றங்கள் நிறைய நடக்கவும் வாய்ப்பு இருக்கிறதே? (கல்யாணத்தில் இன்னார் இன்னார் என்று ஓரளவுக்கேனும் குடும்பங்கள் பற்றி தெரிந்துகொள்ள முடியும்)

    மேலும் இங்கே இதைப்பற்றிய புரிதல் சுதந்திரமான, விரும்பத்தகுந்த வாழ்க்கை என்பதில்லாது, செக்ஸை மட்டுமே முன்னிருத்தி போகிறதாகவே படுகிறது. அப்படி


    முக்கியமாய் இதில் பாதிக்கப்படுபவர்கள் பெண்களும், குழந்தைகளுமே.

    எனிவே,

    மிக்க நன்றி பட்டா & ரவி :)::::::::::::::


    இதை தான் சார் நாங்களும் சொல்லுறோம் ஆனா இந்த முற்போக்கு வியாதிகளுடைய தொந்தரவு தாங்க முடியல

    ReplyDelete
  133. @【♫ஷங்கர்..】 ™║▌│█│║││█║▌║ said...
    முக்கியமாய் இதில் பாதிக்கப்படுபவர்கள் பெண்களும், குழந்தைகளுமே.
    //

    ஆண்கள் துடைத்து போட்டுவிட்டு போய்விடுவார்கள்..

    அதைத்தான் நானும் சொல்கிறேன் ஷங்கர்....

    ReplyDelete
  134. ரெட்டைவால் ' ஸ் said...

    எகத்தாளம் புடிச்ச முத்து....!

    இரு உனக்கு செந்தமிழ் மாநாட்டிற்கு டிக்கெட் வாங்கி அனுப்புறேன்


    பட்டாபட்டி.. said...


    லொள்லு புடிச்ச முத்து...


    வா பட்டு சுறா பார்க்க போலாம்

    ReplyDelete
  135. ஹலோ மைக் டெஸ்டிங் 1;2;3

    சுறான்னு சொன்ன உடனே எல்லாம் எஸ் ஆயிட்டானுங்க

    ReplyDelete
  136. எஸ் ஆவலடா.. வந்துட்டேன்..

    சொல்லுங்கள் ரவி....ஏன் சுப்ரீம் கோர்ட் விபசாரத்தையும் காபரே டான்ஸையும் சட்டப்பூர்வமாக ஆக்கவில்லை?::::::::::::::::

    மும்பை சிவப்பு விளக்கிலும் கொல்கத்தா சோனா கஞ்சியிலயும், ஏன் டெல்லியியிலயும் விபச்சாரத்தை தடுக்க ஏன் போலீஸ் கைது செய்யல ?

    எந்த காலத்துல இருக்கீங்க ? பெங்களூரில் மும்பையில் புனேவில் நொய்டாவில் சட்ட அனுமதியோட எத்தனை தெருவுல டேன்ஸ் பார் இருக்கு ? பூனை கண்ணை மூடிக்கிட்டா உலகம் இருட்டு இல்லையடா ?

    அட கிராமத்துல திருவிழாவில் மாரை குனிஞ்சி காட்டும் ஆடலும் பாடலும் குத்தாட்ட நிகழ்ச்சியில இல்லாத ஆபாசமா ? ஏன் எந்த கிராமத்து திருவிழாவை பார்த்ததே இல்லையா ? அதை தடை செய்யவேண்டியது தானே கலாச்சார காவல் முண்டங்கள் ?

    ReplyDelete
  137. அப்போ மெட்ராஸ்ல ஏன் இன்னும் அழகிகளை காவல் துறை கைது பண்ணுது.... இங்க இ பி. கோ செல்லுபடி ஆகாதா....

    ReplyDelete
  138. Blogger செந்தழல் ரவி said...

    மும்பை சிவப்பு விளக்கிலும் கொல்கத்தா சோனா கஞ்சியிலயும், ஏன் டெல்லியியிலயும் விபச்சாரத்தை தடுக்க ஏன் போலீஸ் கைது செய்யல ?
    எந்த காலத்துல இருக்கீங்க ? பெங்களூரில் மும்பையில் புனேவில் நொய்டாவில் சட்ட அனுமதியோட எத்தனை தெருவுல டேன்ஸ் பார் இருக்கு ? பூனை கண்ணை மூடிக்கிட்டா உலகம் இருட்டு இல்லையடா ?

    ***********************************
    விபசாரம் செய்வதிலும் காபரே ஆடுவதிலும் உங்களுக்கு என்னய்யா பெருமை?

    ReplyDelete
  139. என்னாச்சு.. பாதுகாப்பு உடலுறவுல இருந்து விபச்சாரம் பற்றி போயாச்சு...

    ReplyDelete
  140. மேலை நாடுகளில்..சேர்ந்து வாழுவது சகஜம் ரவி.. மேலும்.. பிள்ளைகள், 16 வௌஅதுக்கு பின் தனியாக போய்விடுகின்றனர்..

    ஆனால்.. நாம் அப்படியில்லையே..
    அவர்கள் கலாச்சாரத்தை கண்மூடிக்கொண்டு ஏன் ஏற்க்கவேண்டும்?.

    ReplyDelete
  141. சட்ட அனுமதியோட எத்தனை தெருவுல டேன்ஸ் பார் இருக்கு ?
    ///

    ரவி.. அந்த சட்டம்.. சட்டமுனு அடிக்கடி வருதே..அதைதான் பாதுகாப்புங்குற பேர்ல நாங்க சொல்றோம்...

    ReplyDelete
  142. This comment has been removed by the author.

    ReplyDelete
  143. This comment has been removed by the author.

    ReplyDelete
  144. ஒரு பெற்ற தாய், தன் மகளுக்கு, தவறான தொடுதலையும், சாதாரண தொடுதைலையும் புரிய வைக்க முடியாதா?...

    இதற்க்கு.. ஆசிரியர் வேண்டுமா?..

    மேலும்.. பெற்றொர்கள் படித்திருந்தால்தான் பிளளைகளுக்கு ஸ்கூலில் அட்மிஷன் என கூறிக்கொண்டுள்ள காலம் இது

    பள்ளிகளுக்கு வேண்டியது 100% Pass...அப்படிப்பட்ட ஆசிரியர்கள் சொல்லிகொடுத்து.. அவர்கள்.. என்ன புரிந்து கொள்ள போகின்றனார்..

    ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது...

    பேண்ட் கழட்டியதுடன் தன் வேலை முடிந்துவிட்டது என் நினக்கும் பெற்றோர்களை.._______ மிதிக்கலாம்..( Fill in the blanks) தப்பேயில்லை...

    ReplyDelete
  145. @முத்து
    இதோ பாருங்க மகா ஜனங்களே தனி மனித தாக்குதலை நான் ஆரம்பிக்கவில்லை,ஆரம்பிச்சபிறகு நானும் ஜோதியில் சேர்ந்துடரதுன்னு முடிவு பண்ணிட்டேன்
    //

    நீ எனக்கு சொன்னதை அவருக்கு சொன்னமாறி புரிஞ்சுகிட்டார் போல முத்து...

    ReplyDelete
  146. வந்துட்டேன்....வந்துட்டேன்...

    ReplyDelete
  147. இது வரை பாத்த விவாதம் ???
    நான் கேக்குறது ஒன்னுதான்.....
    ஆனா அசிங்கமா இருக்கும்......
    வேற வழியில்லை.......
    இதை தனிமனித தாக்குதல்லுன்னு நினைக்க கூடாது. பட்டா ஸ்டாட் மியூசிக்...


    ஆணும் ஆணும் , பெண்ணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது தப்பில்லைன்னு சொல்லக்கூடியவர்களிடமும் , அப்படி நடப்பவர்களிடமும் இந்த கேள்வியை கேட்டால் அவர்களின் பதில் எப்படி இருக்கும்.. குஷ்புவின் பதிலை ஆதரிப்பவரும் சேம் பிளட். முதல்ல அவங்க கூட பிறந்தவர்களை அப்படி நடக்க விட்டுட்டு ??? பிறகு பேசலாம்..

    எல்லாரும் படிக்கிறாங்கன்னு ஒரு விவஸ்தை இல்லை. ச்சே..கர்மம்..கர்மம்..

    ReplyDelete
  148. //எந்த காலத்துல இருக்கீங்க ? பெங்களூரில் மும்பையில் புனேவில் நொய்டாவில் சட்ட அனுமதியோட எத்தனை தெருவுல டேன்ஸ் பார் இருக்கு ? பூனை கண்ணை மூடிக்கிட்டா உலகம் இருட்டு இல்லையடா //

    தமிழ் கலாச்சாரம் தெரியாட்டி என்ன பண்ணுவது !! ஐயோ பாவம்.!!! நானும் பம்பாய பாக்காத ஆள் இல்லை. வாத்யாரே!!

    ஈவ் டீஸிங்கும் இதிலேந்துதானே ஆரம்பிக்குது. பிடிக்காத பெண்னுக்கு அது ஈவ்டீஸிங் . பிடிச்சிருந்தா அது....???

    ReplyDelete
  149. விவாதம் நன்றாக சென்று கொண்டு இருந்தது. வழக்கம் போல விவாதம் என்றாலே அது சண்டையில் தான் முடியும் என்று ஆகி விட்டது :-(

    ஏதாகினும் பல மாற்று கருத்துக்களை எண்ணங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி செந்தழல் ரவி, வெளியூர்க்காரன், ரெட்டைவால் குறிப்பா பட்டாப்பட்டி.

    செந்தழல் ரவி கூறியதை எனக்கு தெரிந்த அளவில் சுருக்கமாக கூறுகிறேன். இதைப்போல செக்ஸ் பற்றிய எண்ணங்கள் மாற்றங்கள் இனி தவிர்க்க முடியாததே. இதை கலிகாலம், உலகம் கெட்டு விட்டது, கலாச்சாரம் என்று கூறினாலும் இதை தடுக்க முடியாது (அது சரியா தவறா என்பது அடுத்த விஷயம்), வருடாவருடம் அதிகரித்துக்கொண்டே தான் செல்லும். எடுத்துக்காட்டாக திருட்டு தனமாக செக்ஸ் புத்தகம் படித்துக்கொண்டு இருந்தவர்கள் இன்று நீலப்படம் இணையம் என்று பரவலாக்கி விட்டார்கள். எங்கேயோ நடந்து கொண்டு இருந்த ஒரு சில திருமணத்திற்கு முந்தைய உறவுகள் தற்போது வெளிப்படையாக நடக்க ஆரம்பித்து விட்டன. "நமக்கு பிடிக்குதோ இல்லையோ இதைப்போல மாற்றங்களை ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டிய கட்டாயத்திற்கு இன்று இல்லை என்றாலும் நாளை நாம் இல்லை என்றாலும் நம்முடைய அடுத்த தலைமுறையினர் தள்ளப்படுவார்கள் என்பதே எனக்கு தெரிந்த விஷயம்"

    இப்படி எல்லாம் நடக்க கூடாது என்று பலர் விரும்பினாலும் அது நடக்காமல் இருக்காது என்பதே கசப்பான உண்மை. மாற்றங்கள் என்றும் தவிர்க்க முடியாததே அது நல்லவையாகவும் இருக்கலாம் கெட்டவையாகவும் இருக்கலாம்.

    ரொம்ப நாளைக்கு பிறகு நல்ல விவாதத்தை (சண்டையில் முடிந்தாலும்) படிக்கும் வாய்ப்பு கிட்டியது. நன்றி பட்டாப்பட்டி

    ReplyDelete
  150. //அட கிராமத்துல திருவிழாவில் மாரை குனிஞ்சி காட்டும் ஆடலும் பாடலும் குத்தாட்ட நிகழ்ச்சியில இல்லாத ஆபாசமா ? ஏன் எந்த கிராமத்து திருவிழாவை பார்த்ததே இல்லையா ? அதை தடை செய்யவேண்டியது தானே கலாச்சார காவல் முண்டங்கள் ?//

    ஆந்திராவில இது இருக்கு ஓக்கே.ஆனா அங்க அதில பெண்கள் கூட்டம் இருக்காது ஒன்லி ஆண்கள் மட்டுமே. ஆனா தமிழ்நாட்டில எத்தனை இடத்துல இருக்கு .

    ReplyDelete
  151. //இப்படி எல்லாம் நடக்க கூடாது என்று பலர் விரும்பினாலும் அது நடக்காமல் இருக்காது என்பதே கசப்பான உண்மை. மாற்றங்கள் என்றும் தவிர்க்க முடியாததே அது நல்லவையாகவும் இருக்கலாம் கெட்டவையாகவும் இருக்கலாம்.//

    ஐயா கிரி.. நம்ம குடும்பத்த சரியா வளர்த்தா, இல்ல நல்ல விஷயத்தை சொல்லி குடுத்தா ஏன் இப்படி வரும்.

    எல்லாத்துக்கும் வெளிநாட்டையே பார்க்கும் நாம இதையும் பேச ஆரம்பிச்சது சரியில்லைன்னு தோனுது.

    ReplyDelete
  152. அவர் டா ன்னு சொன்னார் நான் பதில் டா. இதில் என்ன தனிமனித தாக்குதல் பு மு எல்லாம் வந்துவிட்டது என்று தெரியவில்லை.

    இது கலாச்சார அடிப்படைவாதம். காதலர் தினத்தன்று நாய்க்கும் நாய்க்கும் கல்யாணம் செய்துவைக்கும் கும்பலுக்கும் செக்ஸ் பற்றிய விவாதமோ கல்வியோ தேவை இல்லை என்பாரும் ஒரே தளத்தில் நிற்பது காணகிடைக்கிறது.

    பட்டாப்பட்டி சொல்வது போல தமிழகத்தில் குட் டச் பேட் டச் பற்றி வெளிப்படையாக பேசும் தாய்மார்கள் குறைவு. அது கல்வியறிவின்மையே. தமிழகம் 100 சதம் கல்வியறிவு பெற்றுவிட்டதா என்ன ? ஆணுறையை எப்படி மாட்டுவது என்று தெரியாமல் மாட்டி எயிட்சு வாங்கிவரும் புள்ளிராஜாக்கள் மத்தியில் செக்ஸ் பற்றிய முறையான கல்வி தேவை தேவை.

    குஷ்புவோ அல்லது வேறு எவரோ செக்ஸ் சம்பந்தமாக பேசக்கூடாது என்பது ஜீன்களில் புரையோடிப்போயுள்ள ஆணாதிக்கமேயன்றி வேறில்லை.
    மாற்றம் கல்வி மூலமே சாத்தியம்.

    ReplyDelete
  153. //முற்போக்கு சிந்தனையாளர்களுக்கும் சுதந்திரமாக பேசுபவர்களுக்கும் காங்கிரஸ் சிறந்த இடம்.

    குஷ்பு போல் புத்திசாலித்தனமான பெண்கள் சமூக பிரச்சனைகள் சம்பந்தமான தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கு காங்கிரஸ்தான் சிறந்த இடம்.//

    சார்,சொம்பு ரொம்ப அடி வாங்கி இருக்கே.....

    //அதாவது பொதுமகள் என்ற கருத்தில் சொல்லவரேன்//

    இதுல ஏதோ டபுள் மீனிங் இருக்குற மாதிரியே தெரியுது,ஆனா என்னன்னு தெரியல....பட்டு,ஹெல்ப் ப்ளீஸ்...

    ReplyDelete
  154. //தமிழ்நாட்ல நடக்கறதை தான் சொல்லுச்சு அந்தம்மா.//

    //கொலை கொள்ளை கூடதான் நடக்குது... "தமிழ்நாட்டுல கொலை கொள்ளை பண்ணாதவன் எவன் இருக்கான்னு சொன்னா உங்களுக்குக் கோபம் வருமா வராதா ?//

    ரெட்டயோட கருத்த நான் ஆதரிக்கிறேன். இன்னும் கொஞ்ச நாள்ல அடுத்த மாநிலத்தில் இருப்பதை விட இங்கே கொலைகள் கம்மின்னு ஒரு அறிக்கை வரும்.நாமளும் ரோசமே இல்லாம அதை படிப்போம்....நாம அப்டி பழகிட்டோம் பாஸ்....

    //ஆக பள்ளிகளில் செக்ஸ் சார்ந்த ஒரு பாடம் அல்லது கல்வி தேவை இல்லை என்று கருதுகிறீர்கள்.//

    இல்ல தெரியாம கேக்குறேன்,இப்ப மீடியால காட்டாததையா பள்ளிகூடத்துல சொல்லி தந்துட முடியும்?

    //இன்றைக்கு திருமணம் செய்யும் எத்தனை சதவீதம் ஆண்கள் கற்போடு இருக்கிறார்கள் என்று சொல்லமுடியுமா ?

    அதாவது ஒரு பெண்ணைக்கூட காதலிக்காத எந்த ஆண் தமிழ்நாட்டில் இருக்கிறான் ? அப்படி இருந்தால் அவன் ஆணா ?//

    ஹலோ,உங்களுக்கு என்ன பிரச்சன?எனக்கு என்னமோ நீங்க காதல்,கல்யாணம்,செக்ஸ் இது எதையுமே புரிஞ்சுக்காம உளறிகிட்டு இருக்குற மாதிரி தெரியுது.இல்ல தெரியாம கேக்குறேன்,கலாம் காதலும் பண்ணல,கல்யாணமும் பண்ணல.அவரு ஆண் இல்லைன்னு சொல்றிங்களா?அப்ப,தசரதன் மாதிரி டைப் தான் உண்மையான ஆண்.அப்டியா?படிக்கவே கேவலமா இருக்கு.உங்களுக்கு இத எழுதறதுக்கு கேவலமா இல்ல?

    //சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூட அதைத்தானே சொல்லுது ? அது அநியாயமாக இருந்தால் ஏன் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஆதரவாக கருத்து சொல்கிறார்கள் ?//

    பாஸ்,சட்டம் சொல்ற எல்லாமே சரி கிடையாது.

    //உங்கள் பார்வையில் கற்பு என்பது என்ன ?//

    உங்களுக்கு தெரியாதா,இல்ல நடிக்கிங்களா? கற்பு அப்டிங்கறது loyalty. உங்க துணைக்கு நீங்க loyal ஆ இருக்குறது.கல்யாணத்துக்கு முன்னாடியும்,பின்னாடியும்....இதுதான் நம்ம கலாச்சாரம்.

    //விபச்சாரம் எப்படி தவறுன்னு சொல்றீங்க ? காபரே டான்ஸ் தவறா ? உடலை விக்குறா, பணம் பெறுகிறா. உலகின் ஆதி தொழில் அது தானே ?//

    இது கொஞ்சம் முத்துன கேசு.
    ஏங்க,உலகம் தொடங்குனதுல இருந்து அதி தொழில் விபசாரமா?எந்த வெண்ண சொன்னான்?
    இப்படியே ஒருத்தன் ஆதி தொழில் கொள்ளையடிக்கிறது தான்னு சொன்னா,உங்க பணம் எல்லாத்தையும் தூக்கி கொடுத்துடுவீங்களா?இல்ல நீங்களும் கொள்ளையடிக்க போயிடுவீங்களா?பதில் சொல்லுங்க.....

    ReplyDelete
  155. என்னுடைய தவறான புரிதலில் இடப்பட்ட இரண்டு கமெண்ட்ஸ் அழித்து விட்டேன்,செந்தமிழ் சார் என்னை மன்னிக்கவும்.

    ReplyDelete
  156. கிரி said...

    விவாதம் நன்றாக சென்று கொண்டு இருந்தது. வழக்கம் போல விவாதம் என்றாலே அது சண்டையில் தான் முடியும் என்று ஆகி விட்டது :-(/////////
    ::::::::::::::::::::

    விவாதம் என்றாலே கருத்து மோதல் தானே.



    ஏதாகினும் பல மாற்று கருத்துக்களை எண்ணங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி செந்தழல் ரவி, வெளியூர்க்காரன், ரெட்டைவால் குறிப்பா பட்டாப்பட்டி.
    செந்தழல் ரவி கூறியதை எனக்கு தெரிந்த அளவில் சுருக்கமாக கூறுகிறேன். இதைப்போல செக்ஸ் பற்றிய எண்ணங்கள் மாற்றங்கள் இனி தவிர்க்க முடியாததே. இதை கலிகாலம், உலகம் கெட்டு விட்டது, கலாச்சாரம் என்று கூறினாலும் இதை தடுக்க முடியாது (அது சரியா தவறா என்பது அடுத்த விஷயம்), வருடாவருடம் அதிகரித்துக்கொண்டே தான் செல்லும். எடுத்துக்காட்டாக திருட்டு தனமாக செக்ஸ் புத்தகம் படித்துக்கொண்டு இருந்தவர்கள் இன்று நீலப்படம் இணையம் என்று பரவலாக்கி விட்டார்கள். எங்கேயோ நடந்து கொண்டு இருந்த ஒரு சில திருமணத்திற்கு முந்தைய உறவுகள் தற்போது வெளிப்படையாக நடக்க ஆரம்பித்து விட்டன. "நமக்கு பிடிக்குதோ இல்லையோ இதைப்போல மாற்றங்களை ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டிய கட்டாயத்திற்கு இன்று இல்லை என்றாலும் நாளை நாம் இல்லை என்றாலும் நம்முடைய அடுத்த தலைமுறையினர் தள்ளப்படுவார்கள் என்பதே எனக்கு தெரிந்த விஷயம்"///////////////
    :::::::::::::::::::::::::::::
    நீங்கள் சொல்வதை ஒற்றுகொள்கிறேன்,ஆனால் வெள்ளம் வருகிறது என்று தெரிந்த பின்பும் அணையை மூடாமல் வெடி குண்டு வைத்து தகர்க்கும் முயற்சியை என்னவென்று சொல்வது .

    ReplyDelete
  157. நம்முடைய கலாச்சாரம் என்பது மற்ற நாட்டுக்காரர்கள் பொறாமைப்பட்டுப் பார்க்கும் ஒன்று. வெளி நாடுகளில் வாழும் நண்பர்கள் அதை உணர்ந்திருப்பர் என்றே நினைக்கிறேன்.சுலபமான வார்த்தைகளில் சொல்வதானால் குடும்ப அமைப்பு. மகன் மகள்களுக்காக உழைப்பதும் பின்பு பேரன் பேத்திகளுக்காக வாழ்வதும் (பெஸ்ட் உதாரணம் கலைஞர்) அண்ணன் தம்பி தங்கை என சண்டையிட்டுக்கொண்டாவது ஒரு அமைப்புக்கு உறுதுணையாக வாழ்வது தான் நம் நடைமுறை. அதில் கல்யாணம், காதுகுத்து, முதல் ஒப்பாரி வைப்பது வரை சடங்குகள் செய்து வைத்தது ஒரு ஒழுங்கு முறைக்குள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவே. கல்யாணமான நான்கைந்து வருடங்களுக்குப் பின் செக்ஸ் வாழ்க்கை அலுத்த பின்பும் குடும்பம் , உறவுகள் என கடைசி வரை ஓடி ஓடி உழைப்பதில் தான் ஒருவருக்கொருவர் துணையாக வாழ்வதின் அர்த்தமிருக்கிறது. மற்றபடி லிவிங் டுகெதெர் வாழ்க்கையில் நூற்றூக்கு ஒன்றிரண்டு ஜோடிகள் மட்டுமே ஆத்மார்த்தமாக இருக்க முடியும். மற்ற் கேஸுகளெல்லாம் அலுத்துப் போன பின் அற்றுக்கொண்டு போகவே எத்தனிக்கும்.ஏனென்றால் கமிட்மென்ட் இருக்காது.கமிட்மென்ட் இல்லாத வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் இருந்துவிட முடியும்.தெரு நாய்களைப்போல குட்டிகளைப் போட்டு விட்டு அலைவதற்கும் லிவிங் டுகெதெருக்கும் பெரிய வித்தியாசமில்லை.

    நீண்ட பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்!

    ReplyDelete
  158. ILLUMINATI said...

    ,கலாம் காதலும் பண்ணல,கல்யாணமும் பண்ணல.அவரு ஆண் இல்லைன்னு சொல்றிங்களா?அப்ப,தசரதன் மாதிரி டைப் தான் உண்மையான ஆண்.அப்டியா?படிக்கவே கேவலமா இருக்கு.உங்களுக்கு இத எழுதறதுக்கு கேவலமா இல்ல?

    **********************************

    அதான் அவரே சொன்னாரே இலுமி...பல்லு இருக்கறவன் பட்டாணி சாப்பிடறான்னு...

    பல்லு இருக்குங்கறதுக்காக பட்டாணி சாப்பிடறவனை கலாச்சார போலீஸ்கள் லத்தியக் கொண்டு அடிக்கிறதுல தப்பே இல்லை...! இவரை மாதிரி ஆளுங்களுக்குக் கடைசி வரைக்கும் நீ சொல்ற Loyalty ங்கிற வார்த்தைக்கு அர்த்தம் தெரியப் போறதே இல்லை!

    Let us close this topic!

    ReplyDelete
  159. நீதிபதி குடுத்த தீர்ப்புக்கு எதிரா சட்டம் போட்ட கேரளா கவர்மெண்ட்டுக்கு என்ன சார் பதில். நீதிபதி...சட்டம்.. பேசக்கூடிய பெரியோரே வாங்க...

    ஒரு நீதிபதி குஷ்புக்கு ஆதரவா சொன்னா அது சரிதானா என்ன ?

    ReplyDelete
  160. //Let us close this topic!//

    பட்டா எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்..

    ReplyDelete
  161. பல்லு இருக்குங்கறதுக்காக பட்டாணி சாப்பிடறவனை கலாச்சார போலீஸ்கள் லத்தியக் கொண்டு அடிக்கிறதுல தப்பே இல்லை...! இவரை மாதிரி ஆளுங்களுக்குக் கடைசி வரைக்கும் நீ சொல்ற Loyalty ங்கிற வார்த்தைக்கு அர்த்தம் தெரியப் போறதே இல்லை!////

    லாயல்டிக்கு அர்த்தம் தெரியும். அதே சமயம் தனக்கு ஒரு துணையை கூட தேடிக்கொள்ள தெரியாதவன் எப்படி மனிதன் ? உங்களுக்கு சோசியக்காரனும் மேட்ரிமோனியும் துணையாக வரக்கடவது.

    அதுல கரெக்டா உங்க சாதி உட்பிரிவெல்லாம் பார்த்து தேடுங்கடே. இல்லைன்னா அப்பாவோட தங்கச்சி மகளா பார்த்து கஷ்டப்பட்டு அரேஞ்சுடு மேரேஜ் செய்ங்க. குழந்தை வாய் கோணிக்கிட்டு பொறக்கும். சயின்ஸ் சொல்லுது.

    ReplyDelete
  162. ஒரு நீதிபதி குஷ்புக்கு ஆதரவா சொன்னா அது சரிதானா என்ன ?

    --------

    ஓ அது தப்பா ? அப்ப ஏன் நீங்க சுப்ரீம் கோர்ட்ல அப்பீல் போறது ? இருக்கற ஒன்னு ரெண்டு முடியும் கொட்டிப்போகும் செயிலானி. (முடி இருக்கா என்ன )

    ReplyDelete
  163. //ஓ அது தப்பா ? அப்ப ஏன் நீங்க சுப்ரீம் கோர்ட்ல அப்பீல் போறது ? இருக்கற ஒன்னு ரெண்டு முடியும் கொட்டிப்போகும் செயிலானி. (முடி இருக்கா என்ன )//

    ஹா..ஹா...அப்ப உண்மை உங்களுக்கு தெரியும்.அதான் ரெண்டாவதுக்கு பதில் சொல்றீங்க....

    ReplyDelete
  164. செந்தழல் ரவி said...

    ஒரு நீதிபதி குஷ்புக்கு ஆதரவா சொன்னா அது சரிதானா என்ன ?

    --------

    ஓ அது தப்பா ? அப்ப ஏன் நீங்க சுப்ரீம் கோர்ட்ல அப்பீல் போறது ? இருக்கற ஒன்னு ரெண்டு முடியும் கொட்டிப்போகும் செயிலானி. (முடி இருக்கா என்ன ):::::::::::::


    ஜெய்லானி அது ஒன்னும் அவரிடம் இல்லை.(முடி இருக்கா)
    அதான் உன்னிடம் இருக்கா என்று கேட்டார்

    ReplyDelete
  165. சாருக்கு, சாரி பார்சல்
    .
    .
    .
    .
    .
    .
    .




    ஒன்னும் புரியலையா தனி மனித தாக்குதல் இல்லை

    ReplyDelete
  166. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகண்ம்.
    1.அதெப்படி பதிவு போட்ட 20 மணி நேரத்துல 200 பின்னூட்டம் வரவழைப்பது?
    2. இந்தப்பின்னூட்டங்களை வைத்துக்கொண்டு என்ன செய்வது. இதை நானாக்கேக்கலீங்கோ. எங்க அப்பாரு மசக்கவுண்டருதான் கேக்கச்சொன்னாருங்கோ

    ReplyDelete
  167. @செந்தழல் ரவி said...
    //காதலர் தினத்தன்று நாய்க்கும் நாய்க்கும் கல்யாணம் செய்துவைக்கும் கும்பலுக்கும் செக்ஸ் பற்றிய விவாதமோ கல்வியோ தேவை இல்லை என்பாரும் ஒரே தளத்தில் நிற்பது காணகிடைக்கிறது.
    //


    ஹா.ஹா.. இதை யார் சார் ஆதரிக்கிறா?..

    //
    குஷ்புவோ அல்லது வேறு எவரோ செக்ஸ் சம்பந்தமாக பேசக்கூடாது என்பது ஜீன்களில் புரையோடிப்போயுள்ள ஆணாதிக்கமேயன்றி வேறில்லை.
    மாற்றம் கல்வி மூலமே சாத்தியம்.
    //

    ரவி.. கல்யாணம் பண்ணாம, கூடி வாழ்ந்து,பிரச்சனை ஆயி, கலைஞர் வந்து செட்டில் செஞ்ச கேஸ் இது..
    அப்புறமா, ஒரு நல்லவரை.. கல்யாணம் பண்ணி வாழ்க்கையில செட்டில் ஆயிட்டு..அந்தம்மா என்ன வேணா பேசலாம்..
    நாங்க கேட்கனும்...



    //. அதே சமயம் தனக்கு ஒரு துணையை கூட தேடிக்கொள்ள தெரியாதவன் எப்படி மனிதன் ? உங்களுக்கு சோசியக்காரனும் மேட்ரிமோனியும் துணையாக வரக்கடவது. அதுல கரெக்டா உங்க சாதி உட்பிரிவெல்லாம் பார்த்து தேடுங்கடே. இல்லைன்னா அப்பாவோட தங்கச்சி மகளா பார்த்து கஷ்டப்பட்டு அரேஞ்சுடு மேரேஜ் செய்ங்க. குழந்தை வாய் கோணிக்கிட்டு பொறக்கும். சயின்ஸ் சொல்லுது.
    //

    இதை நான் ஒத்துக்கொள்கிறேன்..இப்ப அப்படி பண்ணுவது இல்ல சார்...
    விருப்பபட்டு...கல்யாணம் பண்ணிகிட்டு வாழுஞ்கனுதான் நாங்களும் சொல்கிறோம்..
    சும்மா.. சேர்ந்து வாழலாமுனு சொல்லுவது.. ஜல்லியடிக்கிற வேலை..
    இளமை தொலைந்ததும்..ஆண், தட்டிட்டு போயிடுவான்...பெண்?...






    // பட்டாப்பட்டி சொல்வது போல தமிழகத்தில் குட் டச் பேட் டச் பற்றி வெளிப்படையாக பேசும் தாய்மார்கள் குறைவு. அது கல்வியறிவின்மையே. தமிழகம் 100 சதம் கல்வியறிவு பெற்றுவிட்டதா என்ன ? ஆணுறையை எப்படி மாட்டுவது என்று தெரியாமல் மாட்டி எயிட்சு வாங்கிவரும் புள்ளிராஜாக்கள் மத்தியில் செக்ஸ் பற்றிய முறையான கல்வி தேவை தேவை.
    //


    உங்க கான்செப்ட்க்கு வரேன்.. ஊர்ல ஒதுக்குப்புறமா ஆள்விழுங்கும் புதைகுழியிருக்கு..
    அதுக்குள்ள போனா, உயிரோடு திரும்பி வருவது கஷ்டம்.. அதனால..அதுக்கு முன்னாடி
    ஒரு போர்ட் ( அப்பா.. தலைப்ப சொல்லியாச்சு..) வெச்சு..உள்ளே செல்ல வேண்டாம் என நாங்கள் கூறுகிறோம்..

    நீங்க..உள்ள போனா..எப்படி தப்பிச்சு வரனுமுனு சொல்லிட்டு இருக்கீங்க..
    90% போர்ட் பார்த்துட்டு, அவரவர் வேலைய பார்க்கபோயிடுவானுக..
    10% உள்ள போயி என்னதான் இருக்குனு துடிக்கிறாங்க...சரி.. போயி பாருங்கடானு விட்டுவிட வேண்டியதுதானே..


    ஒரு காலத்தில பால்ய கல்யாணம் இருந்தது.. விவரம் புரியாத வயதில், பெருசுங்க, சின்னவங்களை
    சேர்த்து வெச்சு ஆட்டம் போட்டது..பெருசுங்க எண்ணங்களை ..சிறுசுக மேல திணிப்பது தப்புதான்..
    ஆனா.. இப்ப நாம் பேசுவது, சுயமாக, சிந்திக்ககூடிய தனிமனிதனை பற்றி..

    ஆணுறையை எப்படி மாட்டுவது என்று தெரியாமல் மாட்டி, எயிட்சு வாங்கிவரும் பன்னாடைக... நமக்கு எதுக்கு சார்..
    அவனுக போய் சேரட்டும்..

    ReplyDelete
  168. ஏம்பா.. வரவர நான் டோமர் மாறி ,பேச ஆரம்பிச்சுட்டுடேனா?...
    இல்ல சின்ன டவுட்டு..அதுக்குத்தான் கேட்டேன்..

    ReplyDelete
  169. @Prabhu said...
    எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகண்ம்.
    1.அதெப்படி பதிவு போட்ட 20 மணி நேரத்துல 200 பின்னூட்டம் வரவழைப்பது?
    2. இந்தப்பின்னூட்டங்களை வைத்துக்கொண்டு என்ன செய்வது. இதை நானாக்கேக்கலீங்கோ. எங்க அப்பாரு மசக்கவுண்டருதான் கேக்கச்சொன்னாருங்கோ
    //

    இந்த ஹிட் ரேட்டு.. எக்ஸ்ட்ரா வெச்சுகிட்டு காதுகூட குடைய முடியாது பிரபு...

    கமென்ஸ்..இது ஒரு கருத்து பரிமாற்றம்.. உலகத்தில எல்லாம் தெரிஞ்சவன் எவனுமில்லை..
    அதனால..புதுசா தெரிஞ்சுக்கிறதுல தப்பேயில்லை.. ஆனா..அதுக்காக.. என்னோட கருத்துதான், சரினு சொல்லவரலே..ஆனா.. என்னொட கருத்து தப்புனு.. சரியா சொல்ற வரை என்னுடைய தேடல் இருக்கும்..

    ( வரவர விசு மாறி பேச் ஆரம்பிச்சுட்டேன்.. ஹா..ஹா..)

    ReplyDelete
  170. யோவ் பட்டு,என் ப்ளாக் ல உளியடி.....

    வந்து சேர்ந்திரு....

    ReplyDelete
  171. //அதான் உன்னிடம் இருக்கா என்று கேட்டார்//

    முத்து நான் செயிலானிக்கிட்ட இல்லை கேட்டேன். முடியோ மூளையோ அவர் பதில் சொல்லட்டுமே ? செயிலானி என்பது ஏதோ நார்த் இண்டியன் பெயர் மாதிரி இருக்கே எப்படி டமில்ல டைப்பன்றாருன்னு கேக்கறதுக்காக.

    இங்கே இரண்டு விஷயங்கள். விவாதித்த அத்தனை விஷயங்களையும் இதில் பொருத்தலாம்.

    சமூக பாதுகாப்பு மற்றும் சட்ட பாதுகாப்பு.

    இந்திய அளவில் சுப்ரீம் கோர்ட்டே சொல்லிவிட்டது. இனிமேல் வேறு அப்பீல் இல்லை. சமூகம் பொத்திக்கொண்டுதான் போகவேண்டும்.

    லிவ்விங் டுகெதராக வாழ்பவனை நான் தடியெடுத்து அடிப்பேன் என்கிறார் ஒருவர். இது அவரது தனிமனித சுகந்திரத்தில் தலையிடுவதாகும். ஒரு பால்புணர்ச்சியாளர், ரோகி, எயிட்சு வியாதியால் பாதிக்கப்பட்டவர், லிவ்விங் டுகெதர், ப்ரி அல்லது போஸ்ட் மாரிட்டல் லைப் வாழ்பவர்கள் எல்லோருக்கும் அவரவர் வாழ்க்கையை வாழ உரிமையுண்டு.

    அதில் தலையிடுவது கிரிமினல் குற்றமாகும்.

    பாக்கிஸ்தானில் ஆப்கானிஸ்தானில் காதலித்த வயதுப்பெண்ணை சூழ நின்று கல்லால் அடித்தோ தடியால் அடித்தோ தண்டனை கொடுக்கும் முல்லா முண்டங்களுக்கும் நான் லிவ்விங் டுகெதராக வாழ்பவனை தடியால் அடிப்பேன் என்று சொல்பவருக்கும் என் பார்வையில் வித்யாசமில்லை. இருவரும் வேறு வேறு இடங்களில் நின்றாலும் ஒரே தளத்தில் நிற்கிறார்கள். இவர்கள் தான் காலம் காலமாக பெண்ணை அடிமைப்படுத்தியவர்கள். இவர்கள் தான் இன்றைக்கு பெண்ணும் அவர் சார்ந்த சமூகமும் முன்னேறுவதை பொறுக்க முடியாமல் பொருமி தள்ளுபவர்கள்.

    தமிழ் பண்பாட்டை காக்கிறேன் இன்று விவாதம் செய்பவரின் தனிப்பட்ட வாழ்க்கையை எடுத்து ஆராய்ந்தால் நாறித்தான் போகும். மகேசு சுரேசு என்று குழந்தைக்கு பெயர் வைத்துவிட்டு மானாடமயிலாட குடும்பத்துடன் பார்ப்பவர்கள், உழவர் திருநாளில் குக்கரில் பால்காய்ச்சுபவர்கள். இவர்கள் என்றைக்கும் நிலத்தில் இறங்கியிருக்கமாட்டார்கள். ஆனால் உழவுத்தொழில் பற்றி விவாதம் வந்தால் தொண்டை கிழிய பேசுவார்கள்.

    இப்படி கட்டுப்படுத்தி கட்டுப்படுத்திதான் கூட்டுக்குடும்பம் என்னும் தமிழ் பண்பாடு உடைந்து சிதறிவிட்டது. இன்றைக்கு போய் மனைவியிடம் சொல்லிப்பாருங்களேன். வாயேன், என் அப்பா, என் அம்மா, உன் அப்பாம்மா, என் பெரியப்பா சித்தப்பா என்று கூட்டுக்குடும்பமாக தமிழ் பண்பாட்டுப்படி வாழலாம் என்று. என்ன பதில் கிடைக்கும் ?

    என்னை பற்றி நன்றாக அறிந்தவர்களுக்கு புதிதாக நான் எப்படி பண்பாட்டை கலாச்சாரத்தை பேணுகிறேன் என்பது தெரியும். அறிவியல் முன்னேற்றத்தின் கூறுகளை பயன்படுத்திக்கொள்வார்கள், சேட்டிலைட் போனில் பேசுவார்கள், ஆனால் முண்டமே சோதிடத்தை நம்பாதே அது ஹம்பக், பூமியும் மனிதனும் கடவுள் படைத்தது என்பது டுபாக்கூர், என்றால் ஒத்துக்கொள்ளமாட்டார்கள்.

    தூங்குவது போல நடிப்பவர்களை ஏன் எழுப்பவேண்டும் ? அவர்கள் முகத்தில் தண்ணீர் படும்போது அவர்களே எழும்பட்டும்.

    ReplyDelete
  172. செந்தழல் ரவி said...

    சமூகம் பொத்திக்கொண்டுதான் போகவேண்டும்.

    ***********************************இது தான் நம் சமூகத்தின் சாபக்கேடு. தனி மனித சுதந்திரம் என்ற பெயரில் என்ன அட்டூழியம் வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைப்பவர்களால் தான் ஆபத்து. இதை பகுத்து ஆய்ந்து வாழ்பவர்களால் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் குழந்தைகளின் நிலைமையை யோசித்துப் பாருங்கள்.

    பொருளாதார சுதந்திரம் சேர்த்து வைக்கும் லிவிங் டுகெதெரில் பெரும்பாலான கேஸ்கள் முப்பது நாற்பது வருடங்கள் சேர்ந்து வாழப் போவதில்லை.பிடிக்கவில்லையென்றால் பிரிந்து விடுவது என்கிற ஒப்பந்தத்திலேயே சேர்ந்து வாழ ஆரம்பிக்கின்றனர். அவ்வாறு மெஜாரிட்டி பிரிந்தவர்களில் பெண்கள் படும் துயரம் நிச்சயமாக அதிகமாக இருக்கும்.அவளை விபசாரி என்ற கண்ணோட்டத்திலேயே சமூகம் பார்க்கப் போகிறது. அது அவளை மட்டுமல்லாது ஒரு குடும்பத்தையே பாதிக்கும் (அவளுடைய பெற்றோர்கள், குழந்தைகள்).

    திருமணம் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பதால் அது அடிமைப் படுத்துவதல்ல. அது ஒரு குடும்பத்தின் பாதுகாப்பு, சமூக ரீதியாகவும் சட்ட ரீதியாகவும். விபசாரி என்றழைத்தாலும் நாங்கள் விரும்பிய படி தான் வாழ்வோம் என்றால் உங்களை யார் தடுக்க முடியும். ஆனால் அந்த வாழ்க்கை முறை எங்கள் வரவேற்பறைக்குள்ளும் குழந்தைகளின் மனதிலும் வந்தால் அடிக்கத்தான் செய்வோம்!

    ReplyDelete
  173. ஆனால் அந்த வாழ்க்கை முறை எங்கள் வரவேற்பறைக்குள்ளும் குழந்தைகளின் மனதிலும் வந்தால் அடிக்கத்தான் செய்வோம்............

    ஓ தாராளமா அடிங்க. இந்த கலாச்சார போலீசு வேலை செய்ததுக்கு அப்புறம் சட்டமும் என் சுகந்திரத்தில் ஏன் தலையிடுகிறாய் மடையா என்று (உங்க குழந்தைகள் உட்பட) உங்கள் முகத்தில் உமிழும்போது அதை துடைத்துக்கொண்டும், கிரிமினல் குற்றம் செய்தமைக்காய் சட்டம் உங்களை குனியவைத்து பின்னால் சொருகும்போதும் வாங்கிக்கொண்டு போங்கள். Best of லக்கு.

    End of the Story !!

    ReplyDelete
  174. செந்தழல் ரவி said...

    உங்களை குனியவைத்து பின்னால் சொருகும்போதும் வாங்கிக்கொண்டு போங்கள். Best of லக்கு.

    **********************************

    இது தான் உங்கள் கலாச்சாரம் மற்றும் நாகரிகம். இவர்களின் முதிர்ச்சியான எண்ணங்களை இவர்கள் வார்த்தைகள் காட்டிக் கொடுத்துவிடுகின்றன. Evolute ஆகாத உங்களுடன் விவாதம் செய்தது தவறு என்று இப்போது புரிகிறது. இது தான் உங்கள் கலாச்சாரம் என்றால் நாங்கள் கலாச்சார போலீஸாக இருப்பதில் எங்களுக்குப் பெருமை தான்.

    Best of Luck for you too!

    ReplyDelete
  175. ரவி.. விவாதத்தில செருகுவது..குத்துவது என திசை மாற்ற நினைத்தால்...
    நீங்க பண்ணுங்க.. ஆனா உங்க குழந்தைகளுக்கு...

    ஆமா.. அப்படி எத்தனை முன்னோர்களுக்கு, நம்ம ஜெனெரேஷன்ல சொருகியிருக்கோம்..

    ReplyDelete
  176. // End of the Story !!//

    இப்ப ரெட்டை சொன்னதை நினைவுப்படுத்த விரும்புகிறேன்...
    //

    "அப்பா இன்னிக்கு காலேஜ்ல பிரைஸ் வாங்க்கிட்டேன் என்று மகள் சொல்கிறாளென்றால் அப்பா சந்தோஷப்படுவார்!

    "அப்பா இன்னிக்கு ஒரு பையனோட சேஃபா செக்ஸ் வச்சிக்கிட்டேன் என்று சொல்கிறாளென்றால் அந்த தகப்பனுக்கு எப்படி இருக்கும்...?

    //

    யார் யாருக்கு சொருகுறா என்பதை நம் குழந்தைகள் முடிவு செய்யட்டும் ரவி..
    இதுக்கு மேல பேச.. நான் தயாரில்லை ரவி

    ..நீங்க உங்க எண்ன்ணங்கள் படியே உங்க குழந்தைகளை வளர்ங்க... அது உங்க சுதந்திரம்.

    ReplyDelete
  177. //
    செந்தழல் ரவி said...

    ஆனால் அந்த வாழ்க்கை முறை எங்கள் வரவேற்பறைக்குள்ளும் குழந்தைகளின் மனதிலும் வந்தால் அடிக்கத்தான் செய்வோம்............

    ஓ தாராளமா அடிங்க. இந்த கலாச்சார போலீசு வேலை செய்ததுக்கு அப்புறம் சட்டமும் என் சுகந்திரத்தில் ஏன் தலையிடுகிறாய் மடையா என்று (உங்க குழந்தைகள் உட்பட) உங்கள் முகத்தில் உமிழும்போது அதை துடைத்துக்கொண்டும், கிரிமினல் குற்றம் செய்தமைக்காய் சட்டம் உங்களை குனியவைத்து பின்னால் சொருகும்போதும் வாங்கிக்கொண்டு போங்கள். Best of லக்கு.

    End of the Story !!
    //

    ரவி..மீண்டும் ஒரு முறை கன்பார்ம் செய்துகொள்ள விரும்புகிறேன்..

    உங்களோட புரொபல் ஐடி.. வேறமாறி இருக்கு..

    அது நீங்கதானா?.. இல்ல வேற யாராவது நடுவுல விளையாடரானுகளா?

    ReplyDelete
  178. அதுவும் நமது கம்பேனி வலைப்பூவே !! நன்றி !!!

    ReplyDelete
  179. ரவி.. இது நீங்க , உங்க ப்ளாக்ல சொன்னது....

    //
    இந்த எழுத்து சீர்திருத்தம் செயல்படுத்தப்படுமாயின் இந்த தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என்ற நிலை ஏற்படும். ஆகவே பெருந்தன்மையோடு இந்த முயற்சியை கைவிடுங்கள்.
    //


    ஏன் இங்க மட்டும் மாற்றங்கள் வேண்டாம் ரவி..?

    நமக்கு.. அஞ்சு காசு பிரயோசனமில்லை என்பதாலா?...

    ReplyDelete
  180. செந்தழல் ரவி போன்றவர்கள், கலாச்சாரத்தையும் தொலைத்து, தன்னையும் தொலைத்து, மிகவும் குழம்பிபோய், என்ன பேசுகிறோம் என்று அறியாமல், எது நல்லது எது கெட்டது என்று அறியமுடியாமல், மேற்கத்திய கலாச்சாரமா , இல்லை தமிழ் கலாச்சாரமா என்று குழப்பத்தில் வாழ்கிறார்கள்.
    சுமார் 5000 வருட கலாசாரம் நம்முடையது. அவரை போன்ற அறிவிளிகளால் அது அழியாது.

    குஷ்பூவின் வழக்கில் கூறப்பட்டது சட்டரீதியான தீர்ப்பு. கலாசாரரீதியான தீர்ப்பு அல்ல. அதை முற்படுத்தி கொண்டு அதன்படி அவர் மகளை அவர் யாருக்கு வேண்டுமானாலும் காட்ட சொல்லட்டும்.

    பட்டாபட்டியின் வாதத்திற்கு நான் முழு ஆதரவு தருகிறேன்.

    குஷ்பூ போன்றவர்கள் லைசென்சுக்காக ஒருவரை கல்யாணம் செய்து கொண்டு சுகத்திற்காக கண்டவனுடன் அலையும் ரகம்.

    'Living Together ' இதில் நம் ஊரில் எத்தனை பேர் வாழ்கிறார்கள் 120 கோடியில் . மற்றவர்களெல்லாம் முட்டாள் இவர் ஒருவர் மட்டும் அறிவாளி போல் பேசுகிறார்.

    தன் மகளுக்காக இவரே ஆள் தேடுவார் போல் தெரிகிறது.

    நான் கலாசார காவலன் அல்ல. பெண் சுகந்திரத்திற்காக முழு ஆதரவு தெரிவித்து அதன் படி நடப்பவன்.

    ஒரு இனத்தை அழிக்க அவர்கள் கலாச்சாரத்தை அழித்தால் போதும் என்று சொல்லுவார்கள். ரவி போன்றவர்கள் அதைத்தான் செய்ய துடிக்கிறார்கள். அவருடைய மிக நெருங்கிய யாராவது பெண் வேறு ஒருவரிடம் 'காட்டும்' போது அவர் மனதில் ஒரு வலி ஏற்படும். அப்போது தெரியும், பட்டா சொல்வது என்னவென்று . அப்படி வலி ஏற்படவில்லையென்றால் அவருக்கும் தெரு நாயிக்கும் வித்தியாசம் இல்லை.

    ReplyDelete
  181. ஆஹா! அருமை பாலா!

    உங்களின் கருத்தை முழுமையாய் ஆதரிக்கிறேன்!

    பிரபாகர்...

    ReplyDelete
  182. இங்கே 101 பதிவர்களின் வலைப்பதிவுகளை திரட்டி ஓரே பக்கத்தில் தந்துள்ளோம்.

    www.tamilblogger.com

    ReplyDelete
  183. ரவி அண்ணே!

    புதுமை, மாற்றம் எல்லாம் சரி. கிரி சொல்வது போல் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இந்த மாற்றங்கள் நம்முள் புகுந்துவிடும். நாம் அதை ஏற்றுக்கொண்டு வாழும் பக்குவம் நமக்கு வேண்டும்.

    திருமணம் என்ற கட்டுப்பாட்டை நாமே நமக்கு விதித்துக் கொண்டாலும் பலரால் பல காலமாக ஏற்றுக்கொள்ளப் பட்ட ஒன்றாகிறது.

    இப்போதாவது ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ பலர் முனைந்து வருகிறார்கள். சங்க காலத்தில் பல தார வாழ்கை இயல்பாக இருந்து வந்திருக்கிறது.

    திருமணம் என்ற பந்தத்தில் எவ்வளவு சிக்கல்கள் இருக்கிறது என்று நீங்கள் சொல்கிறீர்களோ அதே அளவுக்கு அல்லது அதை விட மேலாக சேர்ந்து வாழும் வாழ்கை முறையிலும் இருக்கும். தற்போது அந்த முறை தலையெடுத்து வருவதால் இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற ரீதியில் தோன்றலாம்.


    அந்த வாழ்க்கையில் தோற்ற சிலரை வெகு விரைவில் நாம் சந்திக்கக்கூடும். அப்போது கேட்டுப்பாருங்கள் அங்கு உள்ள சிக்கல்களை.

    நமது பெரும்பான்மையான மக்களின் மனப்பான்மையின்படி இந்த சேர்ந்துவாழும் அமைப்பில் இழப்பு என்று வந்தால் அது அந்தப் பெண்ணையும், அவர்களின் குழந்தையையும் பாதிக்கும்.

    நாம் வேலி தாண்டும்போது அல்லது வேலி தாண்ட வாய்ப்புக்கிடைக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி நமக்கு நெருக்கமான உடன்பிறப்புகள், மனைவியர் வேலி தாண்ட முயலும்போது / தாண்டும்போது மகிழ்வோமா?? ஏற்றுக்கொள்வோமா??

    ப்ரீ / போஸ்ட் மேரிடல் செக்ஸ் என்பது பல காலமாக இருந்துவரும் ஓன்று தான். இது சரியா அல்லது தவறா என்ற வாதம் கூட இங்கு எடுபடாது.

    பொதுவாகவே ஒரு காரியம் என்னால் செய்யப்படும்போது சரியாகவும், பிறரால் செய்ப்பப்படும்போது தவறாகவும் பார்ப்பதே மனித இயல்பு.

    ReplyDelete
  184. இந்த மாற்றங்கள் சரியா? தவறா?(சரி தவறு என்ற ஒன்று கூட மனிதனுக்கு மனிதன், சூழல் பொருத்தும் மாறும்) என்பதைவிட இது உகந்தது அல்ல என்பது பலரின் எண்ணம்.

    சட்டம் சொல்லிவிட்டது என்பதற்காக நாம் "அவிழ்த்துவிட்ட" கழுதையாக வாழ முடியாது. இந்த தீர்ப்பை சொன்ன கணம் நீதிபதியின் புதல்வனோ, புதல்வியோ வந்து நான் நேற்று ஒருவனுடன்/ஒருத்தியுடன் எனது படுக்கையை பகிர்ந்து கொண்டேன். அவனை(ளை) எனக்குப் பிடிக்கவில்லை நாளை வேறு ஒரு துணை தேடப்போகிறேன் என்று சொல்லும்போது அவர் எழுதிய சட்டமும், தீர்ப்பும் பின்னால் சொருகும்.

    ReplyDelete
  185. ஜாதகம், ஜாதி, மதம், தாலி, யாரென்றே தெரியாமால் நிச்சயம் செய்தல் இவற்றை மட்டும் வெறுத்து இருவரும் மனதளவில் நெருங்கி வாழ்ந்து தனது வாழ்வின் கடமைகள் மற்றும் அவர்களின் நெடுநாள் இணைந்து வாழ்தலின் அவசியம் / மகிழ்வினைப் புரிந்து கொண்டிருந்தால், இவர்களுக்கும் திருமணவாழ்வில் இருப்பவர்களுக்கும் பெயர்மட்டுமே வித்தியாசம்.

    இதைக் குறை கூறவும் முடியாது...

    ReplyDelete
  186. வணக்கம் ரோஸ்விக் இந்த விவாதத்தை இதற்க்கு மேல் சரியாக புரிந்து யாராலும் இது போல் சொல்ல முடியாது உங்களுக்கு நன்றியுடன் கலந்த வணக்கங்கள்

    ReplyDelete
  187. செந்தழல் ரவி said...

    //அதான் உன்னிடம் இருக்கா என்று கேட்டார்//

    முத்து நான் செயிலானிக்கிட்ட இல்லை கேட்டேன். முடியோ மூளையோ அவர் பதில் சொல்லட்டுமே ? செயிலானி என்பது ஏதோ நார்த் இண்டியன் பெயர் மாதிரி இருக்கே எப்படி டமில்ல டைப்பன்றாருன்னு கேக்கறதுக்காக.////////



    உங்களுக்கு ஒன்னு சொல்ல விரும்புகிறேன்,இது பட்டு ப்ளாக் உங்களுடையது இல்லை,அதுவும் எங்களை பற்றி தெரியாமல் இது போல் கமெண்ட் பண்ணுவது சரி வாறது

    ReplyDelete
  188. செந்தழல் ரவி said...
    செயிலானி என்பது ஏதோ நார்த் இண்டியன் பெயர் மாதிரி இருக்கே எப்படி டமில்ல டைப்பன்றாருன்னு கேக்கறதுக்காக.////////


    இது தலைப்புக்கு சம்பந்தம் இல்லாத ஒன்று தான்,இருந்தாலும் கேட்கிறேன்,இத்தாலி நாட்டை ஆளலாம் நார்த்இந்தியன் தமிழ் பேச கூடாதா (அண்ணே அவர் பேரு ஜெய்லானி நீங்களும் ஸ்பெல்லிங்கில் காலி)

    ReplyDelete
  189. ரவி எங்களுக்கு லோகல் முனிமா,
    பிரட்னியை விட பல மடங்கு மேல்

    ReplyDelete
  190. @Punnakku Moottai said...

    செந்தழல் ரவி போன்றவர்கள், கலாச்சாரத்தையும் தொலைத்து, தன்னையும் தொலைத்து, மிகவும் குழம்பிபோய், என்ன பேசுகிறோம் என்று அறியாமல், எது நல்லது எது கெட்டது என்று அறியமுடியாமல், மேற்கத்திய கலாச்சாரமா , இல்லை தமிழ் கலாச்சாரமா என்று குழப்பத்தில் வாழ்கிறார்கள்.
    சுமார் 5000 வருட கலாசாரம் நம்முடையது. அவரை போன்ற அறிவிளிகளால் அது அழியாது.

    குஷ்பூவின் வழக்கில் கூறப்பட்டது சட்டரீதியான தீர்ப்பு. கலாசாரரீதியான தீர்ப்பு அல்ல. அதை முற்படுத்தி கொண்டு அதன்படி அவர் மகளை அவர் யாருக்கு வேண்டுமானாலும் காட்ட சொல்லட்டும்.

    பட்டாபட்டியின் வாதத்திற்கு நான் முழு ஆதரவு தருகிறேன்.
    //

    வாங்க சார்..கலாச்சாரத்தை பற்றி சொன்னா.. பழைமைவிரும்பினு சொல்றாங்க..
    விடுங்க.. பதுமை விரும்பிக.. இனிமேல வாயால சாப்பிடவேண்டாம்..

    ஏன்னா.. தொன்று தொட்டு காலத்திலில் இருந்து வாயால சாப்பிடரானுகளேனு.. புதுமை விரும்பிகள் சண்டைக்கு வந்தாலும் வரலாம்..
    கலாச்சாரம் மாறிக்கொண்டுதான் இருக்கிறது.. ஆனால்.. ரவி சொன்னமாறியில்லை..

    @ரவி..
    நாங்க கேட்ட பெரும்பான்மையான கேள்விகளுக்கு பதில சொல்லலை..
    சரி..விடுங்க...


    @பிரபாகர்...
    ஆஹா! அருமை பாலா!
    உங்களின் கருத்தை முழுமையாய் ஆதரிக்கிறேன்!
    //

    ரைட்டு...

    ReplyDelete
  191. @ரோஸ்விக் said...
    ஜாதகம், ஜாதி, மதம், தாலி, யாரென்றே தெரியாமால் நிச்சயம் செய்தல் இவற்றை மட்டும் வெறுத்து இருவரும் மனதளவில் நெருங்கி வாழ்ந்து தனது வாழ்வின் கடமைகள் மற்றும் அவர்களின் நெடுநாள் இணைந்து வாழ்தலின் அவசியம் / மகிழ்வினைப் புரிந்து கொண்டிருந்தால், இவர்களுக்கும் திருமணவாழ்வில் இருப்பவர்களுக்கும் பெயர்மட்டுமே வித்தியாசம்.
    இதைக் குறை கூறவும் முடியாது...

    //

    ஆமா.. உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா?.. ரொம்ப பொறுப்பா பேசறீங்க சார்..

    ReplyDelete
  192. @Muthu said...
    இது தலைப்புக்கு சம்பந்தம் இல்லாத ஒன்று தான்,இருந்தாலும் கேட்கிறேன்,இத்தாலி நாட்டை ஆளலாம் நார்த்இந்தியன் தமிழ் பேச கூடாதா (அண்ணே அவர் பேரு ஜெய்லானி நீங்களும் ஸ்பெல்லிங்கில் காலி)
    //

    கலக்கு முத்து..

    ReplyDelete
  193. யோவ் ஏன்யா இப்பிடி என்ன வம்புக்கு இழுக்கற? நாம்பாட்டு ஹாயா சுத்திக்கிட்டு திரியறேன், இப்பிடி பண்றீங்கலேப்பா!அத விடு மேட்டருக்கு வருவோம், மேல உள்ள படத்துல பளிச்சுன்னு ஒரு டிக்கட் தெரியுதே அது யாருப்பா? என்ன பட்டி குஷ்பு படம் போடுறேன்னு இப்பிடி ஆபாச படத்த போட்டிருக்க, பாவம் பயபுள்ளைக பயந்துட போறானுங்க!

    ReplyDelete
  194. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    யோவ் ஏன்யா இப்பிடி என்ன வம்புக்கு இழுக்கற? நாம்பாட்டு ஹாயா சுத்திக்கிட்டு திரியறேன், இப்பிடி பண்றீங்கலேப்பா!அத விடு மேட்டருக்கு வருவோம், மேல உள்ள படத்துல பளிச்சுன்னு ஒரு டிக்கட் தெரியுதே அது யாருப்பா? என்ன பட்டி குஷ்பு படம் போடுறேன்னு இப்பிடி ஆபாச படத்த போட்டிருக்க, பாவம் பயபுள்ளைக பயந்துட போறானுங்க!

    //

    கருப்பு கண்ணாடி போட்டாலும்..கரெக்டா கண்டுபிடிக்கிறையே பங்காளி..
    சரி..சரி.. அப்படியே தடவிட்டு, அடுத்த பதிவுக்கு வந்து சேரு..

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!