Pages

Tuesday, May 3, 2011

அன்னையை போல்..ஒரு அன்னை இல்லை,

.
.
.
அண்ணே. வணக்கம். நான் ஒரு கட்சியின் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கிறேன். நடந்து முடிந்த தேர்தலில், உள்ளடி பண்ணி, என்னை ஒழிக்க, பலர் சபதம் எடுத்துள்ளதாக அறிகிறேன். அதற்க்கு பயப்படுபவன் அல்ல இந்த பாலு.      நான் சிந்திய ரத்தத்தைப்பார்த்தால் உங்களுக்குப் புரியும்.


ஆனால சிலர் தூண்டுதலின் பேரில், என் உருவப்படத்தை எரிப்பதும், செருப்பில் அடிப்பதுமாக, அங்கொன்றும், இங்கொன்றுமாக, தமிழகத்தில நடந்துகொண்டுள்ளது.  அதனால், நான் தீராத மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். அதற்க்கு தீர்வுதான் என்ன?.


-பெயர் சொல்ல விருப்பமில்லை.
.
.

================================



அன்பு நண்பா.. செருப்படி வாங்குவதும், சாணி கொண்டு முகத்தில் பூசுவதும், பொதுவாழ்க்கையில் சகஜம்தான். நீங்கள் உங்கள் பெயரை தெரிவிக்க விருப்பமில்லாதபோதும், அது பளீரென்று மக்களுக்கு தெரிவதுதான், உங்களை செருப்பில் அடிக்கக்காரணம்.

இதற்கு ஒரே ஒரு பரிகாரம் உண்டு.
உங்கள் அன்னையின் காலை மண் எடுத்து, 2 மாதங்கள் குளிக்காமல், யார் கண்ணிலும் படாமல் இருந்து, புட்டப்பர்தி சென்று தலைமுழுகினால், இன்னல் தீரும்..

உங்களுக்கல்ல..... ”மக்களுக்கு..”....

உங்கள் கட்சியின் தலைவியும், உடன் பணியாற்றும் பிரதமரும், சாப்பாபாவை இறுதிச்சடங்களில் கலந்துகொண்ட காட்சியை கண்டு, புளாக்கிதமடைந்தவன் நான். சாய்பாவை கடவுளாக்கியதில் பெரும்பங்கு, நாட்டை முன்னேற்றத் துடிக்கும், அரசியல்வாதிகளுக்கு உண்டு.

ஒரு நாட்டின் முதல்வர், அவரதம் மக்களை சுட்டுக்கொல்லும் கயவர்களுடன், உணவருந்துவது. மூடநம்பிக்கையை கொழுத்துவிட்டு எரியச்செய்ய அவர்தம் கட்சிக்தலைமையுடன் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு, மக்களை திசைதிருப்புவது.

ஏன்.. பல நூறு மீனவர்கள் கொள்ளப்பட்டபோது, எங்கு சென்றனர் இந்த கயவர்கள்?. ஒருவேளை மீனவர்கள்..காவியுடை அணியாமல், வாயில் லிங்கம் எடுக்கும் கலையை அறியாமல் இருப்பது அவர்தம் குற்றம்போல...

ஆக.. நாடு , நல்லவர்களின் துணையுடன், பீடு நடை போட்டு  சென்றுகொண்டுள்ளது. அழிவுக்கா..அல்லது ஆக்கத்துக்கா என்ற கேள்வியை புறந்தள்ளிப்பார்த்தால். இன்னும் 20 வருடங்களில், நமது சந்ததியனருக்கு, ”மனிதமாமிசம் உண்ணும் பழக்கத்தை” ஏற்படுத்திவிடுவோம் என் நினைக்கிறேன்.

வாழ்க உங்கள் கட்சியும்... கொள்கைகளும்.


பின்குறிப்பு.
நீங்கள் ரத்தம் சிந்திய வரலாற்றை நாடே அறியும். எதற்கும் நல்ல மருத்துவரைப்பார்க்கவும்..

” மூலம் இருந்தால், மலத்துடன் ரத்தம் வரலாம்.”