Pages

Monday, February 1, 2010

வெளியூர்காரனுக்கு வக்கீல் நோட்டீசு....

சார்.. நீங்களே கேளுங்க அ நியாயத்தை...

நேற்று , வெளியூர்காரன் தமிழ் ப்ளாக் - பதிவர்களுக்கு ஒரு எச்சரிக்கை விட்டிருந்தார்..

நானும் நைட்டு ஒரு மணிவரைக்கும்,  கட்ட பஞ்சாயத்து பண்ணி
ஒரு வழியா பிரச்சனைய முடிச்சாசுங்க...

ஆனா பாருங்க..மற்றவங்க பிரச்சனைய முடிச்சா போதுங்களா?..
நம்ம பிரச்சனைய யாருங்க முடிப்பா?..

யோவ்.. என்ன பிரச்சனையினு சொல்லித்தொலைக்கிறதா?
பார்த்தீங்களா. உங்களுக்கே இவ்வளவு கோபம் வருது...
அப்ப எனக்கு எப்படியிருக்குங்க..

அவரு சொன்னவரை போட்டு தள்ளினதுக்கு இன்னும் கவரு வந்து சேரலிங்கோ..
நேத்து 3 மணிக்கு ஒரு தடவை,
4 மணிக்கு ஒரு தடவை,
அப்புறமா காலங்காத்தாலே 10 மணிக்கு ஒரு தடவை, லெட்டர் பாக்ஸ்-ச தொறந்து பாத்தாச்சுங்க..

ஒரு மனுசன் , எவ்வளவு தடவை தான் 10 மாடிக்கும்........ மேல, கீழ ஏறி இறங்கிறது?..

சார்.. படிக்கற உங்களுக்கே இவ்வளவு கோபம் வருதுங்களே..
பண்ணுன எங்களுக்கு எவ்வளவு கோபம் வருமுங்க...

போன மாசம் 500 ரூபா அனுப்பினாருங்கோ
அதுக்கு அடுத்து 1000 ரூபா கொடுத்தாருங்கோ..
போன வாரப் பிரச்சனைக்கு 5000 ரூபா செட்டில் பண்ணிணாருங்கோ..

ஆனா, இப்ப மூச்சே காணோங்கோ...
பதிவப் படிச்சதும் ஆபிஸ்க்கு 10,000  ரூபா அனுப்பி வைக்கச் சொல்லுங்கோ...

ஆபிஸ்ல யாருமில்லாட்டி கேட்டுக்கு முன்னாடி போட்டுட்டு போகச்சொல்லுங்கோ...


( அய்யா வெளியூர்காரரே..விலைவாசி எல்லாம் ஏறிப் போச்சு.. கொஞ்சம் போட்டு குடுங்க நைனா..)

சே.. சே.. வெக்கமா.. எனக்கா..
போங்க சார் டமாஸ் பண்ணிகிட்டு..

கவர மட்டும் மறக்காம அனுப்பி வெச்சுருங்க அப்பு... 
.
.
.