Pages

Thursday, December 31, 2009

வாங்கய்யா..மருத்துவரய்யா..

செய்திகள்
  • ஜெயங்கொண்டம்: வன்னியர்கள் வன்னியர்களுக்கு மட்டுமே, குறிப்பாக பாமகவுக்கு மட்டுமே ஒட்டு போட்டால் தமிழகத்தில் உள்ள 120 சட்டசபை தொகுதிகளில் பாமக வெற்றிக் கனியை பறித்து ஆட்சியை பிடிக்கும்
    ( அய்யா..சாமி.. தயவு பண்ணி ஓட்டப்போடுங்க சாமி...)

  • தமிழகத்தில் உள்ள 6 கோடி பேரில் 2 கோடி பேர் வன்னியர்கள் உள்ளனர். வன்னியர்கள் வன்னியர்களுக்கே ஒட்டு போட்டால் தமிழகத்தில் 120 சட்டசபை தொகுதிகளில் வெற்றிக் கனியை பறித்து ஆட்சியை பிடிக்கலாம். இதற்கு அனைத்து வன்னியர்களும் ஒன்று சேர வேண்டும்.
    ( 2 கோடி இருக்கட்டும்.. முதல்ல அன்பு-பெல் உங்களுக்கு ஓட்டு   போடுவாராய்யா?..தவறான முடிவினால், மகனுனோட கோட், ஸுட் -ய கழட்டுனவறாச்சே நீங்க...)

 

  • 1987 -ல் போராட்டம் நடத்தி மற்ற சாதிகளுடன் இணைந்து 20 சதவீத இடஒதுக்கீடு பெற்றோம்.ஆனால் அதில் 7 சதவீதம் கூட நமக்கு பலன் கிடைக்கவில்லை. 
     ( அடடா.. வடைபோச்சே..)
 


  • வன்னியர்களுக்கு என தனியாக 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி அறவழியில் போராட்டம் நடத்தி சிறை செல்ல 20 வயது முதல் 30 வயது வரையுள்ள ஒரு லட்சம் இளைஞர்கள் தயாராக வேண்டும்.
         ( அடப்  பார்றா..இதுதான் பெற்ற பாசமென்பதா...அழகா நம்ம மணிய கரைசேத்திட்டார்...)



  • சிறையில் இருந்து வெளியில் விட்டாலும் மீண்டும் அதே போராட்டத்தை நடத்தி சிறைக்கு செல்ல வேண்டும். நான்கூட 6 மாதம் சிறைக்குச் செல்ல தயாராக உள்ளேன் என்றார்.
     ( அய்யா.. நீங்க எதுக்குய்யா வயசானகாலத்திலே உள்ளபோயிட்டு.... வெளியிருந்தே கட்ட ஆரம்மிசுருங்க............. சமாதி-ய...


ஏனய்யா. உங்கள் அரசியல் அனுபவமென்ன..நீங்கபோயி 6 மாத விசா அப்ளை பண்ணீட்டு......நீங்கமட்டும் "உம்" -னு சொல்லுங்க.... காடுவெட்டிகிட்ட சொல்லி பர்மனெண்ட் விசாவுக்கு ,  பேப்பர்ச மூவ் பண்ணிடலாம்..)





.

8 comments:

  1. பட்டாபட்டியாரே..இன்னும் கொஞ்சம் ராவா கலாய்ச்சிருக்கலாம்...இன்னும் குஷி ஆய்ருப்பேன்..சொக்கா கீதுமே.... :)

    ReplyDelete
  2. அப்பு. எனக்கு அவசரமா உங்க உதவி தேவைப்படுது..
    நம்ம அன்புமணி , டாஸ்மார்க்ல தண்ணியப் போட்டுட்டு , ஒரே அலம்பர பண்றாரு..
    அதப் பார்த்திட்டு, அய்யாவேற, "நான் ஜெயிலுக்குப் போறேன் ... 6 மாசம் யாரு
    மூஞ்சியில முழிக்கமாட்டேன்.." ஒரே அழுகை..

    எவனாவது எம்.பி உங்க ஏரியாவுல சாகறமாறி இருந்தா,
    எனக்கு S.M.S பண்ணுங்க..
    அப்படி சிங்கையில முடியலேனா " பிரியமுடன் வசந்த் " தம்பிய கேட்டுப்பாருங்க..
    நானும் அடுத்தவாரம் காரமடை ஜோசியகாரருகிட்டே ,ஏதாவது பண்ணமுடியுமானு கேட்கறேன்..

    ReplyDelete
  3. ஆளாளுக்கு எங்க அய்யாவ நக்கல்
    பண்ணிறீங்க..நல்லாயில்ல.. சொல்லிட்டேன்..
    இப்படியே பண்ணிருந்தா நான் தீ குளிக்க முடிவுபண்ணிடுவேன்..

    ReplyDelete
  4. யோவ்..யாரய்யா அந்த காரமடை ஜோசியக்காரரு..அட்ரஸ்-ச குடுப்பா..

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!