Pages

Sunday, October 11, 2009

திருந்துங்க மக்கா....


எங்க ஊர் பாமரன் எழுதியது....




முலாயம்சிங் கட்சியோடு சோனியா காங்கிரஸ்
கூட்டணி வைத்துக் கொள்ளாததற்கு எது காரணம்?
நாட்டு நலன்தான்.




ஆனால் “இன்னமும் காத்திருக்கிறேன். கூட்டணி பற்றிய முடிவை கட்சியின் குறுந்தலைவர்களிடம் விடாமல் தலையாய தலைவராய் இருக்கிற சோனியாவே இறுதி முடிவை எடுக்க வேண்டும்” என்கிறார் முலாயம்சிங்.
அதற்கு எது காரணம்?
நாட்டு நலன்தான்.




“விஜயகாந்த் தேர்தல் புறக்கணிப்பையோ அல்லது தி.மு.க, அ.தி.மு.க.வோடு கூட்டு சேருவதை கைவிட்டு பா.ஜ.க.வோடு கூட்டு சேருவதுதான் நல்லது” என இல.கணேசன் கதறுகிறாரே… எதற்காக?
நாட்டு நலன்தான்.


சாலைப் பணியாளர் போராட்டம்……
விவசாயிகள் போராட்டம்……
நெசவாளிகள் போராட்டம்……
அரசு ஊழியர் போராட்டம்……
எனச் சகலரின் போராட்டத்துக்கும் ஆப்போ ஆப்பு வைத்த புர்ர்ர்ர்ர்சித் தலைவியோடு பல்லை இளித்துக் கொண்டு கூட்டு வைத்திருக்கிறார்களே
லெப்ட்டும்…… ரைட்டும்……
என்ன காரணத்திற்காக?
நாட்டு நலன்தான்.







ஒரு பக்கம் புறக்கணிப்புப் பெனாத்தால்……
மறுபக்கம் காங்கிரசுடன் மச்சான் மந்திரியாவதற்கான பேரம்……
என அல்லும் பகலும் அலைமோதுகிறாரே
அலப்பரைகாந்த்……
எதற்காக?
நாட்டு நலன்தான்.


ஊரே காறி உமிழ்ந்து கொண்டிருக்கிற காங்கிரசோடு
உடும்புப்பிடி உறவு வைத்துக் கொண்டிருக்கிறாரே
உடன்பிறப்புகளின் தலைவர்……
அது எதற்காக?
நாட்டு நலன்தான்.


இந்தப் பக்கம் குதிக்கலாமா?
இல்லை அந்தப் பக்கம் குதிக்கலாமா?
இப்பவே குதிக்கலாமா?
அல்லது அப்புறமா குதிக்கலாமா? என தீவிர ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறாரே
தமிழ்க்குடி தாங்கி மருத்துவர் அய்யா ……
அந்த ஆலோசனைகள் எதன் பொருட்டு?
நாட்டு நலன்தான்.


அத்துமீறுவதாவது ……?
அடங்க மறுப்பதாவது ……?
அறிவாலயமே சரணம்!
என சத்தம் போடாமல் ஒதுங்க இடம் கிடைத்தால் போதும் இப்போதைக்கு
என ஓரம் கட்டுகிறதா சிறுத்தை?
என்ன காரணம்?
அதுவும்

நாட்டு நலன்தான் வேறென்ன?


எல்லாம் சரிதான் …….ஆனால் இவர்கள் எல்லோரும் சேர்ந்து கரடியாகக் கத்துகிறார்களே ……நாட்டு நலன் ……நாட்டு நலன் என்று ……அது எந்த நாட்டின் நலன் என்பதை தேர்தலுக்கு முந்துன நாள் சொன்னாக் கூட தேவலை.
அந்த நாட்டு மக்களை ராவோட ராவா கூட்டியாந்து ஓட்டுப் போட வெச்சுரலாம்.
நாங்க கையில, கால்ல கரும்புள்ளி …… செம்புள்ளி குத்திக்கறதுக்குள்ள சீக்கிரமா சொல்லுங்கப்பா ராசா …… உங்குளுக்கு கோடிப் புண்ணியமா போகும்.







No comments:

Post a Comment

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!