Pages

Wednesday, August 24, 2011

பேட்டி- நரியுடன்

நரி-சிறுகுறிப்பு:

நல்லவர். வல்லவர். அநியாத்தைக் கண்டால் ஓடும் Buzz  என்பதைக் கூடப்பாராமல்,  ஓங்காரமாய் ஏறுபவர்.    இவரிடம் பேட்டி எடுப்பது என்பது, ’கனிமொழியை வைத்து சென்னை சங்கமம் நிகழச்சிக்கு  ரிப்பன் வெட்டுவது’ போல..  (எல்லாம் காலம் கொடுமை பாஸ்.. விடுங்க...விடுங்க..)

மேலும், மக்களுக்காக களப்பணி ஆற்ற துடித்துக்கொண்டு இருக்கும் இந்த இளைஞர். திடீரென  காணமல் போனதுக்கு காரணம்?..
.
.
.
வேறு ஒன்றுமில்லை பாஸ்..
ஒரு திருட்டுக்கல்யாணம் பண்ணி வைக்க திருட்டுத்தனமா  போயிருந்தார். இவரைப்பற்றி மேலும் சொல்லிக்கொண்டு இருந்தால், வயோதிகர்கள்  வாலிபர்களாகும் சங்கடங்களும் நேரலாம் என்பதாலும்.....  இத்துடன்  இவரைப் பற்றிய  அறிமுகத்தை முடித்துக்கொண்டு பேட்டிக்குச் செல்லலாம்.  ( திருட்டுக்கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் என வேண்டுதல் கொண்டவர்கள்,  உடனடியாக அவரை அணுகி துண்டைப் போட்டுக்கொள்வது நல்லது.)

===============

வணக்கம் நரி அவர்களே.. உங்களுடைய பேட்டி வேண்டும் என அறிக்கை விட்டதும், கட்டிய  துணியுடன் கடல்கடந்து போய்விட்டீர்கள் போல!!..

இல்லை..இல்லை.. நானும் லோக்கல்தான். என் தலைவன் மீது ஆணையாக, சத்தியமாக,   அவர் சொல்படி, ஒரு திருட்டுத் திருமணம் நடத்தி வைக்கச் சென்றிருந்தேன். இதில்   உள்நோக்கம் கற்பிக்கவேண்டாம்.
"யாதும் ஊரே..யாவரும் கேளீர்.."



சரி..சரி..தெற்கிலிருந்து வடக்கு வரை கை-கள் நீளும்போது, யாதும் ஊரேதான்...

உம்..( ”கோபம்” எனக்கொளக, வாசகர்களே!!.. )



கடந்த தேர்தலில் விழுந்த அடி பலமோ?.

நீங்கள் யாரை மனதில் வைத்துக்கேட்கிறீர்கள் என தெரியவில்லை. ஆனாலும் அடித்த அடியில்,   முழங்கால்வரை வந்து.. அப்பால பழையநிலைக்கு சென்றுவிட்டது.. 



சார்..சார். இந்த ஏரியாவுல பல படிச்ச பன்னாடைகள் புழங்குவாங்க. அசிங்கமா பதில்   சொன்னா மூஞ்சிய சுளிப்பாங்க சார்.


யோவ்.. இங்க நான் சொல்லவருவது “வலி”.. அதுகூடப்தெரியாமல்  இருப்பவர்களைப் பார்த்து, எதில்கொண்டு சிரிப்பதென  எனக்குத் தெரியவில்லை.
நெக்ஸ்ட்..



===============


ஓகே.. ஓகே.. சில பதிவர்கள், நாங்கள் ’நடுநிலைமாறா நற்பண்பு கொண்டவர்கள்’  எனக்கூவிக்கொண்டு  இருக்கிறார்கள். அவர்களைப் பார்க்கும்போது.. அதாவது..அவர்களின்  பஸ் படிக்கும்போது... தாங்கிய தாங்குதலால்தான்.. அது இரும்புக்கொட்டை  ஆகியிருக்குமோ என்ற எண்ணம் வருவதை மறுக்கமுடியவில்லை. அதைப்பற்றி தங்கள்  கருத்து?..

What is that iron ball?..



இல்லை அய்யா.. அது எழுத்துப்பிழை. அதாவது நான் சொல்லவருவது
“இரும்புக்கோட்டை”..


ஓ.. you funny... ”கோழி கூவியா”, எங்கள் தலைவி வெளியவரப்போறாங்க...
ஒன்றும் தெரியாத அப்பாவிகளை சிறைக்கு அனுப்பி, சிரித்துக்கொண்டிருக்கும் சிங்காரிகளுக்கு,    காலம் பதில் சொல்லட்டும். மேலும் நீங்கள் சொன்ன பதிவர்கள், நடுநிலைவாதிகள் என்ற  கருத்துக்கு மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.

சிலவிசயங்களில் , மக்களின் புரிதலுக்கும்,  மன்னர்களின் புரிதலுக்கும்  வித்தியாசங்கள்  இருக்ககூடும். எங்கள் மன்னர்கள் மூக்கு சொறிய கை துக்கினாலே, சாணக்கியத்தனம் என  புளங்காகிதம் அடையும், ’ஓட்டு வைத்திருக்கும் மக்கள்’ இருக்கும்வரை, எங்களை யாரும்  அசைக்கமுடியாது.. (வெண்ண.. கேள்வி கேட்டுக்கிட்டே இருக்கியே தவிர, குடிக்க தண்ணி
கொடுக்கிறானா..இந்த நாதாரி..)



ஓ.கே சார்.. நடுநிலை-னா, ரெண்டு கால் இடுக்கில், இறுக்கப்பற்றியபடி, நேர்பார்வை  கொண்டு, விவாதம் புரிவது எனக் எடுத்துக்கொள்ளலாமா?..

எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். இது ஜனநாயக நாடு..



===============


ராஜீவ் சமாதியில் ரூ40 லட்சம் செலவில் மின்விளக்கு வைக்கப்போறாங்களாம். அதுவும்,  மூன்று விளக்கில் இருந்து வரும் வெளிச்சம், ஒரு புள்ளியில் குவிந்து, அந்த பிராந்தியமே  ஒளிவெள்ளத்தில் மூழ்கப்போவதாகவும்,  அதற்காக மத்திய அரசாங்க ஊழியர்கள், ஊண்  உறக்கமின்றி வேலை செய்துகொண்டிருப்பதாக செய்திகள் கூறுகிறதே.. அதைப்பற்றி உங்கள்  கருத்து?..

மத்தியமாநில அரசுகளின் திட்டங்களை குறைகூறிக்கொண்டே திரிபவர்களை, உள்ளே வைத்து  நொங்கெடுக்கனும் சார். ராஜீவ் காந்தி யார். அவர் இந்தமண்ணில் பிறக்க மக்கள் புண்ணியம்  பண்ணியிருக்கனும் சார்..
மேலும், அவர் சமாதியின் அருகிலதான்.. இன்னொருவர் சமாதியும்  இருக்கிறது.. அவரு பேரு..பேரு..... ஆங்.. காந்தி...



இந்திராகாந்தியா சார்?..

இல்லப்பா.. இது அவரோட கொள்ளுத்தாத்தா..காந்தி..என்னமோ பெருசா வருமே..   சந்த்.ஆங்..கரம்சந்து காந்தி..தனிமனிதனாய் போராடி, வெள்ளையனிடமிருந்து சுதந்திரத்தை  வாங்கிக்கொடுத்தாரே. இப்படி கோவணம் கட்டியவரின் சமாதியும், சூட் போட்டவரின்  சமாதியும் ஒரே இடத்தில் இருப்பதைப்பார்த்து, வெள்ளையர்களே,  மூக்கில் விரலை
வைத்துக்கொள்வார்கள். பொறுத்திருந்து பாருங்கள்..



ரொம்ப நல்லது. அம்மா ஆடு கொடுத்ததும், அதை விற்று காசாக்கி, திருட்டு ரயில்  ஏறியாவது ,அங்கு சென்று விளக்கு வெளிச்சதில் எங்கள் பின்புறத்தை பார்க்க நாங்கள் ஆவலாக  இருக்கிறோம் சார்..

சீக்கிரம் அடுத்த கேள்விய வீசுப்பா..  வேலை இருக்கு..


===============


ஓ.. உங்கள் பேரில் அது என்ன சார்.. பால்.. மாறாத மணம்னு.. அது என்ன இழவு-னு  ஒரு மண்ணும் புரியலே...

தம்பி.. சங்க இலக்கியத்தை படிச்சிருந்தா, என்னைப்பார்த்து இந்த கேள்வி வந்திருக்காது..   அது ஒருவகையான பால். இதைப்பற்றி மேலும் விவரம் வேண்டும் என்றால், திருச்சிக்கு  வா.. சொல்கிறேன்..




ஏன் சார் .. அங்கே பொதுக்குழு ஏதாவது..

இல்லப்பா.. என்னுடைய நண்பனுக்கு திருமணம்.. நான் தாலி எடுத்துக்கொடுத்தாதான்  கட்டுவேனு கூவறான். சரி.. திருட்டுக்கல்யாணம் பண்ணி வைக்க என்னைவிட்டா,     அவனுகளுக்கு யார் இருக்கா?. அதான்..

சரி.. பேட்டி போட்டும்போது, என்னோட போட்டோவை, கலர்ல போடு,,
கடைசிக்கு ஈஸ்ட்மென் கலராயிருந்தாலும் பரவாயில்ல....



சே..சே.. போட்டோ போட்டு , அதற்கு பொட்டு வெச்சு, மாலை சாத்தாம நாங்க ஓயமாட்டோம சார்.....  கவலைப்படாம, கல்யாணம் பண்ணி வைக்க கிளம்புங்க பாஸ்..  
உங்க பேட்டிக்கு எங்களால் முடிந்த சிறு உதவி...ஹி..ஹி    “நன்றி”....


(மேலும் அண்ணன் மனம் நோகாதவாறு ”நரியின் பெயர், கலர் செய்யப்பட்டுள்ளது,,,,)
.
.
.


66 comments:

  1. இந்தப்பேட்டியை, தமிழ் மணத்திலோ.. அல்லது இண்டெலியில் இணப்பவர்களுக்கு...
    குஷ்பூ போல குழந்தை, புஸுக்..புஸ்க் என பிறக்க வாய்ப்புள்ளதால்.. அன்பர்கள் தயவு செய்து.. அந்த பாவ காரியத்தை செய்யவேண்டாம் எனக்கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்...

    ReplyDelete
  2. வணக்கம் தலைவரே.,,

    இருங்க படிச்சிட்டு வாரேன்,

    ReplyDelete
  3. திருட்டுக்கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் என வேண்டுதல் கொண்டவர்கள், உடனடியாக அவரை அணுகி துண்டைப் போட்டுக்கொள்வது நல்லது.)//


    ஏம்பா...நிரூ...பட்டா அண்ணன் பாசறைக்கு ஓடி வந்தியே..
    இது உனக்குத் தேவையா...

    ReplyDelete
  4. வணக்கம் நரி அவர்களே.. உங்களுடைய பேட்டி வேண்டும் என அறிக்கை விட்டதும், கட்டிய துணியுடன் கடல்கடந்து போய்விட்டீர்கள் போல!!..//

    பாரய்யா இடுப்பிலே Underwear ஆச்சும் இருக்கா இல்லையா என்று?

    ReplyDelete
  5. நீங்கள் யாரை மனதில் வைத்துக்கேட்கிறீர்கள் என தெரியவில்லை. ஆனாலும் அடித்த அடியில், முழங்கால்வரை வந்து.. அப்பால பழையநிலைக்கு சென்றுவிட்டது.. //

    இது...செம பதில்.
    ஒரு வேளை திமுக வை தாக்குறாரே பட்டா..

    எப்பூடி கோர்த்து வுடுவமில்லே.

    ReplyDelete
  6. ஓ.கே சார்.. நடுநிலை-னா, ரெண்டு கால் இடுக்கில், இறுக்கப்பற்றியபடி, நேர்பார்வை கொண்டு, விவாதம் புரிவது எனக் எடுத்துக்கொள்ளலாமா?..

    எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். இது ஜனநாயக நாடு..//

    ஸப்பா...யாரோட டவுசரையோ பட்டா உருவுறாரே...

    ReplyDelete
  7. அண்ணே, இண்ட்லி ஓட்டுப் பட்டையைக் காணமே.

    ReplyDelete
  8. (மேலும் அண்ணன் மனம் நோகாதவாறு ”நரியின்” பெயர், கலர் செய்யப்பட்டுள்ளது,,,,)//


    அவ்...பண்றதெல்லாம் பண்ணிட்டு, இது வேறையா..

    அண்ணன் நரி, எங்கிருந்தாலும் பட்டாவின் அரங்கத்திற்கு ஓடோடி வருக.

    ReplyDelete
  9. //”கோழி கூவியா”, எங்கள் தலைவி வெளியவரப்போறாங்க...
    ஒன்றும் தெரியாத அப்பாவிகளை சிறைக்கு அனுப்பி, சிரித்துக்கொண்டிருக்கும் சிங்காரிகளுக்கு, காலம் பதில் சொல்லட்டும்.//

    யோவ் நரி எனக்கு ஒரு சந்தேகம் கோழி எப்படி கூவும் ..சொல்லு பார்ப்போம் ...

    ReplyDelete
  10. நாள் கழிச்சி வந்து இம்மாம்பெரிய குண்டை வீசுறியே மாப்ள!

    ReplyDelete
  11. //ஓ.கே சார்.. நடுநிலை-னா, ரெண்டு கால் இடுக்கில், இறுக்கப்பற்றியபடி, நேர்பார்வை கொண்டு, விவாதம் புரிவது எனக் எடுத்துக்கொள்ளலாமா?..//

    எங்க இருக பற்றுவது ..காலை தூக்கினா தானே வந்து உருவிருகானுகளே ..ட்ரவுசர

    ReplyDelete
  12. இந்த பதிவை தமிழ்மணத்தில் இணைப்பவர்களுக்கு.. குஷ்ஷ்ஷ்ச்பூ மாறீ குழந்தை பொறக்ம்னு சொல்லியும்... உம்.. நடக்கட்டும்,, நடக்கட்டும்

    ReplyDelete
  13. நரி என்பவர் அவ்ளோ பெரிய அப்பாட்டக்கரா? (ஆமா அந்த நாயி இப்ப எங்க சுத்திக்கிட்டு இருக்கு?)

    ReplyDelete
  14. யோவ் நரி எனக்கு ஒரு சந்தேகம் கோழி எப்படி கூவும் ..சொல்லு பார்ப்போம் ...
    //

    எதுல கூவும்னு விளக்கமா கேளுய்யா....

    ReplyDelete
  15. நரி என்பவர் அவ்ளோ பெரிய அப்பாட்டக்கரா?
    //

    நரி கடிச்சா.. நாலு நாளைக்கு வீங்கும்னு கோயமுத்தூர் பக்கம் சொல்லுவாங்கண்ணா...!!

    ReplyDelete
  16. @நிரூபன் said...
    //
    ஒரு வேளை திமுக வை தாக்குறாரே பட்டா..
    //

    சே..சே. ஏன்னா.. நானும் நடுநிலைவாந்தி.... ஹி..ஹி

    ReplyDelete
  17. Blogger விக்கியுலகம் said...

    நாள் கழிச்சி வந்து இம்மாம்பெரிய குண்டை வீசுறியே மாப்ள!
    //

    ரொம்ப நாறுதா மச்சி..!!!
    :-))))))

    ReplyDelete
  18. // அது இரும்புக்கொட்டை ஆகியிருக்குமோ என்ற எண்ணம் வருவதை மறுக்கமுடியவில்லை//

    இரும்புக்கொட்டை ..ஹ ..ஹா ..பட்டாஜி இது என்னாது ..

    ReplyDelete
  19. @பாபு//

    இரும்புக்கொட்டை ..ஹ ..ஹா ..பட்டாஜி இது என்னாது ..//


    இரும்புக்கோட்டை.. விழுந்தாலும் உடையாது.. அடுத்த 5 வருட உத்ரவாதம்....

    ReplyDelete
  20. பட்டா அண்ணே ..பட்டா அண்ணே கோழி கூவுமா சேவல் கூவுமா ...?அத சொல்லுங்க .அந்த நாய் நரி எங்க போச்சு

    ReplyDelete
  21. Blogger யூர்கன் க்ருகியர் said...

    வூ இஸ் நரி ??
    //

    திருட்டுக்கல்யாணம் பண்ணிவைத்து , தமிழகத்தை சீர்திருத்துபவர்....
    :-)

    ReplyDelete
  22. ஆனால் நரி அவர்களுக்கு தாங்கள் கொடுத்துள்ள கலர் பிடிக்காதே ?

    ReplyDelete
  23. Blogger கோமாளி செல்வா said...

    ஆனால் நரி அவர்களுக்கு தாங்கள் கொடுத்துள்ள கலர் பிடிக்காதே ?
    //

    அவருக்கு என்ன பிடிக்கும், எது பிடிக்காது என விரல் நுனியில் விவரம் வைத்திருக்கும் செல்வா அவர்களுக்கு,
    நரி திருமணம் செய்து வைப்பாரா என்பதுதான் இப்பொழுது எழும் கேள்வி!!..:-))

    ReplyDelete
  24. எங்க ஊரு நரிக்கெல்லாம் கோழிய விட சேவல் கறிதான் புடிக்கும்போல? எங்க வீட்டு சேவல கொரவளைய கடிச்சே கொண்டுபோயிருச்சு :((

    ReplyDelete
  25. நான் ஒரு உ.பி..... நான் ஒரு ர.ர ன்னு சொல்றவனுகள கூட நம்பலாம்..ஆனா இந்த நட்டு நிலை நட்டு நிலைன்னு சொல்றவங்கலதான் நம்பமுடியல:)) யோவ்.. நரி ஒழுங்கா சொல்லுயா? நீ எங்கயாவது நட்டுயா?

    ReplyDelete
  26. நான் ஒரு உ.பி..... நான் ஒரு ர.ர ன்னு சொல்றவனுகள கூட நம்பலாம்..ஆனா இந்த நட்டு நிலை நட்டு நிலைன்னு சொல்றவங்கலதான் நம்பமுடியல:)) யோவ்.. நரி ஒழுங்கா சொல்லுயா? நீ எங்கயாவது நட்டுயா?
    //

    நரி அய்யா திருட்டு கல்யாணம் பண்ணி வைப்பதில் பிஸியா இருக்காரு போல...!!

    வைகை அண்ணே... இப்பவெல்லாம் ரியல் எஸ்டேட் பிஸ்னஸை விட .. திருமணம் செய்து வைப்பது... நல்லா ஓடும் போல...
    :-))))

    ReplyDelete
  27. //அவருக்கு என்ன பிடிக்கும், எது பிடிக்காது என விரல் நுனியில் விவரம் வைத்திருக்கும் செல்வா அவர்களுக்கு,
    நரி திருமணம் செய்து வைப்பாரா என்பதுதான் இப்பொழுது எழும் கேள்வி!!..:-))//

    திருட்டுக்கல்யாணம்னா யாராவது வீட்டுல இருந்து திருடிட்டு வந்து கல்யாணம் பண்ணுறதாணா ?

    ReplyDelete
  28. என்ன ஆச்சர்யம் நரி ஸ்பெல்லிங் மிஸ்டேக்கே இல்லாம பேட்டி கொடுத்திருக்கானே?

    ReplyDelete
  29. எட்டுக்குடி முருகா...எல்லாரையும் நல்லபடியா பார்த்துக்கப்பா...! :)

    ReplyDelete
  30. அந்த பனங்காடு நரி எதற்கும் அஞ்சாத நரியாமே?

    ReplyDelete
  31. //////நல்லவர். வல்லவர். அநியாத்தைக் கண்டால் ஓடும் Buzz என்பதைக் கூடப்பாராமல், ஓங்காரமாய் ஏறுபவர். ///////

    ஏறி அடிவாங்கிட்டு வருபவர்?

    ReplyDelete
  32. //////மேலும், மக்களுக்காக களப்பணி ஆற்ற துடித்துக்கொண்டு இருக்கும் இந்த இளைஞர்.//////

    வெளங்கிருச்சு......... இவரு பட்டு ஜிப்பாவும் வெத்தல பொட்டியும் வெச்சுக்கிட்டு சுத்தறவர் தானே?

    ReplyDelete
  33. //////ஒரு திருட்டுக்கல்யாணம் பண்ணி வைக்க திருட்டுத்தனமா போயிருந்தார். இவரைப்பற்றி மேலும் சொல்லிக்கொண்டு இருந்தால், வயோதிகர்கள் வாலிபர்களாகும் சங்கடங்களும் நேரலாம் என்பதாலும்..... ///////

    வாலிப வயோதிக அன்பர்களே... தெரிந்தோ தெரியாமலோ சிறு வயதில் செய்த தவறுகளினால்....

    ReplyDelete
  34. //////பட்டாபட்டி.... said...
    நரி என்பவர் அவ்ளோ பெரிய அப்பாட்டக்கரா?
    //

    நரி கடிச்சா.. நாலு நாளைக்கு வீங்கும்னு கோயமுத்தூர் பக்கம் சொல்லுவாங்கண்ணா...!////////

    அப்போ அஞ்சாவது நாளு வெடிச்சிடுமா?

    ReplyDelete
  35. அந்த இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் யாரு?

    ReplyDelete
  36. ஒரு தப்பு பண்ணிடேயா !! பதிவ போடுறதுக்கு முன்னாடி ஏன் போடலை ?

    ReplyDelete
  37. /// நல்லவர். வல்லவர். அநியாத்தைக் கண்டால் ஓடும் Buzz என்பதைக் கூடப்பாராமல், ஓங்காரமாய் ஏறுபவர்.////

    எங்கையா நல்லவனா இருக்க விடுறாங்க ...,எங்க பார்த்தாலும் ஜாதி ,மதம் ,மயிறு மட்டை இதெல்ல்லாம் தானே பேசிட்டு இருக்காங்க ..,போன வாரம் பஸ் பாரு .,ச்சே போயா .,

    ReplyDelete
  38. //// இவரிடம் பேட்டி எடுப்பது என்பது, ’கனிமொழியை வைத்து சென்னை சங்கமம் நிகழச்சிக்கு ரிப்பன் வெட்டுவது’ போல.. (எல்லாம் காலம் கொடுமை பாஸ்.. விடுங்க...விடுங்க..)/////

    அப்படியே ____ கோடி அத மறந்துட்டியே மச்சி ..,

    ReplyDelete
  39. ஒரு திருட்டுக்கல்யாணம் பண்ணி வைக்க திருட்டுத்தனமா போயிருந்தார். இவரைப்பற்றி மேலும் சொல்லிக்கொண்டு இருந்தால், வயோதிகர்கள் வாலிபர்களாகும் சங்கடங்களும் நேரலாம் என்பதாலும்..... இத்துடன் இவரைப் பற்றிய அறிமுகத்தை முடித்துக்கொண்டு பேட்டிக்குச் செல்லலாம்.///

    ஒரு நல்லத பண்ணவுடமாடீங்க போல ..,ஏழு வருஷ லவ் ல AIRTEL காரன் தான் ..,சம்பாதிச்சான் நல்லா..,இதுங்க ரெண்டும் யூரியா குடிச்சி இருக்கும் ..,

    ReplyDelete
  40. திருட்டுக்கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் என வேண்டுதல் கொண்டவர்கள், உடனடியாக அவரை அணுகி துண்டைப் போட்டுக்கொள்வது நல்லது.////

    உண்மையா இருந்தா போதும் ...,அப்படி இல்லேனா ..,நாடோடிகள் கதை மாதிரி ஆயிடும்

    ReplyDelete
  41. //// உங்களுடைய பேட்டி வேண்டும் என அறிக்கை விட்டதும், கட்டிய துணியுடன் கடல்கடந்து போய்விட்டீர்கள் போல!!..////

    கட்டிய துணியுடன் ,வைக்கிங் ____ ,பூம்புகார் பனியனுடன்

    ReplyDelete
  42. //// ஓ.. you funny... ”கோழி கூவியா”, எங்கள் தலைவி வெளியவரப்போறாங்க...////

    ஹீ ஹீ ஹீ ...,கோழி மட்டும் இல்ல .,அனகொண்டா வெ வந்தாலும் ..,முடியாதுன்னு தான் நினைக்கிறேன்

    ReplyDelete
  43. பட்டு!சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் போய் ஓடி ஒழிஞ்சுகிட்டீங்களோன்னு நினைச்சேன்:)

    ReplyDelete
  44. சூப்பர்!இது அருவாள தூக்கறதுக்கு:)

    ReplyDelete
  45. /////ராஜ நடராஜன்said...
    சூப்பர்!இது அருவாள தூக்கறதுக்கு:)
    ///////

    உங்க ப்ரொஃபைல பார்க்கனும்னா தலைல ரெண்டு கொம்பு வெச்சுட்டு வரனுமா சார்?

    ReplyDelete
  46. எலேய் நரி, என்னைய கண்டுக்காம விட்டுட்டியேல......

    ReplyDelete
  47. //அந்த பனங்காடு நரி எதற்கும் அஞ்சாத நரியாமே?//

    உண்மைதான் அவர் ஒரு பனங்காட்டு நரி எந்த சலசலப்புக்கும் அஞ்சமாட்டார்...

    :)

    ReplyDelete
  48. @Pattaabi../

    http://manavili.blogspot.com/2011/08/blog-post_22.html

    யோவ் பட்டாபி..உன்னைய ஒரு பையன் பார்க்கனும்னு ஆசபட்ராப்டி...! போய் பார்த்துட்டு வாய்யா...! :)

    ReplyDelete
  49. @@@@ஒண்டிப்புலி said...
    உங்க ப்ரொஃபைல பார்க்கனும்னா தலைல ரெண்டு கொம்பு வெச்சுட்டு வரனுமா சார்?..////

    ஒண்டிப்புலி அண்ணேன்...இப்டியே தெக்கால போனா மாயவரம் போலாமா...? :)

    ReplyDelete
  50. @@@பனங்காட்டு நரி said.
    கட்டிய துணியுடன் ,வைக்கிங் ____ ,பூம்புகார் பனியனுடன்..///

    வைக்கிங் ஜட்டிகளை அணிவதால், இனி பனங்காட்டு நரி அவர்கள் வைக்கிங் நரி என்று பெருமையுடன் அழைக்கபடுவார்...! :)

    ReplyDelete
  51. @@@பன்னிக்குட்டி ராம்சாமி said...
    என்ன ஆச்சர்யம் நரி ஸ்பெல்லிங் மிஸ்டேக்கே இல்லாம பேட்டி கொடுத்திருக்கானே?///


    ஆவேன் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம எழுதிருக்கான்னு உனக்கு தெரிஞ்சிருக்கு பாரு..! நீங்க பின்றிங்க பன்னி சார்..!

    ReplyDelete
  52. @@@கோமாளி செல்வா said...
    திருட்டுக்கல்யாணம்னா யாராவது வீட்டுல இருந்து திருடிட்டு வந்து கல்யாணம் பண்ணுறதாணா ?.///


    உஸ்ஸ்ஸ்...நாராயணா...நீ இன்னும் திருந்தலையா...!நாங்களே உலக மொக்கை..நீ எங்களுக்கு மேல மொக்கையா இருகியேடா சாமி...! என்னாதாண்டா வேணும் உனக்கு..? :)

    ReplyDelete
  53. @@@பட்டாபட்டி.... said...
    Blogger விக்கியுலகம் said...

    நாள் கழிச்சி வந்து இம்மாம்பெரிய குண்டை வீசுறியே மாப்ள!
    //

    ரொம்ப நாறுதா மச்சி..!!!
    :-)))))),,///


    ஹா.. ஹா...! யோவ்..ச்சீ...மானம் கெட்ட ஆளுயா நீ...! :)

    ReplyDelete
  54. ஹூ இஸ் திஸ் நரி அட சொல்லித் தொலையுங்கப்பா

    ReplyDelete
  55. நல்ல பழைய தகவல்

    Without Investment Data Entry Jobs !

    FOR MORE DETAILS VISIT OUR WEBSITE : http://bestaffiliatejobs.blogspot.com

    ReplyDelete
  56. Online Works For All said...

    நல்ல பழைய தகவல்
    //

    கண்டுபிடிச்சுட்டாரு டோய்...

    ReplyDelete
  57. Blogger கும்மாச்சி said...

    ஹூ இஸ் திஸ் நரி அட சொல்லித் தொலையுங்கப்பா
    //

    part time-மா திருட்டுக்கல்யாணம் பண்ணி வெச்சுக்கிட்டிருக்காரு பாஸ் சென்னையில....

    ReplyDelete
  58. Blogger Kannan said...

    உங்கள் பகிர்வுக்கு நன்றி.
    //

    பதிவ படிச்சதும் ஞானம் வந்திருச்சாண்ணே..!!!

    ReplyDelete
  59. யோவ் பட்டாப்பட்டி...என்னய்யா உன் சோனா இப்புடி பண்ணிபுட்டா.? உடனே எதாச்சும் பதிவ போட்டு உண்மையா என்ன நடந்துதுன்னு விளக்கம் சொல்லுயா...! இல்லாட்டி உன் பேர் ரிப்பேர் ஆய்டும்...! - சும்மானாச்சுக்கும் கோத்து விட்டு வேடிக்கை பார்ப்போர் சங்கம். :)

    ReplyDelete
  60. சோனாவுக்கும் பட்டாபட்டிக்கும் இருக்கிற கனெக்ஷனை பத்தி அன்னிக்கே வாரமலர் ல போட்டிருந்தானுங்க...! சோனாவுக்கு டேஸ்ட் கம்மியா...இல்லை பட்டாபட்டிக்கு டேஸ்ட் கம்மியான்னு தான் தெரில...!

    ReplyDelete
  61. @Online Works For All said...

    பயனுள்ள அருமையான தகவல்
    //

    நீரு மன்சன்யா...

    இந்த பதிவ எழுதினதோட சரி..

    என்னாலையே.. ஒரு தடவைக்கு மேல படிக்கமுடியலே...

    ஆனா.. நீரு படிச்சு.. அனுபவிச்சு... அருமைனு வேற... சொல்லியிருக்கீரு பாரு..

    முடியல மச்சான்.. ஹி..ஹி

    ஒருவேளை ”எழுச்சி நாயகனா ” அவதானிக்கபோறீரா?


    @வெளி

    ’அவதானி’-னா இன்னாய்யா?.. எங்கனவோ படிச்சமாறியே இருக்கு...

    ReplyDelete
  62. சோனாவுக்கும் பட்டாபட்டிக்கும் இருக்கிற கனெக்ஷனை பத்தி அன்னிக்கே வாரமலர் ல போட்டிருந்தானுங்க...! சோனாவுக்கு டேஸ்ட் கம்மியா...இல்லை பட்டாபட்டிக்கு டேஸ்ட் கம்மியான்னு தான் தெரில...!
    //

    பருவம் - பன்னி - அழகு....

    அது அப்போ...

    இது இப்போ... ஹிஹி

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!