Pages

Wednesday, June 2, 2010

மன்னிப்பு கேட்கும் வாரம்ம்ம்ம்...

கடந்த ஒரு வாரமா ஆணி அதிகமாயிருந்ததால், வலைப்பூ பக்கமே ஒதுங்கமுடியவில்லை..  வந்து பார்த்தா..கும்மிட்டு இருக்காங்க..

நம்ம கருத்தை போடாவிட்டால், வருங்கால சந்ததிகளுக்கு,  வரலாறு தெரியாமப்போயிடுமேனு  நானும் என் பங்குக்கு பதிக்கிறேன்..( நன்றி முதல்வர் அவர்களே..)

பதிவுலகம் ஒரு போதை சார்..கத்தியெடுப்பவன் கடவுளுனு ஆகிப்போச்சு..
அதுவுமில்லாம, பிரபலமா(?)யிருப்பதும், கத்திமேல நடப்பதுபோல்...

பிரபல பதிவர், பூக்காரினு ஒரு பதிவ போடுவார்.. அப்புறம் டெலிட் பண்ணீட்டு, மன்னிப்புனு சொல்லுவார்..
அதுக்கு இன்னொரு பிரபலம், ஒட்டகத்தை பற்றி கதை சொல்லும்..
மீண்டும் மற்றுமொரு பிரபலம், வினவை படிக்காதீங்கனு சொல்லுவாங்க..
அதுக்கும் ஆட்டிக்கிட்டு, ஒண்ணாம் கிளாஸ் பையன்போல எல்லாரும் தொடச்சுக்கிட்டு போயிடனும்..

ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயம்.. இது மன்னிப்பு கேட்கும் வாரம்னு மக்களுக்கு புரிஞ்சுடுச்சு... ( சாணி, விஜய் டீவில கேட்டது , உங்களுக்கு நினைவுக்கு வந்தால், நிர்வாகம் பொறுப்பாகாது..)

வினவு நல்லாத்தான் அலசியிருக்காங்க..அப்படியே, சைட்ல கத்திய சொருகியுமிருக்காங்க..
சாதிவெறி..பதிவு வட்டம் எல்லாம் சரிதான்..
ஆனா பிரச்சனையான பதிவர்களுடன், வேறு சிலரையும் இழுத்தது
உள்ளே போட்டது கண்டிக்கத்தக்கது
...( அவர்களின் பங்கு!!!.. )



அந்த பிரச்சனையான  பூக்காரி பதிவ, பப்ளிஷ் பண்ணுமுன் தெரியாதா?..இதுல வெண்ணைமாறி  டெலிட் பண்ணிட்டு, ஒரு மன்னிப்புனு போர்ட் போட்டா, எல்லோரும் பல்லக்காமிச்சுட்டு போயிடனும்..
பச்சையா சொல்லனுமுனா, கொ#$%டையில காற்று இல்லை..

கடைசியா ஒண்ணச்சொல்றேன்.. எல்லோரும் அவரவர் ஆதங்கத்தை, சொல்லிட்டு .. அவர்களுக்கு ஆகாதவர்களை இழுத்து விட்டுட்டு போயிட்டாங்க...
நடத்துங்க உங்க ராஜாங்கத்தை..ஆமா சங்கம் ஆரம்பிப்பது எந்த நிலையில உள்ளது   சார்களா?



மீண்டும் இன்னொருமுறை கடைசியா..(?)..

எல்லாப்பிரச்சனைக்கும் காரணம் காளகஸ்தி கோபுரம் சாஞ்சதுதான்..  போசாம ஏதாவது யாகம் பண்ணி,  எல்லோரும் சேர்ந்து பதிவுலகை பழையபடி தூக்கி நிறுத்துங்கப்பா...


அட.. கடைசியா ஏதாவது சொல்லிட்டு போகலேனா, சாமி கண்ணக்குத்துங்கிறதால..
பதிவுலக்கு கருத்தை சொல்லிக்கிட்டு அப்பீட் ஆகப்போறான் இந்த பட்டாபட்டி..


கலைஞருடன் மருத்துவர்  இணைந்தார்..
கலைஞருடன் அதிமுக இணயப்போகுது..
கலைஞருடன் மதிமுக இணயப்போகுது..

சீக்கிரம் எல்லோரும் ஒரே குடையின்கீழ வந்திடுவாங்க

ஜனநாயகத்தை ஒழித்து ,   மீண்டும் முடியாட்சியை கொண்டுவரும்வரை,  எங்களுக்கு தூக்கமில்லை...
பதிவுலகுக்கு நிம்மதியுமில்லை...
.
.
.