Pages

Wednesday, July 7, 2010

வறுமைக் கோட்டிலிருந்து (?)

    சாரி பிரதர்ஸ்..  என்னடா எடுத்ததும் மன்னிப்பு கேக்குறானே?.  அதுவும் ஆம்பளப்பசங்களைப் பார்த்து(!). பெருசா ஏதாவது அலம்பப்போறானா?-னு நினைக்கிற பயபுள்ளைகளுக்கு , நான் ஒன்றுமட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.   வந்_____ந்து..வந்து....சாரிங்க..ஹி..ஹி.. கொஞ்சநாளா ஆணி அதிகமானதால், வலையுலகம் வர இயலவில்லை.  ஓ.கே..  மேட்டருக்கு போவோம்.

    நாடு சுதந்திரம் வாங்கி பலவருசங்கள் ஆகிவிட்டன.  சுதந்திரத்துக்காக, தனிமனிதனாய் பாடுபட்ட தேசத்தந்தை(!) காந்தியாகட்டும், குடும்பத்தையே துச்சமாக நினைத்து, நாட்டுக்காக ரத்தம் சிந்திய மோதிலால் நேருவாகட்டும். ( சரித்திரம் சொல்கிறது பாஸ்..). ஒன்றாக இருந்த நாட்டை, துண்டாக்கி ,பாகிஸ்தானுக்கு பண உதவிசெய்து அதற்காக ’தீவிரவாதம்’ என்ற பெயரில், ’வட்டி’ வாங்கிக்கொண்டிருக்கும் நமது தேசமாகட்டும், அன்றுமுதல் இன்றுவரை போராடிக்கொண்டிருப்பது முக்கியமான ஒரு பிரச்சனைக்குத்தான்.  ஆங்.. அதுக்கு ஒரு பேர வெச்சுருக்காங்க.. ’வறுமைக்கோடாம்’.

    சரி. சுதந்திரம் வாங்கியதும், தலைவர்கள் விட்ட அறிக்கைகளில் முக்கியமானது , ’வறுமைக்கோட்டை ஒழித்து, இந்தியாவை முன்னேற்றுவோம்’ .  சமீபத்தில அதே வசனம் அன்னை(?) சோனியாவால் திரும்பவும் சொல்லப்பட்டது.   சரி..  இவர்களின் பார்வையில் வறுமைக்கோடுனா என்ன, அதற்காக அவர்கள் தீட்டிய திட்டம், அதனுடைய பலன்கள் ஆகியவற்றைப்பற்றி  அலசலாம்.

    இந்திய மக்கள்தொகையில் 15% ஏழ்மையில் உள்ளனர்.  அடுத்த 65%, நடுத்தர மக்கள்.  மீதியுள்ள 20% ஏதோ அவர்களின் சொந்தமுயற்சியால்(?) உழைத்து, பணக்கார வர்கமாக வசிக்கின்றனர்.  நமது தமிழகத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.  ஒரு தலைவனுக்கே, நடுத்தரவர்கத்தில் இருந்து பணக்கார வர்கமாக,  பதவி உயர்வு பெற,  சற்றேரக்குறைய 40 ஆண்டுகள் பிடித்தன.  அப்படியென்றால். சாதாரண மக்களின் கதி?. 

பணக்கார வர்க்கம்
    இவர்கள்தான் நாட்டின் முதுகெலும்பென்றால் மிகையாகாது.  அரசியலிலும், ஆளுமையிலும், வர்த்தகத்திலும் கொடி கட்டிப்பறக்கும் அவர்களின் இன்றைய தலையாலப் பிரச்சனை ‘வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு’ உதவி செய்யசெய்வதுதான்.  ’என்ன ம%$#@ரு உதவி?’ என்று உங்கள் மனதில் தோன்றினால், சாரி..பாஸ்..  நீங்க பாகிஸ்தான் உளவாளியா இருக்க வாய்ப்புள்ளது எனக்கருதி, தேசிய சட்டப்படி உங்களுக்கு விளக்கமுடியாது.

நடுத்தர வர்க்கம்

     இது வேறயாருமில்ல பாஸ்...  ’நானும் நீங்களும்தான்’.  கஷ்டப்பட்டு சம்பாரிப்பது, மனதை கடினமாக்கி செலவளிப்பது, சட்ட திட்டங்களை முடிந்தவரை(?0 பின்பற்றுவது, இலவசங்களுக்காக சிலசமயம்(?) கை ஏந்துவது, பெரும்பாலான நேரங்களில், மனச்சாட்சிப்படி நடக்கும் கேணப்பயலுக.
சரியாச்சொல்லனுமுனா தலையாட்டி பொம்மைகள்.  நம்முடைய உயர்ந்தபட்ச நோக்கமே, ‘இன்னைக்கு நமக்கு என்ன ஆதாயம்?’. அவ்வளவுதான்.  இப்படிபட்டவர்களுக்கு அரசாங்கம் என்ன செய்கிறது என்று நினைத்துப்பார்த்திருக்கிறீர்களா?.  கவலையை விடுங்க மக்களே.  உங்களை வறுமைக்கோட்டுக்கு கீழே கொண்டு செல்லும் காலம் வெகு அருகில்.


ஏழை வர்க்கம்
     காந்தி சொன்னாரே ‘கிராமங்கள்தான் நாட்டின் முதுகெலும்பு’ என்று...... உண்மைதான்..... விவசாயி, அன்றாடங்காச்சி, அடுத்த நேரச்சோற்றுக்கு வழி தெரியாமல் இருக்கும் மக்கள், இவர்களை எல்லாம் இதில் அடக்கிவிடலாம்.  பல வருடங்களாக , இவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த, அரசியல்வாதிகளும், அரசாங்கமும் பாடுபடுவதை கண்கூடாகப் பார்த்திருப்பீர்கள்.  நீங்களே சொல்லுங்க பாஸ்.. இலவசமா பல்பொடி, செருப்பு, பிரியாணி, காண்டம், டீவி, கரண்ட், குடிசை , அன்னதானம், சரக்கு,  இவ்வளவும் கொடுத்து இன்னும் முன்னேறவில்லையென்றால், யாருடைய பிரச்சனை இது?..  விடுங்க..  தேவையில்லாம சொல்லிட்டிருக்கோம்... பார்ப்போம் சார்..  கிரகநிலை சரியாயிருந்து, ராகுல் காந்தியின் பையன் ஆட்சிக்கு வந்ததும், எதாவது நல்வழி கிடைக்காமலா போயிடும்?.





உரிமை vs கடமை
     சமீபத்தில், பழைய ஆனந்தவிகடனை படிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.  அதில் ஒரு கருத்து பசக்-னு மனசுல ஒட்டிக்கிச்சு சார்..  நேரு பிரதமராயிருந்தபோது நடந்த சம்பவம்.  ஒரு நாள் ஏதோ கூட்டத்துக்கு நேரு வந்தபோது, ஒருவன் அவரது காரை மறித்தானாம்.  நாடு சுதந்திரம் அடைந்திருச்சுனு எல்லோரும் சொல்றாங்களே..பட்டதாரி ஆகியும் வேலை கிடைக்காமல் இருக்கிறேன். சுதந்திரம் வாங்கி என்ன பலன்? என்று.
   
     அதற்கு அவர் சொன்னாராம். ”இப்படி பொது இடத்தில, பிரதமரை நிறுத்தி கேள்விகேட்கும் உரிமை கிடைத்துள்ளதே.. அதுதான் சுதந்திரம்”.    மேலோட்டமாக பார்த்தால், நேரு கடமை தவறா கண்ணியமானவர் போல தோற்றமளிக்கும் ஒரு செய்திதான் இது.   இந்த பதிலை பார்த்தால், அதில் பொதிந்துள்ள ஆணவம்தான் எங்களுக்கு தெரிகிறதே தவிர, ஒரு தலைவனின் கடமை குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டது.    ’உரிமைக்கும் , கடமைக்கும் என்னய்யா வித்தியாசம்?’.
ஒரு நல்ல தலைவன் தொண்டர்களின் குரலை பிரதிபலிக்கும் ஆற்றல் கொண்டவனாக இருக்கவேண்டும்”.   அதைவிடுத்து,  மொத்தகூட்டமும், அவனது சொல்பேச்சு கேட்டு ஆடும், ஆட்டுமந்தைகளாக நினைத்தால் அந்த கூட்டத்தின் கதி அதோ கதிதான்..   ஆனால், கடமையை செய்யாமல், உரிமை பற்றி பேசும் தலைவர்களைத்தான் நாம் பெற்றிருக்கிறோம்.

     சரி..வறுமைக்கோடு பிரச்சனைக்கு வருவோம்.  இதையெல்லாம் ஒழிக்க ஒரே வழி..  நல்ல வழி... “நடுத்தர மக்களை, ஏழை மக்களாக்குவதுதான்”.  ஏணியில ஏறுவதை விட , இறங்குவது சுலபம் சார்.  அதற்கான முயற்சியாகத்தான்

  • மின்சார வெட்டு,
  • குழந்தை தொழிலாளர்கள்,
  • போலி மருந்துகள்,
  • கலப்பட உணவு,
  • அயல்நாட்டுக்கு நிதியுதவி,
  • கல்விக்கூடங்களில் பகற்கொள்ளை

என பல சிறந்த திட்டங்களை நடைமுறையில் செயல்படுத்திக்கொண்டுள்ளோம். எனவே அன்பு உள்ளங்களே..விரைவில் உங்களை நல்ல குடிமகனாக்கி, நாட்டை செழிப்பாக்கும் வரை, ஊண் உறக்கமின்றி பாடுபடும் நம் தலைவர்களுக்கு , உங்கள் உடல், உயிர் மற்றும் மயிர் கொடுக்க தயாராகுங்கள்... நாளை நமதே... நாளை சந்திப்போம்...

போகும்முன் சில சந்தேகங்கள்.

1. கோட்ஷேயின் வாக்குமூலத்தை, பல வருடங்களாக வெளியிடாமல் வைத்திருந்ததின் மர்மம் என்ன?

2. நாட்டின் பாதுக்காப்புக்கு வாங்கிய பீரங்கியில் ஊழல் செய்யத்துணிந்த ஜென்மங்களை, தியாகி என அழைப்பது ஏன்?

3. நாட்டுக்காக பாடுபட்டவர்கள் காந்தியும் நேருவும் (வரலாறுப்புத்தகத்தில் சொல்வது). சுதந்திரத்துக்காக, போராடிய மற்ற தியாகிகளின் சரித்திரத்தை மறைத்தது யார்? ஏன்?

இதைப்பற்றி அறிய, பல புத்தங்களை படிக்கவேண்டியுள்ளது.. வரும் பதிவுகளில் துவைத்து அலசவேண்டும்

.
.
.

120 comments:

  1. பார்வையாளன் said...

    good start..... continue
    //

    நன்றி பாஸ்...

    ReplyDelete
  2. கண்டிப்பா துவைக்க வேண்டிய மேட்டர்..

    தொடருங்க பாஸ்....

    ReplyDelete
  3. காந்தியும் நேருவும் (வரலாறுப்புத்தகத்தில் சொல்வது). //

    சொல்ல வைக்கப்பட்டது..

    என்னங்க ப்ளாக்கரோட பெரிய தொல்லையா போச்சு... கமெண்ட்ஸ் பெரிய இழுவையா இருக்கே....

    ReplyDelete
  4. சரி.. இவர்களின் பார்வையில் வறுமைக்கோடுனா என்ன///

    வயித்துல நாலு நாள் சாப்பிடாம போனா ஏற்படுமே அந்த சுருக்கத்ததான் வறுமைகோடா மாத்திப்புட்டானுக..

    ReplyDelete
  5. ஆஹா..பட்டா இப்பதான் நீ நம்ம ஆளூ. எப்ப சந்தேகம் கேக்க தோனுச்சோ அப்பவே யூ ஆர் கிரேட் ..

    ரைட்.....ரைட்... ஒரு பய இதுக்கு பதில் சொல்ல முடியாது....

    ReplyDelete
  6. என்னுடைய இன்னொரு சந்தேகம் அதில சேர்த்துக்கேளுப்பா..!!!

    ரஷ்யா வில போய் இறந்தாரே நமது பழைய பிரதமர் . அதன் ரகசியம் ஏன் இன்னும் வெளி வரல..?

    அந்த கேச பத்தி கோர்ட்டும் பதில தரலையே ஏன்..??

    ஏன்..?

    ஏன்..?

    ஏன்..?

    ReplyDelete
  7. ஏன்ன இது சுதந்திர இந்தியா (தலைவர் )அவங்க தான் கேள்வி கேப்பாங்க (மக்கள்) நாம மூடிகிட்டு போகவேண்டியதுதான்

    ReplyDelete
  8. கேட்டா இந்திய இறை ஆஆஆண்மை..ச்சி..த்து..

    ReplyDelete
  9. @Blogger அகல்விளக்கு said...
    கண்டிப்பா துவைக்க வேண்டிய மேட்டர்..
    தொடருங்க பாஸ்....
    //

    துவைச்சு கிழிக்க வேண்டிய மேட்டரும்கூட சார்..

    ReplyDelete
  10. @அஹமது இர்ஷாத் said...
    காந்தியும் நேருவும் (வரலாறுப்புத்தகத்தில் சொல்வது). //
    சொல்ல வைக்கப்பட்டது..
    என்னங்க ப்ளாக்கரோட பெரிய தொல்லையா போச்சு... கமெண்ட்ஸ் பெரிய இழுவையா இருக்கே....
    //


    எதோ டெக்னிக்கல் ப்ராப்ளம் போல சார்.. ஒரு வேளை, அவங்களும் பந்த்-ல கலந்துக்கிட்டாங்களோ?


    சரி.. இவர்களின் பார்வையில் வறுமைக்கோடுனா என்ன///

    வயித்துல நாலு நாள் சாப்பிடாம போனா ஏற்படுமே அந்த சுருக்கத்ததான் வறுமைகோடா மாத்திப்புட்டானுக..

    இருக்கும்..இருக்கும்.. அடுத்தவங்க வயிறுதானே சுருங்குது பாஸ்..
    இவனுகளுக்கு என்ன?

    ReplyDelete
  11. @ஜெய்லானி said...
    ஆஹா..பட்டா இப்பதான் நீ நம்ம ஆளூ. எப்ப சந்தேகம் கேக்க தோனுச்சோ அப்பவே யூ ஆர் கிரேட் ..
    ரைட்.....ரைட்... ஒரு பய இதுக்கு பதில் சொல்ல முடியாது....
    என்னுடைய இன்னொரு சந்தேகம் அதில சேர்த்துக்கேளுப்பா..!!!
    ரஷ்யா வில போய் இறந்தாரே நமது பழைய பிரதமர் . அதன் ரகசியம் ஏன் இன்னும் வெளி வரல..?
    அந்த கேச பத்தி கோர்ட்டும் பதில தரலையே ஏன்..??
    //

    ஏதோ கோல்மால்ல இருக்கும்..

    ReplyDelete
  12. நாட்டுக்காக பாடுபட்டவர்கள் காந்தியும் நேருவும் (வரலாறுப்புத்தகத்தில் சொல்வது). சுதந்திரத்துக்காக, போராடிய மற்ற தியாகிகளின் சரித்திரத்தை மறைத்தது யார்? ஏன்?

    ...... சரித்திரத்தை மறைத்தது யார்? ஏன்?
    யார்? ஏன்? யார்? ஏன்? யார்? ஏன்?

    சீக்கிரம் சொல்லுங்க....

    ReplyDelete
  13. தலைவா... காந்திஜிய இழுக்காதீங்க... pls... pls... pls... pls.... pls.......... அவரது புத்தகமான சத்தியசோதனை முடிந்தால் படிககவும்...

    ReplyDelete
  14. அண்ணே நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்ஸை பற்றியும் ஒன்றும் தெரியவில்லை. முக்கியமா அன்னை சோனியா எதோ போராட்டத்தில கலந்துகிட்டாங்களாம் அதனாலதான் ராஜிவ் அவங்கள கல்யாண கட்டிகிட்டாராம்.

    ReplyDelete
  15. ஏன் பட்டா? டென்ஷனா இருக்கீங்களோ?
    கூல் டவுன்!
    கூல் டவுன்!!
    கூல் டவுன்!!!

    ReplyDelete
  16. இதுக்கெல்லாம் பதில் எங்க தேடினாலும் கிடைக்கும்? சும்மா சொல்லக்கூடாது. சூப்பர் கேள்விகள்.

    ReplyDelete
  17. பட்டு!அப்புடியே இந்த சுபாஷ் சந்திர போஸ் ஏன் சுதந்திரத்தின் போது ஓரம் கட்டப்பட்டார்னு கேட்டுப் பாருங்க.என்ன பதில் வருதுனு பார்க்கலாம்.

    ReplyDelete
  18. // ILLUMINATI said...பட்டு!அப்புடியே இந்த சுபாஷ் சந்திர போஸ் ஏன் சுதந்திரத்தின் போது ஓரம் கட்டப்பட்டார்னு கேட்டுப் பாருங்க.என்ன பதில் வருதுனு பார்க்கலாம்.//

    அவரு நக்ஸலைட்டாம் ஹி..ஹி..

    ReplyDelete
  19. அத்தனையும் மாய்மாலம், வாய் ஜாலம்.ஒரு குறிப்பிட்ட கூட்டாதாரே தொடர்ந்து பதவியிலும் அதிகாரத்திலும் இருக்க செய்த ஏற்பாடுகள்தான் இவைகள்.அறியாமையும். மக்கக் தொகை பெருக்கமும் இவர்களுக்கு சாதகமான ஒன்று.
    இந்த தெளிவுகள் பரவலானால்,உணரப்பட்டால் ஒரு வேலை ஏதாவது..................ஹூஹூம் .......இந்தியா ஒரு
    " பெரிய " ஜனநாயக நாடு. ஒன்னும் பண்ண இயலாது.
    ஒரு பிடாரி போனால் பின்னால் ஒரு காட்டேரி அல்லவா ஆட்சிக்கு வருகிறது?

    ReplyDelete
  20. @ Chitra said...
    நாட்டுக்காக பாடுபட்டவர்கள் காந்தியும் நேருவும் (வரலாறுப்புத்தகத்தில் சொல்வது). சுதந்திரத்துக்காக, போராடிய மற்ற தியாகிகளின் சரித்திரத்தை மறைத்தது யார்? ஏன்?
    ...... சரித்திரத்தை மறைத்தது யார்? ஏன்?
    யார்? ஏன்? யார்? ஏன்? யார்? ஏன்?
    சீக்கிரம் சொல்லுங்க....
    //

    அடுத்து வரும் பதிவுகளில் பாருங்க மேடம்.

    ReplyDelete
  21. @sethupathy said...
    தலைவா... காந்திஜிய இழுக்காதீங்க... pls... pls... pls... pls.... pls.......... அவரது புத்தகமான சத்தியசோதனை முடிந்தால் படிககவும்...
    //

    எங்க சார் இழுத்தேன்..
    எல்லொருமே சுயநலவாதிகள்தான் சார்..
    நாணயத்துக்கு இரண்டு பக்கம்.. ஒரு பக்கத்தை
    பாடப்புத்தகங்களில் படித்துவிட்டோம்..

    அடுத்த பக்கத்தையும் பார்த்துவிடுவோம் பாஸ்..

    ReplyDelete
  22. @சிவா (கல்பாவி) said...
    அண்ணே நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்ஸை பற்றியும் ஒன்றும் தெரியவில்லை. முக்கியமா அன்னை சோனியா எதோ போராட்டத்தில கலந்துகிட்டாங்களாம் அதனாலதான் ராஜிவ் அவங்கள கல்யாண கட்டிகிட்டாராம்.
    //

    ஓ. அதுதான் பதிலுக்கு நாட்டையே கொடுத்துட்டோம் சிவா..

    ReplyDelete
  23. @அருண் பிரசாத் said...
    ஏன் பட்டா? டென்ஷனா இருக்கீங்களோ?
    கூல் டவுன்!
    கூல் டவுன்!!
    கூல் டவுன்!!!
    //
    டென்ஷனா?..எனக்கா?..ஹி..ஹி என்ன பாஸ் தமாசு பண்ணிக்கிட்டு..

    ReplyDelete
  24. @வானம்பாடிகள் said...
    இதுக்கெல்லாம் பதில் எங்க தேடினாலும் கிடைக்கும்? சும்மா சொல்லக்கூடாது. சூப்பர் கேள்விகள்.
    //

    பதில கண்டுபிடிச்சுட்டோம் சார்..
    அலசிட்டு இருக்கோம்..விரைவில்...

    ReplyDelete
  25. @ILLUMINATI said...
    பட்டு!அப்புடியே இந்த சுபாஷ் சந்திர போஸ் ஏன் சுதந்திரத்தின் போது ஓரம் கட்டப்பட்டார்னு கேட்டுப் பாருங்க.என்ன பதில் வருதுனு பார்க்கலாம்.
    //

    ஓ..சிலரின் தூண்டுதல்..அது யார்?

    ReplyDelete
  26. கக்கு - மாணிக்கம் said...

    அத்தனையும் மாய்மாலம், வாய் ஜாலம்.ஒரு குறிப்பிட்ட கூட்டாதாரே தொடர்ந்து பதவியிலும் அதிகாரத்திலும் இருக்க செய்த ஏற்பாடுகள்தான் இவைகள்.அறியாமையும். மக்கக் தொகை பெருக்கமும் இவர்களுக்கு சாதகமான ஒன்று.
    இந்த தெளிவுகள் பரவலானால்,உணரப்பட்டால் ஒரு வேலை ஏதாவது..................ஹூஹூம் .......இந்தியா ஒரு
    " பெரிய " ஜனநாயக நாடு. ஒன்னும் பண்ண இயலாது.
    ஒரு பிடாரி போனால் பின்னால் ஒரு காட்டேரி அல்லவா ஆட்சிக்கு வருகிறது?

    //

    கோட்ஷேயின் வாக்குமூலத்தில பாதி வெளிய வந்துடுச்சு பாஸ்..
    லிங்க் அனுப்புகிறேன்.. பாருங்க..
    சரித்திரம் எப்படி மாறியது என புரியும்...

    ReplyDelete
  27. அந்த லின்க்க எனக்கும் அனுப்பி வை பட்டு..

    ReplyDelete
  28. இரு பட்டா படிச்சிட்டு வறேன்.

    ReplyDelete
  29. சக்கை!

    பட்டாசு போஸ்ட் பட்டா!

    நச்சுனு இருக்கு...

    ReplyDelete
  30. பட்டா ,
    உனக்கு இந்த சந்தேகமெல்லாம் தீரனும்னா ..,ஒரு புக் இருக்கு ..,பேரு வந்து ...,'''FREEDOM AT MIDNIGHT''' - DOMINIQUE LAPPIRE ,LARRY COLLINS என்று ரெண்டு பேரு எழுதினது ..,ஆதாரத்தோட புட்டு புட்டு வெச்சிருப்பாங்க ...,நேரு வின் சுயநலம் ,காந்தியின் கொள்கை பற்று ,ஜின்னாஹ் வின் முஸ்லிம் லீக் ...,படிக்க வேண்டிய புத்தகம் பட்டா ...,

    ReplyDelete
  31. இப்படி ஆளாளுக்கு சந்தேகம் கேட்டால் என்ன பண்ணுவேன் இந்த கண்றாவிக்கு தான் ஸ்கூல் பக்கமே போகல இப்போ இங்கேயும் சந்தேகம் கேட்டால் என்ன பண்ணுறது

    ReplyDelete
  32. //1. கோட்ஷேயின் வாக்குமூலத்தை, பல வருடங்களாக வெளியிடாமல் வைத்திருந்ததின் மர்மம் என்ன?//

    எல்லாம் ஹிந்தில இருந்துச்சாம்!

    ReplyDelete
  33. //சுதந்திரத்துக்காக, போராடிய மற்ற தியாகிகளின் சரித்திரத்தை மறைத்தது யார்? ஏன்?
    //

    மேல சொன்ன ரெண்டு பேர சுத்தி இருந்தவனுக தான்! ஏன்னா அடுத்து தான் வரணும்னா இதெல்லாம் பண்ணிதானே ஆவணும்

    ReplyDelete
  34. //நாட்டின் பாதுக்காப்புக்கு வாங்கிய பீரங்கியில் ஊழல் செய்யத்துணிந்த ஜென்மங்களை, தியாகி என அழைப்பது ஏன்?//


    ஏற்கனவே தியாகின்னு சொல்லப்படறவனுகள கேவலப் படுத்த தான்

    ReplyDelete
  35. //’உரிமைக்கும் , கடமைக்கும் என்னய்யா வித்தியாசம்?’. //

    உரி’யும் கட’யும்தான் வித்யாசம்

    ReplyDelete
  36. //அன்றுமுதல் இன்றுவரை போராடிக்கொண்டிருப்பது முக்கியமான ஒரு பிரச்சனைக்குத்தான். ஆங்.. அதுக்கு ஒரு பேர வெச்சுருக்காங்க.. ’வறுமைக்கோடாம்’//

    அந்தக் கோடு மட்டும் எங்க இருக்குன்னு சொல்லுங்க தல, ஓடிப்போயி அழிச்சிட்டு வந்துர்ரேன்!

    ReplyDelete
  37. //கிரகநிலை சரியாயிருந்து, ராகுல் காந்தியின் பையன் ஆட்சிக்கு வந்ததும்,//

    இன்னும் வாய்ப்பிருக்கா? வயசு வேற 40 ஆகிடுச்சு! எதுக்கும் கவனமா தேடிபாருங்கய்யா, நம்ம வருங்கால பிரதமர் எங்கேயாவது கொலம்பியாவுல வளர்ந்துக்கிட்டு இருக்கப்போறாரு!

    ReplyDelete
  38. //நாட்டின் பாதுக்காப்புக்கு வாங்கிய பீரங்கியில் ஊழல் செய்யத்துணிந்த ஜென்மங்களை, தியாகி என அழைப்பது ஏன்?//

    என்னய்யா பொழைக்கத் தெரியாத ஆளா இருக்கீர்.
    உனக்கும் எனக்குமா தியாகி பட்டம் கொடுப்பாங்க?

    ReplyDelete
  39. //இலவசமா பல்பொடி, செருப்பு, பிரியாணி, காண்டம், டீவி, கரண்ட், குடிசை , அன்னதானம், சரக்கு, இவ்வளவும் கொடுத்து இன்னும் முன்னேறவில்லையென்றால், யாருடைய பிரச்சனை இது?.. //

    இலவசம் கொடுத்தா எந்த சமூகமுமே உருப்படாது! பசில இருக்கறவனுக்கு மீன கொடுத்தா தின்னுட்டு ....லி மறு படிதான் கேப்பாம்; தூண்டில் கொடுத்தா தானே பொழச்சுப்பான்! நம்ம அரசியல் வாதிகளுக்கு அவன் தானே பொழக்க ஆரமிச்சுட்டா,புத்தி வந்துட்ம்;ஓட்ட பத்தி யோசிப்பான்னு பிச்சக்காரனாவே வெச்சுருக்கானுக

    ReplyDelete
  40. //1. கோட்ஷேயின் வாக்குமூலத்தை, பல வருடங்களாக வெளியிடாமல் வைத்திருந்ததின் மர்மம் என்ன?//?????

    வெளியிட்டு இருந்தால் இவ்வளவு வருடமா குப்பை கொட்டி இருக்க முடியுமா

    ReplyDelete
  41. //நம்ம வருங்கால பிரதமர் எங்கேயாவது கொலம்பியாவுல வளர்ந்துக்கிட்டு இருக்கப்போறாரு!//

    ராம்சாமி, பின்னால பாரு இத்தாலி ஆட்டோ வந்துட்டு இருக்கு.

    ReplyDelete
  42. //ஏணியில ஏறுவதை விட , இறங்குவது சுலபம் சார். அதற்கான முயற்சியாகத்தான்


    மின்சார வெட்டு,
    குழந்தை தொழிலாளர்கள்,
    போலி மருந்துகள்,
    கலப்பட உணவு,
    அயல்நாட்டுக்கு நிதியுதவி,
    கல்விக்கூடங்களில் பகற்கொள்ளை //

    ரொம்ப முக்கியமான டாஸ்மாக் சேவைய விடுப்புட்டீங்க தல ( எல்லாம் நியூ வாட்டர் குடிக்கிறோம்னு தெனாவெட்டு? பிச்சு புடுவேன் பிச்சு!)

    ReplyDelete
  43. ஒகே பட்டா! கெளம்பறேன்; இது பரவால்ல சோசியல் மேட்டரு பண்ணிக்கலாம்; டைவர்ஸ் கேசெல்லாம் நம்ம கிட்ட வருதுப்பா!

    நாம என்ன கோர்ட்டா வக்கீலா!

    ReplyDelete
  44. //கோட்ஷேயின் வாக்குமூலத்தை, பல வருடங்களாக வெளியிடாமல் வைத்திருந்ததின் மர்மம் என்ன?//

    அத வெளியிடக் கூடாதுங்கறது கோட்சேவோட கடைசி ஆசையா இருக்குமோ?

    ReplyDelete
  45. //நாட்டின் பாதுக்காப்புக்கு வாங்கிய பீரங்கியில் ஊழல் செய்யத்துணிந்த ஜென்மங்களை, தியாகி என அழைப்பது ஏன்?//

    மிலிட்டரி மேட்டர்ல ஊழல் பண்றது அவ்வளவு லேசா? எம்புட்டு கஷ்டப்பட்டு பண்ணியிருக்கானுக, அதப் போயி! (ஆமா கார்கில் போர் டைம்ல சவப்பெட்டி வாங்குனதுல ஊழல்னானுங்க, அப்புறம் என்னாச்சு?)

    ReplyDelete
  46. //கொல்லான் said...
    //நம்ம வருங்கால பிரதமர் எங்கேயாவது கொலம்பியாவுல வளர்ந்துக்கிட்டு இருக்கப்போறாரு!//

    ராம்சாமி, பின்னால பாரு இத்தாலி ஆட்டோ வந்துட்டு இருக்கு.//

    எங்க கிட்ட கொலம்பியா பைக்கு இருக்குடி மாப்பு! (யாருகிட்ட?)

    ReplyDelete
  47. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    //கோட்ஷேயின் வாக்குமூலத்தை, பல வருடங்களாக வெளியிடாமல் வைத்திருந்ததின் மர்மம் என்ன?//

    அத வெளியிடக் கூடாதுங்கறது கோட்சேவோட கடைசி ஆசையா இருக்குமோ?///////////

    அது இன்னொருத்தர் கட்சி ஆசை

    ReplyDelete
  48. //இதையெல்லாம் ஒழிக்க ஒரே வழி.. நல்ல வழி... “நடுத்தர மக்களை, ஏழை மக்களாக்குவதுதான்”.//

    தல நல்லா கவனிச்சி பாருங்க, இருக்குற விலவாசியில எல்லாரும் எப்பவோ ஏழையாயிட்டானுங்க! (சும்மா வெளியதெரியாத மாதிரி நடிக்கிறானுங்க இந்த மிடில் கிளாசு!)

    ReplyDelete
  49. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    //கொல்லான் said...
    //நம்ம வருங்கால பிரதமர் எங்கேயாவது கொலம்பியாவுல வளர்ந்துக்கிட்டு இருக்கப்போறாரு!//

    ராம்சாமி, பின்னால பாரு இத்தாலி ஆட்டோ வந்துட்டு இருக்கு.//

    எங்க கிட்ட கொலம்பியா பைக்கு இருக்குடி மாப்பு! (யாருகிட்ட?)/////////


    எச்சுமி கொலம்பியா,இத்தாலி,என்ன லிங்க் மீ பாவம் கொஞ்சம் சொல்லுங்க

    ReplyDelete
  50. என்ன பன்னி கண்டுக்கவே மாட்டுரீறு இந்தியாவுக்கு போற ஜோரா இருடி ஏர்போட்டில் இத்தாலிகாரனை விட்டு பிடிக்க சொல்லுறேன்

    ReplyDelete
  51. ///1. கோட்ஷேயின் வாக்குமூலத்தை, பல வருடங்களாக வெளியிடாமல் வைத்திருந்ததின் மர்மம் என்ன?

    2. நாட்டின் பாதுக்காப்புக்கு வாங்கிய பீரங்கியில் ஊழல் செய்யத்துணிந்த ஜென்மங்களை, தியாகி என அழைப்பது ஏன்?

    3. நாட்டுக்காக பாடுபட்டவர்கள் காந்தியும் நேருவும் (வரலாறுப்புத்தகத்தில் சொல்வது). சுதந்திரத்துக்காக, போராடிய மற்ற தியாகிகளின் சரித்திரத்தை மறைத்தது யார்? ஏன்?////

    யாருகிட்ட கேக்குற பட்டா, சொன்னாலும், நதாரித்தனமான பதிலத்தான் இருக்கு. டவுசரை கைல பிடிச்சிட்டயில்ல, அத நல்லா கிழிச்சா நாமளே பதில் தெரிஞ்சிக்கலாம். இதுல அவர குறை சொல்லாத, இவர பதி அப்படி சொல்லாதேனு, கெண்டில்மேன்ஸ் யாரும் வந்தா?. தக்காளி ஆரஞ்சு ப்ழிஞ்சு சூசு போடலாம்.

    ReplyDelete
  52. //முத்து said...
    என்ன பன்னி கண்டுக்கவே மாட்டுரீறு இந்தியாவுக்கு போற ஜோரா இருடி ஏர்போட்டில் இத்தாலிகாரனை விட்டு பிடிக்க சொல்லுறேன்//

    ஆமா மாப்பி! இன்னிக்கி நைட்டு ப்ளைட்டு! ஆப்பீஸ்ல புடுங்குன ஆனியெல்லாத்தையும் எண்ணி வெச்சிட்டுத்தான் போகனும் சொல்லிட்டான் டேமேஜரு! அதுலாம் தேவையில்லாத ஆனிடான்னு சொன்னாலும் ஒத்துக்கவே மாட்டேங்கிரான்!

    ReplyDelete
  53. Jey said...

    யாருகிட்ட கேக்குற பட்டா, சொன்னாலும், நதாரித்தனமான பதிலத்தான் இருக்கு. டவுசரை கைல பிடிச்சிட்டயில்ல, அத நல்லா கிழிச்சா நாமளே பதில் தெரிஞ்சிக்கலாம். இதுல அவர குறை சொல்லாத, இவர பதி அப்படி சொல்லாதேனு, கெண்டில்மேன்ஸ் யாரும் வந்தா?. தக்காளி ஆரஞ்சு ப்ழிஞ்சு சூசு போடலாம்./////////////


    இதுக்காக தான் i am waiting எந்த ஆடும் மாட்டுற மாதிரி தெரியல பேசாம பன்னியை கவு போட்டுறலாமா

    ReplyDelete
  54. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    ஆமா மாப்பி! இன்னிக்கி நைட்டு ப்ளைட்டு! ஆப்பீஸ்ல புடுங்குன ஆனியெல்லாத்தையும் எண்ணி வெச்சிட்டுத்தான் போகனும் சொல்லிட்டான் டேமேஜரு! அதுலாம் தேவையில்லாத ஆனிடான்னு சொன்னாலும் ஒத்துக்கவே மாட்டேங்கிரான்!/////////////

    அட டோமரு,இந்த மேனேஜர் தொல்ல தாங்க முடியல,ரொம்ப பேசினால் அவனுக்கு ஆரஞ்சு பச்சடி குடுங்க சரியாகிடும்

    ReplyDelete
  55. //முத்து said...
    எச்சுமி கொலம்பியா,இத்தாலி,என்ன லிங்க் மீ பாவம் கொஞ்சம் சொல்லுங்க//

    நெஜாமாவே தெரியாதா? போ,போயி டீவில டோரா பாத்துக்கிட்டு இரு! வரும்போது குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கிட்டு வர்ரேன்!

    ReplyDelete
  56. Jey said...

    //முத்து said...
    50 //

    யோவ் இங்க மேட்டர் சூடய்ட்டு இருக்கு, நீ 50 போட்டு கலாகாகிட்ட போறதுலயே குறியா இருக்கியே?////////////////


    வரலாறு பாஸ் வரலாறு,

    ReplyDelete
  57. பட்டாபட்டி.. said...


    கோட்ஷேயின் வாக்குமூலத்தில பாதி வெளிய வந்துடுச்சு பாஸ்..
    லிங்க் அனுப்புகிறேன்.. பாருங்க..
    சரித்திரம் எப்படி மாறியது என புரியும்...
    ///////////////


    பட்டா எனக்கும் அனுப்பி வை please

    ReplyDelete
  58. தக்காளி, ஸ்கூல்ல படிச்ச வரலாறை இப்ப நெனைச்சி பாத்தாலும், எழுதுனவனை, சூசு தான்யா பிழியனும். அவனவன் ஆட்சியில இருக்கும்போது அவங்கள பத்தி, அவங்க அரசியல் சார்ந்த கொள்கையுடையவங்க பத்தியே எழுதியிருக்கானுக.

    ReplyDelete
  59. Jey said...

    தக்காளி, ஸ்கூல்ல படிச்ச வரலாறை இப்ப நெனைச்சி பாத்தாலும், எழுதுனவனை, சூசு தான்யா பிழியனும். அவனவன் ஆட்சியில இருக்கும்போது அவங்கள பத்தி, அவங்க அரசியல் சார்ந்த கொள்கையுடையவங்க பத்தியே எழுதியிருக்கானுக.///////////////

    இந்த நாதாரிங்க வேலையே இது தான் அவுனுங்க சவுகிரியதுக்கு மாதிகிறானுங்க

    ReplyDelete
  60. பட்டா ,
    அந்த புக்ல நிறைய மேட்டர் இருக்கும் ..,நம்ப அரசியல்வாதிகளின் சுயநலம் ..,இங்கே சொல்லலாமா வேண்டாம்னு ஒரு வித @#$$$%%....,ஹி ஹி ஹி

    ReplyDelete
  61. பனங்காட்டு நரி said...

    பட்டா ,
    அந்த புக்ல நிறைய மேட்டர் இருக்கும் ..,நம்ப அரசியல்வாதிகளின் சுயநலம் ..,இங்கே சொல்லலாமா வேண்டாம்னு ஒரு வித @#$$$%%....,ஹி ஹி ஹி////////////


    எந்த புக் பாஸ் எதவாது லிங்க் இருந்தால் குடுங்க

    ReplyDelete
  62. இம்புட்டு யோசனை கூடாது தல .... நாம வாழ்றது இந்தியா .... நம்ம ஆளுறது இத்தாலி .... அவுக சொல்லுறத கேக்குறது மட்டும்தான் நம்ம வேல .... எதிர் கேள்வி கேக்கபடாது ...

    ஆமா கோட்சே கோட்சேன்னு யார பத்தியோ சொல்லுறீரே ... வாக்குமூலம் வேற ரிலீஸ் ஆகிடுச்சின்னு சொல்லுறீரு ... யாருப்பா அது? நித்தியானந்தா மாதிரி ஏதாவது குஜால் கேசுல உள்ள போன சாமியாரா? எனக்கு அந்த வாக்குமூலம் கெடைக்குமா?

    ReplyDelete
  63. என்னைய்யா ஆளாளுக்கு சீரியஸ் பதிவு போட்டு உயிரை எடுக்குறீங்க. இப்படியே பண்ணினா நான் பதிவுலகை விட்டு வெளிய போயிடுவேன். பின்ன நாங்க யார கலாய்க்கிறது?

    ReplyDelete
  64. //வெற்றிகரமாக 50 அடித்த முத்து அவர்களுக்கு சிங்கப்ப்பூரு பெசல் நியூவாட்டர் ஒரு பாட்டில் பார்சல்!//

    முத்துவுக்குமா?

    ReplyDelete
  65. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    //வெற்றிகரமாக 50 அடித்த முத்து அவர்களுக்கு சிங்கப்ப்பூரு பெசல் நியூவாட்டர் ஒரு பாட்டில் பார்சல்!//

    முத்துவுக்குமா?///////////////


    பாருங்க பாஸ் அநியாயத்தை,நீங்க சொல்லுங் இந்த பன்னியை என்ன பண்ணலாமுன்னு

    ReplyDelete
  66. ///எந்த புக் பாஸ் எதவாது லிங்க் இருந்தால் குடுங்க///

    தல ,
    என்னக்கு லிங்கெல்லாம் தெரியாது ..,
    புக் பேரு FREEDOM AT MIDNIGHT - DOMINIQUE LAPPIRE ,LARRY COLLINS

    ReplyDelete
  67. பனங்காட்டு நரி said...

    ///எந்த புக் பாஸ் எதவாது லிங்க் இருந்தால் குடுங்க///

    தல ,
    என்னக்கு லிங்கெல்லாம் தெரியாது ..,
    புக் பேரு FREEDOM AT MIDNIGHT - DOMINIQUE LAPPIRE ,LARRY காலின்ஸ்///////////

    அய்யோ இங்கிலிபிஷா எனக்கு வேண்டாம்ப்பா இந்த வம்பு

    ReplyDelete
  68. ///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    என்னைய்யா ஆளாளுக்கு சீரியஸ் பதிவு போட்டு உயிரை எடுக்குறீங்க. இப்படியே பண்ணினா நான் பதிவுலகை விட்டு வெளிய போயிடுவேன். பின்ன நாங்க யார கலாய்க்கிறது? ///

    இன்னிக்கு உன்னை குமுறலாம்னு பாத்தா, எதயோ போஸ்ட் பண்ணி, அத தூக்கிட்டு எஸ்கேப் ஆயிட்டே.

    ReplyDelete
  69. ///அய்யோ இங்கிலிபிஷா எனக்கு வேண்டாம்ப்பா இந்த வம்பு///

    தல ,
    தமிழ்லையும் இருக்கு ..,நான் விசாரித்து உங்களுக்கு சொல்கிறேன்..,

    ReplyDelete
  70. //நாடு சுதந்திரம் வாங்கி பலவருசங்கள் ஆகிவிட்டன. சுதந்திரத்துக்காக, தனிமனிதனாய் பாடுபட்ட தேசத்தந்தை(!) காந்தியாகட்டும், குடும்பத்தையே துச்சமாக நினைத்து, நாட்டுக்காக ரத்தம் சிந்திய மோதிலால் நேருவாகட்டும். ( சரித்திரம் சொல்கிறது பாஸ்..).///

    தனி மனுசனா போரடியா சொதந்திரம் வாங்கி கொடுத்தாங்க?. இத்தனை நாள் இதுதெரியாம போச்சே?. அப்ப இவங்களுக்கு கோவில் கட்டி மூலஸ்தானத்துல சிலையத்தா வைக்கனும்.

    ReplyDelete
  71. ////jey ,
    தனி மனுசனா போரடியா சொதந்திரம் வாங்கி கொடுத்தாங்க?. இத்தனை நாள் இதுதெரியாம போச்சே?. அப்ப இவங்களுக்கு கோவில் கட்டி மூலஸ்தானத்துல சிலையத்தா வைக்கனும்.
    July 7, 2010 6:14 பம்////

    யோவ் இது தெரியாம நான் பத்தாவதுல வரலாறுல 95 marku வாங்கிட்டேன் ...அப்போ உண்மையா நான் எவ்ளோ marku ??

    ReplyDelete
  72. பனங்காட்டு நரி said...

    ///அய்யோ இங்கிலிபிஷா எனக்கு வேண்டாம்ப்பா இந்த வம்பு///

    தல ,
    தமிழ்லையும் இருக்கு ..,நான் விசாரித்து உங்களுக்கு சொல்கிறேன்..,//////////////////


    உங்க நேர்மை எனக்கு பிடிச்சு இருக்கு

    ReplyDelete
  73. பனங்காட்டு நரி said...
    ////jey ,
    தனி மனுசனா போரடியா சொதந்திரம் வாங்கி கொடுத்தாங்க?. இத்தனை நாள் இதுதெரியாம போச்சே?. அப்ப இவங்களுக்கு கோவில் கட்டி மூலஸ்தானத்துல சிலையத்தா வைக்கனும்.
    July 7, 2010 6:14 பம்////

    யோவ் இது தெரியாம நான் பத்தாவதுல வரலாறுல 95 marku வாங்கிட்டேன் ...அப்போ உண்மையா நான் எவ்ளோ marku ??

    பத்தாவதே ப்ரியபடிப்பு, அதுல 85 மார்க் வேறயா?. அப்ப நீர்தாம்யா நெறய பேசனும், நாங்கல்லாம் அஞ்சாப்பு பெயிலு:)

    ReplyDelete
  74. ராஜன் said...
    ஒகே பட்டா! கெளம்பறேன்; இது பரவால்ல சோசியல் மேட்டரு பண்ணிக்கலாம்; டைவர்ஸ் கேசெல்லாம் நம்ம கிட்ட வருதுப்பா!

    நாம என்ன கோர்ட்டா வக்கீலா!//

    நீங்க போங்க தல,இது அஹிம்ச மேட்டரு:)

    ReplyDelete
  75. ஜெய்லானி said...
    என்னுடைய இன்னொரு சந்தேகம் அதில சேர்த்துக்கேளுப்பா..!!!

    ரஷ்யா வில போய் இறந்தாரே நமது பழைய பிரதமர் . அதன் ரகசியம் ஏன் இன்னும் வெளி வரல..?

    அந்த கேச பத்தி கோர்ட்டும் பதில தரலையே ஏன்..??

    ஏன்..?

    ஏன்..?

    ஏன்..?///

    ச்சே, இந்த ஜெய்லானியோட சந்தேகங்களோட எண்ணிக்கை கூடிகிட்டே போகுதே, 10001 லிருந்து 10002 -டா ஆயிருச்சே, நொம்ப படிச்ச மக்கள்’ஸ் யாராவது இருந்தா வந்து தீத்து(தீர்த்து) வைங்க.

    ReplyDelete
  76. என்னடா இந்த பட்டாபட்டியை ஆளையே காணோமே இன்னு நெனச்சேன். தொடருங்கள் உங்கள் தாக்குதலை

    ReplyDelete
  77. @ஈரோடு கதிர் said...
    கேளுங்க கேளுங்க
    //

    கேட்டுக்கிட்ட இருங்க..ஹி..ஹி

    ReplyDelete
  78. ராஜன் said...

    சக்கை!

    பட்டாசு போஸ்ட் பட்டா!

    நச்சுனு இருக்கு...
    //

    வாங்க தல..

    ReplyDelete
  79. @பனங்காட்டு நரி said...
    பட்டா ,
    உனக்கு இந்த சந்தேகமெல்லாம் தீரனும்னா ..,ஒரு புக் இருக்கு ..,பேரு வந்து ...,'''FREEDOM AT MIDNIGHT''' - DOMINIQUE LAPPIRE ,LARRY COLLINS என்று ரெண்டு பேரு எழுதினது ..,ஆதாரத்தோட புட்டு புட்டு வெச்சிருப்பாங்க ...,நேரு வின் சுயநலம் ,காந்தியின் கொள்கை பற்று ,ஜின்னாஹ் வின் முஸ்லிம் லீக் ...,படிக்க வேண்டிய புத்தகம் பட்டா ...,
    //

    அதேதான் பாஸ்.. நீங்க சொன்னதில ஒரு புக் படிச்சேன்..
    மிதி ரெண்டையும் கண்டுபிடிக்கனும்..
    தகவலுக்கு நன்றீ பாஸ்..

    ReplyDelete
  80. July 7, 2010 4:47 PM
    முத்து said...
    @பன்னிக்குட்டி ராம்சாமி said...
    //அன்றுமுதல் இன்றுவரை போராடிக்கொண்டிருப்பது முக்கியமான ஒரு பிரச்சனைக்குத்தான். ஆங்.. அதுக்கு ஒரு பேர வெச்சுருக்காங்க.. ’வறுமைக்கோடாம்’//
    அந்தக் கோடு மட்டும் எங்க இருக்குன்னு சொல்லுங்க தல, ஓடிப்போயி அழிச்சிட்டு வந்துர்ரேன்!
    //

    அப்படி அழிக்க முடிஞ்சா எவ்வளவு நல்லாயிருக்கும் பன்னி சார்..

    ReplyDelete
  81. @கொல்லான் said...
    என்னய்யா பொழைக்கத் தெரியாத ஆளா இருக்கீர்.
    உனக்கும் எனக்குமா தியாகி பட்டம் கொடுப்பாங்க?
    //

    அது என்னமோ வாஸ்தவம்தான் பாஸ்..

    ReplyDelete
  82. @முத்து said...
    50

    ஸ்கிரிப்ட் நல்லா வேலை செய்யுதா முத்து?

    ReplyDelete
  83. @Jey said...
    யாருகிட்ட கேக்குற பட்டா, சொன்னாலும், நதாரித்தனமான பதிலத்தான் இருக்கு. டவுசரை கைல பிடிச்சிட்டயில்ல, அத நல்லா கிழிச்சா நாமளே பதில் தெரிஞ்சிக்கலாம். இதுல அவர குறை சொல்லாத, இவர பதி அப்படி சொல்லாதேனு, கெண்டில்மேன்ஸ் யாரும் வந்தா?. தக்காளி ஆரஞ்சு ப்ழிஞ்சு சூசு போடலாம்.
    //

    அய்யே..அதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்ல..
    எவ்வளவு போர்கலங்கள்.. ரத்தங்கள் பார்த்தாச்சு

    ReplyDelete
  84. பனங்காட்டு நரி said...

    பட்டா ,
    அந்த புக்ல நிறைய மேட்டர் இருக்கும் ..,நம்ப அரசியல்வாதிகளின் சுயநலம் ..,இங்கே சொல்லலாமா வேண்டாம்னு ஒரு வித @#$$$%%....,ஹி ஹி ஹி
    //

    இது நம்ம ப்ளாக் பாஸ்.. அடிச்சு ஆடுங்க..

    ReplyDelete
  85. "ராஜா" said...

    இம்புட்டு யோசனை கூடாது தல .... நாம வாழ்றது இந்தியா .... நம்ம ஆளுறது இத்தாலி .... அவுக சொல்லுறத கேக்குறது மட்டும்தான் நம்ம வேல .... எதிர் கேள்வி கேக்கபடாது ...

    ஆமா கோட்சே கோட்சேன்னு யார பத்தியோ சொல்லுறீரே ... வாக்குமூலம் வேற ரிலீஸ் ஆகிடுச்சின்னு சொல்லுறீரு ... யாருப்பா அது? நித்தியானந்தா மாதிரி ஏதாவது குஜால் கேசுல உள்ள போன சாமியாரா? எனக்கு அந்த வாக்குமூலம் கெடைக்குமா?
    //

    வரும்..விரைவில வரும் சார்..

    ReplyDelete
  86. @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    என்னைய்யா ஆளாளுக்கு சீரியஸ் பதிவு போட்டு உயிரை எடுக்குறீங்க. இப்படியே பண்ணினா நான் பதிவுலகை விட்டு வெளிய போயிடுவேன். பின்ன நாங்க யார கலாய்க்கிறது?
    //

    நம்ம பன்னி எதுக்கு இருக்கு?

    ReplyDelete
  87. @சசிகுமார் said...
    என்னடா இந்த பட்டாபட்டியை ஆளையே காணோமே இன்னு நெனச்சேன். தொடருங்கள் உங்கள் தாக்குதலை
    //

    வாங்க பாஸ்..உங்க கடையில புது சரக்கு சூப்பராயிருக்கு..
    நல்ல டிப்ஸ் பாஸ்..

    ReplyDelete
  88. July 7, 2010 7:57 PM
    @ராஜ நடராஜன் said...
    sarcastic buddy....no.. pattu:)
    //

    thanks sir.. என்ன சார் உங்க ப்ளாக் போகமுடியமாட்டீங்குது?

    ReplyDelete
  89. //சமீபத்தில அதே வசனம் அன்னை(?) சோனியாவால் திரும்பவும் சொல்லப்பட்டது.//

    Hello...here you miss the word "Gandhi" (Sonia gandhi).
    Varalaru ramba mukiyam,Patta...

    Ama, enaku oru doubt...Gandhi'kum evankalukum enaa samantham??? Eppadi "Gandhi" evanka name kooda varuthu???
    Oru velai ithu ethavathu "university" degree'ya??

    ReplyDelete
  90. Kumar said...

    //சமீபத்தில அதே வசனம் அன்னை(?) சோனியாவால் திரும்பவும் சொல்லப்பட்டது.//

    Hello...here you miss the word "Gandhi" (Sonia gandhi).
    Varalaru ramba mukiyam,Patta...

    Ama, enaku oru doubt...Gandhi'kum evankalukum enaa samantham??? Eppadi "Gandhi" evanka name kooda varuthu???
    Oru velai ithu ethavathu "university" degree'ya??
    //

    இது ஒரு பல்கலைக்கழகம்..
    முஸ்லீமாக் இருந்து இந்துவாகி, கிருஸ்டியனாகி, மீண்டும் இந்துவாகி...அப்புறம் கிருஸ்டியன் ஆகி..

    மூச்சு வாங்குது பாஸ்..

    இதுக்கு, நெட்ல, ஒரு Org-Chart-யே இருக்கு பாஸ்..

    நான் வெயிட் பண்றது எதுக்குனா, பிரியங்கா காந்தியோட குழந்தைகளுக்கு பின்னாரி வரும் பெயர்... காந்தினு முடியுமா?..இல்ல ஜார்ஜ்னு முடியுமா?..

    பார்க்கனும்..

    ReplyDelete
  91. //நான் வெயிட் பண்றது எதுக்குனா, பிரியங்கா காந்தியோட குழந்தைகளுக்கு பின்னாரி வரும் பெயர்... காந்தினு முடியுமா?..இல்ல ஜார்ஜ்னு முடியுமா?..//

    Kandippa 'Gandhi'nu than mudiyum...Pinna intha desatha appala yaru kappatharathaam...???

    Hmmm..Italy'ku thirumba poi ithuku mela velai vetti ellam pakka mudiuma enna...

    ReplyDelete
  92. நல்லா கேட்டீங்க :)

    ReplyDelete
  93. மிக நல்ல பகிர்வு பட்டாபட்டி.

    ReplyDelete
  94. script நல்லா வேலை செய்யுது பட்டா

    ReplyDelete
  95. பட்டாபட்டி.. said...

    ஆமா கோட்சே கோட்சேன்னு யார பத்தியோ சொல்லுறீரே ... வாக்குமூலம் வேற ரிலீஸ் ஆகிடுச்சின்னு சொல்லுறீரு ... யாருப்பா அது? நித்தியானந்தா மாதிரி ஏதாவது குஜால் கேசுல உள்ள போன சாமியாரா? எனக்கு அந்த வாக்குமூலம் கெடைக்குமா?
    //

    வரும்..விரைவில வரும் சார்..//////


    சீக்கிரம் போடு பட்டா,அப்போ தான் என்னை மாதிரி மர மண்டைகளுக்கு புரியும்

    ReplyDelete
  96. ///முத்து said...
    100 ///

    முத்து பதிவுலகத்துல நீர்தாம்யா செஞ்சுரிமேன்.:)

    ReplyDelete
  97. தம்பி இன்னும் வடை வரல...! அப்டியே ஒரு டீ சொல்லு...! :)

    ReplyDelete
  98. Blogger Veliyoorkaran said...

    தம்பி இன்னும் வடை வரல...! அப்டியே ஒரு டீ சொல்லு...! :)
    //

    ஓய்..தொப்பி போட்டுக்கிட்டு வந்தா நீரு வெளியூர்காரன் ஆகிவிடமுடியுமா?..

    அவரு பாவம்..எங்க இருக்காரோ?.. என்ன நிலைமையில இருக்காரோ?..

    நாங்களே முழிச்சிக்கிட்டு இருக்கும்போது, நடுவில வந்து சலம்பல் பண்ணக்கூடாது

    ReplyDelete
  99. @Uma said...
    நல்லா கேட்டீங்க :)
    //

    வாங்க மேடம்..

    ReplyDelete
  100. @செ.சரவணக்குமார் said...
    மிக நல்ல பகிர்வு பட்டாபட்டி.
    //

    வாங்க பாஸ்..இது தொடக்கம் மட்டும்தான்...

    ReplyDelete
  101. நல்லா இருக்கு சார்...என்ன திடிர்ன்னு வரலாறு பேசுறிங்க?....


    எனக்கும் ஆணி அதிகம் சார....

    ReplyDelete
  102. yov ,எப்பையா பதிவு போட்ட , நேத்து உன்னோட ப்ளாக் வந்து பாத்தேன் ?/

    ReplyDelete
  103. சரி..வறுமைக்கோடு பிரச்சனைக்கு வருவோம். இதையெல்லாம் ஒழிக்க ஒரே வழி.. நல்ல வழி... “நடுத்தர மக்களை, ஏழை மக்களாக்குவதுதான்”. ஏணியில ஏறுவதை விட , இறங்குவது சுலபம் சார். அதற்கான முயற்சியாகத்தான்
    ////


    தக்காளி இது தான் "பட்டாப்பட்டி டச்சு" , உன்னாலதான் முடியும்

    ReplyDelete
  104. உரிமைக்கும் , கடமைக்கும் என்னய்யா வித்தியாசம்?’. ///

    அப்புறம் எனக்கு வாயில ஏதாவது வந்துரும்

    ReplyDelete
  105. ஒரு தலைவனுக்கே, நடுத்தரவர்கத்தில் இருந்து பணக்கார வர்கமாக, பதவி உயர்வு பெற, சற்றேரக்குறைய 40 ஆண்டுகள் பிடித்தன. ////

    அதுவும் எவ்வளவு கடுமையான உழைப்பு , குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் (சிறு குழந்தைகள் , கொள்ளுப்பேரன் உட்பட ? உழைத்து உழைத்து ஓடாக போய்விட்டார்கள்


    /// அப்படியென்றால். சாதாரண மக்களின் கதி?.///

    இரு , தானைத் தமிழ் தலைவன் அதற்க்கு ஒரு வலி நிச்சயம் சொல்வார்

    ReplyDelete
  106. மங்குனி அமைச்சர் said...

    yov ,எப்பையா பதிவு போட்ட , நேத்து உன்னோட ப்ளாக் வந்து பாத்தேன் ?/

    தனியா வந்தியா?.. இல்ல தண்ணியோட வந்தியா?...ஹி..ஹி

    ReplyDelete
  107. ganesh said...

    நல்லா இருக்கு சார்...என்ன திடிர்ன்னு வரலாறு பேசுறிங்க?....


    எனக்கும் ஆணி அதிகம் சார....
    //

    சும்மாத்தான்.. வரலாறு முக்கியம் அமைச்சரே...

    ReplyDelete
  108. Good questions …
    You well get the answers, but most people won’t like it.
    Rajesh
    (sorry I don’t know how to send a comment in tamil)

    ReplyDelete
  109. Rajesh said...

    Good questions …
    You well get the answers, but most people won’t like it.
    Rajesh
    (sorry I don’t know how to send a comment in tamil)
    //

    உண்மைதான்..மூளைச்சலவை நன்றாக் செய்ப்பட்டுவிட்டது..
    (இது 60 வருடக் கதை அல்லவா ராஜேஸ்..ஹா.ஹா..)

    ReplyDelete
  110. சொல்லவேண்டிய கருத்துக்களை அருமையா சொல்லிருக்கீங்க....இந்தியாவில் எல்லாமே உல்டாவா தான் இருக்கு. இதில் மாற்றவேண்டியத்தை கண்டிப்பாக மாற்றப்படவேண்டும்

    ReplyDelete
  111. கையைக்குடுயா பட்டா... தக்காளி நல்லாத்தான் கேட்டிருக்க... பதிலு எங்கயும் இருந்து வராது....
    மிஞ்சிப்போனா... சேலம் சித்த வைத்தியர் மாதிரி (இறை)ஆண்மையைப் பத்தி பேச ஆரம்பிச்சிடுவாணுக...

    ReplyDelete
  112. மறக்க நினைச்சு மரத்து போச்சுபா. நீ கேக்கிற கேள்வியால சம்பந்த பட்டவனுங்க பதில் சொல்றானுங்களோ இல்லையோ? ஆட்டு மந்தையா இருக்கிறவங்க மனுச பய புள்ளைகளா மாறினா சரிதான்...

    ReplyDelete
  113. அருமையான கேள்விகள்! அது சரி..அந்த படம்!!! எப்படி பட்டாபட்டி? எப்படி..அந்த ரகசியத்தை சொல்லுங்களேன். அந்த படத்தை நம்ம பிளாக்கிலேயும் போட்டுவிட்டேன். நன்றி..

    ReplyDelete
  114. நீங்க பாட்டுக்கு துவைச்சுகிட்டு இருங்க, காயப்போடறதுக்கு நாங்க இருக்கோம்.

    ReplyDelete
  115. அப்பா.. இத்தனை நாளா இந்த பட்டாவைத் தான் தேடிகிட்டு இருந்தேன்..எங்க அண்ணன் கூட சொன்னார், பட்டா வர வர கருத்துகளை விட கலாய்ப்புகளை மட்டுமே செய்வது போல் சலிப்பு தட்டுகிறதுன்னு...

    ஆனா இப்பப் போய் அவர் முன்னாடி தொடையைத் தட்டி, இந்தப் பதிவைப் படிக்கச் சொல்லுவேன்... இது பொதுவான பின்னூட்டம், அடுத்து வருவது என்னோட பின்னூட்டம்...

    ReplyDelete
  116. என்ன பட்டா, ஒடம்பு கிடம்பு சரியில்லையா,..? சிங்கப்பூர்ல இருந்தப்ப நல்லாத்தான இருந்தீக..? ஊர்ர்க்காத்து ஏதும் ஒடம்புக்கு ஒத்துக்கிலையோ என்னவோ...? மாரியாத்தா கோயிலுக்கு மந்திரிச்சு தாயத்து கட்டினா தான் சரியா வரும்போல...

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!