ஹாயா ஹால்ல உக்காந்து டீவி பாத்துட்டு இருந்தேன்...அப்போது என்னுடய தொலைபேசி அலறியது..யாரு-னு எட்டிப்பாத்தா "சின்ராசு"...
ஆகா, சனிஸ்வரன் ஞாயிற்றுக்கிழமையும் ஓவர் டைம் செய்யறாரு போல நினைத்து , தொலைபேசிய ஆப் பண்ணலாமுனு முடிவுசெய்தேன். அதுக்குள்ள என்னுடைய வாண்டு போன ஆன் செய்துவிட்டது...
சரின்னு கடவுள்மேல பாரத்தப்போட்டு "சொல்லு சின்ராசு "-னு சொன்னேன்.
"இல்ல . ரொம்ம நாளா ஆளைப்பாக்க முடியவில்ல.. ரொம்ப பிசியா?" -னு நக்கலா கேக்கிறான். நானு "இல்ல சின்ராசு......, ஆமா சின்ராசு.... " உளறிட்டு , "அப்புறம் என்ன விசேசம் ?" கேட்டபிறகுதான் , எனக்கு சுரீர்-னு ஆகா... சனிஸ்வரரு நம்ம நாக்குல வந்து உக்காந்திட்டார்னு உறைத்தது......
அதுக்குள்ள சின்ராசு, எங்க எத்தன மணிக்கு மீட் பண்ணனுமுனு முகூர்த்தம் பிக்ஸ் பண்ணிட்டான். முடியாதுன்னு சொன்னா மொன்னா ஞாயம் பேசுவான்..சரி.. வேற வழி-னு பஸ் எறி சொன்ன டைமுக்கு " ஜுராங்க் ஈஸ்ட் " போயிட்டேன்.
பார்க்-ல பெரிய ஜமா கூடியிருந்தது...கூட்டத பாத்ததும் , ஓகே..இன்னைக்கு எப்படியும் தப்பிச்சிறலாம்னு நம்பிக்கை வந்திருச்சு....
எப்போதும் போல , இந்தியாவ இங்கிருந்தே தூக்கி நிறுத்தலாமா?.. இல்லாட்டி ஊருக்கு போன் பண்ணி நம்ம மக்காகிட்ட சொல்லி முட்டுக்குடுக்கலாமானு பேசிட்டிருந்தோம்..
அப்போ, ஒரு வயதான இந்திய மூதாட்டி , சிறு சீனக்குழந்தையுடன் வாக்கிங்க் போயிட்டிருந்தது... நாங்க தமிழில் பேசிட்டிருப்பதைப் பார்த்து பக்கதில் வந்து "எல்லா ஊர்காரங்களா ? இங்க வேலை செய்கிறீர்களா ?"-னு கேட்டாங்க..
சின்ராசு முந்திக்கிட்டு " ஆமாங்கோ பாட்டி..."னு நக்கலா சொல்ல, பாட்டி மூஞ்சி மாறிடுச்சு... நாங்க பேச்சைமாற்ற ,"குழந்தை அழகாக இருக்குங்க.. பக்கத்துவீட்டு பாப்பாங்களா ?" - னு கேட்க "இல்ல தம்பிகளா.. என்னொட பேத்திதான் " பாட்டி சொல்லுச்சு...
ஓகே.ரைட்டு..பாட்டி பையன் சீன சரக்க கல்யாணம் பண்ணிட்டாம்போல..பாட்டிக்கு ரொம்பவே பெரிய மனசுதானு நினச்சுட்டோம்.. திடீர்னு குழந்த ஓட ஆரம்பிச்சது.. பாட்டி இங்கிருந்தே " செல்லம்.. மெதுவா போம்மா " கத்துச்சு...
சின்ராசு பாட்டிகிட்ட நல்லபேரு வாங்கனமுனு முடிவுபண்ணிட்டு "பரவாயில்லைங்க.. குழந்தைக்கு தமிழெல்லாம் சொல்லிகொடுக்கிறீங்க .." சொல்ல (பாட்டிங்கரத முழுங்கிட்டான் ) , பாட்டி அவன ஒரு மொறை மொறச்சது....
சரின்னு நாம எங்க வேலையப்பார்ப்போமுனு வெட்டி கதை பேச ஆரப்பித்துவிட்டோம்... கொஞ்ச நேரம் கழித்து சின்ராசு என்ற முதுகச்சொறிஞ்சு சைடுல கையக் காண்பிக்கிறான்..
திரும்பிப் பார்த்தா , ஒரு 30 வயது , தமிழ் பொண்ணு ( தொட்டு பொட்டு வச்சுக்கலாம்... ) அந்தக் குழந்தையை கொஞ்சிட்டிருந்தது.. மெதுவா பாட்டியப் பார்த்து "அது யாருங்க" னு நான் கேட்க , "அதுதான் தம்பி என்ற மருமகள்." ங்குது பாட்டி..
சின்ராசு முகம் திடீர்னு பல்பு போட்டமாறி பிரகாசமாயிடுச்சு...ஓகே.. சின்ராசு ஏதோ வில்லங்கம் பண்ணறதுக்குள்ள இடத்த காலி பண்ணிடலாமுனு அவசர அவசரமா எந்திரிச்சு நகர ஆரம்பித்தோம்..
சின்ராசு அப்பாவியா முஞ்சிய வெச்சுட்டு பாட்டிகிட்ட "குழந்த அழகா சீனப்பாப்பா மாதிரி இருக்குதுங்க.." சொல்றான்.. பாட்டி பல்லைக் காண்பிச்சுட்டு " என்ற மருமகள் எப்ப பாத்தாலும் சீனச்சாமியே கும்பிடுவா..அதனால சாமியே பாத்து சைனாக்காரங்க மாறி புள்ளையக் கொடுத்திருச்சு" னு சொல்லுது...
சின்ராசு அங்கிருந்தே
"விதை ஒண்ணு போட்டால், சொறை ஒண்ணு முளைக்கும்..
சொறை ஒண்று முளைத்தால் யாருக்கு லாபம்" னு
பாடிட்டே எங்களை பார்த்துவரான்...
" போதுன்டா உன்ற சாகவாசம் ..இப்படியா பேசறது.. " நான் சொல்ல ,
" டேய், வாடா போயி ஜப்பாங்கார சாமி கும்பிடலாம் " னு பல்லைக் காண்பிக்கிறான் இந்த மானங்கெட்ட சின்ராசு....